நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள 'ஜெய் பீம்' படத்துக்கு பலதரப்பட்ட விமரிசனங்களும் பாரட்டுகளும் கிடைத்த அதேஅளவு எதிர்ப்பும்ம் கிளம்பியுள்ளது.. இதையடுத்து சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு குறிப்பிட்ட சாதியின் சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து அந்த சின்னம் படத்தில் இருந்து அகற்றப்பட்டது. இருப்பினும் சர்ச்சைகள் தொடர்கிறது. சூர்யாவை தாக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் தருவதாக பாமக மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சூர்யாவின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூர்யாவுக்கும் ஆயுதம் ஏந்திய தனிக் காவலர் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளார்.