உடல் நோய் தீர்க்கும் மிளகு தீப வழிபாடு!.தீராத உடல் நோயால் அவதியுறுவது, உரிய வயதாகியும் திருமணம் கைகூடாமல் தடைபடுவது, திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்றி வருந்துவது, பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றால் கஷ்டப்படுவது, கிரஹ தோஷங்களால் உடல் மற்றும் மன சஞ்சலத்தில் உழல்வது போன்ற பிரச்னைகள் ஏதாவதொன்றில் இன்றைக்குப் பலரும் சிக்கித் தவிக்கின்றனர். மேற்கூறிய பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும் பரிகார தெய்வமாக விளங்குகிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், அம்மாசத்திரம் அருள்மிகு ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் காலபைரவர். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் எல்லாவிதமான துன்பங்களும் தொலைந்து, நற்பலன்கள் வந்து சேரும். தேய்பிறை அஷ்டமிகளில், அஷ்டலட்சுமிகளும் காலபைரவரை வழிபடுவதாக ஐதீகம்..இக்கோயில் காலபைரவர் நோய்கள் பலவற்றைத் தீர்க்கும் வல்லமை கொண்டவராகத் திகழ்வதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கை. தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இந்தக் காலபைரவருக்கு ஒன்பது வாரங்கள் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் விரைவில் குணமாகும். அஷ்டமி தினத்தில் இந்த பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும். தொடர்ந்து ஐந்து அஷ்டமி தினங்கள், பைரவருக்கு மாதுளம்பழ சாற்றினால் அபிஷேகம் செய்தால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும். இந்த காலபைரவருக்கு சத்ரு சம்ஹார ஹோமம் செய்து வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அஷ்டமி திதி, பெளர்ணமி தவிர, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பைரவரை வணங்கிட, சகல சம்பத்தும் பொன் பொருளும் கிட்டும் என்பது மக்களின் தீராத நம்பிக்கை. திருவிடைமருதூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவு சென்றாலும் இக்கோயிலை அடையலாம்...வீட்டில் தீய சக்திகள் விலக….ஒரு வீட்டில் தீய சக்திகள் இருந்தாலே, அங்கு நேர்மறை ஆற்றல்கள் மறைந்து, எதிர்மறை விஷயங்கள் தலைதூக்கும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையின்மை, மன வேற்றுமை போன்றவை ஏற்பட்டு அமைதி குலையும். இதற்கு ஒரு எளிய பரிகாரத்தினைக் காண்போம்..தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டின் வாசல்படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து அதில் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு இருப்பது நல்லது. பிறகு, அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால், வீட்டில் உள்ள தீயசக்திகள் விலகுவதோடு, வீட்டின் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் நேர்மறையான ஆற்றல்களாக விரைவில் மாறுவதைக் காணலாம். இப்படி வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக்குவதால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து வாழும் தம்பதியர் இந்தப் பரிகாரத்தைச் செய்வதால் விரைவில் ஒன்றிணைவார்கள். மேலும், குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை, சச்சரவுகள், மனஸ்தாபங்கள் நீங்கும். பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் ஆபத்து ஏற்படுவது போன்ற பிரச்னைகளும் நீங்கும்..– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்
உடல் நோய் தீர்க்கும் மிளகு தீப வழிபாடு!.தீராத உடல் நோயால் அவதியுறுவது, உரிய வயதாகியும் திருமணம் கைகூடாமல் தடைபடுவது, திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்றி வருந்துவது, பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றால் கஷ்டப்படுவது, கிரஹ தோஷங்களால் உடல் மற்றும் மன சஞ்சலத்தில் உழல்வது போன்ற பிரச்னைகள் ஏதாவதொன்றில் இன்றைக்குப் பலரும் சிக்கித் தவிக்கின்றனர். மேற்கூறிய பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும் பரிகார தெய்வமாக விளங்குகிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், அம்மாசத்திரம் அருள்மிகு ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் காலபைரவர். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் எல்லாவிதமான துன்பங்களும் தொலைந்து, நற்பலன்கள் வந்து சேரும். தேய்பிறை அஷ்டமிகளில், அஷ்டலட்சுமிகளும் காலபைரவரை வழிபடுவதாக ஐதீகம்..இக்கோயில் காலபைரவர் நோய்கள் பலவற்றைத் தீர்க்கும் வல்லமை கொண்டவராகத் திகழ்வதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கை. தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இந்தக் காலபைரவருக்கு ஒன்பது வாரங்கள் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் விரைவில் குணமாகும். அஷ்டமி தினத்தில் இந்த பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும். தொடர்ந்து ஐந்து அஷ்டமி தினங்கள், பைரவருக்கு மாதுளம்பழ சாற்றினால் அபிஷேகம் செய்தால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும். இந்த காலபைரவருக்கு சத்ரு சம்ஹார ஹோமம் செய்து வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அஷ்டமி திதி, பெளர்ணமி தவிர, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பைரவரை வணங்கிட, சகல சம்பத்தும் பொன் பொருளும் கிட்டும் என்பது மக்களின் தீராத நம்பிக்கை. திருவிடைமருதூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவு சென்றாலும் இக்கோயிலை அடையலாம்...வீட்டில் தீய சக்திகள் விலக….ஒரு வீட்டில் தீய சக்திகள் இருந்தாலே, அங்கு நேர்மறை ஆற்றல்கள் மறைந்து, எதிர்மறை விஷயங்கள் தலைதூக்கும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையின்மை, மன வேற்றுமை போன்றவை ஏற்பட்டு அமைதி குலையும். இதற்கு ஒரு எளிய பரிகாரத்தினைக் காண்போம்..தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டின் வாசல்படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து அதில் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு இருப்பது நல்லது. பிறகு, அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால், வீட்டில் உள்ள தீயசக்திகள் விலகுவதோடு, வீட்டின் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் நேர்மறையான ஆற்றல்களாக விரைவில் மாறுவதைக் காணலாம். இப்படி வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக்குவதால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து வாழும் தம்பதியர் இந்தப் பரிகாரத்தைச் செய்வதால் விரைவில் ஒன்றிணைவார்கள். மேலும், குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை, சச்சரவுகள், மனஸ்தாபங்கள் நீங்கும். பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் ஆபத்து ஏற்படுவது போன்ற பிரச்னைகளும் நீங்கும்..– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்