வித்யா சுப்ரமணியம்.மைதிலி இந்த வரவு செலவு கணக்கைக் கொஞ்சம் டாலி பண்ணித் தரமுடியுமா? எனக்கு கொஞ்சம் வெளில போகவேண்டிய வேலையிருக்கு" சாரதாம்மா ஒரு லெட்ஜரை அவளிடம் நீட்ட, தாங்க மேடம் என்றபடி வாங்கிக் கொண்டாள்..அன்றிரவு டாலி செய்த லெட்ஜரை சாரதாம்மாவிடம் கொடுத்தபின் பேச்சுவாக்கில் மெல்ல கேட்டாள்.."மாயா குட்டியை ஏதேனும் ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும். இந்த ஊரில் எனக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள்தான் உதவ வேண்டும்."."அதுக்கென்ன? என்ன மாதிரி பள்ளியில் அவளை சேர்க்க விரும்புகிறாய்?"."தனியார் பள்ளியெல்லாம் வேண்டாம். அரசுப் பள்ளியே போதும்."."கண்டிப்பாக. மார்ச் மாதத்தில் புது அட்மிஷன் போடும்போது சேர்த்துடலாம். நம்ம இல்லத்தின் பசங்க படிச்சுட்டிருக்கும் அரசு பள்ளியிலேயே போட்டுடலாம். நாளைக்கு அந்த ஹெட்மாஸ்டரிடம் சொல்லி வைக்கிறேன். அப்பறம் மைதிலி….ஊரில் யாரிடமாவது பேசினாயா? நீ எடுத்திருக்கும் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறாயா?"."உறுதியாகத்தான் இருக்கேன் மேடம். நான் இனி வாழ நினைப்பது என் குழந்தைகளுக்காக"."உன் பிறந்த வீட்டினரிடமேனும் பேசலாமே"."அக்காவிடம் நாளை பேசலாம் என்றிருக்கிறேன். அம்மா அப்பாவிடம் இப்போது பேசினால், அவர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பிப்பார்கள். நம் நாட்டில் அறிவுரைகள் எல்லாம் தவறே செய்யாவிடினும் பெண்ணுக்குதான் சொல்லப்படும். "விட்டுக்கொடுத்துச் செல்" என்ற அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் தற்போது நானில்லை. சுயமாய் நான் எழுந்து நின்ற பிறகு அவர்களிடம் பேசுகிறேன்"."உன் விருப்பம். ஆனால் இந்த இல்லத்தின் ஆதரவு எப்போதும் உனக்குண்டு. வாழ்வில் நீ வெற்றிபெற வாழ்த்துகிறேன்".மைதிலி தன் படுக்கை நோக்கி நடந்தாள். குழந்தைகள் உறங்கியிருந்தன. அவள் வாசற்பக்கம் வந்தாள். தோட்டத்து காற்று உடலை இதமாய்த் தழுவியது..காற்றாய்த் தீண்டினாய் நந்தலாலா.நல்ல கானமாய் ஒலித்தாய் நந்தலாலா.கவலைகள் களைந்தாய் நந்தலாலா.கண்ணில் உறக்கமாய் வாராய் நந்தலாலா.எந்தன் கனவிலும் வந்தே நீ நந்தலாலா.என் மடிதனில் துயிலாயோ நந்தலாலா".தோட்டத்து சிமென்ட் இருக்கையில் சாய்ந்தமர்ந்தபடி சன்னமான குரலில் இனிமையாய்ப் பாடிக்கொண்டிருந்தாள் மீனாக்ஷியம்மா.."இங்கயா இருக்கீங்க? தூங்கலையா?" மைதிலி அருகில் சென்று தானும் அமர்ந்தாள்.."தூக்கம் வாராமதான் பாடறேன். கண்ணில் உறக்கமாய் வாராய் நந்தலாலான்னு"."வழக்கமா படுத்ததும் தூங்கிடுவீங்களே"."மனசு சந்தோஷமா இருந்தாலும் உறக்கம் வராது"."ஓ! அப்படி என்ன சந்தோஷம்? சொன்னா நானும் சந்தோஷப்படுவேனே"."மகன் கொஞ்சம் முன்பு ஃபோன் பண்ணினான்."."அப்படியா? இன்னிக்கு மதர்ஸ்டே கூட இல்லையே. என்ன விசேஷம்?".மீனாக்ஷியம்மா சிரித்தாள். இன்று அவர்களுக்கு மதர்ஸ்டேதான். கல்யாணமாகி நாலஞ்சு வருஷம் கழிச்சு என்னைப் பாட்டியாக்கியிருக்கான்"."ஆஹா… எவ்ளோ சந்தோஷமான செய்தி! என்ன குழந்தை?"."ஆண் குழந்தை."."பேரனைப் பார்க்கணும்போல இருக்கா?"."விஷயம் சொன்னதும் ஆசை வந்துது. ஆனா இப்போ இல்ல"."ஏம்மா மகன் வான்னு கூப்பிடலையா?"."வான்னுதான் சொல்றான். டிக்கெட் புக் பண்றேன்னான். நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்."."ஏம்மா?"."அம்மாவா கூப்பிட்டா போகலாம். ஆயா வேலைக்கில்ல அழைக்கறான்? பேபி சிட்டர் வெச்சா கட்டுப்படியாகாதாம். தவிர நல்லா பாத்துப்பாங்களான்னு பயமாவும் இருக்காம். அதனால நீ வான்றான்"."என்ன சொன்னீங்க?"."என்னை நம்பி இங்க நிறைய குழந்தைகள் இருக்காங்க, அவங்களை விட்டுட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். சொந்த பேரக் குழந்தையைவிட அந்த அனாதைப் பசங்க உனக்கு வேண்டியவங்களா ஆயிட்டாங்களா? நீயெல்லாம் ஒரு அம்மாவான்னு கேட்டான். நான் அங்க வந்தா எனக்கு இப்போ அனுப்பிட்டு இருக்கற பத்தாயிரத்தை எனக்குத் தரவா போற? அதனால இனி நீ பத்தாயிரம் அனுப்ப வேணாம். ஒரு பேபி சிட்டர் வெச்சுக்க. அவங்களுக்கு சம்பளம் கொடுக்க அந்த பணம் உதவும். என் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்னேன். அவன் போனை வெச்சுட்டான். வேற ஏதானம் வழியில் என்னால மாசம் ஒரு பத்தாயிரம் சம்பாதிக்க முடியுமான்னு யோசித்துக் கொண்டிருக்கேன். அதான் தூக்கம் வரலை".மைதிலி கண்கலங்க அமர்ந்திருந்தாள்.."துன்பமோ, இன்பமோ கடவுள் நமக்கு எவ்வளவு தரவேண்டுமென்று நினைக்கிறானோ, அதற்குமேல் ஒரு இம்மியளவும் நாம் பெற்றுவிடமாட்டோம். அதனால் கிடைப்பதை ஏற்கப் பழகுவது நல்லது. தூங்கலாமா நேரமாகுது.".இருவரும் உள்ளே வந்தனர். மறுநாள் எதுவுமே நடக்காததுபோல மீனாக்ஷியம்மா இயல்பாகத் தன் பணிகளைச் செய்து கொண்டிருந்தாள்..**** **** ****.ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவானைக்கா கோயிலுக்குச் சென்று அகிலாண்டேஸ்வரியை தரிசித்துவிட்டு வரும்வழியில் கடை ஒன்றிலிருந்து அக்காவுக்கு போன் பண்ணினாள்..முதல்முறை ரிங் போய்க்கொண்டே இருந்தது. மீண்டும் முயற்சிக்க, தொடர்பு கிடைத்தது. எதிர்முனையில் அக்காவின் குரல் கேட்டது.."மைதிலி பேசறேன்"."மைதிலி எப்டிடி இருக்க? உன்கிட்டேர்ந்து போன் வராதான்னு தினமும் காத்திருந்தேன்" அக்கா பரபரப்பும் மகிழ்ச்சியுமாகப் பேசினாள்.."நான் நல்லார்க்கேன்"."எங்கடி இருக்க?"."பாதுகாப்பா ஒரு சேவை இல்லத்தில் இருக்கேன்."."எந்த ஊரில்?"."அதைப்பற்றி பிறகு சொல்றேன். அங்க அப்பா அம்மா..,,."அம்மா அழுதுக்கிட்டே இருக்கா. அப்பா ரொம்ப அப்செட். உன் மேல கொஞ்சம் கோபமா இருக்கார். என்ன பிரச்னை இருந்தாலும் சமாளிச்சிருக்கணும். இப்டி வீட்டைவிட்டு காணாமல் போனா.. தீராத பழியெல்லாம் வந்து சேருமேன்னு வருத்தப்படறார்".அவங்க வீட்டுலேர்ந்து யாராவது……."ஆனந்தன் வந்தார். அப்பாவைக் கண்டபடி திட்டினார். மிரட்டினார். பதிலுக்கு நாங்களும் மிரட்டினதும், காற்றுபோன பாலூனாகத் திரும்பிப்போய்ட்டார் அப்பறம் அவங்க பெரியண்ணி பேசினாங்க. உன் மீது ரொம்ப இரக்கப்பட்டாங்க. அவங்களுக்கெல்லாம் ஆனந்தன் மீதுதான் கோபம். நீ இருக்குமிடம் தெரிந்தால் சொல்லச்சொன்னாங்க"."சொல்றேன். எல்லார்க்கும் சொல்றேன். நான் முதலில் எழுந்து நிற்கணும். தலைநிமிர்ந்து வாழணும். அதன்பிறகு சொல்றேன். அதுவரை நான் போன் செய்த விஷயத்தைக்கூட நீ யாரிடமும் சொல்லவேண்டாம்க்கா"."அதுக்கில்ல மைதிலி, உன்னுடைய இந்த கஷ்டத்துக்கு நாங்க எல்லாரும்கூட ஒரு காரணம்தானே? உனக்கு எந்த உதவி வேணா நாங்க செய்யத்தயாரா இருக்கும்போது நீ யார்கிட்டயுமே சொல்லாம இப்டி எங்கயோ ஊர் தெரியாத ஊரில் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்படணுமா?"."யார் கஷ்டத்துக்கும் யாரும் காரணமாக முடியாதுக்கா. தீதும் நன்றும் பிறர் தர வாரா. பிறக்கும்போதே விதிகள் எழுதப்பட்டு விடுகின்றன. சாம்பலானாலும்கூட உயிர்த்தெழுவது நம் முயற்சியில் இருக்கு. அந்த முயற்சியில்தான் நான் இருக்கேன். நான் அங்க இருந்தால் சிக்கல் தீராது. உங்களுக்கும் பிரச்னை வரும். அதான் உனக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதிட்டு கிளம்பிட்டேன்"."உன்னைத் தொடர்புகொள்ள ஏதாவது நம்பர் இருக்கா மைதிலி?"."இரண்டு நாளுக்கொருமுறை நானே உன்னைக் கூப்பிடறேன் அக்கா"."ஒரு முடிவோடதான் இருக்கயா?"."கண்டுபிடிக்கமுடியாத தூரத்தில் எல்லாம் நானில்லைக்கா. என்னைப் புரிஞ்சுப்பன்னு நினைக்கறேன். அதைவிட, என்னை நீ நம்புவன்னு நினைக்கறேன்."."எப்பவும் என்னோட மாரல் சப்போர்ட் உனக்குண்டு மைதிலி. எப்போ என்ன பிரச்னை என்றாலும் உடனே போன் பண்ணு. உன் வெற்றிக்காக நான் பிரார்த்தனை பண்ணிக்கொண்டே இருப்பேன்"."அப்பறம் ஒரு ஹெல்ப் அக்கா"."என்ன சொல்லு"."வாழ்க்கை என்னை பயமுறுத்த ஆரம்பித்த பிறகு ஒரு முடிவெடுத்து ஆனந்துக்கும் தெரியாம நான் வங்கி வேலைக்கு தேர்வு எழுதியிருக்கேன். கல்யாணமாகி மாயா பிறந்த உடனேயே வங்கி தேர்வு எழுதுவது பற்றி ஆனந்திடம் கேட்டேன். அவர் கூடாதுன்னு மறுத்துட்டார். ஆனா அவர் மீதான என் நம்பிக்கை குறையக் குறைய என்னைப் பற்றிய, குழந்தைகளைப் பற்றிய பயம் கூடியது. இனி அனுமதி கேட்டால் சரியாகாதுன்னு நினைத்தேன். அதனால அவருக்குத் தெரியாமயே விண்ணப்பித்தேன். தேர்வுக்குத் தயார் செய்து கொண்டேன். நான் கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்புதான் குழந்தைகளை ஒருநாள் டேகேர்ல விட்டுட்டு தேர்வெழுதினேன். அதற்கான கடிதப் போக்குவரத்திற்கு உன்னுடைய விலாசம்தான் கொடுத்திருக்கேன். எனக்கு வேலை கிடைக்கும்னு நூறு சதம் நம்பறேன்க்கா. ரிசல்ட் எப்போ வேணாலும் அறிவிக்கப்படலாம். ஏதானும் கடிதம் வந்தா உடனே பிரிச்சுபாரு. நானும் ரெண்டு நாளைக்கு ஒருதரம் உனக்கு போன் பண்ணி கேட்டுக்கறேன் சரியா?"."கண்டிப்பா"."என்னைப்பற்றிய எந்த தகவலும் யாருக்கும் தெரியக்கூடாதுக்கா"."சரி. என் மேல இவ்ளோ நம்பிக்கை வைத்திருக்கும்போது எனக்கு மட்டுமாவது நீ இருக்கும் இடத்தையோ, தொடர்பு நம்பரையோ சொல்லலாம் இல்லையா?".மைதிலி புன்னகைத்தாள். சரி நோட் பண்ணிக்கோ என்றவள் வரலக்ஷ்மி சேவா இல்லத்தின் போன் நம்பரையும் விலாசத்தையும் கூறினாள்..மைதிலி போனை வைத்தாள்..வங்கி வேலை கிடைக்க எவ்வளவு நாளாகுமோ? அதுவரை இல்லத்தில் சும்மா உட்கார்ந்து சாப்பிடுவது சரியாகுமா? ஏதேனும் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். புது ஊர் புது இடம். இங்கே எனக்கு என்ன வேலை கிடைக்கும்? யோசித்தபடி இல்லம் நோக்கி நடந்தாள். மனசு தன் விதியை நினைத்து வருந்தியது..'ஒரு வேலை கிடைத்தபிறகு திருமணம் செய்து கொள்கிறேன்' என்று அப்பாவிடம் எவ்வளவோ சொல்லியும், 'இந்த வரனை திருமணம் செய்து கொண்டால் நீ வேலைக்கே செல்லத் தேவையில்லை' என்று சொல்லி அவளை மேற்கொண்டு பேசவிடாமல் செய்துவிட்டார். மாளிகை மாதிரி வீடு, கூட்டுக் குடும்பம், ஓர்ப்படிகள், உறவுகள் என்று எல்லோருமே அவளிடம் அன்பாகத்தான் இருந்தார்கள், அவனைத்தவிர. சொத்தைப் பிரித்துக் கொடுங்கள் என்று அவன் கேட்டபோதே அவளை பயம் கவ்வியது. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும்வரைதான் தனக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் பாதுகாப்பு என்று நினைத்தாள் அவள். அவனை நம்பி தனியே செல்ல பயமாக இருந்தது. இத்தனை பெரியோருக்கே அடங்காதவன் அவளுக்கு மட்டும் எப்படி அடங்குவான்? ஆனால் அவள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலையிலா அவன் இருந்தான்?.(தொடரும்)
வித்யா சுப்ரமணியம்.மைதிலி இந்த வரவு செலவு கணக்கைக் கொஞ்சம் டாலி பண்ணித் தரமுடியுமா? எனக்கு கொஞ்சம் வெளில போகவேண்டிய வேலையிருக்கு" சாரதாம்மா ஒரு லெட்ஜரை அவளிடம் நீட்ட, தாங்க மேடம் என்றபடி வாங்கிக் கொண்டாள்..அன்றிரவு டாலி செய்த லெட்ஜரை சாரதாம்மாவிடம் கொடுத்தபின் பேச்சுவாக்கில் மெல்ல கேட்டாள்.."மாயா குட்டியை ஏதேனும் ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும். இந்த ஊரில் எனக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள்தான் உதவ வேண்டும்."."அதுக்கென்ன? என்ன மாதிரி பள்ளியில் அவளை சேர்க்க விரும்புகிறாய்?"."தனியார் பள்ளியெல்லாம் வேண்டாம். அரசுப் பள்ளியே போதும்."."கண்டிப்பாக. மார்ச் மாதத்தில் புது அட்மிஷன் போடும்போது சேர்த்துடலாம். நம்ம இல்லத்தின் பசங்க படிச்சுட்டிருக்கும் அரசு பள்ளியிலேயே போட்டுடலாம். நாளைக்கு அந்த ஹெட்மாஸ்டரிடம் சொல்லி வைக்கிறேன். அப்பறம் மைதிலி….ஊரில் யாரிடமாவது பேசினாயா? நீ எடுத்திருக்கும் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறாயா?"."உறுதியாகத்தான் இருக்கேன் மேடம். நான் இனி வாழ நினைப்பது என் குழந்தைகளுக்காக"."உன் பிறந்த வீட்டினரிடமேனும் பேசலாமே"."அக்காவிடம் நாளை பேசலாம் என்றிருக்கிறேன். அம்மா அப்பாவிடம் இப்போது பேசினால், அவர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பிப்பார்கள். நம் நாட்டில் அறிவுரைகள் எல்லாம் தவறே செய்யாவிடினும் பெண்ணுக்குதான் சொல்லப்படும். "விட்டுக்கொடுத்துச் செல்" என்ற அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் தற்போது நானில்லை. சுயமாய் நான் எழுந்து நின்ற பிறகு அவர்களிடம் பேசுகிறேன்"."உன் விருப்பம். ஆனால் இந்த இல்லத்தின் ஆதரவு எப்போதும் உனக்குண்டு. வாழ்வில் நீ வெற்றிபெற வாழ்த்துகிறேன்".மைதிலி தன் படுக்கை நோக்கி நடந்தாள். குழந்தைகள் உறங்கியிருந்தன. அவள் வாசற்பக்கம் வந்தாள். தோட்டத்து காற்று உடலை இதமாய்த் தழுவியது..காற்றாய்த் தீண்டினாய் நந்தலாலா.நல்ல கானமாய் ஒலித்தாய் நந்தலாலா.கவலைகள் களைந்தாய் நந்தலாலா.கண்ணில் உறக்கமாய் வாராய் நந்தலாலா.எந்தன் கனவிலும் வந்தே நீ நந்தலாலா.என் மடிதனில் துயிலாயோ நந்தலாலா".தோட்டத்து சிமென்ட் இருக்கையில் சாய்ந்தமர்ந்தபடி சன்னமான குரலில் இனிமையாய்ப் பாடிக்கொண்டிருந்தாள் மீனாக்ஷியம்மா.."இங்கயா இருக்கீங்க? தூங்கலையா?" மைதிலி அருகில் சென்று தானும் அமர்ந்தாள்.."தூக்கம் வாராமதான் பாடறேன். கண்ணில் உறக்கமாய் வாராய் நந்தலாலான்னு"."வழக்கமா படுத்ததும் தூங்கிடுவீங்களே"."மனசு சந்தோஷமா இருந்தாலும் உறக்கம் வராது"."ஓ! அப்படி என்ன சந்தோஷம்? சொன்னா நானும் சந்தோஷப்படுவேனே"."மகன் கொஞ்சம் முன்பு ஃபோன் பண்ணினான்."."அப்படியா? இன்னிக்கு மதர்ஸ்டே கூட இல்லையே. என்ன விசேஷம்?".மீனாக்ஷியம்மா சிரித்தாள். இன்று அவர்களுக்கு மதர்ஸ்டேதான். கல்யாணமாகி நாலஞ்சு வருஷம் கழிச்சு என்னைப் பாட்டியாக்கியிருக்கான்"."ஆஹா… எவ்ளோ சந்தோஷமான செய்தி! என்ன குழந்தை?"."ஆண் குழந்தை."."பேரனைப் பார்க்கணும்போல இருக்கா?"."விஷயம் சொன்னதும் ஆசை வந்துது. ஆனா இப்போ இல்ல"."ஏம்மா மகன் வான்னு கூப்பிடலையா?"."வான்னுதான் சொல்றான். டிக்கெட் புக் பண்றேன்னான். நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்."."ஏம்மா?"."அம்மாவா கூப்பிட்டா போகலாம். ஆயா வேலைக்கில்ல அழைக்கறான்? பேபி சிட்டர் வெச்சா கட்டுப்படியாகாதாம். தவிர நல்லா பாத்துப்பாங்களான்னு பயமாவும் இருக்காம். அதனால நீ வான்றான்"."என்ன சொன்னீங்க?"."என்னை நம்பி இங்க நிறைய குழந்தைகள் இருக்காங்க, அவங்களை விட்டுட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். சொந்த பேரக் குழந்தையைவிட அந்த அனாதைப் பசங்க உனக்கு வேண்டியவங்களா ஆயிட்டாங்களா? நீயெல்லாம் ஒரு அம்மாவான்னு கேட்டான். நான் அங்க வந்தா எனக்கு இப்போ அனுப்பிட்டு இருக்கற பத்தாயிரத்தை எனக்குத் தரவா போற? அதனால இனி நீ பத்தாயிரம் அனுப்ப வேணாம். ஒரு பேபி சிட்டர் வெச்சுக்க. அவங்களுக்கு சம்பளம் கொடுக்க அந்த பணம் உதவும். என் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்னேன். அவன் போனை வெச்சுட்டான். வேற ஏதானம் வழியில் என்னால மாசம் ஒரு பத்தாயிரம் சம்பாதிக்க முடியுமான்னு யோசித்துக் கொண்டிருக்கேன். அதான் தூக்கம் வரலை".மைதிலி கண்கலங்க அமர்ந்திருந்தாள்.."துன்பமோ, இன்பமோ கடவுள் நமக்கு எவ்வளவு தரவேண்டுமென்று நினைக்கிறானோ, அதற்குமேல் ஒரு இம்மியளவும் நாம் பெற்றுவிடமாட்டோம். அதனால் கிடைப்பதை ஏற்கப் பழகுவது நல்லது. தூங்கலாமா நேரமாகுது.".இருவரும் உள்ளே வந்தனர். மறுநாள் எதுவுமே நடக்காததுபோல மீனாக்ஷியம்மா இயல்பாகத் தன் பணிகளைச் செய்து கொண்டிருந்தாள்..**** **** ****.ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவானைக்கா கோயிலுக்குச் சென்று அகிலாண்டேஸ்வரியை தரிசித்துவிட்டு வரும்வழியில் கடை ஒன்றிலிருந்து அக்காவுக்கு போன் பண்ணினாள்..முதல்முறை ரிங் போய்க்கொண்டே இருந்தது. மீண்டும் முயற்சிக்க, தொடர்பு கிடைத்தது. எதிர்முனையில் அக்காவின் குரல் கேட்டது.."மைதிலி பேசறேன்"."மைதிலி எப்டிடி இருக்க? உன்கிட்டேர்ந்து போன் வராதான்னு தினமும் காத்திருந்தேன்" அக்கா பரபரப்பும் மகிழ்ச்சியுமாகப் பேசினாள்.."நான் நல்லார்க்கேன்"."எங்கடி இருக்க?"."பாதுகாப்பா ஒரு சேவை இல்லத்தில் இருக்கேன்."."எந்த ஊரில்?"."அதைப்பற்றி பிறகு சொல்றேன். அங்க அப்பா அம்மா..,,."அம்மா அழுதுக்கிட்டே இருக்கா. அப்பா ரொம்ப அப்செட். உன் மேல கொஞ்சம் கோபமா இருக்கார். என்ன பிரச்னை இருந்தாலும் சமாளிச்சிருக்கணும். இப்டி வீட்டைவிட்டு காணாமல் போனா.. தீராத பழியெல்லாம் வந்து சேருமேன்னு வருத்தப்படறார்".அவங்க வீட்டுலேர்ந்து யாராவது……."ஆனந்தன் வந்தார். அப்பாவைக் கண்டபடி திட்டினார். மிரட்டினார். பதிலுக்கு நாங்களும் மிரட்டினதும், காற்றுபோன பாலூனாகத் திரும்பிப்போய்ட்டார் அப்பறம் அவங்க பெரியண்ணி பேசினாங்க. உன் மீது ரொம்ப இரக்கப்பட்டாங்க. அவங்களுக்கெல்லாம் ஆனந்தன் மீதுதான் கோபம். நீ இருக்குமிடம் தெரிந்தால் சொல்லச்சொன்னாங்க"."சொல்றேன். எல்லார்க்கும் சொல்றேன். நான் முதலில் எழுந்து நிற்கணும். தலைநிமிர்ந்து வாழணும். அதன்பிறகு சொல்றேன். அதுவரை நான் போன் செய்த விஷயத்தைக்கூட நீ யாரிடமும் சொல்லவேண்டாம்க்கா"."அதுக்கில்ல மைதிலி, உன்னுடைய இந்த கஷ்டத்துக்கு நாங்க எல்லாரும்கூட ஒரு காரணம்தானே? உனக்கு எந்த உதவி வேணா நாங்க செய்யத்தயாரா இருக்கும்போது நீ யார்கிட்டயுமே சொல்லாம இப்டி எங்கயோ ஊர் தெரியாத ஊரில் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்படணுமா?"."யார் கஷ்டத்துக்கும் யாரும் காரணமாக முடியாதுக்கா. தீதும் நன்றும் பிறர் தர வாரா. பிறக்கும்போதே விதிகள் எழுதப்பட்டு விடுகின்றன. சாம்பலானாலும்கூட உயிர்த்தெழுவது நம் முயற்சியில் இருக்கு. அந்த முயற்சியில்தான் நான் இருக்கேன். நான் அங்க இருந்தால் சிக்கல் தீராது. உங்களுக்கும் பிரச்னை வரும். அதான் உனக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதிட்டு கிளம்பிட்டேன்"."உன்னைத் தொடர்புகொள்ள ஏதாவது நம்பர் இருக்கா மைதிலி?"."இரண்டு நாளுக்கொருமுறை நானே உன்னைக் கூப்பிடறேன் அக்கா"."ஒரு முடிவோடதான் இருக்கயா?"."கண்டுபிடிக்கமுடியாத தூரத்தில் எல்லாம் நானில்லைக்கா. என்னைப் புரிஞ்சுப்பன்னு நினைக்கறேன். அதைவிட, என்னை நீ நம்புவன்னு நினைக்கறேன்."."எப்பவும் என்னோட மாரல் சப்போர்ட் உனக்குண்டு மைதிலி. எப்போ என்ன பிரச்னை என்றாலும் உடனே போன் பண்ணு. உன் வெற்றிக்காக நான் பிரார்த்தனை பண்ணிக்கொண்டே இருப்பேன்"."அப்பறம் ஒரு ஹெல்ப் அக்கா"."என்ன சொல்லு"."வாழ்க்கை என்னை பயமுறுத்த ஆரம்பித்த பிறகு ஒரு முடிவெடுத்து ஆனந்துக்கும் தெரியாம நான் வங்கி வேலைக்கு தேர்வு எழுதியிருக்கேன். கல்யாணமாகி மாயா பிறந்த உடனேயே வங்கி தேர்வு எழுதுவது பற்றி ஆனந்திடம் கேட்டேன். அவர் கூடாதுன்னு மறுத்துட்டார். ஆனா அவர் மீதான என் நம்பிக்கை குறையக் குறைய என்னைப் பற்றிய, குழந்தைகளைப் பற்றிய பயம் கூடியது. இனி அனுமதி கேட்டால் சரியாகாதுன்னு நினைத்தேன். அதனால அவருக்குத் தெரியாமயே விண்ணப்பித்தேன். தேர்வுக்குத் தயார் செய்து கொண்டேன். நான் கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்புதான் குழந்தைகளை ஒருநாள் டேகேர்ல விட்டுட்டு தேர்வெழுதினேன். அதற்கான கடிதப் போக்குவரத்திற்கு உன்னுடைய விலாசம்தான் கொடுத்திருக்கேன். எனக்கு வேலை கிடைக்கும்னு நூறு சதம் நம்பறேன்க்கா. ரிசல்ட் எப்போ வேணாலும் அறிவிக்கப்படலாம். ஏதானும் கடிதம் வந்தா உடனே பிரிச்சுபாரு. நானும் ரெண்டு நாளைக்கு ஒருதரம் உனக்கு போன் பண்ணி கேட்டுக்கறேன் சரியா?"."கண்டிப்பா"."என்னைப்பற்றிய எந்த தகவலும் யாருக்கும் தெரியக்கூடாதுக்கா"."சரி. என் மேல இவ்ளோ நம்பிக்கை வைத்திருக்கும்போது எனக்கு மட்டுமாவது நீ இருக்கும் இடத்தையோ, தொடர்பு நம்பரையோ சொல்லலாம் இல்லையா?".மைதிலி புன்னகைத்தாள். சரி நோட் பண்ணிக்கோ என்றவள் வரலக்ஷ்மி சேவா இல்லத்தின் போன் நம்பரையும் விலாசத்தையும் கூறினாள்..மைதிலி போனை வைத்தாள்..வங்கி வேலை கிடைக்க எவ்வளவு நாளாகுமோ? அதுவரை இல்லத்தில் சும்மா உட்கார்ந்து சாப்பிடுவது சரியாகுமா? ஏதேனும் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். புது ஊர் புது இடம். இங்கே எனக்கு என்ன வேலை கிடைக்கும்? யோசித்தபடி இல்லம் நோக்கி நடந்தாள். மனசு தன் விதியை நினைத்து வருந்தியது..'ஒரு வேலை கிடைத்தபிறகு திருமணம் செய்து கொள்கிறேன்' என்று அப்பாவிடம் எவ்வளவோ சொல்லியும், 'இந்த வரனை திருமணம் செய்து கொண்டால் நீ வேலைக்கே செல்லத் தேவையில்லை' என்று சொல்லி அவளை மேற்கொண்டு பேசவிடாமல் செய்துவிட்டார். மாளிகை மாதிரி வீடு, கூட்டுக் குடும்பம், ஓர்ப்படிகள், உறவுகள் என்று எல்லோருமே அவளிடம் அன்பாகத்தான் இருந்தார்கள், அவனைத்தவிர. சொத்தைப் பிரித்துக் கொடுங்கள் என்று அவன் கேட்டபோதே அவளை பயம் கவ்வியது. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும்வரைதான் தனக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் பாதுகாப்பு என்று நினைத்தாள் அவள். அவனை நம்பி தனியே செல்ல பயமாக இருந்தது. இத்தனை பெரியோருக்கே அடங்காதவன் அவளுக்கு மட்டும் எப்படி அடங்குவான்? ஆனால் அவள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலையிலா அவன் இருந்தான்?.(தொடரும்)