அருளுரை.– சுவாமி பாபா முக்தானந்தா.முதலும் முடிவும் இல்லாத சக்தியே.முழுமை இன்பத்தை அளிக்கவல்லது.மந்திரங்களும், பீஜமந்திரங்களும் அவற்றுக்குரிய தெய்வத்தை நம்மிடம் இழுக்கக்கூடியவை. இவை வெறும் வார்த்தைகளோ, வெறும் ஒலி வடிவமோ அல்ல. இவற்றுக்குப் பின்னால் தனியான சக்தி இருக்கிறது. அதை நாம் உணர வேண்டுமானால், அந்த வார்த்தை வடிவத்தையும் – ஒலி வடிவத்தையும் அப்படியே வைத்துக் கொண்டுதான் சொல்லவேண்டும். பெரிய மரத்தை உருவாக்கக்கூடிய சக்தி சிறு விதையில் இருக்கிறது. அதை அப்படியே போட்டால்தான் செடி முளைத்து மரமாகும். அதன் சக்தி இருக்கிறது என்று பொடி செய்து பொட்டலம் கட்டிப் போட்டால் செடி முளைக்குமா? அதேபோல மந்திரங்களை அப்படியே பயன்படுத்தினால் தான் அதற்குரிய பலன் கிடைக்கும்..அந்த மந்திரத்தைச் சொல்ல இயலாதவர்கள், முதலில் அந்தத் தகுதியைப் பெற சாதனை செய்து முயலவேண்டும். அப்படிப் பக்குவப்படாமல் சும்மா மந்திரத்தைச் சொல்லிப் பயன் இல்லை. விதையை வெறும் மண்ணிலோ கல்லிலோ போட்டால் முளைக்குமா? மண்ணைக் கொத்தி, உரம் போட்டுப் பக்குவப்படுத்தி நீரூற்றினால்தான் அது விதையை ஏற்கத் தயாராகும். அப்புறம் விதையைப் போட்டால்தான் அதற்குப் பலன் கிடைக்கும். அதேபோல இந்த மந்திரங்களைச் சரியாக உச்சரிக்கவும், அதற்கேற்றபடி மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் நாம் சாதனைகளைச் செய்யவேண்டும். அப்படிச் சிரமப்பட்டு முயன்றால்தான் பலன் கிடைக்கும்..சிரமம் இல்லாத வழியில் மந்திரங்களைச் சொல்லிப் பலன்பெற நினைப்பது, மண்ணைப் பக்குவப்படுத்தாமல் விதையைப் போட்டு, செடி முளைக்கும் என்று எதிர்பார்ப்பதைப் போல ஆகும்..ஒருவன் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஆனால், அவன் காரை சாலையில் ஓட்டுவதற்குப் பதிலாக நடைபாதையில் ஓட்டிக் கொண்டிருக்கிறான். அதேசமயம் ஒரு மனிதன் இன்னோர் இடத்தில், நடைபாதையில் நடக்காமல் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். இதில் எது தவறு? எது சரி?.காரை நடைபாதையில் ஓட்டுவதும் தவறு, நடைபாதை யில் நடக்காமல் நடுத்தெருவில் நடந்துபோவதும் தவறுதான். நாங்கள் எல்லோரும் வரிப்பணம் கொடுத்துத் தானே அரசாங்கம் சாலைகளை அமைத்திருக்கிறது? ஆகவே, எங்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் காரை ஓட்டவோ, நடந்து செல்லவோ எங்களுக்கு உரிமை இல்லையா? என்று கேட்க முடியுமா? அப்படிச் செய்தால் விபத்தில் சிக்கி இறந்து போக வேண்டியதுதான்..சட்டப் புத்தகம் சாலை விதிகளை வகுத்துத் தந்துள்ளது. மேலும் நாம் அதை மதித்து நடப்பது சமூகத்துக்கு நல்லது என்றும் சொல்லுகிறது. மனிதர்கள் நடைபாதையில்தான் நடக்க வேண்டும். கார்கள் சாலையில்தான் ஓட வேண்டும். மேலும் எல்லோரும் இடது பக்கத்தில்தான் போக வேண்டும் என்றும் சொல்லுகிறது. ஏன் இடது பக்கம் போகவேண்டும்? வலதுபக்கம் போனால் என்ன? இஷ்டப்படி வலது பக்கமோ, இடது பக்கமோ போனால் என்ன என்று நாம் கேட்பதில்லை. அதுமட்டும் அல்ல…."சட்டப் புத்தகத்தை யார் எழுதினார்கள் என்று தனக்குத் தெரியாது" என்று குற்றவாளி சொன்னால் நீதிபதி ஒப்புக்கொள்ளமாட்டார். ஏனென்றால், சட்டப் புத்தகத்தை இயற்றியவரைப் பற்றி நாம் ஆராய வேண்டியதில்லை. ஆனாலும் நாம் சட்டப்பிரகாரம் நடக்க வேண்டும். அதை எழுதியவர் யாரானாலும் நீதிபதி அதில் உள்ளவற்றை உரைத்துத்தான் தீர்ப்பு வழங்குவார். இதைப்போல, தர்மசாஸ்திரங்களை எழுதியவரைப் பற்றியோ, அதன் உண்மையைப் பற்றியோ நாம் ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. அவற்றில் கூறியபடி நடந்தால் ஒழுங்கு அமையும்; நன்மை கிடைக்கும். இதையே நாம் உணர வேண்டும்..உலகத்தில் ஒழுங்கும், அமைதியும் அமைய சட்டமும், கட்டுப்பாடும் தேவை. இதில் தனிமனிதன் தனது நியாயத்தைச் சொல்லிக் குறுக்கிடுவதில்லை. ஒரு திருடன் அரசாங்க கஜானாவை கொள்ளையடித்து ஏழைக்கு வழங் குவதாக வைத்துக் கொள்ளலாம். பணக்காரர்களிடமிருந்து திருடுவதாக வைத்துக் கொள்ளலாம். ஏழைகளுக்குக் கொடுப்பது நல்லதுதானே? அதற்காக நான் செய்வது சரிதானே? என்று சொன்னால் சட்டம் ஒப்புக்கொள்ளுமா?.தனிமனிதன் நியாயம், சமூகக் கட்டுப்பாட்டைக் குலைக்குமானால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல தனிமனிதன் சௌகரியத்துக்காகத் தர்மசாஸ்திரத்தை மாற்றிக்கொள்ளவோ வாதிடுவதோ சரியாகாது..பழங்கால இந்தியாவில் மனிதர்கள் பண்பு தவறாமல் வாழ்ந்தார்கள். இந்தப் பண்பு வெளிஉலகப் பொருட்களால் கிடைக்காது. பார்வையை உள்ளே திருப்பி, உள்ளே இருக்கும் மனத்தைக் கட்டுப்படுத்தினால்தான் கிடைக்கும். தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்வதற்கும் இந்தக் கட்டுப்பாடுதான் முக்கியம். இப்படி ஒவ்வொருவரும் செய்யும்போது சமூகமும், உலகமும், அமைதி நிறைந்து விளங்குகிறது. இப்படி ஒரு கட்டுப்பாட்டை மனத்தில் உள்ள வைராக்கியம் மூலம் ஒவ்வொருவரும் தானே அடைய முயல வேண்டும். இதைக் கற்றுக்கொடுப்பதே மதம்..மனத்துக்குள்ளேயும், நமக்கு வெளியேயும் ஒரேவிதமான கட்டுப்பாடு அமையும்போது, ஓர் அழகான ஒற்றுமை உருவாகிவிடுகிறது. அதனால் சங்கடங்களும், சஞ்சலங்களும் மறைந்து விடுகின்றன..மகிழ்ச்சியை வெறுமனே அனுபவிப்பதால் பயன் இல்லை. நாம் உண்பது சுவையான பொருளாக இருந்தாலும், அது நமக்கு ருசிப்பதில்லை. அதன் பெயரையும், செய்த விதத்தையும் சொன்னால்தான் ருசி பூரணமாகிறது. அதேபோல, மகிழ்ச்சி மட்டும் நமக்கு முழுப்பயன் தராது. அது ஏற்பட்ட விதத்தையும், அதற்கு மூலமாக இருப்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அது முழுமை அடையும்..முதலும், முடிவும் இல்லாத சக்தியே முழுமை இன்பத்தை அளிக்கவல்லது. இதை நாம் வெளியே பார்த்து உணர முடியாது. உள்ளே பார்வையைத் திருப்பிப் பார்த்தால், நமக்குள்ளேயே அந்தச் சக்தி இருப்பதை உணரமுடியும். அப்போது நம்முடைய இன்பமும் நிறைவு பெறும், உண்மையான அமைதி கிடைக்கும். இந்த முயற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டால், நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிவிடும். இந்தப் பேருண்மையையே மதம் நமக்குக் கற்றுத் தருகிறது. அதைப்புரிந்துக்கொள்ளாதவரை நாம் எப்படி வாழ்ந்தாலும், எத்தனை வசதிகளைத் தேடிக்கொண்டாலும் முழுமையான திருப்தியைப் பெறவே முடியாது.
அருளுரை.– சுவாமி பாபா முக்தானந்தா.முதலும் முடிவும் இல்லாத சக்தியே.முழுமை இன்பத்தை அளிக்கவல்லது.மந்திரங்களும், பீஜமந்திரங்களும் அவற்றுக்குரிய தெய்வத்தை நம்மிடம் இழுக்கக்கூடியவை. இவை வெறும் வார்த்தைகளோ, வெறும் ஒலி வடிவமோ அல்ல. இவற்றுக்குப் பின்னால் தனியான சக்தி இருக்கிறது. அதை நாம் உணர வேண்டுமானால், அந்த வார்த்தை வடிவத்தையும் – ஒலி வடிவத்தையும் அப்படியே வைத்துக் கொண்டுதான் சொல்லவேண்டும். பெரிய மரத்தை உருவாக்கக்கூடிய சக்தி சிறு விதையில் இருக்கிறது. அதை அப்படியே போட்டால்தான் செடி முளைத்து மரமாகும். அதன் சக்தி இருக்கிறது என்று பொடி செய்து பொட்டலம் கட்டிப் போட்டால் செடி முளைக்குமா? அதேபோல மந்திரங்களை அப்படியே பயன்படுத்தினால் தான் அதற்குரிய பலன் கிடைக்கும்..அந்த மந்திரத்தைச் சொல்ல இயலாதவர்கள், முதலில் அந்தத் தகுதியைப் பெற சாதனை செய்து முயலவேண்டும். அப்படிப் பக்குவப்படாமல் சும்மா மந்திரத்தைச் சொல்லிப் பயன் இல்லை. விதையை வெறும் மண்ணிலோ கல்லிலோ போட்டால் முளைக்குமா? மண்ணைக் கொத்தி, உரம் போட்டுப் பக்குவப்படுத்தி நீரூற்றினால்தான் அது விதையை ஏற்கத் தயாராகும். அப்புறம் விதையைப் போட்டால்தான் அதற்குப் பலன் கிடைக்கும். அதேபோல இந்த மந்திரங்களைச் சரியாக உச்சரிக்கவும், அதற்கேற்றபடி மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் நாம் சாதனைகளைச் செய்யவேண்டும். அப்படிச் சிரமப்பட்டு முயன்றால்தான் பலன் கிடைக்கும்..சிரமம் இல்லாத வழியில் மந்திரங்களைச் சொல்லிப் பலன்பெற நினைப்பது, மண்ணைப் பக்குவப்படுத்தாமல் விதையைப் போட்டு, செடி முளைக்கும் என்று எதிர்பார்ப்பதைப் போல ஆகும்..ஒருவன் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஆனால், அவன் காரை சாலையில் ஓட்டுவதற்குப் பதிலாக நடைபாதையில் ஓட்டிக் கொண்டிருக்கிறான். அதேசமயம் ஒரு மனிதன் இன்னோர் இடத்தில், நடைபாதையில் நடக்காமல் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். இதில் எது தவறு? எது சரி?.காரை நடைபாதையில் ஓட்டுவதும் தவறு, நடைபாதை யில் நடக்காமல் நடுத்தெருவில் நடந்துபோவதும் தவறுதான். நாங்கள் எல்லோரும் வரிப்பணம் கொடுத்துத் தானே அரசாங்கம் சாலைகளை அமைத்திருக்கிறது? ஆகவே, எங்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் காரை ஓட்டவோ, நடந்து செல்லவோ எங்களுக்கு உரிமை இல்லையா? என்று கேட்க முடியுமா? அப்படிச் செய்தால் விபத்தில் சிக்கி இறந்து போக வேண்டியதுதான்..சட்டப் புத்தகம் சாலை விதிகளை வகுத்துத் தந்துள்ளது. மேலும் நாம் அதை மதித்து நடப்பது சமூகத்துக்கு நல்லது என்றும் சொல்லுகிறது. மனிதர்கள் நடைபாதையில்தான் நடக்க வேண்டும். கார்கள் சாலையில்தான் ஓட வேண்டும். மேலும் எல்லோரும் இடது பக்கத்தில்தான் போக வேண்டும் என்றும் சொல்லுகிறது. ஏன் இடது பக்கம் போகவேண்டும்? வலதுபக்கம் போனால் என்ன? இஷ்டப்படி வலது பக்கமோ, இடது பக்கமோ போனால் என்ன என்று நாம் கேட்பதில்லை. அதுமட்டும் அல்ல…."சட்டப் புத்தகத்தை யார் எழுதினார்கள் என்று தனக்குத் தெரியாது" என்று குற்றவாளி சொன்னால் நீதிபதி ஒப்புக்கொள்ளமாட்டார். ஏனென்றால், சட்டப் புத்தகத்தை இயற்றியவரைப் பற்றி நாம் ஆராய வேண்டியதில்லை. ஆனாலும் நாம் சட்டப்பிரகாரம் நடக்க வேண்டும். அதை எழுதியவர் யாரானாலும் நீதிபதி அதில் உள்ளவற்றை உரைத்துத்தான் தீர்ப்பு வழங்குவார். இதைப்போல, தர்மசாஸ்திரங்களை எழுதியவரைப் பற்றியோ, அதன் உண்மையைப் பற்றியோ நாம் ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. அவற்றில் கூறியபடி நடந்தால் ஒழுங்கு அமையும்; நன்மை கிடைக்கும். இதையே நாம் உணர வேண்டும்..உலகத்தில் ஒழுங்கும், அமைதியும் அமைய சட்டமும், கட்டுப்பாடும் தேவை. இதில் தனிமனிதன் தனது நியாயத்தைச் சொல்லிக் குறுக்கிடுவதில்லை. ஒரு திருடன் அரசாங்க கஜானாவை கொள்ளையடித்து ஏழைக்கு வழங் குவதாக வைத்துக் கொள்ளலாம். பணக்காரர்களிடமிருந்து திருடுவதாக வைத்துக் கொள்ளலாம். ஏழைகளுக்குக் கொடுப்பது நல்லதுதானே? அதற்காக நான் செய்வது சரிதானே? என்று சொன்னால் சட்டம் ஒப்புக்கொள்ளுமா?.தனிமனிதன் நியாயம், சமூகக் கட்டுப்பாட்டைக் குலைக்குமானால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல தனிமனிதன் சௌகரியத்துக்காகத் தர்மசாஸ்திரத்தை மாற்றிக்கொள்ளவோ வாதிடுவதோ சரியாகாது..பழங்கால இந்தியாவில் மனிதர்கள் பண்பு தவறாமல் வாழ்ந்தார்கள். இந்தப் பண்பு வெளிஉலகப் பொருட்களால் கிடைக்காது. பார்வையை உள்ளே திருப்பி, உள்ளே இருக்கும் மனத்தைக் கட்டுப்படுத்தினால்தான் கிடைக்கும். தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்வதற்கும் இந்தக் கட்டுப்பாடுதான் முக்கியம். இப்படி ஒவ்வொருவரும் செய்யும்போது சமூகமும், உலகமும், அமைதி நிறைந்து விளங்குகிறது. இப்படி ஒரு கட்டுப்பாட்டை மனத்தில் உள்ள வைராக்கியம் மூலம் ஒவ்வொருவரும் தானே அடைய முயல வேண்டும். இதைக் கற்றுக்கொடுப்பதே மதம்..மனத்துக்குள்ளேயும், நமக்கு வெளியேயும் ஒரேவிதமான கட்டுப்பாடு அமையும்போது, ஓர் அழகான ஒற்றுமை உருவாகிவிடுகிறது. அதனால் சங்கடங்களும், சஞ்சலங்களும் மறைந்து விடுகின்றன..மகிழ்ச்சியை வெறுமனே அனுபவிப்பதால் பயன் இல்லை. நாம் உண்பது சுவையான பொருளாக இருந்தாலும், அது நமக்கு ருசிப்பதில்லை. அதன் பெயரையும், செய்த விதத்தையும் சொன்னால்தான் ருசி பூரணமாகிறது. அதேபோல, மகிழ்ச்சி மட்டும் நமக்கு முழுப்பயன் தராது. அது ஏற்பட்ட விதத்தையும், அதற்கு மூலமாக இருப்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அது முழுமை அடையும்..முதலும், முடிவும் இல்லாத சக்தியே முழுமை இன்பத்தை அளிக்கவல்லது. இதை நாம் வெளியே பார்த்து உணர முடியாது. உள்ளே பார்வையைத் திருப்பிப் பார்த்தால், நமக்குள்ளேயே அந்தச் சக்தி இருப்பதை உணரமுடியும். அப்போது நம்முடைய இன்பமும் நிறைவு பெறும், உண்மையான அமைதி கிடைக்கும். இந்த முயற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டால், நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிவிடும். இந்தப் பேருண்மையையே மதம் நமக்குக் கற்றுத் தருகிறது. அதைப்புரிந்துக்கொள்ளாதவரை நாம் எப்படி வாழ்ந்தாலும், எத்தனை வசதிகளைத் தேடிக்கொண்டாலும் முழுமையான திருப்தியைப் பெறவே முடியாது.