புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! 

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! 

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

புதுச்சேரி சட்டசபையில்  முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து துணை நிலை ஆளுநர் உரையாற்றினார். அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளான தி.மு.க, மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்கள் வெளிநடப்பு செய்தனர்.  

– இது குறித்து வெளிநடப்பு எம்.எல்.ஏ க்கள் கூறியதாவது: 

கடந்த மார்ச் மாதமே ஒன்றிய அரசின் புதுச்சேரி அரசுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது தெரிந்தும் பட்ஜெட் போடவில்லை. 

புதுச்சேரி மாநிலத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவிருப்பதாக  கடந்த ஜூலை 6 -ம் தேதி தமிழிசை தலைமையில் நடைபெற்ற  மாநில திட்டக்குழு கூட்டத்தில் கூட்டப்பட்டது. ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி மத்திய  அரசிடம் தெரிவித்து நிதியை பெற துணைநிலை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

வருவாய் இல்லாத புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1, 874 கோடி நிதி கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதில் இருந்து ரூ.150 கோடி குறைத்து 1,724 கோடி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலைவாய்ப்பினை அதிகரிப்பு, அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளது அது குறித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பட்ஜெட் என்பது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு தொடங்குவது தான் ஆனால் இந்த அரசு சம்பளம் வழங்குவதற்கான அனுமதி பெற மட்டுமே கூட்டுகிறது என எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தோம். 

-இவ்வாறு தெரிவித்தனர்  

இன்று சட்டப் பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com