கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.தேடாதே !.தேடினால் காணாமல் போவாய் !.வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன….சுஜாதாவின் 'தேடாதே' என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை..மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம் சுதந்திரத்தைத் தேட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். நாதமுனிகள் தேடியதால் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கிடைத்தது. சைவ திருமறைகளுக்கு நம்பியாண்டார் நம்பி ; சுவடிகளுக்கு உவே.சா, பொருளைத் தேடிக்கொண்டு வெளிநாடு நிம்மதியைத் தேடிக்கொண்டு சாமியார்… இன்று கூகிள் இல்லை என்றால் உலகமே ஸ்தம்பித்துவிடும் நிலைமைக்கு வந்துவிட்டோம். தேடுதல் இல்லை என்றால் சரித்திரமே இல்லை என்று தோன்றுகிறது!.எனக்கு ஒரு கெட்ட வழக்கம் உண்டு, ஏதாவது ஒன்று காணவில்லை என்றால், அதைக் கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டேன். சென்ற சனிக்கிழமை நாள் முழுக்க ஒன்றைத் தேடிக்கொண்டு இருந்தேன் என்றால் நம்புவீர்களா ? அட எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு என்று கையை உயர்த்துபவர்களுக்கு இந்தக் கடைசிப் பக்கம்..சில மாதங்களுக்கு முன் நாளிதழில் தேடுதல் வேட்டை குறித்த செய்தி படித்தேன். பிரமித்துப் போய் விவரமாக அந்தச் செய்தியைத் தேடி முழு விவரத்தையும் படித்தேன். இந்த வாரம் சுருக்கமாக இங்கே தருகிறேன்..ஸ்ரீநிவாசன் வங்கி ஊழியர். 1971ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை வாங்கினார். 1995ல் தன் நண்பரிடம் இடமாற்றம் காரணமாக வண்டியை 'பார்த்துக்கொள்' என்று ஒப்படைத்துவிட்டுச் செல்ல, அது திருடுபோய் கண்டுபிடிக்க முடியவில்லை..'நம்பர் பிளேட்' தெளிவில்லாமல் அந்த மோட்டார் சைக்கிளுடன் தன் தந்தை இருக்கும் ஒரு பழைய கருப்பு வெள்ளைப் படத்தை வைத்துக்கொண்டு 23 வயதில் அவருடைய மகன் அருண் அதைக் கண்டுபிடிக்க முடிவு செய்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்..தன் தந்தை வசித்த ஊர்களுக்குப் புறப்பட்டார். அங்கே பழைய ரிப்பேர் கடைகள், ஆர்.டி.ஓ. ஏஜண்டுகள் என்று பதினைந்து வருடங்கள் ஓடியது. ஆனால் தேடுவதை நிறுத்தவில்லை..2021ல் போக்குவரத்துத் துறை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கல் அவருக்கு கை கொடுத்தது. 'பரிவஹன் சேவா ஆப்' (Parivahan Seva) என்று மத்திய அரசு கொண்டு வந்த செயலி மூலம் சகலத்தையும் தேடலாம் என்று தெரிய வர, பதிவு விவரங்களைக் கொண்டு தேட ஆரம்பிக்க, ஒரு நாள் அவர் தந்தையின் புல்லட் நம்பரில் பதிவு செய்யப்பட்ட இன்ஷ்யூரன்ஸ் ஒன்று உயிருடன் இருக்க, அதை வைத்துக்கொண்டு தேடிச் செல்ல ஒரு விவசாயி அந்த வண்டியை வைத்திருந்தார்..அவரிடம் விசாரித்த போது, இந்த வண்டியை 2015ல் உள்ளூர் வொர்க் ஷாப்பில் வாங்கினேன் என்றார். உரிமை கோராத காணாமல் போன பொருட்களைக் காவல்துறை ஏலம் விட்டார்கள், அதில் வாங்கினேன் என்றார் வெர்க் ஷாப் ஆசாமி..அந்த விவசாயியிடம் தன் கதையை அருண் கூற அதற்கு அந்த விவசாயி என் தாத்தாவிற்கு புல்லட் என்றால் இஷ்டம் அவர் நினைவாக இதை வைத்திருக்கிறேன் என்று செண்டிமெண்ட் பேசி மறுத்துவிட்டார்..சில மாதங்கள் கழித்து அருணுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அந்த விவசாயி தான் பேசினார் "உங்களிடமே வண்டியை விற்க முடிவு செய்துவிட்டேன்" என்றார்..தொகையைக் கொடுத்து, வண்டியை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்து தன் 75வயது தந்தையிடம் 25 வருடம் முன் காணாமல் போன அந்த வண்டியை ஒப்படைக்க, மற்றவை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்..கடைசிப் பக்கத்துக்கு இன்னும் 100 வார்த்தை எழுதலாம். அதனால் இன்னொரு தேடுதல் கதையைச் சொல்லுகிறேன். இதையும் நாளிதழில் சில வாரங்கள் முன் படித்தேன். ஆப்பிரிக்கச் சாம்பல் கிளி ஒன்றை ஜெயநகரில் வசிக்கும் தொழிலதிபர் ஆசையுடன் வளர்த்து வந்தார். ஒரு நாள் திறந்து கதவு வழியாக பறந்து செல்ல, அதைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ50,000 என்று அறிவித்து ஊர் முழுக்க பிட் நோட்டீஸ் வினியோகித்தார்..ஒரு வாரத்துக்குப் பிறகு ஒருவர் கொய்யா மரத்தில் ஒரு விசித்திரப் பறவை, அதைச் சுற்றி நாய்கள் குறைத்துக்கொண்டு இருக்க அதைக் காப்பாற்றி வீட்டுக்கு எடுத்து வந்து அதற்குப் பாலும் பழமும் கொடுத்து கூட்டில் ஆசையுடன் வளர்க்க ஆரம்பித்தார்..சில நாள் கழித்து, உணவகத்தில் டீ குடிக்கும் போது தற்செயலாக தொழிலதிபர் வினியோகித்த நோட்டீஸ் கண்ணில் பட, அவரை தொடர்பு கொள்ள, பறந்து வந்தவரிடம் பறவையைக் கொடுக்க, மகிழ்ச்சியில் அவர் ரூ85,000 பரிசாக கொடுத்துவிட்டு பறவையுடன் சென்றார்..பிகு: நான் தேடிக்கொண்டு இருந்த அந்தப் பொருள் இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் சமயம் கிடைத்துவிட்டது. ( ஒத்த சாக்ஸ் )
கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.தேடாதே !.தேடினால் காணாமல் போவாய் !.வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன….சுஜாதாவின் 'தேடாதே' என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை..மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம் சுதந்திரத்தைத் தேட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். நாதமுனிகள் தேடியதால் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கிடைத்தது. சைவ திருமறைகளுக்கு நம்பியாண்டார் நம்பி ; சுவடிகளுக்கு உவே.சா, பொருளைத் தேடிக்கொண்டு வெளிநாடு நிம்மதியைத் தேடிக்கொண்டு சாமியார்… இன்று கூகிள் இல்லை என்றால் உலகமே ஸ்தம்பித்துவிடும் நிலைமைக்கு வந்துவிட்டோம். தேடுதல் இல்லை என்றால் சரித்திரமே இல்லை என்று தோன்றுகிறது!.எனக்கு ஒரு கெட்ட வழக்கம் உண்டு, ஏதாவது ஒன்று காணவில்லை என்றால், அதைக் கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டேன். சென்ற சனிக்கிழமை நாள் முழுக்க ஒன்றைத் தேடிக்கொண்டு இருந்தேன் என்றால் நம்புவீர்களா ? அட எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு என்று கையை உயர்த்துபவர்களுக்கு இந்தக் கடைசிப் பக்கம்..சில மாதங்களுக்கு முன் நாளிதழில் தேடுதல் வேட்டை குறித்த செய்தி படித்தேன். பிரமித்துப் போய் விவரமாக அந்தச் செய்தியைத் தேடி முழு விவரத்தையும் படித்தேன். இந்த வாரம் சுருக்கமாக இங்கே தருகிறேன்..ஸ்ரீநிவாசன் வங்கி ஊழியர். 1971ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை வாங்கினார். 1995ல் தன் நண்பரிடம் இடமாற்றம் காரணமாக வண்டியை 'பார்த்துக்கொள்' என்று ஒப்படைத்துவிட்டுச் செல்ல, அது திருடுபோய் கண்டுபிடிக்க முடியவில்லை..'நம்பர் பிளேட்' தெளிவில்லாமல் அந்த மோட்டார் சைக்கிளுடன் தன் தந்தை இருக்கும் ஒரு பழைய கருப்பு வெள்ளைப் படத்தை வைத்துக்கொண்டு 23 வயதில் அவருடைய மகன் அருண் அதைக் கண்டுபிடிக்க முடிவு செய்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்..தன் தந்தை வசித்த ஊர்களுக்குப் புறப்பட்டார். அங்கே பழைய ரிப்பேர் கடைகள், ஆர்.டி.ஓ. ஏஜண்டுகள் என்று பதினைந்து வருடங்கள் ஓடியது. ஆனால் தேடுவதை நிறுத்தவில்லை..2021ல் போக்குவரத்துத் துறை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கல் அவருக்கு கை கொடுத்தது. 'பரிவஹன் சேவா ஆப்' (Parivahan Seva) என்று மத்திய அரசு கொண்டு வந்த செயலி மூலம் சகலத்தையும் தேடலாம் என்று தெரிய வர, பதிவு விவரங்களைக் கொண்டு தேட ஆரம்பிக்க, ஒரு நாள் அவர் தந்தையின் புல்லட் நம்பரில் பதிவு செய்யப்பட்ட இன்ஷ்யூரன்ஸ் ஒன்று உயிருடன் இருக்க, அதை வைத்துக்கொண்டு தேடிச் செல்ல ஒரு விவசாயி அந்த வண்டியை வைத்திருந்தார்..அவரிடம் விசாரித்த போது, இந்த வண்டியை 2015ல் உள்ளூர் வொர்க் ஷாப்பில் வாங்கினேன் என்றார். உரிமை கோராத காணாமல் போன பொருட்களைக் காவல்துறை ஏலம் விட்டார்கள், அதில் வாங்கினேன் என்றார் வெர்க் ஷாப் ஆசாமி..அந்த விவசாயியிடம் தன் கதையை அருண் கூற அதற்கு அந்த விவசாயி என் தாத்தாவிற்கு புல்லட் என்றால் இஷ்டம் அவர் நினைவாக இதை வைத்திருக்கிறேன் என்று செண்டிமெண்ட் பேசி மறுத்துவிட்டார்..சில மாதங்கள் கழித்து அருணுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அந்த விவசாயி தான் பேசினார் "உங்களிடமே வண்டியை விற்க முடிவு செய்துவிட்டேன்" என்றார்..தொகையைக் கொடுத்து, வண்டியை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்து தன் 75வயது தந்தையிடம் 25 வருடம் முன் காணாமல் போன அந்த வண்டியை ஒப்படைக்க, மற்றவை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்..கடைசிப் பக்கத்துக்கு இன்னும் 100 வார்த்தை எழுதலாம். அதனால் இன்னொரு தேடுதல் கதையைச் சொல்லுகிறேன். இதையும் நாளிதழில் சில வாரங்கள் முன் படித்தேன். ஆப்பிரிக்கச் சாம்பல் கிளி ஒன்றை ஜெயநகரில் வசிக்கும் தொழிலதிபர் ஆசையுடன் வளர்த்து வந்தார். ஒரு நாள் திறந்து கதவு வழியாக பறந்து செல்ல, அதைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ50,000 என்று அறிவித்து ஊர் முழுக்க பிட் நோட்டீஸ் வினியோகித்தார்..ஒரு வாரத்துக்குப் பிறகு ஒருவர் கொய்யா மரத்தில் ஒரு விசித்திரப் பறவை, அதைச் சுற்றி நாய்கள் குறைத்துக்கொண்டு இருக்க அதைக் காப்பாற்றி வீட்டுக்கு எடுத்து வந்து அதற்குப் பாலும் பழமும் கொடுத்து கூட்டில் ஆசையுடன் வளர்க்க ஆரம்பித்தார்..சில நாள் கழித்து, உணவகத்தில் டீ குடிக்கும் போது தற்செயலாக தொழிலதிபர் வினியோகித்த நோட்டீஸ் கண்ணில் பட, அவரை தொடர்பு கொள்ள, பறந்து வந்தவரிடம் பறவையைக் கொடுக்க, மகிழ்ச்சியில் அவர் ரூ85,000 பரிசாக கொடுத்துவிட்டு பறவையுடன் சென்றார்..பிகு: நான் தேடிக்கொண்டு இருந்த அந்தப் பொருள் இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் சமயம் கிடைத்துவிட்டது. ( ஒத்த சாக்ஸ் )