அருளுரை.வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். அதன் முடிவில் ஏற்படுவதுதான் மரணம். ஆனால், மரணத்துடன் எதுவும் முடிவதில்லை. இதைத் தெரிந்துகொண்டு விட்டால் அப்புறம் நமக்கு எந்த பயமும் இல்லை. மரணத்துடன் வெறும் உடம்பைத்தான் விட்டுவிட்டுப் போகிறோம். அதனுடைய இயக்கம்தான் முடிந்து போகிறது. உடம்புக்குத்தான் இந்த நிலை; ஒரு முடிவும் நமக்கு அல்ல. அந்த நாம் என்பது யார்? இந்த உடம்பின் வழியாக ஒவ்வொன்றையும் அறிவிப்பது யார்? அதுதான்! கண் வழியாகப் பார்க்கிறேன். காது வழியாகக் கேட்கிறேன். புலன்களின் வழியாக அனுபவிக்கிறேன்..இதற்கு ஓர் உதாரணம். நான் அலுவலகத்துக்குப் போகிறேன். அங்கே ஆபீசராக உட்காருகிறேன். டெலிபோன், கம்ப்யூட்டர், டெலக்ஸ் மூலமாக மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறேன். என் வேலையைச் செய்கிறேன். அந்த அலுவலக வேலை முடிகிறது. மூன்று கட்டடங்களுக்கு அப்பால் ஒரு கட்டடத்தில் அடுத்த வேலை. நான் அங்கே போகக் கிளம்பிவிடுகிறேன். என்னுடைய பொருட்கள், சாதனங்கள், கருவிகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுகிறேன். அந்த இடத்தில் புதிய அனுபவங்கள், நான் இருந்த இடத்தில் மாறுகிறது. ஒன்றில் முடிந்து இன்னொன்றில் தொடங்குகிறது. நான் மாறுவதில்லை..அதேபோல ஒவ்வொரு உடலுக்கும் சாவு – முடிவு – என்பது உண்டு. நமக்கு இல்லை. இன்னொரு புதிய இடத்தில் ஆரம்பிக்கின்றோம். இன்னொரு புதிய சூழ்நிலையில் மனைவி, குழந்தைகள், வேலை எல்லாமே புதியதாக வேலை யைத் தொடங்குகிறோம். இப்படி நினைத்துப் பாருங்கள், உங்களுக்கு மரண பயமே இருக்காது. உதறிவிட்டு, புதிய இடத்தில், புதிய உடம்புடன் புது வாழ்க்கையைத் தொடங்க மாட்டோமா என்று ஓர் ஆசைகூட வந்துவிடும்..மரணத்துடன் முடிந்துபோவது நமது ஆசைகள், பந்த பாசங்கள்தாம். கறுப்புப் பணம் வைத்திருந்தால் எடுத்துக்கொண்டு போக முடியாது. வாழ்க்கையில் உங்களுடன் கலந்து பங்குபெற்ற இன்பத்துக்குக் காரணமாக இருந்த பெண்களை அழைத்துச் செல்ல முடியாது. ஆசையுடன் அனுபவித்த சுகங்கள் அப்படியே தொடர முடியாது. ஆனால் வேறு இடத்தில் வேறு விதமாகக் கிடைக்க முடியும்..ஆகவே, விஷயத்துக்கு மறுபடி வருவோம். வாழ்க்கை என்பதை ஒரு விளையாட்டாகவே கருதுங்கள். ஒவ்வொன்றுடனும் விளையாடுங்கள். எல்லாமே தற்காலிகமானதுதான் என்று தெரிந்துகொண்டு, அந்த உணர்ச்சியுடனேயே அனுபவித்து விளையாடுங்கள். இந்த இடம், இந்த வேலை, இந்த மனைவி, இந்தக் காதலி – எதுவுமே நிரந்தரம் அல்ல. இவையெல்லாம் உங்கள் அனுபவத்தில் ஒவ்வொரு பகுதிகளே. இதைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போது வாழ்க்கையை அனுபவிக்கலாம். அதனால் பற்று என்ற பாசி பிடித்துக் கொள்ளாது. பிரியும்போது வேதனை இருக்காது..-சுவாமி சின்மயானந்தர்
அருளுரை.வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். அதன் முடிவில் ஏற்படுவதுதான் மரணம். ஆனால், மரணத்துடன் எதுவும் முடிவதில்லை. இதைத் தெரிந்துகொண்டு விட்டால் அப்புறம் நமக்கு எந்த பயமும் இல்லை. மரணத்துடன் வெறும் உடம்பைத்தான் விட்டுவிட்டுப் போகிறோம். அதனுடைய இயக்கம்தான் முடிந்து போகிறது. உடம்புக்குத்தான் இந்த நிலை; ஒரு முடிவும் நமக்கு அல்ல. அந்த நாம் என்பது யார்? இந்த உடம்பின் வழியாக ஒவ்வொன்றையும் அறிவிப்பது யார்? அதுதான்! கண் வழியாகப் பார்க்கிறேன். காது வழியாகக் கேட்கிறேன். புலன்களின் வழியாக அனுபவிக்கிறேன்..இதற்கு ஓர் உதாரணம். நான் அலுவலகத்துக்குப் போகிறேன். அங்கே ஆபீசராக உட்காருகிறேன். டெலிபோன், கம்ப்யூட்டர், டெலக்ஸ் மூலமாக மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறேன். என் வேலையைச் செய்கிறேன். அந்த அலுவலக வேலை முடிகிறது. மூன்று கட்டடங்களுக்கு அப்பால் ஒரு கட்டடத்தில் அடுத்த வேலை. நான் அங்கே போகக் கிளம்பிவிடுகிறேன். என்னுடைய பொருட்கள், சாதனங்கள், கருவிகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுகிறேன். அந்த இடத்தில் புதிய அனுபவங்கள், நான் இருந்த இடத்தில் மாறுகிறது. ஒன்றில் முடிந்து இன்னொன்றில் தொடங்குகிறது. நான் மாறுவதில்லை..அதேபோல ஒவ்வொரு உடலுக்கும் சாவு – முடிவு – என்பது உண்டு. நமக்கு இல்லை. இன்னொரு புதிய இடத்தில் ஆரம்பிக்கின்றோம். இன்னொரு புதிய சூழ்நிலையில் மனைவி, குழந்தைகள், வேலை எல்லாமே புதியதாக வேலை யைத் தொடங்குகிறோம். இப்படி நினைத்துப் பாருங்கள், உங்களுக்கு மரண பயமே இருக்காது. உதறிவிட்டு, புதிய இடத்தில், புதிய உடம்புடன் புது வாழ்க்கையைத் தொடங்க மாட்டோமா என்று ஓர் ஆசைகூட வந்துவிடும்..மரணத்துடன் முடிந்துபோவது நமது ஆசைகள், பந்த பாசங்கள்தாம். கறுப்புப் பணம் வைத்திருந்தால் எடுத்துக்கொண்டு போக முடியாது. வாழ்க்கையில் உங்களுடன் கலந்து பங்குபெற்ற இன்பத்துக்குக் காரணமாக இருந்த பெண்களை அழைத்துச் செல்ல முடியாது. ஆசையுடன் அனுபவித்த சுகங்கள் அப்படியே தொடர முடியாது. ஆனால் வேறு இடத்தில் வேறு விதமாகக் கிடைக்க முடியும்..ஆகவே, விஷயத்துக்கு மறுபடி வருவோம். வாழ்க்கை என்பதை ஒரு விளையாட்டாகவே கருதுங்கள். ஒவ்வொன்றுடனும் விளையாடுங்கள். எல்லாமே தற்காலிகமானதுதான் என்று தெரிந்துகொண்டு, அந்த உணர்ச்சியுடனேயே அனுபவித்து விளையாடுங்கள். இந்த இடம், இந்த வேலை, இந்த மனைவி, இந்தக் காதலி – எதுவுமே நிரந்தரம் அல்ல. இவையெல்லாம் உங்கள் அனுபவத்தில் ஒவ்வொரு பகுதிகளே. இதைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போது வாழ்க்கையை அனுபவிக்கலாம். அதனால் பற்று என்ற பாசி பிடித்துக் கொள்ளாது. பிரியும்போது வேதனை இருக்காது..-சுவாமி சின்மயானந்தர்