முகநூல் பக்கம். ராஜன்.ஆஸ்கர் இறுதி பட்டியலில் "ரைட்டிங் வித் ஃபயர்" .1929 முதல், உலக அளவில் , திரைத்துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய கெளரவமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. கற்பனைப் படங்களுக்கு மட்டும் அல்லாமல், உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆவணப் படங்களுக்கும் 1941 முதல் தனியாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன..2022 ஆம் ஆண்டுக்கான 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது..இதற்கு, 138 படங்களில் இருந்து தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட்ட 15 படங்களில் இறுதி சுற்றில் இடம் பெரும் 5 படங்களில் ஒன்றாக , நமது இந்திய ஆவணப்படமான 'ரைட்டிங் வித் ஃபயர்' (Writing with Fire – documentary film) என்ற படம் இடம் பெறுகிறது..இந்தியாவைச் சேர்ந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு இடம்பிடித்தது இதுவே முதன்முறை என்பது ஒரு மிகப் பெருமையான நிகழ்வு ஆகும்..ரிண்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் என்ற இயக்குநர்கள் இணைந்து இயக்கிய, 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற இந்த ஆவணப்படம், பீகாரின் சீதாமர்ஹி பகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்திலும் உள்ள பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த, பெண்களால் நடத்தப்படும் 'கபர் லெஹ்ரியா' என்ற சமூகப் பத்திரிகையின் எழுச்சியை வலிமையாக கூறும் படம்..படத்தை விட நம்மை அசர வைப்பது நிஜம்…..2002 வருடம், ஒரு தொண்டு நிறுவனமும் கவிதா என்ற பெண்மணியும் இணைந்து உத்திர பிரதேசத்தில் உள்ள Bundelkhand என்ற பகுதியில் , எளிய முறையில் ஆரம்பித்த 'கபர் லெஹ்ரியா ' (Khabar Lahariya) என்ற சிறு பத்திரிக்கை மிகப் பெரிய சமுதாய தீர்வாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை..ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருக்கும் பத்திரிக்கை உலகில் பெண்களும், அதிலும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களும் இணைந்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும், தீர்வுகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் பெண்களை மட்டுமே கொண்டு இயங்குகிறது 'கபர் லெஹ்ரியா ' பத்திரிக்கை நிறுவனம்..கடும் வெயிலில் காலை 5 மணி முதல் பல இடற்பாடுகளையும், நெருப்போடு விளையாடுவது போன்ற பல ஆபத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு உழைத்த பெண்கள் நிருபர் வேலை மட்டும் அன்றி பல அலுவலக வேலைகளையும் சுமந்து நிறுவனத்தை வளர்த்தனர்..ஏழைப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, கிராமங்களில் நீர் தட்டுப்பாடு , (உடைந்த தண்ணீர் பம்புகள் போன்ற சிறு விஷயங்களைக் கூட விடுவதில்லை) , இடிந்த கட்டிடங்கள், சிறு கிராமங்களுக்கு மின்சாரம் போன்ற பல குறைகளை வெளிக் கொணர்ந்து பல தீர்வுகளை அளித்துக் கொண்டு இருக்கிறது இந்த பத்திரிக்கை..இதன் நிருபர்கள் செய்தியைத் திரட்டுவதோடு மட்டும் நிற்காமல், பொறுப்புடன், நான்கு வாரங்களுக்கு அதை தொடர்ந்து கண்காணித்து தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் வலிமையாக குரல் எழுப்ப வேண்டும் என்பது இந்த பத்திரிக்கை நிறுவனத்தின் கொள்கை..அதனால், "நாங்கள் 'கபர் லகரியா ' தவிர யாரையும் நம்புவதாக இல்லை.. " என்று பாதிக்கப் பட்டவர்கள் சொல்லும் அளவு இன்று நம்பிக்கை பெற்று விளங்குகிறது..இன்றும் மொத்த பத்திரிக்கை நிறுவனமும் திட்டமிடுவதில் இருந்து தேர்வு காணும் பிரிவு வரை அனைத்தும் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது ..'பான்டா' என்ற கிராமத்தை சேர்ந்த 'மீரா' என்ற ஏழைப் பெண் 14 வயதில் திருமணம் ஆனாலும் தான் படிப்பைத் தொடர்ந்து, முதன்மை எடிட்டர் கவிதாவின் ஊக்கத்தால் இந்த பத்திரிக்கையில் நிருபராக இணைந்தார். மிக விரைவில் தனது திறமையாலும், உழைப்பாலும், துணிச்சலாலும் பல சவால்களை எதிர்கொண்டு இன்று முதன்மை நிருபராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்..இந்த ஆவணப்படம் இவரையும் துணிச்சல்மிக்க சுனிதா மற்றும் ஒரு பெண் என்று மூன்று நிறுபர்களையும் சுற்றியே செல்கிறது..2016இல் இந்த பத்திரிக்கை ஸ்மார்ட் ஃபோன் கூட உபயோகித்திராத , அதிகம் படிக்காத பணியாளர்களைக் கொண்டு, அச்சில் இருந்து டிஜிட்டல் ஆக மாறிய சாதனையையும் இந்த ஆவணப்படம் விளக்குகிறது..இந்த படத்தின் official trailer : https://www.youtube.com/watch?v=uv51mXOvjJw.இந்த ஆவணப் படம் , இறுதி வெற்றி பெற்று ஆஸ்கார் விருது அடைந்து, நம் நாட்டுக்கும் துணிச்சலான இந்த புதுமைப் பெண்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
முகநூல் பக்கம். ராஜன்.ஆஸ்கர் இறுதி பட்டியலில் "ரைட்டிங் வித் ஃபயர்" .1929 முதல், உலக அளவில் , திரைத்துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய கெளரவமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. கற்பனைப் படங்களுக்கு மட்டும் அல்லாமல், உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆவணப் படங்களுக்கும் 1941 முதல் தனியாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன..2022 ஆம் ஆண்டுக்கான 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது..இதற்கு, 138 படங்களில் இருந்து தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட்ட 15 படங்களில் இறுதி சுற்றில் இடம் பெரும் 5 படங்களில் ஒன்றாக , நமது இந்திய ஆவணப்படமான 'ரைட்டிங் வித் ஃபயர்' (Writing with Fire – documentary film) என்ற படம் இடம் பெறுகிறது..இந்தியாவைச் சேர்ந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு இடம்பிடித்தது இதுவே முதன்முறை என்பது ஒரு மிகப் பெருமையான நிகழ்வு ஆகும்..ரிண்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் என்ற இயக்குநர்கள் இணைந்து இயக்கிய, 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற இந்த ஆவணப்படம், பீகாரின் சீதாமர்ஹி பகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்திலும் உள்ள பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த, பெண்களால் நடத்தப்படும் 'கபர் லெஹ்ரியா' என்ற சமூகப் பத்திரிகையின் எழுச்சியை வலிமையாக கூறும் படம்..படத்தை விட நம்மை அசர வைப்பது நிஜம்…..2002 வருடம், ஒரு தொண்டு நிறுவனமும் கவிதா என்ற பெண்மணியும் இணைந்து உத்திர பிரதேசத்தில் உள்ள Bundelkhand என்ற பகுதியில் , எளிய முறையில் ஆரம்பித்த 'கபர் லெஹ்ரியா ' (Khabar Lahariya) என்ற சிறு பத்திரிக்கை மிகப் பெரிய சமுதாய தீர்வாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை..ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருக்கும் பத்திரிக்கை உலகில் பெண்களும், அதிலும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களும் இணைந்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும், தீர்வுகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் பெண்களை மட்டுமே கொண்டு இயங்குகிறது 'கபர் லெஹ்ரியா ' பத்திரிக்கை நிறுவனம்..கடும் வெயிலில் காலை 5 மணி முதல் பல இடற்பாடுகளையும், நெருப்போடு விளையாடுவது போன்ற பல ஆபத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு உழைத்த பெண்கள் நிருபர் வேலை மட்டும் அன்றி பல அலுவலக வேலைகளையும் சுமந்து நிறுவனத்தை வளர்த்தனர்..ஏழைப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, கிராமங்களில் நீர் தட்டுப்பாடு , (உடைந்த தண்ணீர் பம்புகள் போன்ற சிறு விஷயங்களைக் கூட விடுவதில்லை) , இடிந்த கட்டிடங்கள், சிறு கிராமங்களுக்கு மின்சாரம் போன்ற பல குறைகளை வெளிக் கொணர்ந்து பல தீர்வுகளை அளித்துக் கொண்டு இருக்கிறது இந்த பத்திரிக்கை..இதன் நிருபர்கள் செய்தியைத் திரட்டுவதோடு மட்டும் நிற்காமல், பொறுப்புடன், நான்கு வாரங்களுக்கு அதை தொடர்ந்து கண்காணித்து தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் வலிமையாக குரல் எழுப்ப வேண்டும் என்பது இந்த பத்திரிக்கை நிறுவனத்தின் கொள்கை..அதனால், "நாங்கள் 'கபர் லகரியா ' தவிர யாரையும் நம்புவதாக இல்லை.. " என்று பாதிக்கப் பட்டவர்கள் சொல்லும் அளவு இன்று நம்பிக்கை பெற்று விளங்குகிறது..இன்றும் மொத்த பத்திரிக்கை நிறுவனமும் திட்டமிடுவதில் இருந்து தேர்வு காணும் பிரிவு வரை அனைத்தும் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது ..'பான்டா' என்ற கிராமத்தை சேர்ந்த 'மீரா' என்ற ஏழைப் பெண் 14 வயதில் திருமணம் ஆனாலும் தான் படிப்பைத் தொடர்ந்து, முதன்மை எடிட்டர் கவிதாவின் ஊக்கத்தால் இந்த பத்திரிக்கையில் நிருபராக இணைந்தார். மிக விரைவில் தனது திறமையாலும், உழைப்பாலும், துணிச்சலாலும் பல சவால்களை எதிர்கொண்டு இன்று முதன்மை நிருபராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்..இந்த ஆவணப்படம் இவரையும் துணிச்சல்மிக்க சுனிதா மற்றும் ஒரு பெண் என்று மூன்று நிறுபர்களையும் சுற்றியே செல்கிறது..2016இல் இந்த பத்திரிக்கை ஸ்மார்ட் ஃபோன் கூட உபயோகித்திராத , அதிகம் படிக்காத பணியாளர்களைக் கொண்டு, அச்சில் இருந்து டிஜிட்டல் ஆக மாறிய சாதனையையும் இந்த ஆவணப்படம் விளக்குகிறது..இந்த படத்தின் official trailer : https://www.youtube.com/watch?v=uv51mXOvjJw.இந்த ஆவணப் படம் , இறுதி வெற்றி பெற்று ஆஸ்கார் விருது அடைந்து, நம் நாட்டுக்கும் துணிச்சலான இந்த புதுமைப் பெண்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.