தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்போட்ட்டிகளை ரசிகர்கள் நேரில் வந்து காண தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பை முன்னிட்டு இந்தியா – தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களுக்கு ஸ்டேடியத்தில் அனுமதியில்லை. கிரிக்கெட்டின் மிக தீவிர ரசிகர்கள் மற்றும் அனைத்து விளையாட்டு போட்டி பிரியர்களுக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் இதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. அதேசமயத்தில் இப்போட்டிகளை சூப்பர் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஏ எஸ் பி சி தளங்களில் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் போட்டி ஒளிபரப்புதல் உள்ளிட்ட மாற்று செயல்பாடுகளையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆராய்ந்து வருகிறது.
–இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.