என் முதல் காதல் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கு: நடிகர் தனுஷ் அதிரடி!

என் முதல் காதல் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கு: நடிகர் தனுஷ் அதிரடி!

நடிகர் தனுஷ் மற்றும் வரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் தங்கள் திருமண உறவை முடித்து கொள்வதாக சமீபத்தில் கூட்டாக அறிவித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் தனுஷ் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியது வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான தனுஷூக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு காதல் திருமணம் முடிந்து 18 வருடங்கள் ஆன நிலையில் யாத்ரா,லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கூறினர். இந்நிலையில் தனுஷ் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தனுஷ் கூறீயதாவது;

டீன் ஏஜ் வயதில் எல்லோருக்கும் காதல் அனுபவம் ஏற்படும் . எனக்கும் அப்படித்தான்! என்னுடைய முதல் காதல் நான் 11-ம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்டது. அதுவரை படிப்பில் சுட்டியாக இருந்த நான், காதலில் விழுந்த பின்னர் படிப்பை முற்றிலுமாக தொலைத்தேன். கடிதங்கள் மற்றும் தொலைபேசிகள் வரை தொடர்ந்த அந்த காதல் நான் நடிக்க வந்த பிறகு காணாமல் போய்விட்டது. ஆனாலும் அந்த காதல் இன்னும் என் மனதில் பசுமையாய் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இவ்வாறு தனுஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com