உலகக் குடிமகன் – 19.– நா.கண்ணன்.இந்தியா 50-60 களில் வளர்ந்து வரும் நாடு. பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தமிழக முதல்வர் காமராசர் ஊரெல்லாம் பள்ளி கட்டி ஏழைக் குழைந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டார். மத்தியதரக் குடும்பத்தில் வந்து படிக்கும் என் போன்ற மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி திட்டமென்று ஒன்று இருந்தது. கல்லூரியில் படிப்பதற்கான தொகையை அரசு வழங்கும், அதை நாம் வேலைக்குச் சேர்ந்த பிறகு கட்டிவிட வேண்டும். வேடிக்கையாக என் சகோதரிகள் சொல்வார்கள். 'இவனுக்குக் கொடுப்பது வீண், ஏனெனில் இவன் வேலைக்கே போக மாட்டான்' என்று. எனக்கு இந்தியாவில் வேலை பார்க்கும் திட்டமில்லை. இந்திய போராட்ட சூழலிலிருந்து தப்பித்து வெளிநாடு போய்விட வேண்டும் என்பதே ஆசை. எனக்கென்று இல்லை, அங்கு ஆய்வு செய்த 80% மாணவர்களின் ஆசையும் அதுவே. சகா, சிவா சொல்வான், நாம வெளிநாடு போறோம் 5 லட்சம் சம்பாதிக்கிறோம். இந்தியா வந்து வீடு கட்டி, கல்யாணம் செய்து செட்டிலாகி விடுகிறோமென்று. அப்போது 5 லட்சம் மிகப்பெரிய தொகை. "ஆயிரம் ரூபாய்" என்றொரு சினிமாப்படமே வந்தது. அவ்வளவு பெரிய தொகை. நான் படித்த காலத்தில்தான் இந்திரா காந்தி அம்மையார் அவசரகால அரசாங்கத்தை உருவாக்கினார். அப்போது எல்லாம் தரத்தில் இயங்கின! நானும் நண்பன் சோமுவும் மதுரை காலேஜ் ஹவுஸ் உணவகம் சென்று ஐந்து ரூபாய்க்கு இரண்டு இட்லி, ஒரு தோசை, ஒரு காப்பி உண்போம். காப்பி என்றால், கும்பகோணம் டிகிரி காப்பி. 150 மிலி சரியாக இருக்கும். இதற்காகவே நாங்கள் அடிக்கடி போவோம். ஒட்டு மொத்த இந்தியாவே அப்போது ஒழுங்கில் இருந்தது..இந்தக் கெடுபிடிகளில் குடும்பக் கட்டுப்பாடு என்பதும் ஒன்று. நேருவின் இந்தியக் கனவில் கவனிக்கத் தவறிய ஓர் திட்டம், குடும்பக் கட்டுப்பாடு. அவர் சோவியத் பொருளாதார மாடலை வைத்துக் கொண்டு இந்தியாவை தொழில்துறை முன்னேற்றத்தில் சிறந்த நாடாக குறைந்த காலக் கட்டத்தில் உருவாக்கிவிட வேண்டும், பின் பொருளாதார வளம் இந்தியாவின் ஜனத்தொகையை மேலைநாடுகளில் கட்டுப்படுத்தியது போல் கட்டுப்படுத்தும் என நம்பினார். ஆனால் பாரதி பாடிய 'முப்பது கோடிக்கும் பொதுவுடமை' என்ற கணக்கு எகிறிக் குதித்து வளரத் தொடங்கியது. இந்த அபாயம் குறித்து நேருவிடம் தான் எச்சரித்ததாக கலிங்கா விருது வாங்க வந்திருந்த உயிரியல் விற்பன்னர் ஜுலியன் ஹக்ஸ்லி (Sir Julian Huxley) சொல்லியிருக்கிறார்..இதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இந்திரா காந்தியின் புதல்வர் சஞ்சய் காந்தி விரும்பினார். எனவே, நாடு தழுவிய நிலையில் குடும்பக் கட்டுப்பாடு முடுக்கிவிடப்பட்டது. கிராமங்களில், பள்ளி ஆசிரியைகளுக்கு குடும்பக்கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடித்துத் தருவதும் வேலையில் ஒன்றாக இருந்தது. எனது சகோதரி கமலா அப்போது கீழடி மணலூரில் ஆசிரியையாக இருந்தார். அவருக்கும் இந்த நெருக்கடி இருந்ததைச் சொல்லியிருக்கிறார். ஒருவகையில் நேருவும் சரி, சர் ஜூலியன் ஹக்ஸ்லியும் சரி. இந்திய ஜனத்தொகை கூடியது உண்மை, அதே நேரத்தில் குடும்பங்களில் பிள்ளை பெறுதல் குறைந்ததும் உண்மை. எங்கள் அப்பா, அம்மாவிற்கு எட்டுப் பிள்ளைகள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த காலமிது. அதே நேரத்தில் பிள்ளை இறப்பு விகிதமும் அப்போது கூடுதல். என் சித்திக்கு எட்டுப் பெற்று இரண்டுதான் தங்கியது. என் அம்மாவின் எட்டில் நாங்கள் அறுவர் தங்கினோம். அதன்பின் என் ஐந்து சகோதரிகளுக்கும் மூன்றிற்கு மேல் பிள்ளை பிறப்பு இல்லை. குடும்பக்கட்டுப்பாடு இயற்கையாக வந்தது. சமகாலத்தில் ஒரு பிள்ளையை வளர்த்து படிக்க வைக்கவே பெற்றோர்களால் முடியவில்லை..ஆக, இந்தியா அறுபதுகளில் கல்விக்கு செலவழித்த தொகையின் ஒரு பகுதி மூளைக் கழிவு (brain drain) என வெளிநாட்டிற்குப் போனது. அமெரிக்காவின் அன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் வெளிநாடுகளிலிருந்து படித்து, திறன் பெற்ற வைத்தியர்கள், பொறியாளர்கள், முனைவர்கள் அங்கு போய் வேலைக்குச் சேர்ந்ததே! ஒவ்வொரு நாடும் தம் குடிமக்களுக்குச் செலவிடும் கல்வி முதலீட்டை அறுவடை செய்வது அமெரிக்காவாக அன்று இருந்தது. உயிரியல் பள்ளிக்கு இது தெரிந்தே இருந்தது. அதே நேரத்தில் பேராசிரியர் ஞானம் போன்றோர் அங்கு படித்து அங்கேயே உத்தியோகம் என மாணவர்கள் இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். அங்கு படித்து அவர்கள் வெளியே பரவ வேண்டும் என எங்களை உற்சாகப் படுத்தினர். அதை நாங்கள் வெளிநாட்டிற்கு பரவுதல் என்றே கணக்குப் போட்டோம்..அன்று உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் அமெரிக்கா சென்றனர். சென்று சம்பாதித்து தத்தம் நாட்டில் முதலீடு செய்தனர். இதில் முதன்மையாக ஜப்பான் நின்றது. இந்த நாடு அன்றிலிருந்து வித்தியாசமாக யோசிக்கக் கூடிய நாடு. முதல் இரண்டு உலகப் போரின் போது அந்நியச் செலாவணி இல்லாத இருந்த நேரத்தில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஜப்பானியப் பெண்கள் விலை மாந்தர் தொழில் செய்து தம் நாட்டை வளப்படுத்தியதற்கு சரித்திரச் சான்றுகளுண்டு. நாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூர் சென்ற ஓர் தமிழன் அங்கு என்னவெல்லாம் அனுபவித்தான் எனச் சொல்லும் போது ஜப்பானிய மாதருடன் கூடி மகிழ்ந்த சேதி லாவணியாகப் பதிவாகியுள்ளது. அப்படி ஒரு தீர்மானத்துடன் வளர்ந்தது ஜப்பான் நாடு. அதை நான் வாழ்ந்து உணர்வேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. நான் அமெரிக்கா செல்ல வேண்டும் எனும் கனவில் இருந்தேன். ஜப்பான் மாடலை வைத்துக் கொண்டு கொரியா தன் குடிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி மூலதனத்தில் வளரத் தொடங்கியது..அறுபதுகளில் ஓர் இந்திய ரூபாயும், ஒரு ஜெர்மன் டாய்ச்சு மார்க்கும் ஒரே நிலையில் இருந்திருக்கிறது. எனது மனைவின் அக்கா கணவர் இந்தியக் கம்பெனிக்காக ஜெர்மனியில் வேலை பார்க்கும் போது இந்திய ரூபாயில்தான் அவருக்குச் சம்பளம். ஆனால், இந்நிலை தொடரவில்லை. இந்திய நாணய மதிப்பு மடமடவென சரியத் தொடங்கியது. தென் கொரியா அறுபதுகளில் இந்தியாவைவிட பொருளாதரத்தில் பின் தங்கிய நிலையிலேயே இருந்திருக்கிறது. ஆயினும் மக்களின் திட நம்பிக்கை, கடின உழைப்பு, அரசின் திட்டமிடல் எனப் பல காரணங்களால் அந்நாடு60 களுக்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. இதையும் நான் வாழ்ந்து கண்ணுறுவேன் என்று அன்று நினைத்தேன் இல்லை. சீனாவின் வளர்ச்சிக்கும் இந்த அந்நிய முதலீடு முக்கிய காரணம். அமெரிக்கா சென்ற சீனர்கள் தங்கள் நாட்டில் முதலீடு செய்ய ஆசைப்பட்டனர். ஆனால் அதைக் கம்யூனிச சீனா அனுமதிக்கவில்லை. இந்தியாவின் நிலைமையும் சிவப்புநாடா கலாசாரத்தில் இருந்ததால் ஜப்பான், கொரியா போல் இந்தியாவால் அயலக இந்தியர் முதலீட்டால் வளம் பெற முடியவில்லை.90 களுக்குப் பிறகு நிலமை மாறுகிறது. அயலகத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த ஒரே வாய்ப்பு, 90 களில் நிகழ்கிறது. இந்தியாவின் தங்கக் கிட்டங்கி அதள பாதாளத்திற்குப் போக இந்தியா இங்கிலாந்திடமிருந்து தங்கம் வாங்குகிறது. அதற்கான அந்நியச் செலாவணி பெற அரசு அயலக இந்தியர்களுக்கென ஒரு பத்திரத்தை இந்திய வங்கிகள் மூலம் வெளியிடுகிறது. இந்திய அரசிடமிருந்து இப்படியொரு விண்ணப்பம் வந்த48 மணி நேரங்களில் அத்தனை பத்திரமும் விற்று முடிந்தாகிவிடுகிறது. அது அயலகத்தில் சுக போகத்தில் வாழ்ந்தாலும் இந்தியர்களின் மனது தாய் நாடோடுதான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நானெல்லாம் இத்தகைய வாய்ப்பிற்குக் காத்துக் கொண்டிருந்த காலம். ஜெர்மனியிலிருந்து இந்த தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதவர்களுள் நானும் ஒருவன்..மன்மோகன் சிங் நிதி அமைச்சர் ஆன பின் இந்நிலைமை வெகுவாக மாறிவிடுகிறது. இந்திய ஜப்பான், கொரியா போல் பொருளாதார வளத்திற்கு தன் குடிமக்களை சரியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. மன்மோகன் சிங் ஒரு படி மேலே போய் அயலக இந்தியக் குடியுரிமை எனும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அயலக இந்தியர்களின் முதலீட்டிற்கு எவ்வித தடையும் இல்லாமல் செய்து விடுகிறார். .ஆனால், இப்படியெல்லாம் சரித்திரம் மாறும் எனும் பிரக்ஞை இல்லாமல் வெளிநாடு செல்ல வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும், சௌகர்யமாக அங்கு வாழ வேண்டும் என்பதே எங்களில் பலரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், அதற்கான சூழல், வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக அமையவில்லை..(தொடரும்)
உலகக் குடிமகன் – 19.– நா.கண்ணன்.இந்தியா 50-60 களில் வளர்ந்து வரும் நாடு. பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தமிழக முதல்வர் காமராசர் ஊரெல்லாம் பள்ளி கட்டி ஏழைக் குழைந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டார். மத்தியதரக் குடும்பத்தில் வந்து படிக்கும் என் போன்ற மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி திட்டமென்று ஒன்று இருந்தது. கல்லூரியில் படிப்பதற்கான தொகையை அரசு வழங்கும், அதை நாம் வேலைக்குச் சேர்ந்த பிறகு கட்டிவிட வேண்டும். வேடிக்கையாக என் சகோதரிகள் சொல்வார்கள். 'இவனுக்குக் கொடுப்பது வீண், ஏனெனில் இவன் வேலைக்கே போக மாட்டான்' என்று. எனக்கு இந்தியாவில் வேலை பார்க்கும் திட்டமில்லை. இந்திய போராட்ட சூழலிலிருந்து தப்பித்து வெளிநாடு போய்விட வேண்டும் என்பதே ஆசை. எனக்கென்று இல்லை, அங்கு ஆய்வு செய்த 80% மாணவர்களின் ஆசையும் அதுவே. சகா, சிவா சொல்வான், நாம வெளிநாடு போறோம் 5 லட்சம் சம்பாதிக்கிறோம். இந்தியா வந்து வீடு கட்டி, கல்யாணம் செய்து செட்டிலாகி விடுகிறோமென்று. அப்போது 5 லட்சம் மிகப்பெரிய தொகை. "ஆயிரம் ரூபாய்" என்றொரு சினிமாப்படமே வந்தது. அவ்வளவு பெரிய தொகை. நான் படித்த காலத்தில்தான் இந்திரா காந்தி அம்மையார் அவசரகால அரசாங்கத்தை உருவாக்கினார். அப்போது எல்லாம் தரத்தில் இயங்கின! நானும் நண்பன் சோமுவும் மதுரை காலேஜ் ஹவுஸ் உணவகம் சென்று ஐந்து ரூபாய்க்கு இரண்டு இட்லி, ஒரு தோசை, ஒரு காப்பி உண்போம். காப்பி என்றால், கும்பகோணம் டிகிரி காப்பி. 150 மிலி சரியாக இருக்கும். இதற்காகவே நாங்கள் அடிக்கடி போவோம். ஒட்டு மொத்த இந்தியாவே அப்போது ஒழுங்கில் இருந்தது..இந்தக் கெடுபிடிகளில் குடும்பக் கட்டுப்பாடு என்பதும் ஒன்று. நேருவின் இந்தியக் கனவில் கவனிக்கத் தவறிய ஓர் திட்டம், குடும்பக் கட்டுப்பாடு. அவர் சோவியத் பொருளாதார மாடலை வைத்துக் கொண்டு இந்தியாவை தொழில்துறை முன்னேற்றத்தில் சிறந்த நாடாக குறைந்த காலக் கட்டத்தில் உருவாக்கிவிட வேண்டும், பின் பொருளாதார வளம் இந்தியாவின் ஜனத்தொகையை மேலைநாடுகளில் கட்டுப்படுத்தியது போல் கட்டுப்படுத்தும் என நம்பினார். ஆனால் பாரதி பாடிய 'முப்பது கோடிக்கும் பொதுவுடமை' என்ற கணக்கு எகிறிக் குதித்து வளரத் தொடங்கியது. இந்த அபாயம் குறித்து நேருவிடம் தான் எச்சரித்ததாக கலிங்கா விருது வாங்க வந்திருந்த உயிரியல் விற்பன்னர் ஜுலியன் ஹக்ஸ்லி (Sir Julian Huxley) சொல்லியிருக்கிறார்..இதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இந்திரா காந்தியின் புதல்வர் சஞ்சய் காந்தி விரும்பினார். எனவே, நாடு தழுவிய நிலையில் குடும்பக் கட்டுப்பாடு முடுக்கிவிடப்பட்டது. கிராமங்களில், பள்ளி ஆசிரியைகளுக்கு குடும்பக்கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடித்துத் தருவதும் வேலையில் ஒன்றாக இருந்தது. எனது சகோதரி கமலா அப்போது கீழடி மணலூரில் ஆசிரியையாக இருந்தார். அவருக்கும் இந்த நெருக்கடி இருந்ததைச் சொல்லியிருக்கிறார். ஒருவகையில் நேருவும் சரி, சர் ஜூலியன் ஹக்ஸ்லியும் சரி. இந்திய ஜனத்தொகை கூடியது உண்மை, அதே நேரத்தில் குடும்பங்களில் பிள்ளை பெறுதல் குறைந்ததும் உண்மை. எங்கள் அப்பா, அம்மாவிற்கு எட்டுப் பிள்ளைகள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த காலமிது. அதே நேரத்தில் பிள்ளை இறப்பு விகிதமும் அப்போது கூடுதல். என் சித்திக்கு எட்டுப் பெற்று இரண்டுதான் தங்கியது. என் அம்மாவின் எட்டில் நாங்கள் அறுவர் தங்கினோம். அதன்பின் என் ஐந்து சகோதரிகளுக்கும் மூன்றிற்கு மேல் பிள்ளை பிறப்பு இல்லை. குடும்பக்கட்டுப்பாடு இயற்கையாக வந்தது. சமகாலத்தில் ஒரு பிள்ளையை வளர்த்து படிக்க வைக்கவே பெற்றோர்களால் முடியவில்லை..ஆக, இந்தியா அறுபதுகளில் கல்விக்கு செலவழித்த தொகையின் ஒரு பகுதி மூளைக் கழிவு (brain drain) என வெளிநாட்டிற்குப் போனது. அமெரிக்காவின் அன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் வெளிநாடுகளிலிருந்து படித்து, திறன் பெற்ற வைத்தியர்கள், பொறியாளர்கள், முனைவர்கள் அங்கு போய் வேலைக்குச் சேர்ந்ததே! ஒவ்வொரு நாடும் தம் குடிமக்களுக்குச் செலவிடும் கல்வி முதலீட்டை அறுவடை செய்வது அமெரிக்காவாக அன்று இருந்தது. உயிரியல் பள்ளிக்கு இது தெரிந்தே இருந்தது. அதே நேரத்தில் பேராசிரியர் ஞானம் போன்றோர் அங்கு படித்து அங்கேயே உத்தியோகம் என மாணவர்கள் இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். அங்கு படித்து அவர்கள் வெளியே பரவ வேண்டும் என எங்களை உற்சாகப் படுத்தினர். அதை நாங்கள் வெளிநாட்டிற்கு பரவுதல் என்றே கணக்குப் போட்டோம்..அன்று உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் அமெரிக்கா சென்றனர். சென்று சம்பாதித்து தத்தம் நாட்டில் முதலீடு செய்தனர். இதில் முதன்மையாக ஜப்பான் நின்றது. இந்த நாடு அன்றிலிருந்து வித்தியாசமாக யோசிக்கக் கூடிய நாடு. முதல் இரண்டு உலகப் போரின் போது அந்நியச் செலாவணி இல்லாத இருந்த நேரத்தில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஜப்பானியப் பெண்கள் விலை மாந்தர் தொழில் செய்து தம் நாட்டை வளப்படுத்தியதற்கு சரித்திரச் சான்றுகளுண்டு. நாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூர் சென்ற ஓர் தமிழன் அங்கு என்னவெல்லாம் அனுபவித்தான் எனச் சொல்லும் போது ஜப்பானிய மாதருடன் கூடி மகிழ்ந்த சேதி லாவணியாகப் பதிவாகியுள்ளது. அப்படி ஒரு தீர்மானத்துடன் வளர்ந்தது ஜப்பான் நாடு. அதை நான் வாழ்ந்து உணர்வேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. நான் அமெரிக்கா செல்ல வேண்டும் எனும் கனவில் இருந்தேன். ஜப்பான் மாடலை வைத்துக் கொண்டு கொரியா தன் குடிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி மூலதனத்தில் வளரத் தொடங்கியது..அறுபதுகளில் ஓர் இந்திய ரூபாயும், ஒரு ஜெர்மன் டாய்ச்சு மார்க்கும் ஒரே நிலையில் இருந்திருக்கிறது. எனது மனைவின் அக்கா கணவர் இந்தியக் கம்பெனிக்காக ஜெர்மனியில் வேலை பார்க்கும் போது இந்திய ரூபாயில்தான் அவருக்குச் சம்பளம். ஆனால், இந்நிலை தொடரவில்லை. இந்திய நாணய மதிப்பு மடமடவென சரியத் தொடங்கியது. தென் கொரியா அறுபதுகளில் இந்தியாவைவிட பொருளாதரத்தில் பின் தங்கிய நிலையிலேயே இருந்திருக்கிறது. ஆயினும் மக்களின் திட நம்பிக்கை, கடின உழைப்பு, அரசின் திட்டமிடல் எனப் பல காரணங்களால் அந்நாடு60 களுக்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. இதையும் நான் வாழ்ந்து கண்ணுறுவேன் என்று அன்று நினைத்தேன் இல்லை. சீனாவின் வளர்ச்சிக்கும் இந்த அந்நிய முதலீடு முக்கிய காரணம். அமெரிக்கா சென்ற சீனர்கள் தங்கள் நாட்டில் முதலீடு செய்ய ஆசைப்பட்டனர். ஆனால் அதைக் கம்யூனிச சீனா அனுமதிக்கவில்லை. இந்தியாவின் நிலைமையும் சிவப்புநாடா கலாசாரத்தில் இருந்ததால் ஜப்பான், கொரியா போல் இந்தியாவால் அயலக இந்தியர் முதலீட்டால் வளம் பெற முடியவில்லை.90 களுக்குப் பிறகு நிலமை மாறுகிறது. அயலகத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த ஒரே வாய்ப்பு, 90 களில் நிகழ்கிறது. இந்தியாவின் தங்கக் கிட்டங்கி அதள பாதாளத்திற்குப் போக இந்தியா இங்கிலாந்திடமிருந்து தங்கம் வாங்குகிறது. அதற்கான அந்நியச் செலாவணி பெற அரசு அயலக இந்தியர்களுக்கென ஒரு பத்திரத்தை இந்திய வங்கிகள் மூலம் வெளியிடுகிறது. இந்திய அரசிடமிருந்து இப்படியொரு விண்ணப்பம் வந்த48 மணி நேரங்களில் அத்தனை பத்திரமும் விற்று முடிந்தாகிவிடுகிறது. அது அயலகத்தில் சுக போகத்தில் வாழ்ந்தாலும் இந்தியர்களின் மனது தாய் நாடோடுதான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நானெல்லாம் இத்தகைய வாய்ப்பிற்குக் காத்துக் கொண்டிருந்த காலம். ஜெர்மனியிலிருந்து இந்த தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதவர்களுள் நானும் ஒருவன்..மன்மோகன் சிங் நிதி அமைச்சர் ஆன பின் இந்நிலைமை வெகுவாக மாறிவிடுகிறது. இந்திய ஜப்பான், கொரியா போல் பொருளாதார வளத்திற்கு தன் குடிமக்களை சரியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. மன்மோகன் சிங் ஒரு படி மேலே போய் அயலக இந்தியக் குடியுரிமை எனும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அயலக இந்தியர்களின் முதலீட்டிற்கு எவ்வித தடையும் இல்லாமல் செய்து விடுகிறார். .ஆனால், இப்படியெல்லாம் சரித்திரம் மாறும் எனும் பிரக்ஞை இல்லாமல் வெளிநாடு செல்ல வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும், சௌகர்யமாக அங்கு வாழ வேண்டும் என்பதே எங்களில் பலரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், அதற்கான சூழல், வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக அமையவில்லை..(தொடரும்)