? குடியரசு தலைவா் தோ்தலில் பா.ஜ.க. பழங்குடி இனத்தை சோ்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளதே!… பாராட்டலாமா?– ஆர். நாகராஜன், செம்பனார் கோவில்.! பழங்குடியினரா? தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, முஸ்லீமா, கிறித்துவரா, சீக்கியரா என்பது முக்கியமல்ல. அரசமைப்புச் சட்டத்தை மதித்து நடக்கும் பின்னணியைக் கொண்டவரா, பொறுப்பேற்ற பின் அரசமைப்புச் சட்டத்துக்கு நேர்மையாக நடப்பாரா இல்லை, ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பாரா, என்பதே முக்கியம். பழங்குடிப்பிரிவைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆவதால் பழங்குடிகளுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை. அட்டவணை சமூகத்தை சேர்ந்த கோவிந்த் குடியரசு தலைவராக இருந்ததால் அட்டவணைப் பிரிவினருக்கு ஏதும் நன்மை கிடைத்து விட்டதா என்ன? இதுவும் அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படும் ஒரு நாடகம், அவ்வளவே!.? "அ.தி.மு.க. பலவீனமானால் சனாதன சக்திகள் வலிமையடையும்" என்ற திருமாவளவனின் கருத்து பற்றி…– எம். நிர்மலா இராமதாஸ், ரங்கநாதபுரம்.! ஏற்பதிற்கில்லை. தமிழகத்தின் கள அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு திராவிடக் கட்சி பலவீனம் அடைந்தால், அதனால் வலிமையடைவது மற்றொரு திராவிடக் கட்சிதான்..? உலக அரங்கில் அமெரிக்காவின் ஆளுமை ஏறுமுகமா? இறங்கு முகமா சார்?– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.! இந்தியப் பங்குச்சந்தையைப் போல அவ்வப்போது ஏறி இறங்கி கொண்டிருந்தாலும் அமெரிக்காவின் ஆளுமை உலக அரசியலிலும், பொருளாதாரத்திலும் எப்போதும் ஒரு தனியிடம் பெற்றேயிருக்கும். அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க டாலர் உலக கரன்சியாக மதிக்கப்படுவது தான்..? சமீபத்தில் முகம் சுளிக்க வைத்த அரசியல் நிகழ்வு?– நெல்லை குரலோன், புதூர்.! அண்மையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம். உறுப்பினர்களுக் மட்டுமே அனுமதி. பார்வையளார்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துவிட்டு, அனைத்து சானல்களும் நேரலையில் ஒளிபரப்பினார்கள். அதில் பார்க்க நேர்ந்த அவலமான காட்சிதான். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மிக மோசமான முறையில் அமவதிக்கப்படுகிறார். அவைத்தலைவரும், கட்சித் தலைவர்களும் அந்தத் தொண்டர்களை கண்டிக்காமல் அமைதியான சாட்சிகளாகயிருந்தனர்..? மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க. காப்பியடிப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே…-கி. சோழராஜன், புதுச்சேரி.! மத்திய அரசின் திட்டம் என்பது நாட்டு முழுவதற்குமானது. அதை மாநிலங்களில் செயல்படுத்த வேண்டியது மாநிலங்களின் பணி. அந்த நிலையில் எப்படி "காப்பி அடிக்கிறார்கள்" என்கிறார் என்று புரியவில்லை. காப்பியோ, ஒரிஜினலோ மக்களுக்கு அந்த திட்டங்களினால் பலன் கிடைக்கிறதா என்பதுதான் கேள்வி..? "மோடி ஆட்சியில் எங்களை மீண்டும் இந்தியாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என பாகிஸ்தான் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது" என்கிறாரே நயினார் நாகேந்திரன்– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.! "கனவுகளுக்கும் எல்லையுண்டு" என்பது அரசியல்வாதிகளின் கனவுகளுக்கு கிடையாது..? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 47,000 பேர் தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்திருப்பது வருத்தம் தரும் விஷயம் இல்லையா?– பார்வதி சுந்தரம், வேலூர்..! இதற்கு பல காரணங்கள் உண்டு. பல அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஓர் ஆசிரியர்தான் இருக்கிறார். அவர்தான் எல்லாப் பாடங்களையும் நடத்த வேண்டும் என்கிற அவலநிலை இருக்கிறது. தொடக்கப் பள்ளியிலிருந்தே தமிழுக்கென்று ஆசிரியர்களை அனைத்துப் பள்ளிகளிலும் நியமித்திருந்தால், தமிழ்ப் பாடத்தில் தோல்வியடையும் நிலை எந்த மாணவருக்கும் ஏற்பட்டிருக்காது. ஆன்லைன் வழிக் கல்வியிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது தமிழ் பாடங்கள் தான். இந்த நிலையிலும் திருச்செந்தூர் மாணவி தமிழ் பாடத்தில் நுற்றுக்கு நூறு வாங்கிச் சாதனை படைத்திருக்கிறார். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள்..? "அ.தி.மு.க.வுக்கு பல துரோகங்களை ஓ.பி.எஸ். செய்துள்ளார். அவரை துரோகத்தின் அடையாளம் என்றுதான் சொல்ல வேண்டும்" என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே…-இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி – 605001.! அ.தி.மு.க.வில் விசுவாசத்தின் அடையாளம் பன்னீர்செல்வம் – சொன்னவர் அந்தக் கட்சியின் கடவுள் ஜெயலலிதா..? பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால் தினமும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பற்றி…– ச. இராமதாசு, வானூர்.! தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும்போது அந்தக் குழுவிலிருந்த அமைச்சருக்கு அப்போது தெரியாதா? இவர் அமைச்சரவையிலிருக்கும் மற்றோர் அமைச்சர் 'ஓட்டுனர், நடத்துனருக்கான வசூல் படியை இரட்டிப்புச்செய்கிறோம்' என அறிவிக்கிறாரே?.? அ.தி.மு.க.வின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருப்பது பற்றி…– இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை, புதுச்சேரி – 605001.! ஓர் அரசியல் கட்சியில் பொதுக்குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள், தீர்மானக்குழுவால் வடிவமைக்கபட்டு, செயற்குழுவால் விவாதித்து முடிவு செய்யப்பட்டவை. அவற்றின் மீது விவாதம் நடந்து பெரும்பானையாவனர்கள் ஏற்காவிட்டால் அது திரும்பப் பெறப்படும். நிராகரிக்கப்பட்டால், பொதுக்குழு கட்சியின் தலைமை, மற்றும் செயற்குழுவையே நிராகரித்தது என்று பொருள் . இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் நடக்காத நாடகம் இது..? "புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக போராட மாணவர்கள் தயாராக இருங்கள்" என்று அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது பற்றி…– கி. சோழராஜன், புதுச்சேரி – 605107.! ஒன்றிய அரசின் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லாவிட்டால் அதை தகுந்த முறையில் எதிர்க்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்காக மாணவர்களை போராட அழைப்பது, அதுவும் அமைச்சரே அழைப்பது தவறு.. ? "மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று என்னை அழைக்க வேண்டாம்; 'சின்னவர்' என்றே என்னை அழைக்கலாம்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது பற்றி…– எம். பானுமதி, மாங்குப்பம்.! ஏன் தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொள்ள வேண்டும்? அவருக்கு அவரது தாத்தா சூட்டிய பெயராலேயே அழையுங்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்..ஒரு தகவலுக்காக. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் 'சின்னவர்' என்று அறியப்பட்டவர். பெரியவர் அவரது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி.. ? "அ.தி.மு.க தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்" என்று ஓபிஎஸ் கூறியுள்ளாரே…– ஜெ. கிருஷ்ணதேவு, புதுச்சேரி – 605107.! பலரும் என்றோ, பெரும்பான்மையோர் என்றோ சொல்லவில்லை என்பதை கவனித்தீர்களா?.? ஜி7 கூட்டத்துக்குப்பின் இந்தியர்களிடம் பேசிய மோடி "இந்தியாவில் மின் இணைப்பு இல்லாத கிராமமே கிடையாது" என்று பேசியிருக்கிறாரே?– சந்திர சேகர், வாணியம்பாடி.! ஓடிசா மாநிலத்தில் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் துங்கிரிசாகி. இந்த கிராமத்துக்கு இப்போதுதான் மின்சார வசதியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் குடியரசு தலைவர் வேட்பாளர் முர்முவின் உறவினர்கள். இந்த கிராமம் மட்டுமில்லை, நாட்டின் பல தொலைதூர சிறிய மலைக்கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதிகள் இல்லை என்பதே உண்மை..? விஜய்யின் அடுத்தப் பட போஸ்டர் வெளியாகியிருக்கிறதே பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?– சண்முக சுந்தரம், போடிநாயக்கனூர்..! "கருத்துக் கேட்குமளவுக்கு சினிமா போஸ்டர்கள் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கிறது" என்ற வருத்தத்தில் கருத்தும் எதுவுமில்லை.
? குடியரசு தலைவா் தோ்தலில் பா.ஜ.க. பழங்குடி இனத்தை சோ்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளதே!… பாராட்டலாமா?– ஆர். நாகராஜன், செம்பனார் கோவில்.! பழங்குடியினரா? தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, முஸ்லீமா, கிறித்துவரா, சீக்கியரா என்பது முக்கியமல்ல. அரசமைப்புச் சட்டத்தை மதித்து நடக்கும் பின்னணியைக் கொண்டவரா, பொறுப்பேற்ற பின் அரசமைப்புச் சட்டத்துக்கு நேர்மையாக நடப்பாரா இல்லை, ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பாரா, என்பதே முக்கியம். பழங்குடிப்பிரிவைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆவதால் பழங்குடிகளுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை. அட்டவணை சமூகத்தை சேர்ந்த கோவிந்த் குடியரசு தலைவராக இருந்ததால் அட்டவணைப் பிரிவினருக்கு ஏதும் நன்மை கிடைத்து விட்டதா என்ன? இதுவும் அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படும் ஒரு நாடகம், அவ்வளவே!.? "அ.தி.மு.க. பலவீனமானால் சனாதன சக்திகள் வலிமையடையும்" என்ற திருமாவளவனின் கருத்து பற்றி…– எம். நிர்மலா இராமதாஸ், ரங்கநாதபுரம்.! ஏற்பதிற்கில்லை. தமிழகத்தின் கள அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு திராவிடக் கட்சி பலவீனம் அடைந்தால், அதனால் வலிமையடைவது மற்றொரு திராவிடக் கட்சிதான்..? உலக அரங்கில் அமெரிக்காவின் ஆளுமை ஏறுமுகமா? இறங்கு முகமா சார்?– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.! இந்தியப் பங்குச்சந்தையைப் போல அவ்வப்போது ஏறி இறங்கி கொண்டிருந்தாலும் அமெரிக்காவின் ஆளுமை உலக அரசியலிலும், பொருளாதாரத்திலும் எப்போதும் ஒரு தனியிடம் பெற்றேயிருக்கும். அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க டாலர் உலக கரன்சியாக மதிக்கப்படுவது தான்..? சமீபத்தில் முகம் சுளிக்க வைத்த அரசியல் நிகழ்வு?– நெல்லை குரலோன், புதூர்.! அண்மையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம். உறுப்பினர்களுக் மட்டுமே அனுமதி. பார்வையளார்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துவிட்டு, அனைத்து சானல்களும் நேரலையில் ஒளிபரப்பினார்கள். அதில் பார்க்க நேர்ந்த அவலமான காட்சிதான். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மிக மோசமான முறையில் அமவதிக்கப்படுகிறார். அவைத்தலைவரும், கட்சித் தலைவர்களும் அந்தத் தொண்டர்களை கண்டிக்காமல் அமைதியான சாட்சிகளாகயிருந்தனர்..? மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க. காப்பியடிப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே…-கி. சோழராஜன், புதுச்சேரி.! மத்திய அரசின் திட்டம் என்பது நாட்டு முழுவதற்குமானது. அதை மாநிலங்களில் செயல்படுத்த வேண்டியது மாநிலங்களின் பணி. அந்த நிலையில் எப்படி "காப்பி அடிக்கிறார்கள்" என்கிறார் என்று புரியவில்லை. காப்பியோ, ஒரிஜினலோ மக்களுக்கு அந்த திட்டங்களினால் பலன் கிடைக்கிறதா என்பதுதான் கேள்வி..? "மோடி ஆட்சியில் எங்களை மீண்டும் இந்தியாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என பாகிஸ்தான் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது" என்கிறாரே நயினார் நாகேந்திரன்– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.! "கனவுகளுக்கும் எல்லையுண்டு" என்பது அரசியல்வாதிகளின் கனவுகளுக்கு கிடையாது..? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 47,000 பேர் தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்திருப்பது வருத்தம் தரும் விஷயம் இல்லையா?– பார்வதி சுந்தரம், வேலூர்..! இதற்கு பல காரணங்கள் உண்டு. பல அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஓர் ஆசிரியர்தான் இருக்கிறார். அவர்தான் எல்லாப் பாடங்களையும் நடத்த வேண்டும் என்கிற அவலநிலை இருக்கிறது. தொடக்கப் பள்ளியிலிருந்தே தமிழுக்கென்று ஆசிரியர்களை அனைத்துப் பள்ளிகளிலும் நியமித்திருந்தால், தமிழ்ப் பாடத்தில் தோல்வியடையும் நிலை எந்த மாணவருக்கும் ஏற்பட்டிருக்காது. ஆன்லைன் வழிக் கல்வியிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது தமிழ் பாடங்கள் தான். இந்த நிலையிலும் திருச்செந்தூர் மாணவி தமிழ் பாடத்தில் நுற்றுக்கு நூறு வாங்கிச் சாதனை படைத்திருக்கிறார். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள்..? "அ.தி.மு.க.வுக்கு பல துரோகங்களை ஓ.பி.எஸ். செய்துள்ளார். அவரை துரோகத்தின் அடையாளம் என்றுதான் சொல்ல வேண்டும்" என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே…-இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி – 605001.! அ.தி.மு.க.வில் விசுவாசத்தின் அடையாளம் பன்னீர்செல்வம் – சொன்னவர் அந்தக் கட்சியின் கடவுள் ஜெயலலிதா..? பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால் தினமும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பற்றி…– ச. இராமதாசு, வானூர்.! தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும்போது அந்தக் குழுவிலிருந்த அமைச்சருக்கு அப்போது தெரியாதா? இவர் அமைச்சரவையிலிருக்கும் மற்றோர் அமைச்சர் 'ஓட்டுனர், நடத்துனருக்கான வசூல் படியை இரட்டிப்புச்செய்கிறோம்' என அறிவிக்கிறாரே?.? அ.தி.மு.க.வின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருப்பது பற்றி…– இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை, புதுச்சேரி – 605001.! ஓர் அரசியல் கட்சியில் பொதுக்குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள், தீர்மானக்குழுவால் வடிவமைக்கபட்டு, செயற்குழுவால் விவாதித்து முடிவு செய்யப்பட்டவை. அவற்றின் மீது விவாதம் நடந்து பெரும்பானையாவனர்கள் ஏற்காவிட்டால் அது திரும்பப் பெறப்படும். நிராகரிக்கப்பட்டால், பொதுக்குழு கட்சியின் தலைமை, மற்றும் செயற்குழுவையே நிராகரித்தது என்று பொருள் . இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் நடக்காத நாடகம் இது..? "புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக போராட மாணவர்கள் தயாராக இருங்கள்" என்று அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது பற்றி…– கி. சோழராஜன், புதுச்சேரி – 605107.! ஒன்றிய அரசின் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லாவிட்டால் அதை தகுந்த முறையில் எதிர்க்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்காக மாணவர்களை போராட அழைப்பது, அதுவும் அமைச்சரே அழைப்பது தவறு.. ? "மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று என்னை அழைக்க வேண்டாம்; 'சின்னவர்' என்றே என்னை அழைக்கலாம்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது பற்றி…– எம். பானுமதி, மாங்குப்பம்.! ஏன் தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொள்ள வேண்டும்? அவருக்கு அவரது தாத்தா சூட்டிய பெயராலேயே அழையுங்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்..ஒரு தகவலுக்காக. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் 'சின்னவர்' என்று அறியப்பட்டவர். பெரியவர் அவரது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி.. ? "அ.தி.மு.க தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்" என்று ஓபிஎஸ் கூறியுள்ளாரே…– ஜெ. கிருஷ்ணதேவு, புதுச்சேரி – 605107.! பலரும் என்றோ, பெரும்பான்மையோர் என்றோ சொல்லவில்லை என்பதை கவனித்தீர்களா?.? ஜி7 கூட்டத்துக்குப்பின் இந்தியர்களிடம் பேசிய மோடி "இந்தியாவில் மின் இணைப்பு இல்லாத கிராமமே கிடையாது" என்று பேசியிருக்கிறாரே?– சந்திர சேகர், வாணியம்பாடி.! ஓடிசா மாநிலத்தில் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் துங்கிரிசாகி. இந்த கிராமத்துக்கு இப்போதுதான் மின்சார வசதியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் குடியரசு தலைவர் வேட்பாளர் முர்முவின் உறவினர்கள். இந்த கிராமம் மட்டுமில்லை, நாட்டின் பல தொலைதூர சிறிய மலைக்கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதிகள் இல்லை என்பதே உண்மை..? விஜய்யின் அடுத்தப் பட போஸ்டர் வெளியாகியிருக்கிறதே பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?– சண்முக சுந்தரம், போடிநாயக்கனூர்..! "கருத்துக் கேட்குமளவுக்கு சினிமா போஸ்டர்கள் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கிறது" என்ற வருத்தத்தில் கருத்தும் எதுவுமில்லை.