சுஜாதா தேசிகன் ."கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற அந்தக் கால சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுக்கவில்லை" என்று போன வாரம் வரை நினைத்துக்கொண்டு இருந்தேன். யூடியூப்பில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்த போது கே.பி. இயக்கிய 'எதிரொலி' படத்தில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார் என்று அறிந்து அதைத் தேடிக் கண்டுகளித்தேன்..அதில் சிவாஜி மிக நேர்மையானவர். தன் குழந்தை பிறந்த நாள் பரிசாக ஆத்திச்சூடி போல ஏழு கட்டளைகள் அடங்கிய படத்தைக் கொடுப்பார். அதில் பொய் சொல்லாதே, திருடாதே… என்று ஒரு பட்டியல்..சந்தர்ப்பச் சூழ்நிலைக் காரணமாக சிவாஜி ஒரு தப்பு செய்ய, அதை மறைக்க பல பொய்கள் என்று முன்பு அவர் கொடுத்த அறிவுரை ஒவ்வொன்றாக மீறிக்கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் வீட்டைச் சோதனை போட வேண்டும் என்று காவலர்கள் வந்து நிற்பார்கள். சிவாஜி கதிகலங்கிகலங்கிகலங்கிய (அவர் நடிப்பு அப்படி) நேரம் அந்தக் காவலர்கள் "சாமி நாங்கள் பகல் வேஷக்காரர்கள். நேற்று சாமியார் வேஷம் போட்டோம், இன்று போலீஸ் வேஷம்… ஏதாவது இனாம் கொடுங்க" என்று வாங்கிக்கொண்டு போவார்கள்..'பகல்வேஷம்' என்பது 'நல்லவர் போல் நடித்தல்' என்ற பொருளில் மட்டுமே இன்று உபயோகப்படுத்தப்படுகிறது. 'பகல் வேஷம்' ஒரு கலையாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. புராண இதிகாச கதாபாத்திரங்களாக வேடம் தரித்து பகலில் தெருத்தெருவாகச் சென்று பாடிக்கொண்டு, கொடுக்கும் பொருளை வாங்கிக்கொண்டு செல்வார்கள். மன்னர்கள் இவர்களை ஒற்றர்களாக பயன்படுத்தியுள்ளார்கள் என்கிறார்கள். இதை நன்றாக ஆராய்ந்தால் ஒரு சரித்திர நாவல் கூட எழுதலாம். தெருக்கூத்து இரவில் விடிய விடிய ஒரே இடத்தில் தியேட்டரில் சினிமா போல நடைபெறும், பகல் வேஷம் இன்றைய 'ஓடிடி' போன்று வீட்டு வாசலுக்கே வந்துவிடுவார்கள்..சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு நாள் காலை ராம கானம் கேட்டது. 'அனுமாரைத் தவிர இவ்வளவு நல்ல ராம கானத்தை யார் பாட முடியும்' என்று வாசலுக்கு வந்து பார்த்தபோது அனுமாரே பாடிக்கொண்டு இருந்தார்..உற்று நோக்கினேன் காலில் சலங்கை, பிளாஸ்டிக் மூக்கு, மினுக்கி காகிதம், கீரிடம், தாடிக்கு ஏதோ புசுபுசு துணி, நெற்றியில் பச்சை சாயம்… அனுமார் பாடி முடித்து, கொடுத்த காசை வாங்கிக்கொண்டு சென்றார்..அவர் அடுத்த வீட்டுக்குச் சென்ற பிறகும் அவர் குரலின் வசீகரம் என்னை இழுத்தது. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்து அவரை தேடிக்கொண்டு சென்றேன். தேடுவது கஷ்டமாக இல்லை. குரல் வந்த திசையை நோக்கிச் சென்றேன். ஒரு தெருவில் 'கண்டேன் ஆஞ்சநேயரை' என்று கண்டுபிடித்து அவரிடம் பேசினேன்..உங்கள் சொந்த ஊர் எது?"சொந்த ஊர் கர்நாடகா.".பிறகு சென்னையில்?"ஒவ்வொரு வருஷம் ஓர் ஊர். இந்த முறை சென்னை, சென்னையைச் சுற்றிப் பல ஊர்கள், பிறகு மதுரை, திருநெல்வேலி இப்படி…".எந்தெந்த ஊருக்கெல்லாம் போயிருக்கீங்க?"எல்லா ஊர்களுக்கும் போயிருக்கிறேன். ஆந்திரா, மதுரா, குஜராத் ஏன் காஷ்மீருக்குக் கூடப் போயிருக்கிறேன்.". குரல் நல்லா இருக்கு… பாட்டு எங்கே கத்துக்கிட்டீங்க?"கொஞ்சம் வெட்கப்பட்டு… எங்க அப்பாகிட்ட.".இந்த வேஷம்?"இது எங்க குலத்தொழில். 'பகல் வேஷம்' என்பார்கள். குலத் தொழில் என்பதால் விடாமல் செய்கிறேன்.".வருமானம்?"எங்களுக்கு விவசாயம். ஊரில் வீடு, 80 ஏக்கர் நிலம் இருக்கு. ஒன்றும் கஷ்டம் இல்லை.".அவர் செல்லும் இடங்கள் எல்லாம் நாய்கள் அவரை சூழ்ந்து குலைக்கிறது. நாம் இவர்களைப் பார்க்கும் போது ஏதோ பிச்சை எடுக்க வருபவர்கள் போல துரத்திவிடுகிறோம்..இது அவர்களின் குலத் தொழில்!
சுஜாதா தேசிகன் ."கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற அந்தக் கால சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுக்கவில்லை" என்று போன வாரம் வரை நினைத்துக்கொண்டு இருந்தேன். யூடியூப்பில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்த போது கே.பி. இயக்கிய 'எதிரொலி' படத்தில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார் என்று அறிந்து அதைத் தேடிக் கண்டுகளித்தேன்..அதில் சிவாஜி மிக நேர்மையானவர். தன் குழந்தை பிறந்த நாள் பரிசாக ஆத்திச்சூடி போல ஏழு கட்டளைகள் அடங்கிய படத்தைக் கொடுப்பார். அதில் பொய் சொல்லாதே, திருடாதே… என்று ஒரு பட்டியல்..சந்தர்ப்பச் சூழ்நிலைக் காரணமாக சிவாஜி ஒரு தப்பு செய்ய, அதை மறைக்க பல பொய்கள் என்று முன்பு அவர் கொடுத்த அறிவுரை ஒவ்வொன்றாக மீறிக்கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் வீட்டைச் சோதனை போட வேண்டும் என்று காவலர்கள் வந்து நிற்பார்கள். சிவாஜி கதிகலங்கிகலங்கிகலங்கிய (அவர் நடிப்பு அப்படி) நேரம் அந்தக் காவலர்கள் "சாமி நாங்கள் பகல் வேஷக்காரர்கள். நேற்று சாமியார் வேஷம் போட்டோம், இன்று போலீஸ் வேஷம்… ஏதாவது இனாம் கொடுங்க" என்று வாங்கிக்கொண்டு போவார்கள்..'பகல்வேஷம்' என்பது 'நல்லவர் போல் நடித்தல்' என்ற பொருளில் மட்டுமே இன்று உபயோகப்படுத்தப்படுகிறது. 'பகல் வேஷம்' ஒரு கலையாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. புராண இதிகாச கதாபாத்திரங்களாக வேடம் தரித்து பகலில் தெருத்தெருவாகச் சென்று பாடிக்கொண்டு, கொடுக்கும் பொருளை வாங்கிக்கொண்டு செல்வார்கள். மன்னர்கள் இவர்களை ஒற்றர்களாக பயன்படுத்தியுள்ளார்கள் என்கிறார்கள். இதை நன்றாக ஆராய்ந்தால் ஒரு சரித்திர நாவல் கூட எழுதலாம். தெருக்கூத்து இரவில் விடிய விடிய ஒரே இடத்தில் தியேட்டரில் சினிமா போல நடைபெறும், பகல் வேஷம் இன்றைய 'ஓடிடி' போன்று வீட்டு வாசலுக்கே வந்துவிடுவார்கள்..சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு நாள் காலை ராம கானம் கேட்டது. 'அனுமாரைத் தவிர இவ்வளவு நல்ல ராம கானத்தை யார் பாட முடியும்' என்று வாசலுக்கு வந்து பார்த்தபோது அனுமாரே பாடிக்கொண்டு இருந்தார்..உற்று நோக்கினேன் காலில் சலங்கை, பிளாஸ்டிக் மூக்கு, மினுக்கி காகிதம், கீரிடம், தாடிக்கு ஏதோ புசுபுசு துணி, நெற்றியில் பச்சை சாயம்… அனுமார் பாடி முடித்து, கொடுத்த காசை வாங்கிக்கொண்டு சென்றார்..அவர் அடுத்த வீட்டுக்குச் சென்ற பிறகும் அவர் குரலின் வசீகரம் என்னை இழுத்தது. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்து அவரை தேடிக்கொண்டு சென்றேன். தேடுவது கஷ்டமாக இல்லை. குரல் வந்த திசையை நோக்கிச் சென்றேன். ஒரு தெருவில் 'கண்டேன் ஆஞ்சநேயரை' என்று கண்டுபிடித்து அவரிடம் பேசினேன்..உங்கள் சொந்த ஊர் எது?"சொந்த ஊர் கர்நாடகா.".பிறகு சென்னையில்?"ஒவ்வொரு வருஷம் ஓர் ஊர். இந்த முறை சென்னை, சென்னையைச் சுற்றிப் பல ஊர்கள், பிறகு மதுரை, திருநெல்வேலி இப்படி…".எந்தெந்த ஊருக்கெல்லாம் போயிருக்கீங்க?"எல்லா ஊர்களுக்கும் போயிருக்கிறேன். ஆந்திரா, மதுரா, குஜராத் ஏன் காஷ்மீருக்குக் கூடப் போயிருக்கிறேன்.". குரல் நல்லா இருக்கு… பாட்டு எங்கே கத்துக்கிட்டீங்க?"கொஞ்சம் வெட்கப்பட்டு… எங்க அப்பாகிட்ட.".இந்த வேஷம்?"இது எங்க குலத்தொழில். 'பகல் வேஷம்' என்பார்கள். குலத் தொழில் என்பதால் விடாமல் செய்கிறேன்.".வருமானம்?"எங்களுக்கு விவசாயம். ஊரில் வீடு, 80 ஏக்கர் நிலம் இருக்கு. ஒன்றும் கஷ்டம் இல்லை.".அவர் செல்லும் இடங்கள் எல்லாம் நாய்கள் அவரை சூழ்ந்து குலைக்கிறது. நாம் இவர்களைப் பார்க்கும் போது ஏதோ பிச்சை எடுக்க வருபவர்கள் போல துரத்திவிடுகிறோம்..இது அவர்களின் குலத் தொழில்!