நூல் அறிமுகம்.வேதா கோபாலன்.'கதைகளும் திரைப்படங்களும்' பற்றி சுபாஷிணி ரமணன் முக நூலில் எழுதிய பதிவுகள், என்னை மட்டுமின்றிப் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கவும் வியந்து பாராட்டவும் செய்யக் காரணங்கள் பல இருந்தன..முதல் காரணம் ஜாலியான ஜனரஞ்சகமான டாபிக்..இதில் இவர் குறிப்பிட்டிருக்கும் கதைகளையும் சினிமாக்களையும் நான் பார்த்தும் படித்தும் இருக்கிறேன். சில படங்களைப் பார்க்காவிட்டாலும் கதையை நிச்சயம் படித்திருக்கிறேன்..இவர் எழுதும் பாணியில் அலட்டல் அற்ற தன்மையும் 'நான் எவ்ளோ பெரிய ஆள் பாரு' தன்னைப் பற்றி மிகையாகப் புகழ்ந்து இமேஜ் ஏற்படுத்தும் அபத்தம் ஏதும் இல்லாமல் இயல்பாக எழுதும் தன்மையும் என்னைக் கவர்ந்தன. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களோ, டைரக்டர்களோ, நடிகர்களோ இதைப் படித்தால் சிலிர்த்துப்போவார்கள்..கதை விமர்சனங்களையும் பட விமர்சனங்களையும் ஒரு பெரிய டாஸ்க்-காகவே எடுத்துச் செய்திருக்கிறார். இதை இன்னும் விஸ்தாரமாகச் செய்தால் டாக்டரேட்டுக்கான தீஸிஸ் உருவாகும். அந்த அளவு உழைப்பும், மெனக்கெடலும், ஈடுபாடும் இதில் தெரிகின்றன..ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் எழுதியிருக்கும் குறிப்பை ஏனோதானோ என்று எழுதவில்லை. முனைப்புடன் தேடித்தேடிப் பிடித்திருக்கிறார். மற்ற சில எழுத்தாளர்களுக்கே இவை புதிய செய்தியாக இருக்கலாம். (எனக்கு ஒன்றிரண்டு அப்படி இருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!).ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றிய விவரக் குறிப்பையும் தவறின்றிக் குறிப்பிட்டிருக்கும் விதமும் பாராட்ட வைக்கின்றன. தயாரிப்பு டைரக்ஷன், பாடலாசிரியர், நடிகர்கள், பாடல்களைப் பாடியவர்களின் பட்டியல் என சகல விவரங்களையும் கொடுத்ததோடு மொத்தம் எத்தனை பாடல்கள் என்று குறிப்பிடும் அளவுக்குத் துல்லியம்..கதையை சினிமாவுக்காக எந்த அளவு மாற்றியிருக்கிறார்கள் அல்லது மாற்றவில்லை என்பதையும் நுணுக்கமாக விமர்சித்திருக்கிறார்..கதை, படம் இரண்டையும் இணைக்கும் யுக்தியில் பாடல்களையும் விட்டுவைக்காமல் சேர்த்திருப்பது… இவர் மெனக்கெட்டிருக்கும் விதத்தைக் காட்டுகிறது..நாவல்களின் சுருக்கங்களை இவ்வளவு நேர்த்தியாக எழுதுவது சிரமம். கதையின் சுவை கெடாமலும் சுருக்கம் என்பது பெருக்கமாகாமலும் எழுதத் தனித் திறமை வேண்டும்..மகரிஷியின் பத்ரகாளி பற்றிக் குறிப்பிடுகையில் "ஒரு காட்சியில் அரக்குப் புடைவையைக் கட்டிக் கொண்டு கண்களில் எப்போதையும்விட அதிகமாக மைதீட்டிக்கொண்டு, தலைப்பின்னலை அவிழ்த்து நுனி முடிச்சிட்டுக் கொண்டு புறப்பட்டாள் என்று மகரிஷி எழுதியிருப்பார். அதைக்கூட காட்சிப்படுத்தித் தாய் மகளைக் கேட்பதாக படத்தில் எடுத்திருந்தார்கள்" என்பதில் உள்ள நுணுக்கம் வியக்க வைத்தது..கதைச்சுருக்கம், சினிமாக் காட்சி கவனிப்பு என்பவை மட்டுமின்றி திரைப்படத் தகவல்களும் கூடுதல் முந்திரி. நடிகை ராணி சந்திரா விபத்தில் இறந்தவுடன் டைரக்டர் எப்படிச் சமாளித்தார் என்பது ஓர் உதாரணம்.."கள்வனின் காதலி" யில் 'திருடனுக்கு வந்த புகழும் மரியாதையும் போலீஸுக்கு வரவில்லை' என்ற லாஜிக்படி "கல்கி ஒரு திருடனை எப்படி மக்கள் நாயகனாக கருதமுடியும் என்ற கோணத்தில் யோசித்த" விதத்தை இவர் விவரித்திருக்கும் விதத்திற்கு தனி சபாஷ்..சிவசங்கரியின் 47 நாட்கள் பற்றிக் குறிப்பிடுகையில் "இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்காது என்று சொன்னாலும், இப்போதும் ஏமாற்றுபவர்களையும், ஏமாறுபவர்களையும் பற்றிப் படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் தானே இருக்கிறோம். என்ன ஒரு முன்னேற்றம் என்றால், பெண்களும் இப்படி ஏமாற்றத் துணிந்தது தான்" என்ற சுபாஷிணியின் சொந்தக் கருத்து ஆமோதிக்க வைக்கிறது.."சரிதாவும், டெல்லி கணேசும் சிரஞ்சீவி மற்றும் ஜெயப்ரதாவுக்குப் பதிலாக தங்கள் குரல்களால் நடிக்கிறார்கள்" என்ற எழுத்துத் திறமை அருமை. அது தன் ஊகம் என்று ஒப்புக்கொண்ட நேர்மையையும் பாராட்ட வேண்டும்.."சினிமாவில் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கோ" என்று சொல்வதுடன் படம் முடிவடைகிறது. படிக்கும்போது காட்சி கண்முன் வந்து மனதை கனக்கச் செய்கிறது..அனுராதா ரமணனின் சிறை கதையையும் அந்தத் திரைப்படத்தையும் தன் வழக்கமான பாணியில் எழுதிய சுபாஷிணி, அந்தக் கதை வெளியான அதே விகடனில் வந்த விமர்சன வரிகளையும் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது..சிறை குறித்த (தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்) கௌரி கிருபானந்தன் பற்றிய டெயில் பீஸ்.. வாவ்..மணியனின் இலவுகாத்த கிளியோ பற்றி எழுதுகையில் "மங்களம் மரியாதையுடனும், கமலா தயக்கத்துடனும், புஷ்பா சகஜமாகவும் பழக ஆரம்பிக்கிறார்கள்" என்று ஒரே வரியில் ஜமாய்த்துவிட்டார் சுபாஷிணி.."இது மணியனின் கதை என்பதை விட, பாலசந்தரின் படம் என்று உணர்த்தும் திரைக்கதை அமைப்பு" என்ற விமர்சனம் நாசூக்கு..கோமதியின் காதலன் படத்தை விமர்சிக்கையில் "சாவித்திரிக்கு பெரும்பான்மை நேரம் பாடலைக் கொடுத்து, கஷ்டப்படாமல் ஆடவும் சொல்லி விட்டார்கள்" என்ற வரி பக்கென்று சிரிக்க வைக்கிறது..ஆக, துல்லியமான ஆராய்ச்சி, அழகிய வரிகள், ஆழ்ந்த கவனிப்பு, லேசான நகைச்சுவை என்று அனைத்தும் நிறைந்த இந்த நூலை மிஸ் பண்ணவே கூடாது. திரைப்பட ரசிகர்களுக்கும், நாவல் ஆர்வலர்களுக்கும், சினிமாப் பாடல் விரும்புவோருக்கும் முழு வாழை இலை போட்டு விருந்து வைத்துவிட்டார்..பாராட்டத்தக்க இது போன்ற மேலும் ஆராய்ச்சிகளில் இவர் இறங்கலாம்..'கதைகளும் திரைப்படங்களும்'.ஆசிரியர்: சுபாஷிணி ரமணன்.பதிப்பகம் : புஸ்தகா பெங்களூரு
நூல் அறிமுகம்.வேதா கோபாலன்.'கதைகளும் திரைப்படங்களும்' பற்றி சுபாஷிணி ரமணன் முக நூலில் எழுதிய பதிவுகள், என்னை மட்டுமின்றிப் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கவும் வியந்து பாராட்டவும் செய்யக் காரணங்கள் பல இருந்தன..முதல் காரணம் ஜாலியான ஜனரஞ்சகமான டாபிக்..இதில் இவர் குறிப்பிட்டிருக்கும் கதைகளையும் சினிமாக்களையும் நான் பார்த்தும் படித்தும் இருக்கிறேன். சில படங்களைப் பார்க்காவிட்டாலும் கதையை நிச்சயம் படித்திருக்கிறேன்..இவர் எழுதும் பாணியில் அலட்டல் அற்ற தன்மையும் 'நான் எவ்ளோ பெரிய ஆள் பாரு' தன்னைப் பற்றி மிகையாகப் புகழ்ந்து இமேஜ் ஏற்படுத்தும் அபத்தம் ஏதும் இல்லாமல் இயல்பாக எழுதும் தன்மையும் என்னைக் கவர்ந்தன. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களோ, டைரக்டர்களோ, நடிகர்களோ இதைப் படித்தால் சிலிர்த்துப்போவார்கள்..கதை விமர்சனங்களையும் பட விமர்சனங்களையும் ஒரு பெரிய டாஸ்க்-காகவே எடுத்துச் செய்திருக்கிறார். இதை இன்னும் விஸ்தாரமாகச் செய்தால் டாக்டரேட்டுக்கான தீஸிஸ் உருவாகும். அந்த அளவு உழைப்பும், மெனக்கெடலும், ஈடுபாடும் இதில் தெரிகின்றன..ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் எழுதியிருக்கும் குறிப்பை ஏனோதானோ என்று எழுதவில்லை. முனைப்புடன் தேடித்தேடிப் பிடித்திருக்கிறார். மற்ற சில எழுத்தாளர்களுக்கே இவை புதிய செய்தியாக இருக்கலாம். (எனக்கு ஒன்றிரண்டு அப்படி இருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!).ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றிய விவரக் குறிப்பையும் தவறின்றிக் குறிப்பிட்டிருக்கும் விதமும் பாராட்ட வைக்கின்றன. தயாரிப்பு டைரக்ஷன், பாடலாசிரியர், நடிகர்கள், பாடல்களைப் பாடியவர்களின் பட்டியல் என சகல விவரங்களையும் கொடுத்ததோடு மொத்தம் எத்தனை பாடல்கள் என்று குறிப்பிடும் அளவுக்குத் துல்லியம்..கதையை சினிமாவுக்காக எந்த அளவு மாற்றியிருக்கிறார்கள் அல்லது மாற்றவில்லை என்பதையும் நுணுக்கமாக விமர்சித்திருக்கிறார்..கதை, படம் இரண்டையும் இணைக்கும் யுக்தியில் பாடல்களையும் விட்டுவைக்காமல் சேர்த்திருப்பது… இவர் மெனக்கெட்டிருக்கும் விதத்தைக் காட்டுகிறது..நாவல்களின் சுருக்கங்களை இவ்வளவு நேர்த்தியாக எழுதுவது சிரமம். கதையின் சுவை கெடாமலும் சுருக்கம் என்பது பெருக்கமாகாமலும் எழுதத் தனித் திறமை வேண்டும்..மகரிஷியின் பத்ரகாளி பற்றிக் குறிப்பிடுகையில் "ஒரு காட்சியில் அரக்குப் புடைவையைக் கட்டிக் கொண்டு கண்களில் எப்போதையும்விட அதிகமாக மைதீட்டிக்கொண்டு, தலைப்பின்னலை அவிழ்த்து நுனி முடிச்சிட்டுக் கொண்டு புறப்பட்டாள் என்று மகரிஷி எழுதியிருப்பார். அதைக்கூட காட்சிப்படுத்தித் தாய் மகளைக் கேட்பதாக படத்தில் எடுத்திருந்தார்கள்" என்பதில் உள்ள நுணுக்கம் வியக்க வைத்தது..கதைச்சுருக்கம், சினிமாக் காட்சி கவனிப்பு என்பவை மட்டுமின்றி திரைப்படத் தகவல்களும் கூடுதல் முந்திரி. நடிகை ராணி சந்திரா விபத்தில் இறந்தவுடன் டைரக்டர் எப்படிச் சமாளித்தார் என்பது ஓர் உதாரணம்.."கள்வனின் காதலி" யில் 'திருடனுக்கு வந்த புகழும் மரியாதையும் போலீஸுக்கு வரவில்லை' என்ற லாஜிக்படி "கல்கி ஒரு திருடனை எப்படி மக்கள் நாயகனாக கருதமுடியும் என்ற கோணத்தில் யோசித்த" விதத்தை இவர் விவரித்திருக்கும் விதத்திற்கு தனி சபாஷ்..சிவசங்கரியின் 47 நாட்கள் பற்றிக் குறிப்பிடுகையில் "இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்காது என்று சொன்னாலும், இப்போதும் ஏமாற்றுபவர்களையும், ஏமாறுபவர்களையும் பற்றிப் படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் தானே இருக்கிறோம். என்ன ஒரு முன்னேற்றம் என்றால், பெண்களும் இப்படி ஏமாற்றத் துணிந்தது தான்" என்ற சுபாஷிணியின் சொந்தக் கருத்து ஆமோதிக்க வைக்கிறது.."சரிதாவும், டெல்லி கணேசும் சிரஞ்சீவி மற்றும் ஜெயப்ரதாவுக்குப் பதிலாக தங்கள் குரல்களால் நடிக்கிறார்கள்" என்ற எழுத்துத் திறமை அருமை. அது தன் ஊகம் என்று ஒப்புக்கொண்ட நேர்மையையும் பாராட்ட வேண்டும்.."சினிமாவில் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கோ" என்று சொல்வதுடன் படம் முடிவடைகிறது. படிக்கும்போது காட்சி கண்முன் வந்து மனதை கனக்கச் செய்கிறது..அனுராதா ரமணனின் சிறை கதையையும் அந்தத் திரைப்படத்தையும் தன் வழக்கமான பாணியில் எழுதிய சுபாஷிணி, அந்தக் கதை வெளியான அதே விகடனில் வந்த விமர்சன வரிகளையும் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது..சிறை குறித்த (தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்) கௌரி கிருபானந்தன் பற்றிய டெயில் பீஸ்.. வாவ்..மணியனின் இலவுகாத்த கிளியோ பற்றி எழுதுகையில் "மங்களம் மரியாதையுடனும், கமலா தயக்கத்துடனும், புஷ்பா சகஜமாகவும் பழக ஆரம்பிக்கிறார்கள்" என்று ஒரே வரியில் ஜமாய்த்துவிட்டார் சுபாஷிணி.."இது மணியனின் கதை என்பதை விட, பாலசந்தரின் படம் என்று உணர்த்தும் திரைக்கதை அமைப்பு" என்ற விமர்சனம் நாசூக்கு..கோமதியின் காதலன் படத்தை விமர்சிக்கையில் "சாவித்திரிக்கு பெரும்பான்மை நேரம் பாடலைக் கொடுத்து, கஷ்டப்படாமல் ஆடவும் சொல்லி விட்டார்கள்" என்ற வரி பக்கென்று சிரிக்க வைக்கிறது..ஆக, துல்லியமான ஆராய்ச்சி, அழகிய வரிகள், ஆழ்ந்த கவனிப்பு, லேசான நகைச்சுவை என்று அனைத்தும் நிறைந்த இந்த நூலை மிஸ் பண்ணவே கூடாது. திரைப்பட ரசிகர்களுக்கும், நாவல் ஆர்வலர்களுக்கும், சினிமாப் பாடல் விரும்புவோருக்கும் முழு வாழை இலை போட்டு விருந்து வைத்துவிட்டார்..பாராட்டத்தக்க இது போன்ற மேலும் ஆராய்ச்சிகளில் இவர் இறங்கலாம்..'கதைகளும் திரைப்படங்களும்'.ஆசிரியர்: சுபாஷிணி ரமணன்.பதிப்பகம் : புஸ்தகா பெங்களூரு