நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று தேசிய மருத்துவக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட நிலையில், அதற்கடுத்த 2-வது நாளில் (ஏப்ரல் 17) மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பு ஊசி காரணமா என் விசாரிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.