வித்யா சுப்ரமணியம்.நகரின் இரைச்சலில் இருந்து சற்று தள்ளியிருந்த பகுதியில் நுழைந்தது கார். அந்தக்கால வீடு என்றாலும் அழகான தனி வீடு. மதில் சுவருக்கு உள்ளே வீட்டைச் சுற்றி மரங்களும் செடிகளுமாக தோட்டம். வீட்டின் முன்புற உச்சியின் மையத்தில் கஜலக்ஷ்மி சிற்பத்திற்குக் கீழே 1961 என்று போட்டிருந்தது. வீடு கட்டிய ஆண்டாக இருக்கலாம். அழகான சிட் அவுட். அங்கேயே பிரம்பினாலான சோபா செட் போட்டிருந்தது அதன் குஷன்கள் அரையடி உயரத்திற்கு இருந்தது. வீட்டின் பிரதான வாயிற்கதவு நல்ல தேக்கு மரத்தில் அழகான கஜலக்ஷ்மி சிற்பம் செதுக்கப்பட்டு கம்பீரமாக இருந்தது. அடிக்கடி வார்னிஷ் அடிப்பார்கள் போலும், புதுக்கருக்கு மாறாமலிருந்தது.."இப்டி உக்காரும்மா" சிட்டவுட் சோபாவைக் காட்டிய பெரியவர் அன்றைய தினசரியை எடுத்து டீபாயில் வைத்துவிட்டு உள்ளே போனார். பல் தேய்த்து முகம் கழுவிக்கணும்னா உள்ள வாங்க என்றான் அவர் பிள்ளை. பையிலிருந்து பேஸ்ட்டும் பிரஷ்ஷும் எடுத்துக் கொண்ட மைதிலி குழந்தைகளை அழைத்துக் கொண்டு உட்புறம் சென்றாள். பெரிய கூடம் தாண்டி சமையலறையை ஒட்டி ஒரு குளியலறை இருந்தது. அங்கே குழந்தைகளுக்கு பல் தேய்த்து, தானும் தேய்த்து முகம் கழுவித் துடைத்துக் கொண்டு வந்தாள். சற்று நேரத்தில் நுரை பொங்க முதல் டிக்காஷன் வாசத்தோடு காப்பியும் குழந்தைகளுக்கு பாலும் வந்தது. பெரியவர் குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை பூசி பளிச்சென்ற முகத்தில் புன்னகை தவழ வந்து அவள் எதிரில் அமர்ந்தார்.."அரைமணில இட்லி ரெடியாய்டும் . பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு கிளம்புவோம்"."எதுக்கு சார்? ஏற்கெனவே உங்களை நிறைய கஷ்டப்படுத்திட்டேன்"."குழந்தைங்க முகத்துல பசி தெரியுது. சாப்ட்டுட்டே போகலாம்"."உங்களோட நேடிவ் திருச்சிதானா?".ஆமாம்… பிறந்தது, வளர்ந்தது, படிச்சது, உத்யோகம் பார்த்தது எல்லாமே இங்கதான். எங்கப்பாக்கு நாங்க மூணு பிள்ளை, ரெண்டு பெண்கள். நான்தான் கடைக்குட்டி. மற்ற எல்லாரும், டெல்லி, பாம்பே, அமெரிக்கான்னு சௌக்கியமா இருக்காங்க. எனக்கு திருச்சிய விட்டு நகர விருப்பமில்லை. அரங்கனையும், அகிலாவையும் தினம் தரிசிக்காவிட்டால் தூக்கம் வராது. சின்ன வயசுல, திருவானைக்காவில்தான் இருந்தோம். என் திருமணத்துக்குப் பிறகு அப்பாவோட வீடு, நிலம் எல்லாம் பாகப்பிரிவினையான பிறகு, நா இந்த வீட்டைக் கட்டினேன். அப்பா என்னோடதான் கடைசிவரை இருந்தார். எனக்கு ஒரு பெண், ஒரு பிள்ளை. பெண் துபாய்ல குடும்பத்தோட சௌக்கியமா இருக்கா. உன் வயசுதான் இருக்கும் அவளுக்கும். பிள்ளை சி.ஏ. முடிச்சுட்டு இங்கேயே நல்ல வேலைல இருக்கான். அவனுக்கு ஒரு நல்ல வரன் பார்த்து அவனையும் ஒருத்திக்கிட்ட ஒப்படைச்சுட்டா, நான் கேதார், பத்ரி, கைலாஷ்னு வருஷமொரு டூர் கிளம்பிடுவேன்.."உங்க ஆசை நிறைவேறட்டும் சார். நல்ல மருமகள் கிடைப்பா"."அப்பா டிபன் ரெடி" பிள்ளை குரல் கொடுக்க, வாம்மா என்றபடி அவர் எழுந்தார்..மல்லிகைப்பூ மாதிரி இட்லியும், தேங்காய் சட்னியும் காலைப் பசிக்கு அத்தனை சுவையாயிருந்தது. உண்மையில் இரண்டு நாட்களாக மனப்புழுக்கத்தோடு இருந்ததால் சரியாக சாப்பிடக்கூட இல்லை. அதனால் நல்ல பசியிருந்தது. நாலைந்து இட்லி சுலபமாய் உள்ளே இறங்கிற்று. குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்..கிளம்புவதற்கு முன்பு அவர் யாருக்கோ போன் பேசினார். பிறகு அவளிடம் வந்தார். போலாமா? என்றபடி அவளது சூட்கேசை எடுத்துக் கொண்டார். மழை சற்று விட்டிருந்தாலும் மேகம் சூழ்வதைப் பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கொட்டும் போலிருந்தது. அவர் அவளிடம் ஒரு குடை கொடுத்துவிட்டு தானும் ஒரு குடையை விரித்து பிடித்துக் கொண்டு முன்னால் நடக்க, பின்னால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவள் நடந்தாள்..வரலக்ஷ்மி சேவா நிலையம் என்ற பெயர்ப் பலகையோடு கூடிய அந்த இல்லம் அமைதியாக இருந்தது. மழையில் நனைந்த மரங்களும், செடிகளும் கொடிகளும் பசுமையாய் சிரிக்க, காம்பவுண்டு சுவரை ஒட்டியிருந்த தோட்டத்திற்குள் முதியவர்கள் சிலர் நடை பயின்று கொண்டிருக்க, சிறுவர் சிறுமியர் சிலர் மரக்கிளைகளில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தனர்..வாங்கய்யா என்றபடி அலுவலக அறையிலிருந்து வந்த பெண்மணிக்கு நடுத்தர வயதிருக்கும். காதோர நரை, முகத்திற்கு கம்பீரம் சேர்த்திருந்தது. அவர்களை அலுவலக அறையிலிருந்த நாற்காலிகளில் அமர வைத்தாள். சாமி படத்திற்கு முன்பு ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகர்பத்திகளின் நறுமணம் நாசியை இதமாய்த் தொட்டது. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு தம்பதியின் படத்திலிருந்த பெரியவரின் முகம் பரிச்சயமுள்ளதாய்த் தெரிந்தது. அவள் அதையே சற்றுநேரம் உற்றுப்பார்த்தாள் .."அது எங்கப்பா அம்மாதான்" பெரியவர் சொன்னதும் திகைப்போடு அவரைத் திரும்பிப் பார்த்தாள். மீண்டும் படத்தைப் பார்த்தாள்.."இந்த இல்லம்…"."அப்பாவின் கடைசி ஆசை இது. இந்த இடம் அவரோடதுதான். அவர் விருப்பப்படி நாங்க எல்லோரும் சேர்ந்து இந்த இல்லத்தைக் கட்டி நல்லபடியாக நடத்திக் கொண்டிருக்கோம். என் பெயர் ஜம்புலிங்கம். ".மைதிலி அவரை[ப் பார்த்து கரம் கூப்பினாள். கடவுள்தான் அவர் பயணித்த அதே பேருந்தில் தன்னையும் ஏற்றி இங்கு கொண்டு சேர்த்திருப்பதாக நம்பினாள் ..இவங்க திருமதி சாரதா. எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த இல்லத்தின் நிர்வாகியாகப் பணியாற்றுபவர். இந்த இல்லத்தின் விதிப்படி அவங்க உன்னைப் பற்றித் தெரிந்துக்கொள்ள சில கேள்விகள் கேட்பாங்க. நான் வெளிய இருக்கேன். இங்கு நீ சொல்லும் விஷயங்கள் வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியம் காக்கப்படும். அதனால நீ இவரை நம்பி உன்னைப்பற்றி சொல்லலாம்" அவர் எழுந்தார்.."ஐயா நீங்க எதுக்கு வெளிய போகணும்? நீங்க என் அப்பா மாதிரி. முன்பின் தெரியாத நிலையில்தான் முதல்ல உங்ககிட்ட எதுவும் சொல்ல தயங்கினேன், தப்பா எடுத்துக்காதீங்க"."அதுல தப்பே இல்லைம்மா. ஒரு பெண் முன்பின் தெரியாதவரிடம் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்வது அத்தனை நல்லதல்ல என்பதுதான் என் கருத்தும்."."உட்காருங்கய்யா" மைதிலி தன்னருகிலிருந்த சேரை பின்னுக்குத் தள்ளி அவர் அமர வழி செய்தாள்..மின்விசிறி சுழலும் சப்தம் மட்டுமே கேட்க ஒரு சில வினாடிகள் மௌனமாய் அமர்ந்திருந்தாள். எங்கிருந்து ஆரம்பிக்க? வார்த்தைகளைத் தேடினாள்.."என் பிறந்த வீடு மிடில் கிளாஸ் குடும்பம். அப்பா மாநில அரசாங்க அலுவலகத்தில் சம்பளம் மட்டுமே வாங்கும் நேர்மையான உயரதிகாரி. கீழ் நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்தவர். அவரது சம்பளத்தில் அழகாகக் குடும்பம் நடத்திய அம்மா அவங்களுக்கு பிறந்த நாங்க மூன்று பேரும் பெண்கள். நான்தான் கடைசி பெண். எங்க மூணு பேரையும் எங்க விருப்பப்படி படிக்க வைத்தார் அப்பா. பெரியக்கா வங்கிப் பணியாளர் தேர்வு எழுதி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியில் சேர்ந்து பதவி உயர்வுகள் பெற்று தற்போது கிளை மேலாளராக இருக்கிறாள். சின்னக்கா யுபிஎஸ்சி தேர்வெழுதி மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக இருக்கிறாள். ரெண்டு அக்காக்களுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார் அப்பா. கல்லூரிப் படிப்பு முடித்து நானும் வங்கி தேர்வும் யுபிஎஸ்சி தேர்வும் எழுத இருந்த நிலையில்தான் ஒரு பெரிய இடத்திலிருந்து என்னைப் பெண் கேட்டு ஒரு வரன் வந்தது. ஆனால், எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. "ஒரு நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன்" என்று அப்பாவிடம் கெஞ்சினேன்." மைதிலி பெருமூச்சுவிட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்..**** **** ****.அக்டோபர், 1984..அம்மாவும் அக்காக்களும் அவளைச் சூழ்ந்து கொண்டு அமர்ந்தார்கள்.."இங்க பார் மைதிலி, உன் நல்லதுக்காகத்தான் சொல்றோம்… புரிஞ்சுக்கோ… நல்ல இடம்…. "."இருக்கட்டும்மா… என்னோட லட்சியம் ஒரு வங்கி வேலை. இன்னும் நாலு மாசத்துல எக்ஸாம். என கவனம் முழுக்க அதில்தான் இருக்கு. கண்டிப்பா எனக்கு வேலை கிடைக்கும்னு நினைக்கறேன். அது கிடைச்ச பிறகு நீங்க சொல்ற இதே வரனைக் கட்டிக்கறேன். அதுவரை அவர்களைக் காத்திருக்கச் சொல்லுங்க. நீங்களும் கொஞ்சம் பொறுமையா இருங்க."."இந்த வரனைக் கட்டிக்கிட்டா நீ வேலைக்கு போக வேண்டிய அவசியமேயில்லை மைதிலி. பெரிய பணக்காரங்க. ஐம்பது வருஷங்களுக்கு முன்பிருந்தே பல வெற்றிப் படங்களை எடுத்த, உச்ச நட்சத்திரங்கள் பலரை உருவாக்கிய பிரபல சினிமா கம்பெனி அதிபரோட பேரன்தான் இந்த வரன். ரெண்டு அண்ணன்களுக்கு கல்யாணமாகிடுச்சு. முதல் இரண்டு மருமகள்களும் பெரிய இடத்துலர்ந்து வாக்கப்பட்டவங்க. ராணி மாதிரி வெச்சிருக்காங்க. இப்போ சினிமா எதுவும் எடுக்காட்டியும் சொத்து சுகத்துக்கு குறைச்சல் இல்ல. அவங்க அந்தஸ்துக்கு நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் வீட்டில் பெண் கேட்பதே பெரிய விஷயம். அப்பா மேல நல்ல அபிப்பிராயம் உள்ளவங்க என்பதால் நம் குடும்பத்தைப் பார்த்து பிடிச்சுப்போய் உன்னைக் கேக்கறாங்க. எந்த டிமாண்டும் இல்ல. இந்த மிடில் கிளாஸ் கஷ்டமெல்லாம் இல்லாம நீ அங்க சௌக்கியமா இருக்கலாம்."."பணக்காரங்கன்னு சொல்றீங்க. விரும்பி வராங்கன்னும் சொல்றீங்க. அதான் யோசிக்கறேன். பணம் பணத்தோட சேராம எதுக்கு இறங்கி வராங்க? அதுக்கு பின்னாடி என்ன காரணம்னு விசாரிச்சீங்களா? எதுக்கும்மா அவசரப்படணும்?" மைதிலி தீர்மானமாக மறுத்தாள். அப்பா அம்மாவின் முகம் வாடிப்போயிற்று.."அதெல்லாம் விசாரிக்காமயா இருப்போம்? அப்பா விசாரிச்சுட்டார். பையன் படிச்சிருக்கான். ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உயரதிகாரியாக இருக்கான். சினிமாத்துறையில் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் சினிமாத் துறையிலும் ஒரு ஆர்வம் இயல்பாக இருப்பதால் வேலைநேரம் போக ஒரு பெரிய இயக்குனரிடம் உதவியாளராகவும் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்." அக்கா அவளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள். ஆனால், மைதிலி பிடிகொடுக்கவில்லை..(தொடரும்)
வித்யா சுப்ரமணியம்.நகரின் இரைச்சலில் இருந்து சற்று தள்ளியிருந்த பகுதியில் நுழைந்தது கார். அந்தக்கால வீடு என்றாலும் அழகான தனி வீடு. மதில் சுவருக்கு உள்ளே வீட்டைச் சுற்றி மரங்களும் செடிகளுமாக தோட்டம். வீட்டின் முன்புற உச்சியின் மையத்தில் கஜலக்ஷ்மி சிற்பத்திற்குக் கீழே 1961 என்று போட்டிருந்தது. வீடு கட்டிய ஆண்டாக இருக்கலாம். அழகான சிட் அவுட். அங்கேயே பிரம்பினாலான சோபா செட் போட்டிருந்தது அதன் குஷன்கள் அரையடி உயரத்திற்கு இருந்தது. வீட்டின் பிரதான வாயிற்கதவு நல்ல தேக்கு மரத்தில் அழகான கஜலக்ஷ்மி சிற்பம் செதுக்கப்பட்டு கம்பீரமாக இருந்தது. அடிக்கடி வார்னிஷ் அடிப்பார்கள் போலும், புதுக்கருக்கு மாறாமலிருந்தது.."இப்டி உக்காரும்மா" சிட்டவுட் சோபாவைக் காட்டிய பெரியவர் அன்றைய தினசரியை எடுத்து டீபாயில் வைத்துவிட்டு உள்ளே போனார். பல் தேய்த்து முகம் கழுவிக்கணும்னா உள்ள வாங்க என்றான் அவர் பிள்ளை. பையிலிருந்து பேஸ்ட்டும் பிரஷ்ஷும் எடுத்துக் கொண்ட மைதிலி குழந்தைகளை அழைத்துக் கொண்டு உட்புறம் சென்றாள். பெரிய கூடம் தாண்டி சமையலறையை ஒட்டி ஒரு குளியலறை இருந்தது. அங்கே குழந்தைகளுக்கு பல் தேய்த்து, தானும் தேய்த்து முகம் கழுவித் துடைத்துக் கொண்டு வந்தாள். சற்று நேரத்தில் நுரை பொங்க முதல் டிக்காஷன் வாசத்தோடு காப்பியும் குழந்தைகளுக்கு பாலும் வந்தது. பெரியவர் குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை பூசி பளிச்சென்ற முகத்தில் புன்னகை தவழ வந்து அவள் எதிரில் அமர்ந்தார்.."அரைமணில இட்லி ரெடியாய்டும் . பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு கிளம்புவோம்"."எதுக்கு சார்? ஏற்கெனவே உங்களை நிறைய கஷ்டப்படுத்திட்டேன்"."குழந்தைங்க முகத்துல பசி தெரியுது. சாப்ட்டுட்டே போகலாம்"."உங்களோட நேடிவ் திருச்சிதானா?".ஆமாம்… பிறந்தது, வளர்ந்தது, படிச்சது, உத்யோகம் பார்த்தது எல்லாமே இங்கதான். எங்கப்பாக்கு நாங்க மூணு பிள்ளை, ரெண்டு பெண்கள். நான்தான் கடைக்குட்டி. மற்ற எல்லாரும், டெல்லி, பாம்பே, அமெரிக்கான்னு சௌக்கியமா இருக்காங்க. எனக்கு திருச்சிய விட்டு நகர விருப்பமில்லை. அரங்கனையும், அகிலாவையும் தினம் தரிசிக்காவிட்டால் தூக்கம் வராது. சின்ன வயசுல, திருவானைக்காவில்தான் இருந்தோம். என் திருமணத்துக்குப் பிறகு அப்பாவோட வீடு, நிலம் எல்லாம் பாகப்பிரிவினையான பிறகு, நா இந்த வீட்டைக் கட்டினேன். அப்பா என்னோடதான் கடைசிவரை இருந்தார். எனக்கு ஒரு பெண், ஒரு பிள்ளை. பெண் துபாய்ல குடும்பத்தோட சௌக்கியமா இருக்கா. உன் வயசுதான் இருக்கும் அவளுக்கும். பிள்ளை சி.ஏ. முடிச்சுட்டு இங்கேயே நல்ல வேலைல இருக்கான். அவனுக்கு ஒரு நல்ல வரன் பார்த்து அவனையும் ஒருத்திக்கிட்ட ஒப்படைச்சுட்டா, நான் கேதார், பத்ரி, கைலாஷ்னு வருஷமொரு டூர் கிளம்பிடுவேன்.."உங்க ஆசை நிறைவேறட்டும் சார். நல்ல மருமகள் கிடைப்பா"."அப்பா டிபன் ரெடி" பிள்ளை குரல் கொடுக்க, வாம்மா என்றபடி அவர் எழுந்தார்..மல்லிகைப்பூ மாதிரி இட்லியும், தேங்காய் சட்னியும் காலைப் பசிக்கு அத்தனை சுவையாயிருந்தது. உண்மையில் இரண்டு நாட்களாக மனப்புழுக்கத்தோடு இருந்ததால் சரியாக சாப்பிடக்கூட இல்லை. அதனால் நல்ல பசியிருந்தது. நாலைந்து இட்லி சுலபமாய் உள்ளே இறங்கிற்று. குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்..கிளம்புவதற்கு முன்பு அவர் யாருக்கோ போன் பேசினார். பிறகு அவளிடம் வந்தார். போலாமா? என்றபடி அவளது சூட்கேசை எடுத்துக் கொண்டார். மழை சற்று விட்டிருந்தாலும் மேகம் சூழ்வதைப் பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கொட்டும் போலிருந்தது. அவர் அவளிடம் ஒரு குடை கொடுத்துவிட்டு தானும் ஒரு குடையை விரித்து பிடித்துக் கொண்டு முன்னால் நடக்க, பின்னால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவள் நடந்தாள்..வரலக்ஷ்மி சேவா நிலையம் என்ற பெயர்ப் பலகையோடு கூடிய அந்த இல்லம் அமைதியாக இருந்தது. மழையில் நனைந்த மரங்களும், செடிகளும் கொடிகளும் பசுமையாய் சிரிக்க, காம்பவுண்டு சுவரை ஒட்டியிருந்த தோட்டத்திற்குள் முதியவர்கள் சிலர் நடை பயின்று கொண்டிருக்க, சிறுவர் சிறுமியர் சிலர் மரக்கிளைகளில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தனர்..வாங்கய்யா என்றபடி அலுவலக அறையிலிருந்து வந்த பெண்மணிக்கு நடுத்தர வயதிருக்கும். காதோர நரை, முகத்திற்கு கம்பீரம் சேர்த்திருந்தது. அவர்களை அலுவலக அறையிலிருந்த நாற்காலிகளில் அமர வைத்தாள். சாமி படத்திற்கு முன்பு ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகர்பத்திகளின் நறுமணம் நாசியை இதமாய்த் தொட்டது. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு தம்பதியின் படத்திலிருந்த பெரியவரின் முகம் பரிச்சயமுள்ளதாய்த் தெரிந்தது. அவள் அதையே சற்றுநேரம் உற்றுப்பார்த்தாள் .."அது எங்கப்பா அம்மாதான்" பெரியவர் சொன்னதும் திகைப்போடு அவரைத் திரும்பிப் பார்த்தாள். மீண்டும் படத்தைப் பார்த்தாள்.."இந்த இல்லம்…"."அப்பாவின் கடைசி ஆசை இது. இந்த இடம் அவரோடதுதான். அவர் விருப்பப்படி நாங்க எல்லோரும் சேர்ந்து இந்த இல்லத்தைக் கட்டி நல்லபடியாக நடத்திக் கொண்டிருக்கோம். என் பெயர் ஜம்புலிங்கம். ".மைதிலி அவரை[ப் பார்த்து கரம் கூப்பினாள். கடவுள்தான் அவர் பயணித்த அதே பேருந்தில் தன்னையும் ஏற்றி இங்கு கொண்டு சேர்த்திருப்பதாக நம்பினாள் ..இவங்க திருமதி சாரதா. எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த இல்லத்தின் நிர்வாகியாகப் பணியாற்றுபவர். இந்த இல்லத்தின் விதிப்படி அவங்க உன்னைப் பற்றித் தெரிந்துக்கொள்ள சில கேள்விகள் கேட்பாங்க. நான் வெளிய இருக்கேன். இங்கு நீ சொல்லும் விஷயங்கள் வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியம் காக்கப்படும். அதனால நீ இவரை நம்பி உன்னைப்பற்றி சொல்லலாம்" அவர் எழுந்தார்.."ஐயா நீங்க எதுக்கு வெளிய போகணும்? நீங்க என் அப்பா மாதிரி. முன்பின் தெரியாத நிலையில்தான் முதல்ல உங்ககிட்ட எதுவும் சொல்ல தயங்கினேன், தப்பா எடுத்துக்காதீங்க"."அதுல தப்பே இல்லைம்மா. ஒரு பெண் முன்பின் தெரியாதவரிடம் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்வது அத்தனை நல்லதல்ல என்பதுதான் என் கருத்தும்."."உட்காருங்கய்யா" மைதிலி தன்னருகிலிருந்த சேரை பின்னுக்குத் தள்ளி அவர் அமர வழி செய்தாள்..மின்விசிறி சுழலும் சப்தம் மட்டுமே கேட்க ஒரு சில வினாடிகள் மௌனமாய் அமர்ந்திருந்தாள். எங்கிருந்து ஆரம்பிக்க? வார்த்தைகளைத் தேடினாள்.."என் பிறந்த வீடு மிடில் கிளாஸ் குடும்பம். அப்பா மாநில அரசாங்க அலுவலகத்தில் சம்பளம் மட்டுமே வாங்கும் நேர்மையான உயரதிகாரி. கீழ் நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்தவர். அவரது சம்பளத்தில் அழகாகக் குடும்பம் நடத்திய அம்மா அவங்களுக்கு பிறந்த நாங்க மூன்று பேரும் பெண்கள். நான்தான் கடைசி பெண். எங்க மூணு பேரையும் எங்க விருப்பப்படி படிக்க வைத்தார் அப்பா. பெரியக்கா வங்கிப் பணியாளர் தேர்வு எழுதி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியில் சேர்ந்து பதவி உயர்வுகள் பெற்று தற்போது கிளை மேலாளராக இருக்கிறாள். சின்னக்கா யுபிஎஸ்சி தேர்வெழுதி மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக இருக்கிறாள். ரெண்டு அக்காக்களுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார் அப்பா. கல்லூரிப் படிப்பு முடித்து நானும் வங்கி தேர்வும் யுபிஎஸ்சி தேர்வும் எழுத இருந்த நிலையில்தான் ஒரு பெரிய இடத்திலிருந்து என்னைப் பெண் கேட்டு ஒரு வரன் வந்தது. ஆனால், எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. "ஒரு நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன்" என்று அப்பாவிடம் கெஞ்சினேன்." மைதிலி பெருமூச்சுவிட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்..**** **** ****.அக்டோபர், 1984..அம்மாவும் அக்காக்களும் அவளைச் சூழ்ந்து கொண்டு அமர்ந்தார்கள்.."இங்க பார் மைதிலி, உன் நல்லதுக்காகத்தான் சொல்றோம்… புரிஞ்சுக்கோ… நல்ல இடம்…. "."இருக்கட்டும்மா… என்னோட லட்சியம் ஒரு வங்கி வேலை. இன்னும் நாலு மாசத்துல எக்ஸாம். என கவனம் முழுக்க அதில்தான் இருக்கு. கண்டிப்பா எனக்கு வேலை கிடைக்கும்னு நினைக்கறேன். அது கிடைச்ச பிறகு நீங்க சொல்ற இதே வரனைக் கட்டிக்கறேன். அதுவரை அவர்களைக் காத்திருக்கச் சொல்லுங்க. நீங்களும் கொஞ்சம் பொறுமையா இருங்க."."இந்த வரனைக் கட்டிக்கிட்டா நீ வேலைக்கு போக வேண்டிய அவசியமேயில்லை மைதிலி. பெரிய பணக்காரங்க. ஐம்பது வருஷங்களுக்கு முன்பிருந்தே பல வெற்றிப் படங்களை எடுத்த, உச்ச நட்சத்திரங்கள் பலரை உருவாக்கிய பிரபல சினிமா கம்பெனி அதிபரோட பேரன்தான் இந்த வரன். ரெண்டு அண்ணன்களுக்கு கல்யாணமாகிடுச்சு. முதல் இரண்டு மருமகள்களும் பெரிய இடத்துலர்ந்து வாக்கப்பட்டவங்க. ராணி மாதிரி வெச்சிருக்காங்க. இப்போ சினிமா எதுவும் எடுக்காட்டியும் சொத்து சுகத்துக்கு குறைச்சல் இல்ல. அவங்க அந்தஸ்துக்கு நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் வீட்டில் பெண் கேட்பதே பெரிய விஷயம். அப்பா மேல நல்ல அபிப்பிராயம் உள்ளவங்க என்பதால் நம் குடும்பத்தைப் பார்த்து பிடிச்சுப்போய் உன்னைக் கேக்கறாங்க. எந்த டிமாண்டும் இல்ல. இந்த மிடில் கிளாஸ் கஷ்டமெல்லாம் இல்லாம நீ அங்க சௌக்கியமா இருக்கலாம்."."பணக்காரங்கன்னு சொல்றீங்க. விரும்பி வராங்கன்னும் சொல்றீங்க. அதான் யோசிக்கறேன். பணம் பணத்தோட சேராம எதுக்கு இறங்கி வராங்க? அதுக்கு பின்னாடி என்ன காரணம்னு விசாரிச்சீங்களா? எதுக்கும்மா அவசரப்படணும்?" மைதிலி தீர்மானமாக மறுத்தாள். அப்பா அம்மாவின் முகம் வாடிப்போயிற்று.."அதெல்லாம் விசாரிக்காமயா இருப்போம்? அப்பா விசாரிச்சுட்டார். பையன் படிச்சிருக்கான். ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உயரதிகாரியாக இருக்கான். சினிமாத்துறையில் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் சினிமாத் துறையிலும் ஒரு ஆர்வம் இயல்பாக இருப்பதால் வேலைநேரம் போக ஒரு பெரிய இயக்குனரிடம் உதவியாளராகவும் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்." அக்கா அவளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள். ஆனால், மைதிலி பிடிகொடுக்கவில்லை..(தொடரும்)