கவர் ஸ்டோரி.– ஆதித்யா.சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல் விவாதமாக 'தூரத்' தொடங்கிவிட்டது. காரணம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிரதமரின் வருகை போது எழுந்த சலசலப்புதான்..பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான திட்டங்களை இதே நேரு ஸ்டேடியத்தில் அறிவிப்பதற்காக வந்த பிரதமரை வரவேற்கும் போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை திராவிட மாடல் போன்றவை குறித்துப் பேசி அதிர்வலைகளை எழுப்பியிருந்தார், முன்னரே தயாரிக்கப்பட்டிருந்த தன் உரையை பேசிய மோடி தன் பேச்சில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு மறுமொழி எதுவும் சொல்லவில்லை. பிரதமரின் பயணத்துக்குபின் தமிழக பா.ஜ.க. இதை அரசியல் பிரச்னையாக்கப் பார்த்தது. "முதல்வர் பிரதமருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை" என்ற பிரசாரத்தைத் தொடங்கியது..காட்சி.ஆனால், அண்மையில் ஜூலை 28ம் தேதி சென்னையில் நடந்த ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மேடையில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின் இருவரும் காட்டிய அந்நியோன்னியம் பளிச்சென்ற வேறுபாடாகத் தெரிந்தது; நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, விழாவுக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகள் தி.மு.க.-வின் முந்தைய அணுகுமுறையில் இருந்து பெரிய மாற்றத்தை காட்டுவதாக மீடியாவால் உணரப்பட்டது..கனவு.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்கு இது நிச்சயம் ஓர் அதிர்வைக் கொடுத்திருக்கும் என்று தமிழக பா.ஜ.க. ஆதரவாளர்கள் கணக்குப்போட ஆரம்பித்தார்கள். மேடையில் இரு தலைவர்களின் உடல்மொழி வெளிப்பட்ட விதத்தை, இது வெறும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான இணக்கம் மட்டுமில்லை, வரும் காலங்களில் வரப்போகும் அரசியல் மாற்றங்களுக்கான ஆரம்ப காட்சி என்று வர்ணிக்கத் தொடங்கினர். பிரதமர், ஸ்டாலின் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது அரசியலில் அடுத்த காய் நகர்தலுக்கான ஆரம்பம் என்று ஒரு சாரார் கனவு காணத் தொடங்கிவிட்டனர். இந்த கனவுகளுக்கு காரணம் மோடி- ஸ்டாலின் அன்நியோனியமான உரையாடலும் உடல் மொழியும் மட்டும் காரணமில்லை..செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு வைத்த விளம்பரங்களில் அத்துமீறி பிரதமர் நரேந்திர மோதி படங்களை ஒட்டிய பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், அந்தப் படத்தை அழித்த பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்திருந்தார்..தமிழ்நாடு அரசு செய்திருந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் விமர்சிப்பதும், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பாராட்டுவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததும் ஒரு காரணம்.காட்சிகள்.தில்லி சென்ற எடப்பாடியை மோடி தனியாக சந்திக்கவில்லை. இதனால் எடப்பாடி தரப்பு அப்செட்டாக இருந்தது. இந்த நிலையில்தான், மோடி தன்னை சந்தித்தால், அது தனக்கு பெரிய பலமாக இருக்கும் என்றுஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சி எடுத்தார். அதன் பலனாக ஓபிஎஸ் டெல்லி சென்று மோடியை ஒருவழியாக சந்தித்தார். "எடப்பாடியை சந்திக்காத மோடி என்னை சந்தித்துவிட்டார்" என்ற தோற்றத்தை உருவாக்கினார். ஆனால், உண்மையில் நடந்தது வேறு..அ.தி.மு.க. கட்சி விவகாரங்கள் குறித்தும், ஓ.பி.எஸ். மீதான தமது நடவடிக்கைகள் பற்றியும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி என்ற முறையில் பிரதமர் மோடி, பா.ஜ.க. முன்னாள் தேசிய தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து தன் நிலை விளக்கம் அளிப்பதற்காக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி செஸ் ஒலிம்பியாட்டுக்கு முன்னர் தில்லி சென்றிருந்தார்..ஆனால், அவர் திட்டமிட்டப்படி மோடியையும், அமித் ஷாவையும் தனித்தனியாக சந்தித்து பேச முடியாமல் போனது. இதனால் அப்செட் ஆன இபிஎஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் மட்டும் பங்கேற்றுவிட்டு, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் பதிவியேற்பு விழாவில் பங்கேற்காமல், நான்கு நாட்களுக்கு திட்டமிட்டிருந்த தமது தில்லி பயணத்தை இரண்டே நாட்களில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பிவிட்டார்..பிரதமர் இபிஎஸ்ஸை சந்திகாததை தன் நிலைப்பாட்டுக்கு பிரதமர் ஆதரவு தெரிவிப்பதற்கான அடையாளம் என்று கனவில் மிதக்க ஆரம்பித்த ஓபிஎஸ் அது குறித்து தன் ஆதரவாளர்களுடன் விவாதித்திருக்கிறார்..காட்சி.தில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மூவை பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் சென்றிருந்தனர். அந்த நிகழ்ச்சி முடிவில் பன்னீர் செல்வம் பிரதமரை தனியாக சந்திக்க விரும்பினார். ஆனால் முன்னதாகவே அனுமதி கேட்காததால் அது இயலவில்லை. சந்திப்பு நடந்த அந்த அறைக்குள் பிரதமர் நரேந்திர மோதி வந்தபோது பன்னீர்செல்வமும் ரவிந்தர்நாத்தும் வணக்கம் தெரிவித்தனர். இருவருக்கும் தனித்தனியாக பதில் மரியாதை செலுத்தாமல் நரேந்திர மோதி நகர்ந்து சென்றார். அமித்ஷா, ராஜ்நாத் சிங் புன்னகை மட்டும் செய்தார்..இந்த காட்சி சென்னையில் விவரிக்கப்பட்டவுடன் இபிஎஸ்தரப்பு பிரதமர் தங்கள் நிலையை ஆதரிக்கப் போகிறார். அதனால்தான் சந்திக்க வந்த ஓபிஎஸ் ஸை கண்டு கொள்ளவில்லை என கனவு காண ஆரம்பித்தனர்..இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தங்கள் தரப்பு நியாங்களை பிரதமரிடம் சொல்ல அவர் ஒலிம்பியாட்டுக்கு சென்னை வரும் வாய்ப்பை பயன்படுத்த விரும்பினர். ஆனால், பிரதமர் அலுவலகம் இருவருக்கும் கடைசி நிமிடம் வரை அனுமதி வழங்கவில்லை. செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கு பின் ராஜ்பவனில் தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் 3 மணி நேரம் பேசிய பிரதமர் அ.தி.மு.க.வின் இரு தலைவர்களையும் 3 நிமிடங்கள் கூட சந்திக்க மறுத்துவிட்டார். இறுதியாகபிரதமரை விமான நிலையத்தில் வரவேற்கும் வழியனுப்பும் சம்பிரதாயமான சடங்கில் இருவருக்கும் சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பிரதமர் சொன்ன செய்தி "உங்கள் பிரச்னைகள் முடியும் வரை என்னை நெருங்காதீர்கள்.".இருவரின் கனவுகளும் கலைந்தது.."தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஒருவரையொருவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்ற கனவையும் கலைத்தார் ஸ்டாலின்..கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற மனோரமா செய்தி நிறுவனத்தின் கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு மலையாளத்திலும் தமிழிலும் உரையாற்றினார். அதில் மாநில அரசுகள் தன்னிறைவு பெற்ற அரசுகளாக இருந்தால் தான், இந்தியா வலிமையாக இருக்கும். வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலம் தானே தவிர, பலவீனம் அல்ல. மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் மாநில அரசுகள்தான். அதனால் மத்திய அரசு கூட்டாட்சி கோட்பாடுகளை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல் இந்தியாவுக்கு "ஒரே தேசிய மொழி" என்பது சாத்தியமில்லை. "ஒரே நாடு, ஒரே மொழி" என்று கூறுவோர் "இந்தியாவின் எதிரிகள்" என்று அதிரடியாக பேசியிருக்கிறார். இது பா.ஜ.க.விற்கு மட்டுமில்லை, தங்கள் கூட்டணிக் கட்சிக்கார்களுக்கு கொடுத்த தன்னிலை விளக்கமும் கூட..சில நிமிட காட்சிகளை தமிழக அரசியலில் நிகழகப்போகும் மாற்றங்களின் பெருங்கனவாக சித்தரித்த ஊடகங்களும் அதை நம்பிய அரசியக் கட்சிகளின் ஆதரவாளார்களும் இறுதியில் உணர்ந்தது.கண்டது ஒரு காட்சிப்பிழை.
கவர் ஸ்டோரி.– ஆதித்யா.சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல் விவாதமாக 'தூரத்' தொடங்கிவிட்டது. காரணம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிரதமரின் வருகை போது எழுந்த சலசலப்புதான்..பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான திட்டங்களை இதே நேரு ஸ்டேடியத்தில் அறிவிப்பதற்காக வந்த பிரதமரை வரவேற்கும் போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை திராவிட மாடல் போன்றவை குறித்துப் பேசி அதிர்வலைகளை எழுப்பியிருந்தார், முன்னரே தயாரிக்கப்பட்டிருந்த தன் உரையை பேசிய மோடி தன் பேச்சில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு மறுமொழி எதுவும் சொல்லவில்லை. பிரதமரின் பயணத்துக்குபின் தமிழக பா.ஜ.க. இதை அரசியல் பிரச்னையாக்கப் பார்த்தது. "முதல்வர் பிரதமருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை" என்ற பிரசாரத்தைத் தொடங்கியது..காட்சி.ஆனால், அண்மையில் ஜூலை 28ம் தேதி சென்னையில் நடந்த ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மேடையில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின் இருவரும் காட்டிய அந்நியோன்னியம் பளிச்சென்ற வேறுபாடாகத் தெரிந்தது; நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, விழாவுக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகள் தி.மு.க.-வின் முந்தைய அணுகுமுறையில் இருந்து பெரிய மாற்றத்தை காட்டுவதாக மீடியாவால் உணரப்பட்டது..கனவு.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்கு இது நிச்சயம் ஓர் அதிர்வைக் கொடுத்திருக்கும் என்று தமிழக பா.ஜ.க. ஆதரவாளர்கள் கணக்குப்போட ஆரம்பித்தார்கள். மேடையில் இரு தலைவர்களின் உடல்மொழி வெளிப்பட்ட விதத்தை, இது வெறும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான இணக்கம் மட்டுமில்லை, வரும் காலங்களில் வரப்போகும் அரசியல் மாற்றங்களுக்கான ஆரம்ப காட்சி என்று வர்ணிக்கத் தொடங்கினர். பிரதமர், ஸ்டாலின் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது அரசியலில் அடுத்த காய் நகர்தலுக்கான ஆரம்பம் என்று ஒரு சாரார் கனவு காணத் தொடங்கிவிட்டனர். இந்த கனவுகளுக்கு காரணம் மோடி- ஸ்டாலின் அன்நியோனியமான உரையாடலும் உடல் மொழியும் மட்டும் காரணமில்லை..செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு வைத்த விளம்பரங்களில் அத்துமீறி பிரதமர் நரேந்திர மோதி படங்களை ஒட்டிய பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், அந்தப் படத்தை அழித்த பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்திருந்தார்..தமிழ்நாடு அரசு செய்திருந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் விமர்சிப்பதும், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பாராட்டுவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததும் ஒரு காரணம்.காட்சிகள்.தில்லி சென்ற எடப்பாடியை மோடி தனியாக சந்திக்கவில்லை. இதனால் எடப்பாடி தரப்பு அப்செட்டாக இருந்தது. இந்த நிலையில்தான், மோடி தன்னை சந்தித்தால், அது தனக்கு பெரிய பலமாக இருக்கும் என்றுஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சி எடுத்தார். அதன் பலனாக ஓபிஎஸ் டெல்லி சென்று மோடியை ஒருவழியாக சந்தித்தார். "எடப்பாடியை சந்திக்காத மோடி என்னை சந்தித்துவிட்டார்" என்ற தோற்றத்தை உருவாக்கினார். ஆனால், உண்மையில் நடந்தது வேறு..அ.தி.மு.க. கட்சி விவகாரங்கள் குறித்தும், ஓ.பி.எஸ். மீதான தமது நடவடிக்கைகள் பற்றியும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி என்ற முறையில் பிரதமர் மோடி, பா.ஜ.க. முன்னாள் தேசிய தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து தன் நிலை விளக்கம் அளிப்பதற்காக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி செஸ் ஒலிம்பியாட்டுக்கு முன்னர் தில்லி சென்றிருந்தார்..ஆனால், அவர் திட்டமிட்டப்படி மோடியையும், அமித் ஷாவையும் தனித்தனியாக சந்தித்து பேச முடியாமல் போனது. இதனால் அப்செட் ஆன இபிஎஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் மட்டும் பங்கேற்றுவிட்டு, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் பதிவியேற்பு விழாவில் பங்கேற்காமல், நான்கு நாட்களுக்கு திட்டமிட்டிருந்த தமது தில்லி பயணத்தை இரண்டே நாட்களில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பிவிட்டார்..பிரதமர் இபிஎஸ்ஸை சந்திகாததை தன் நிலைப்பாட்டுக்கு பிரதமர் ஆதரவு தெரிவிப்பதற்கான அடையாளம் என்று கனவில் மிதக்க ஆரம்பித்த ஓபிஎஸ் அது குறித்து தன் ஆதரவாளர்களுடன் விவாதித்திருக்கிறார்..காட்சி.தில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மூவை பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் சென்றிருந்தனர். அந்த நிகழ்ச்சி முடிவில் பன்னீர் செல்வம் பிரதமரை தனியாக சந்திக்க விரும்பினார். ஆனால் முன்னதாகவே அனுமதி கேட்காததால் அது இயலவில்லை. சந்திப்பு நடந்த அந்த அறைக்குள் பிரதமர் நரேந்திர மோதி வந்தபோது பன்னீர்செல்வமும் ரவிந்தர்நாத்தும் வணக்கம் தெரிவித்தனர். இருவருக்கும் தனித்தனியாக பதில் மரியாதை செலுத்தாமல் நரேந்திர மோதி நகர்ந்து சென்றார். அமித்ஷா, ராஜ்நாத் சிங் புன்னகை மட்டும் செய்தார்..இந்த காட்சி சென்னையில் விவரிக்கப்பட்டவுடன் இபிஎஸ்தரப்பு பிரதமர் தங்கள் நிலையை ஆதரிக்கப் போகிறார். அதனால்தான் சந்திக்க வந்த ஓபிஎஸ் ஸை கண்டு கொள்ளவில்லை என கனவு காண ஆரம்பித்தனர்..இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தங்கள் தரப்பு நியாங்களை பிரதமரிடம் சொல்ல அவர் ஒலிம்பியாட்டுக்கு சென்னை வரும் வாய்ப்பை பயன்படுத்த விரும்பினர். ஆனால், பிரதமர் அலுவலகம் இருவருக்கும் கடைசி நிமிடம் வரை அனுமதி வழங்கவில்லை. செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கு பின் ராஜ்பவனில் தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் 3 மணி நேரம் பேசிய பிரதமர் அ.தி.மு.க.வின் இரு தலைவர்களையும் 3 நிமிடங்கள் கூட சந்திக்க மறுத்துவிட்டார். இறுதியாகபிரதமரை விமான நிலையத்தில் வரவேற்கும் வழியனுப்பும் சம்பிரதாயமான சடங்கில் இருவருக்கும் சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பிரதமர் சொன்ன செய்தி "உங்கள் பிரச்னைகள் முடியும் வரை என்னை நெருங்காதீர்கள்.".இருவரின் கனவுகளும் கலைந்தது.."தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஒருவரையொருவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்ற கனவையும் கலைத்தார் ஸ்டாலின்..கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற மனோரமா செய்தி நிறுவனத்தின் கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு மலையாளத்திலும் தமிழிலும் உரையாற்றினார். அதில் மாநில அரசுகள் தன்னிறைவு பெற்ற அரசுகளாக இருந்தால் தான், இந்தியா வலிமையாக இருக்கும். வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலம் தானே தவிர, பலவீனம் அல்ல. மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் மாநில அரசுகள்தான். அதனால் மத்திய அரசு கூட்டாட்சி கோட்பாடுகளை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல் இந்தியாவுக்கு "ஒரே தேசிய மொழி" என்பது சாத்தியமில்லை. "ஒரே நாடு, ஒரே மொழி" என்று கூறுவோர் "இந்தியாவின் எதிரிகள்" என்று அதிரடியாக பேசியிருக்கிறார். இது பா.ஜ.க.விற்கு மட்டுமில்லை, தங்கள் கூட்டணிக் கட்சிக்கார்களுக்கு கொடுத்த தன்னிலை விளக்கமும் கூட..சில நிமிட காட்சிகளை தமிழக அரசியலில் நிகழகப்போகும் மாற்றங்களின் பெருங்கனவாக சித்தரித்த ஊடகங்களும் அதை நம்பிய அரசியக் கட்சிகளின் ஆதரவாளார்களும் இறுதியில் உணர்ந்தது.கண்டது ஒரு காட்சிப்பிழை.