மின்வாரிய ஊழியர்கள் பர்முடாஸ் அணிய தடை!

மின்வாரிய ஊழியர்கள் பர்முடாஸ் அணிய தடை!

தமிழகத்தில் சீருடை விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் தெரிவித்ததாவது:

தமிழக மின்வாரிய ஊழியர்கள் பணியில் இருக்கும்போது சீருடை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதன்படி `பெண்கள், சேலை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து பணிக்கு வரலாம். ஆண்கள் ஃபார்மல் பேண்ட் அல்லது வேட்டி அணியலாம்.

ஆனால் பர்முடாஸ் போன்ற கேஷூவல் உடைகள் அணிந்து பணிக்கு வரக்கூடாது. நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டியிருந்தால், முழுக் கையுடன் கூடிய சிறிய பட்டன் வைத்த கோட் அணிய வேண்டும். பட்டன் இல்லாத கோட் அணிந்தால், கட்டாயம் டை அணிய வேண்டும்.எந்த உடையாக இருந்தாலும் அவற்றின் நிறமும், டிசைனும் சாந்தமான வகையில் இருக்க வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை சாந்தமான நிறத்தில் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அல்லது சேலை அணியலாம். மின்வாரிய அலுவலகத்தின் கண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்த உத்தரவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com