உத்தவ கீதை – 23.– டி.வி. ராதாகிருஷ்ணன்.அப்பொழுது அவர்களிடையே வாக்குவாதமும்,சண்டையும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் வாளாலும், ஈட்டியாலும், கதையாலும் தாக்கிக் கொண்டார்கள்..பின்பு, ஆயுதங்கள் தீர்ந்த பிறகு "எரகா" என்ற கோரைப் புல்லைக்கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு எல்லோரும் மடிந்தார்கள்..முனிவரின் சாபம் எனும் யுக்தியால் கண்ணன் தன் குலத்தையும் அழித்து பூமியின் பாரத்தையும் குறைத்தார்..பின்… கிருஷ்ணன் ஒரு அரசமரத்தடியில் தன் உடலை சாய்த்தபடி அமந்தார். அவர் அப்போது தனது நான்கு கரங்களுடனும்… சரவ அலங்காரங்களுடனும் காணப்பட்டார்..அப்போது, "ஜரா" என்ற வேடன் ஒரு அம்பை வில்லில் வைத்து கண்ணனின் கால் கட்டை விரல்களை மானின் வாயென்று எண்ணி எய்தான்..பின், தான் அம்பு எய்தியது பகவான் கிருஷ்ணன் என்று உணர்ந்து அவர் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் "நான் அறியாமையால் பெரும் பாவம் செய்து விட்டேன். அறியாமையால் தவறு இழைத்து விட்டேன், என்னைக் கொன்று விடுங்கள்" என்றான்..அதற்குக் கண்ணன், "ஜரா… பயப்படாதே… எழுந்திரு… நீ அம்பு எய்ததற்குக் காரணமே நான்தான். உனக்கு மோட்சம் அளிக்கிறேன். நீ நல்லவர்கள் வாழும் சொர்க்கத்திற்கே செல்லலாம்..ஜராவும், கிருஷ்ணனை மூன்று முறை வலம் வந்து வணங்கி நின்று சொர்க்கலோகம் சென்றான். தேரோட்டி தாருகன், துளசியின் வாசனையைக் கொண்டு கிருஷ்ணனைத் தேடி வந்து அங்கு யோகத்தில் அமர்ந்திருக்கும் பகவானையும், அங்குக் கிடந்த ஆயுதங்களையும் கண்டான். "இறைவா…எனது கண்களால் எதையும் காண முடியவில்லை. கருணை செய்யுங்கள்"என வேண்டினான்..பகவான் கிருஷ்ணனின் கருணையால் தனது கருட வாகனத்தில் அவர் ஏறி வைகுண்டம் செல்வதை தாருகன் பார்த்தான்..கிருஷ்ணன் சொன்னான்…"தேரோட்டியே… துவாரகைக்குச் சென்று…இங்கு நடந்தவற்றையெல்லாம் அங்கு எல்லோரிடமும் கூறவும். எல்லோரும் போரிட்டு அழிந்ததையும், நானும்… பலராமனும் எங்கள் இருப்பிடத்துக்கு சென்று விட்டதையும் கூறவும். இனி துவாரகை கடலால் அழிக்கப்பட்டு விடும்..ஆகையால்… உமது குடும்பம், எனது தாய்…தகப்பனார் (தேவகி…வசுதேவர்) ஆகிய எல்லோரையும் இந்திர வஸ்த நகருக்குச் செல்லும்படி சொல்லிவிடும்..நீரும்…பிரம்மஞானம் பெற்று, உலக மாயையிலிருந்து விடுபட்டு, மனத்தில் அமைதி ஏற்படுத்திக் கொள்ளவும்.".பகவானின் கட்டளைப்படி…கண்ணனை வலம் வந்து…வணங்கி தாருகனும் மிகுந்த வருத்தத்துடன் துவாரகை நோக்கி பயணமானான்..கிருஷ்ணன்… தனது இருப்பிடமான வைகுண்டம் திரும்புவதைக் காண பிரம்மன், சிவன், பார்வதி மற்ற தேவர்களாகிய இந்திரன் மற்றும் சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், மகரிஷிகள் போன்றோர் தோன்றி வாழ்த்தி வரவேற்றார்கள்..எப்படி ஆகாயத்தில் மின்னல் தோன்றி மறைகிறதோ, அதுபோல, கிருஷ்ணனும் ஓர் ஒளியில் கலந்தார்..தனது குரு சாந்திபினியின் இறந்த மகனின் உயிரை குருவின் வேண்டுதலுக்காக மீண்டும் கொண்டு வந்து பகவான் தாயின் வயிற்றில் அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தால் கருகி இறக்கவேண்டிய உன்னைக் காப்பாற்றிய கிருஷ்ணன். தன்னை இந்த வேடனின் அம்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாதா…?.உலகத்தைப் படைத்து, காத்து, பரிபாலனம் செய்யும் இறைவன் அவர். அவர் தன் உடலைத் தரித்து பூமியில் வாழ விரும்பவில்லை..இந்த உடலின் நிலையாமையைக் காட்டுவற்கும் அதன் ஆன்மாவை உணர வேண்டும் என்பதற்காகவும்தான் அவர் இப்படிச் செய்தார்.."இதைப் படித்து முடித்தவர்கள், உணருபவர்கள், உன்னத நிலையை அடைவார்கள்" என்று சுகர் கூறினார்..(அடுத்த இதழில் முடியும்)
உத்தவ கீதை – 23.– டி.வி. ராதாகிருஷ்ணன்.அப்பொழுது அவர்களிடையே வாக்குவாதமும்,சண்டையும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் வாளாலும், ஈட்டியாலும், கதையாலும் தாக்கிக் கொண்டார்கள்..பின்பு, ஆயுதங்கள் தீர்ந்த பிறகு "எரகா" என்ற கோரைப் புல்லைக்கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு எல்லோரும் மடிந்தார்கள்..முனிவரின் சாபம் எனும் யுக்தியால் கண்ணன் தன் குலத்தையும் அழித்து பூமியின் பாரத்தையும் குறைத்தார்..பின்… கிருஷ்ணன் ஒரு அரசமரத்தடியில் தன் உடலை சாய்த்தபடி அமந்தார். அவர் அப்போது தனது நான்கு கரங்களுடனும்… சரவ அலங்காரங்களுடனும் காணப்பட்டார்..அப்போது, "ஜரா" என்ற வேடன் ஒரு அம்பை வில்லில் வைத்து கண்ணனின் கால் கட்டை விரல்களை மானின் வாயென்று எண்ணி எய்தான்..பின், தான் அம்பு எய்தியது பகவான் கிருஷ்ணன் என்று உணர்ந்து அவர் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் "நான் அறியாமையால் பெரும் பாவம் செய்து விட்டேன். அறியாமையால் தவறு இழைத்து விட்டேன், என்னைக் கொன்று விடுங்கள்" என்றான்..அதற்குக் கண்ணன், "ஜரா… பயப்படாதே… எழுந்திரு… நீ அம்பு எய்ததற்குக் காரணமே நான்தான். உனக்கு மோட்சம் அளிக்கிறேன். நீ நல்லவர்கள் வாழும் சொர்க்கத்திற்கே செல்லலாம்..ஜராவும், கிருஷ்ணனை மூன்று முறை வலம் வந்து வணங்கி நின்று சொர்க்கலோகம் சென்றான். தேரோட்டி தாருகன், துளசியின் வாசனையைக் கொண்டு கிருஷ்ணனைத் தேடி வந்து அங்கு யோகத்தில் அமர்ந்திருக்கும் பகவானையும், அங்குக் கிடந்த ஆயுதங்களையும் கண்டான். "இறைவா…எனது கண்களால் எதையும் காண முடியவில்லை. கருணை செய்யுங்கள்"என வேண்டினான்..பகவான் கிருஷ்ணனின் கருணையால் தனது கருட வாகனத்தில் அவர் ஏறி வைகுண்டம் செல்வதை தாருகன் பார்த்தான்..கிருஷ்ணன் சொன்னான்…"தேரோட்டியே… துவாரகைக்குச் சென்று…இங்கு நடந்தவற்றையெல்லாம் அங்கு எல்லோரிடமும் கூறவும். எல்லோரும் போரிட்டு அழிந்ததையும், நானும்… பலராமனும் எங்கள் இருப்பிடத்துக்கு சென்று விட்டதையும் கூறவும். இனி துவாரகை கடலால் அழிக்கப்பட்டு விடும்..ஆகையால்… உமது குடும்பம், எனது தாய்…தகப்பனார் (தேவகி…வசுதேவர்) ஆகிய எல்லோரையும் இந்திர வஸ்த நகருக்குச் செல்லும்படி சொல்லிவிடும்..நீரும்…பிரம்மஞானம் பெற்று, உலக மாயையிலிருந்து விடுபட்டு, மனத்தில் அமைதி ஏற்படுத்திக் கொள்ளவும்.".பகவானின் கட்டளைப்படி…கண்ணனை வலம் வந்து…வணங்கி தாருகனும் மிகுந்த வருத்தத்துடன் துவாரகை நோக்கி பயணமானான்..கிருஷ்ணன்… தனது இருப்பிடமான வைகுண்டம் திரும்புவதைக் காண பிரம்மன், சிவன், பார்வதி மற்ற தேவர்களாகிய இந்திரன் மற்றும் சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், மகரிஷிகள் போன்றோர் தோன்றி வாழ்த்தி வரவேற்றார்கள்..எப்படி ஆகாயத்தில் மின்னல் தோன்றி மறைகிறதோ, அதுபோல, கிருஷ்ணனும் ஓர் ஒளியில் கலந்தார்..தனது குரு சாந்திபினியின் இறந்த மகனின் உயிரை குருவின் வேண்டுதலுக்காக மீண்டும் கொண்டு வந்து பகவான் தாயின் வயிற்றில் அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தால் கருகி இறக்கவேண்டிய உன்னைக் காப்பாற்றிய கிருஷ்ணன். தன்னை இந்த வேடனின் அம்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாதா…?.உலகத்தைப் படைத்து, காத்து, பரிபாலனம் செய்யும் இறைவன் அவர். அவர் தன் உடலைத் தரித்து பூமியில் வாழ விரும்பவில்லை..இந்த உடலின் நிலையாமையைக் காட்டுவற்கும் அதன் ஆன்மாவை உணர வேண்டும் என்பதற்காகவும்தான் அவர் இப்படிச் செய்தார்.."இதைப் படித்து முடித்தவர்கள், உணருபவர்கள், உன்னத நிலையை அடைவார்கள்" என்று சுகர் கூறினார்..(அடுத்த இதழில் முடியும்)