உத்தவ கீதை – 10.– டி.வி. ராதாகிருஷ்ணன். பக்தி மார்க்கம் மற்றும் தியான முறை.கிருஷ்ணரே! பிரம்மத்தைப் பற்றி பேசுகிற பல ஆசாரியர்கள், பலவித மார்க்கங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். அந்த மார்க்கங்கள் யாவையும் முக்கியமானவையா? அல்லது ஒரே ஒரு மார்க்கமே முக்கியமானதா?.நீங்களோ, பக்தி மார்க்கமே, மற்றெல்லா மார்க்கங்களையும் விடச் சிறந்தது, தனித்து விளங்குவது என்றும் கூறுகிறீர்கள். தயவு செய்து விளக்கிக் கூறுங்கள்… என உத்தவர் கேட்க கண்ணன் பதில் உரைக்கிறார்..நான் முதலில் பிரம்மாவிடம் கூறியவை வேதங்கள் எனப்படுபவை. பிரளய காலத்தில் அவை அழிந்து போயின. அவை ஒருவனின் மனத்தைக் கட்டுப்படுத்தி நிலைநிறுத்தி வைக்க உதவுபவை..மறுபடியும் உயிர்கள் உண்டாக்கப்பட்டபோது, என்னால் மறுபடியும் பிரம்மாவுக்கு உபதேசிக்கப்பட்டது, பிரம்மா தன்னுடைய புத்திரனான, ஸ்வாயம்பு மனுவுக்கும், பின்பு அவரால் ஏழு முனிவர்களுக்கும் (ஸப்தரிஷிகள்… பிருகு, மரிசீ, அத்ரி, ஆங்கிரசு, புலஸ்திய, புலக, கிரது) சொல்லப்பட்டது..பின்பு அவர்களிடமிருந்து சித்தர்கள், கின்னரர்கள், மேலும் மனிதர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது..மனிதர்களிடையே முக்குணச் சேர்க்கையால் எண்ணங்கள், செயல்கள் வேறுபட்டன. ஆதலால் வேதங்களுக்கு வியாக்கியானங்கள், பொருள் கூறுவதில் மாறுபாடு ஏற்பட்டது. அதனால், சில வியாக்கியானங்கள் வேதத்திற்கு எதிராகவே எடுத்துச் சொல்லப்பட்டன..மனிதர்கள் என் மாயையின் செயலால் மக்களின் தொழிலுக்கும், விருப்பத்திற்கும் தகுந்தவாறு கூறுகிறார்கள்..முக்தியடைவது, கர்மம் செய்தலால் என்றும், பீமாம்சம் மேல் என்றும், பெண் இன்பத்தால் என்றும் , உண்மை பேசுவதால் மட்டும் என்றும், மனம் இந்திரியங்களால் கட்டுப்படுத்துவதால் என்றும் மற்றும் தானம், யாகத்தில் ஆகுதி கொடுப்பதால் என்றும் பலவாறாகக் கூறுகின்றார்கள்..இவைகளால் ஏற்படுவது, வெறும் மனக்கிலேசமாகும். சிறிதுகால இன்பத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது..இந்திரிய சுகங்களில் ஈடுபட்டவர்களுக்கு எப்படி நிரந்தர சுகம் கிட்டும்?என்னிடம் பக்திகொண்டு, தனக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல், எந்தப் புலன் இன்பத்திலும் ஈடுபடாதவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான்..என்னிடம் பக்தி கொண்டவன், பிரம்மலோகப் பதவிக்கோ, இந்திரலோகப் பதவிக்கோ மற்ற எந்த பதவிக்குமோ ஆசைப்படமாட்டான்..பிரம்மனும், சிவனும், பலராமனும், லக்ஷ்மியும் ஏன்… என் உருவத்தைவிட எனக்கு விருப்பமானவன் நீயே..மனதில் அமைதியுடனும், எவரிடமும் பகைமை பாராட்டாமலும், சமதிருஷ்டியுடனும் வாழும் பக்தனின் பாத அடிகளை நான் பின்பற்றுவேன்..பலனில் பற்று வைக்காமல்,பொருட்பற்றில்லாமல், அமைதியுடனும் எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்டும் அடியார்கள் பேரின்பம் பெறுவார்கள்..இந்திரியங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்களும் என்னிடமுள்ள பக்தியால் அந்தப் புலன் இன்பத்திலிருந்தும் துன்பங்களிடமிருந்தும் விடுபடுவார்கள்..எப்படி நெருப்பு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்குகிறதோ அப்படி என்னிடம் கொண்ட பக்தியால், எனது பக்தனின் சாபங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும்..உத்தவரே, யோகம், ஞானம், தவம், புராணங்களைப் படித்தல், ஆசாரம், தானம், எல்லாவற்றையும் துறத்தல் (சந்தியாசம்) ஆகிய எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்தது என்னிடம் கொண்ட பக்தியே ஆகும்..நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட பக்தியே,என்னை அடையும் மார்க்கமாகும். என்னிடம் பக்தி கொண்டால், தீவினைகளும் நீங்கிவிடும்..பக்தியால் மனம் இளகாமல், உடலில் மயிர்கூர்ச்செரியாமல், கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழியாமல் எப்படி மனம் புனிதமாக்கப்படும்?.எனது பக்தர்கள் சில நேரங்களில் மனதில் வெட்கப்படாமல் கண்ணீர் விடுவார்கள். சில நேரம் சிரிப்பார்கள், சில நேரம் உரத்தக் குரலில் பாடுவார்கள், ஆடுவார்கள்… அந்தச் செய்கைகள் இந்தப் பிரபஞ்சத்தைப் புனிதமாக்கும்..எப்படி, தங்கத்தை நெருப்பிலிட்டால், அதன் அழுக்குகள் நீங்கி சுத்தம் ஏற்படுமோ அதுபோல என் மீதுள்ள பக்தியால் பக்தனின் மனதிலுள்ள உலக ஆசைகள் நீங்கி என்னை அடைவான்..மனிதனின் மனது, இந்திரியங்களால் பொருள்களை உணர்ந்து அவற்றின் மீது ஆசைப்பட்டுப் பற்று ஏற்படுகிறது..என்மீது ஆசை கொண்டவன் மனது என்னிடம் பற்று கொள்கிறது..ஆகையால், தேவையற்ற உலகப் பொருள்களின் மீது ஆசையை நீக்கி, என் மீது பக்தி கொண்டு என்னையே தியானிப்பாயாக!.தன்னைக் கட்டுப்படுத்தியவன், பெண்களின் தொடர்பு நீக்கி, தனிமையான மனதிற்கு அமைதியளிக்கும் இடத்தில் அமர்ந்து என்னை தியானிக்க வேண்டும்..உலக பற்றுகளுக்கும், துன்பங்களுக்கும் முக்கியக் காரணமாக அமைவது… பெண்கள் சம்பந்தப்பட்ட தொடர்புகளேயாகும்..(தொடரும்)
உத்தவ கீதை – 10.– டி.வி. ராதாகிருஷ்ணன். பக்தி மார்க்கம் மற்றும் தியான முறை.கிருஷ்ணரே! பிரம்மத்தைப் பற்றி பேசுகிற பல ஆசாரியர்கள், பலவித மார்க்கங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். அந்த மார்க்கங்கள் யாவையும் முக்கியமானவையா? அல்லது ஒரே ஒரு மார்க்கமே முக்கியமானதா?.நீங்களோ, பக்தி மார்க்கமே, மற்றெல்லா மார்க்கங்களையும் விடச் சிறந்தது, தனித்து விளங்குவது என்றும் கூறுகிறீர்கள். தயவு செய்து விளக்கிக் கூறுங்கள்… என உத்தவர் கேட்க கண்ணன் பதில் உரைக்கிறார்..நான் முதலில் பிரம்மாவிடம் கூறியவை வேதங்கள் எனப்படுபவை. பிரளய காலத்தில் அவை அழிந்து போயின. அவை ஒருவனின் மனத்தைக் கட்டுப்படுத்தி நிலைநிறுத்தி வைக்க உதவுபவை..மறுபடியும் உயிர்கள் உண்டாக்கப்பட்டபோது, என்னால் மறுபடியும் பிரம்மாவுக்கு உபதேசிக்கப்பட்டது, பிரம்மா தன்னுடைய புத்திரனான, ஸ்வாயம்பு மனுவுக்கும், பின்பு அவரால் ஏழு முனிவர்களுக்கும் (ஸப்தரிஷிகள்… பிருகு, மரிசீ, அத்ரி, ஆங்கிரசு, புலஸ்திய, புலக, கிரது) சொல்லப்பட்டது..பின்பு அவர்களிடமிருந்து சித்தர்கள், கின்னரர்கள், மேலும் மனிதர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது..மனிதர்களிடையே முக்குணச் சேர்க்கையால் எண்ணங்கள், செயல்கள் வேறுபட்டன. ஆதலால் வேதங்களுக்கு வியாக்கியானங்கள், பொருள் கூறுவதில் மாறுபாடு ஏற்பட்டது. அதனால், சில வியாக்கியானங்கள் வேதத்திற்கு எதிராகவே எடுத்துச் சொல்லப்பட்டன..மனிதர்கள் என் மாயையின் செயலால் மக்களின் தொழிலுக்கும், விருப்பத்திற்கும் தகுந்தவாறு கூறுகிறார்கள்..முக்தியடைவது, கர்மம் செய்தலால் என்றும், பீமாம்சம் மேல் என்றும், பெண் இன்பத்தால் என்றும் , உண்மை பேசுவதால் மட்டும் என்றும், மனம் இந்திரியங்களால் கட்டுப்படுத்துவதால் என்றும் மற்றும் தானம், யாகத்தில் ஆகுதி கொடுப்பதால் என்றும் பலவாறாகக் கூறுகின்றார்கள்..இவைகளால் ஏற்படுவது, வெறும் மனக்கிலேசமாகும். சிறிதுகால இன்பத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது..இந்திரிய சுகங்களில் ஈடுபட்டவர்களுக்கு எப்படி நிரந்தர சுகம் கிட்டும்?என்னிடம் பக்திகொண்டு, தனக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல், எந்தப் புலன் இன்பத்திலும் ஈடுபடாதவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான்..என்னிடம் பக்தி கொண்டவன், பிரம்மலோகப் பதவிக்கோ, இந்திரலோகப் பதவிக்கோ மற்ற எந்த பதவிக்குமோ ஆசைப்படமாட்டான்..பிரம்மனும், சிவனும், பலராமனும், லக்ஷ்மியும் ஏன்… என் உருவத்தைவிட எனக்கு விருப்பமானவன் நீயே..மனதில் அமைதியுடனும், எவரிடமும் பகைமை பாராட்டாமலும், சமதிருஷ்டியுடனும் வாழும் பக்தனின் பாத அடிகளை நான் பின்பற்றுவேன்..பலனில் பற்று வைக்காமல்,பொருட்பற்றில்லாமல், அமைதியுடனும் எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்டும் அடியார்கள் பேரின்பம் பெறுவார்கள்..இந்திரியங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்களும் என்னிடமுள்ள பக்தியால் அந்தப் புலன் இன்பத்திலிருந்தும் துன்பங்களிடமிருந்தும் விடுபடுவார்கள்..எப்படி நெருப்பு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்குகிறதோ அப்படி என்னிடம் கொண்ட பக்தியால், எனது பக்தனின் சாபங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும்..உத்தவரே, யோகம், ஞானம், தவம், புராணங்களைப் படித்தல், ஆசாரம், தானம், எல்லாவற்றையும் துறத்தல் (சந்தியாசம்) ஆகிய எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்தது என்னிடம் கொண்ட பக்தியே ஆகும்..நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட பக்தியே,என்னை அடையும் மார்க்கமாகும். என்னிடம் பக்தி கொண்டால், தீவினைகளும் நீங்கிவிடும்..பக்தியால் மனம் இளகாமல், உடலில் மயிர்கூர்ச்செரியாமல், கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழியாமல் எப்படி மனம் புனிதமாக்கப்படும்?.எனது பக்தர்கள் சில நேரங்களில் மனதில் வெட்கப்படாமல் கண்ணீர் விடுவார்கள். சில நேரம் சிரிப்பார்கள், சில நேரம் உரத்தக் குரலில் பாடுவார்கள், ஆடுவார்கள்… அந்தச் செய்கைகள் இந்தப் பிரபஞ்சத்தைப் புனிதமாக்கும்..எப்படி, தங்கத்தை நெருப்பிலிட்டால், அதன் அழுக்குகள் நீங்கி சுத்தம் ஏற்படுமோ அதுபோல என் மீதுள்ள பக்தியால் பக்தனின் மனதிலுள்ள உலக ஆசைகள் நீங்கி என்னை அடைவான்..மனிதனின் மனது, இந்திரியங்களால் பொருள்களை உணர்ந்து அவற்றின் மீது ஆசைப்பட்டுப் பற்று ஏற்படுகிறது..என்மீது ஆசை கொண்டவன் மனது என்னிடம் பற்று கொள்கிறது..ஆகையால், தேவையற்ற உலகப் பொருள்களின் மீது ஆசையை நீக்கி, என் மீது பக்தி கொண்டு என்னையே தியானிப்பாயாக!.தன்னைக் கட்டுப்படுத்தியவன், பெண்களின் தொடர்பு நீக்கி, தனிமையான மனதிற்கு அமைதியளிக்கும் இடத்தில் அமர்ந்து என்னை தியானிக்க வேண்டும்..உலக பற்றுகளுக்கும், துன்பங்களுக்கும் முக்கியக் காரணமாக அமைவது… பெண்கள் சம்பந்தப்பட்ட தொடர்புகளேயாகும்..(தொடரும்)