சுந்தர்…கொல்லைப் பக்கம் செடிகளுக்கு பாத்ரூம் தண்ணி சரியா போக மாட்டேங்குது…அதக் கொஞ்சம் வாய்க்கால் வெட்டி பாத்தி பண்ணி விடேன்….சரி மன்னி… சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பின் பக்கம் போனான். ஒவ்வொரு முறை வரும்போதும் இந்த வேலையைச் செய்வதுதான். கருவேப்பிலை, மாமரம், மாதுளை, கொய்யா…பப்பாளி, நார்த்தங்காய் என்று ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதுபோல் வாய்க்காலைச் சீராக வெட்டி, வழியமைத்து, குளிக்கும், பாத்திரம் தேய்க்கும் துணி துவைக்கும் தண்ணீர் அனைத்தும் வீணாகாமல் அவைகளுக்குப் போய்ச் சேருவதுபோல் தோட்டப் பகுதியைச் சரிசெய்து விடுவான். மன்னி சொல்லாவிட்டாலும் இவனே செய்து விடுவான். வேலைகளைச் சொல்லிச் செய்வதைவிட, எடுத்துச் செய்வது பெருமை சேர்க்கும். எதிராளிக்கும் திருப்தி தரும். கருவேப்பிலைச் செடி மரமாய் உயராமல் அங்கங்கே கிளைகளை ஒடித்து விட்டு கை நீட்டிப் பறிப்பதுபோல் குட்டையாய் பரந்து வளரும் வகையில் சீர் செய்வான்..பிரதி மாதமும் அலுவலக வேலை என்று ஏதேனும் ஒரு பணி நிமித்தம் இவனைச் சென்னைக்கு அனுப்பி விடுவார்கள். 'நானே போகிறேன்' என்று வலிய அந்த வேலையைத் தனதாக்கிக் கொண்டான். மாத திட்டப் பணிகள் சாதனை அறிக்கையைக் குறிப்பிட்ட தேதியில் தலைமை அலுவலகத்தில் கொண்டு சேர்த்தாக வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தக்க விளக்கம் அளித்துத் திருப்திப்படுத்த வேண்டும். அத்தோடு பணியாளர்கள் சம்பளத்திற்கான சான்றினைப் பெற்று, தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே கொண்டு சேர்த்தாகவும் வேண்டும். அதனால் சென்னைக்கு வந்தானென்றால் அதிக பட்சம் இரண்டு நாட்கள்தான் இருக்க முடியும். தவறினால் மூன்று நாட்கள். அவ்வளவே…! அந்த மூன்று நாட்கள் சம்பள தேதியை நெருங்காமல் இருக்க வேண்டும். அது முக்கியம்..வெறும் இரண்டு நாளில் நந்தனத்தில் இருக்கும் தலைமை அலுவலகம் போவதற்கும், பிறகு தலைமைச் செயலகம் செல்வதற்குமே நேரம் சரியாக இருக்கும். அறிக்கை கொடுப்பதென்னவோ சுலபமாக முடிந்து விடும். ஆனால் சம்பளச் சான்று பெறுவதுதான் உறுதியாகச் செய்ய வேண்டிய பணி. அதைப் பெறாமல் ஊர் திரும்ப முடியாது. திரும்பினாலும் வெறுங் கையோடு அலுவலகம் சென்று நிற்க முடியாது. திட்டுதான் விழும்..என்னங்க கையை வீசிட்டு வர்றீங்க….இதுக்குத்தான் உங்களை சென்னைக்கு அனுப்பறதா? என்று சீறி விடுவார்கள். இன்னிக்கு, நாளைக்கு தபால்ல கண்டிப்பா வந்திரும்…என்கிற பதில் அவர்களைத் திருப்திப்படுத்தாது. ஒரு நாள் தாமதமானாலும் கையோடு சான்றினை வாங்கிக் கொண்டு போய் பிரசன்னமாவதுதான் உகந்தது. ஒண்ணாம் தேதி சம்பளம் கைக்கு வரவில்லையென்றால் பணியாளர்கள் கொதித்து விடுவார்கள்..மாவட்டத்தின் மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட அலுவலகங்களுக்கான சம்பளச் சான்று அது. மாதக் கடைசி தேதி இல்லையானாலும், ஒன்று இரண்டு தேதிகளுக்கு மேற்பட்டு சம்பளம் தாமதமானால், பணியாளர்கள் ஆடிப் போவார்கள். ஆகையால் சென்னை செல்வதன் சாதிக்க வேண்டிய பணி சம்பளச் சான்று பெறுவதுதான். அரசின் தற்காலிகத் திட்டங்களுக்கெல்லாம் இதுதான் கதி. முதல் ஓராண்டுக்கு அரசாணை வந்துவிடும். பிறகு மாதா மாதம் காவடிதான் எடுக்க வேண்டும். காரணம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அரசாணை வர சற்று தாமதம் ஆகும்..வேறே யாரையும் அனுப்ப மாட்டாங்களா? உங்களையேதான் போகச் சொல்றாங்க…?-சந்தேகமாகவே கேட்பாள் நீலா. திட்டப் பிரிவு பார்க்கும் உதவியாளர்தான் போக வேண்டும்…என்பதே இவன் பதிலாக இருக்கும். வேறு ஒருவரை போகச் செய்து விட முடியும்தான். அதற்கும் தயாராகத்தான் சிலர் இருந்தனர். சென்னை செல்வதில் பலருக்கு சந்தோஷமும் அவசியமும் இருந்தது..யார் சென்னை செல்கிறார்களோ அவர்களிடம் பல கோரிக்கைகள் சேர்ந்து விடும். எனக்கு டூ வீலர் லோன் சாங்ஷன் ஆயிடுச்சான்னு பார்த்திட்டு வாங்க….என் வீட்டு மனை பர்சேஸ் அனுமதி என்ன ஸ்டேஜ்னு பார்த்து முடிச்சிட்டு வாங்க…என்னோட அகௌன்ட் ஸ்லிப் இன்னும் வரல்லே…ஏ.ஜிஸ்.ஆபீஸ் போயிட்டு வந்திடுங்க…என்று ஆளுக்கொன்றாகச் சொல்லிவிடுவார்கள். தி.நகர் ரயில்வே ஸ்டேஷன் பின் பக்கமா இறங்கி இந்த மருந்துக்கடைக்குப் போய் மூட்டு வலி எண்ணெயை வாங்கிட்டு வந்திடுங்க…..இம்மாதிரிப் பலவும் உண்டு. தட்டவும் முடியாது. இருக்கும் இரண்டு நாளில் எத்தனை இடங்களுக்குத்தான் செல்ல முடியும்? செக்ரடேரியட் சென்றாலே ஒரு நாள் போச்சு…! இருந்தாலும் பணியாள நண்பர்களின் அன்பான கோரிக்கைகளை மறுக்க இயலாது. எப்படியாவது அலைந்து திரிந்து எல்லா வேலைகளையும் முடித்துப் போய் நின்றால்தான் பெருமை. அவர்களுக்கும் சந்தோஷம். எப்போதும் இவனிடம் அவர்களின் கோரிக்கைகள் பென்டிங் இருந்துக் கொண்டேயிருக்கும். அடுத்த மாசம் போகைல….என்று சொல்லிக் குறித்துக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். நண்பர்களுக்கு செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி..இதைச் சாக்கிட்டுத்தான் பிரதி மாதமும் அண்ணா வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான். அப்பா இவன் வருவதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறார். பார்பர் வேண்டாம்….சுந்தர் வரட்டும் என்று. அவன் வந்து ஷேவிங் செய்து, தாடி எடுத்து விட்டால்தான் திருப்தி. அக்குளிலும் எடுத்திடு என்று தயக்கமின்றிக் கூறுவார் அப்பா. அவருக்கு இதையெல்லாம் சொல்கிறோமே என்பதான களங்கமெல்லாம் கிடையாது? அவனும் சங்கடப்படுவதில்லை. அது சேவை. பார்பர் ஷாப்பில் கூட அத்தனை சுத்தமாக எடுத்துவிட மாட்டார்கள். அதனிலும் சுத்தமாக இவன் வழித்து விட்டுவிடுவான். ஒருமுறை கூட சிறு துளி ரத்தக் காயம் ஏற்பட்டது கிடையாது. தளர்ந்த தோலில் எப்படி நேக்காக, நோகாமல் எடுக்க வேண்டும் என்று நன்றாய் கைலாவகம் பழகியிருந்தது. "முடி வெட்டுவதையும் என்னால் செய்ய முடியும்" என்று அப்பாவுக்கு அதையும் செய்து பழகி விட்டான். ஜோரா இருக்கே….என்பார் பின்புறம் கண்ணாடி காண்பிப்பதைப் பார்த்துக் கொண்டு. இவனுக்கு அவ்வளவு திருப்திப் படாதுதான். இருந்தாலும் "மோசமில்லை" என்று நினைத்துக் கொள்வான். கொல்லைப் பக்கம் நாற்காலி போட்டு இந்த வைபவம் நடக்கும். பக்கத்து அபார்ட்மென்டிலிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். பார்த்துட்டுப் போகட்டும். நமக்கு வேலை ஆகணும்…என்று காரியத்தில் கருத்தாய் இருப்பான்..அப்பா படுக்கையில் விழுந்து வருடம் நான்குக்கு மேல் ஆகிவிட்டது. அண்ணாதான் எல்லாம் பார்த்துக் கொள்கிறான். பெரியவனிடம் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாய் உள்ளது. அப்படியே இருந்து கழித்தாகி விட்டது. சில குடும்பங்களில் இருப்பதைப் போல் இங்க ஆறு மாசம், அங்க ஆறுமாசம் என்பதாய் போவதும், வருவதுமான பழக்கம் இங்கு கைகூடவில்லை. அந்தப் பேச்சே எழவில்லை. ஆரம்பத்திலேயே அதைச் செய்திருந்தால் பழகியிருக்குமோ என்னவோ? மனக்குறை என்று எதுவும் இல்லாமல் போயிருக்கலாம். நானும் நடு அண்ணாவும் வருவதும் போவதுமாய் இருந்தோம். வெளியூரான எங்களுக்கு அதுதான் முடிந்தது. நான்தான் ரெகுலர் கஸ்டமர். வந்து செல்பவனை இப்படியும் சொல்லலாமே…! பிரதி மாதமும் வந்து விடுகிறேனே. நான் வந்து செய்ய வேண்டும் என்று வேலைகள் காத்திருக்கிறதே…!.பிறப்புறுப்பில் ட்யூப் செருகி கீழே பாட்டிலோடு இணைத்திருக்கிறது அப்பாவுக்கு. யூரின் இறங்கும் அதன் வழியே. பதினைந்து நாளைக்கொரு முறை ட்யூப் மாற்றும்போதுதான் கொடுமை. ஒவ்வொரு முறையும் டாக்டர் வருவார். மாற்றுவார். வலி தாங்காமல் அந்தத் தெருவே கேட்பதுபோல் அலறுவார் அப்பா. "ஈஸ்வரா…என்னை ஏன் இப்படிக் கஷ்டப்படுத்தறே!…கொஞ்சூண்டு விஷத்தைக் கொடுத்திடுங்கோளேன்… நான் நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுறேன்" என்று கதறுவார் அப்பா. பின்னால் அண்ணாவே அந்த ட்யூப்பைச் செருகப் பழகிக் கொண்டான். திடீரென்று யூரின் அடைத்துக் கொள்ளும். அப்பா கத்து கத்து என்று கத்திக் கதறுவார். மன்னி அண்ணா ஆபீசுக்கு ஃபோன் பண்ணுவாள். அலறியடித்துக் கொண்டு ஓடி வருவான். சில சமயங்களில் யூரினிலுள்ள உப்பு சேர்ந்து சேர்ந்து ட்யூப் வழி குறுகி அடைத்துக் கொள்ளும். அடுத்த முறை மாற்றுவோம் என்று எப்பொழுதாவது விட்டு விடும் சந்தர்ப்பங்களில் இந்தக் கொடுமை நடந்து போகும். எப்பொழுது அடைக்கும் என்று திட்டமாய்ச் சொல்லவும் முடியாது. பதினைந்து நாளுக்கொரு முறை என்பது ஒரு உத்தேசம்தான்.அண்ணா ரொம்ப லோல் பட்டிருக்கிறான் இதில்..இந்த ட்யூப் மாற்றும் வேலையைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் அண்ணா பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் செய்து வருகிறான். அவன் பொறுமையும் பொறுப்பும் அளவிடற்கரியது. கையும் மெய்யும் கலந்து வணங்குதற்குரியது. அவன் ஒருவன் மட்டும் கிடந்து கஷ்டப்பட வேண்டுமென்று தலையெழுத்தா என்ன? உன்னிடம்தான் இருப்போம் என்று அப்பாவும் அம்மாவும் மூத்த அண்ணாவிடம் இருந்து கழித்ததே அவன் பெருமை! அதுதான் எங்களுக்குக் கௌரவம் என்றார்கள். எங்களிடம் இருக்கப் பிரியமில்லாததோ அல்லது வேறு ஏதோ அதிருப்தியோதான் அவர்களை நகர விடாமல் செய்திருந்தது. ஒரேயொரு முறை என்று என் வீட்டிற்கும் நடு அண்ணா வீட்டிற்கும் அப்பாவும் அம்மாவும் வந்து, சென்றிருக்கிறார்கள். பெற்றோர்களின் கால் பட்ட புண்ணியம் உண்டுதான். ஏனோ அவர்களுக்கு அங்கு பொருந்தவில்லை. முகமும் பேச்சும் சுருங்கியே கிடக்கும். மகிழ்ச்சியே தென்படாது. பழகிய இடம் பெரியண்ணா வீடுதான். சென்னைதான். மனதிற்குகந்தது….அண்ணா மன்னியின் ரூபம்..அண்ணா அந்த வைத்தியச் செலவையெல்லாம் பொருட்படுத்தியதேயில்லை. பிரதி மாதமும் நானும் நடு அண்ணாவும் பணம் அனுப்புகிறோம்தான். ஆனாலும் அதற்கு மேலும் மருந்து மாயத்திற்கென்று, டாக்டருக்கென்று ஆகத்தானே செய்யும். அதையெல்லாம் என்றும் கணக்கில் கொண்டதில்லை. இவ்வளவு வேணும், அவ்வளவு வேணும் என்று ஒரு முறை கூடப் பெரியண்ணா எங்களிடம் கேட்டதில்லை. அதெல்லாம் கிடக்கட்டும். அறுபது எட்டும் நிலையில் ஓய்வு பெறப்போகும் வயதில், எத்தனை முறைதான் அவனும் பதறியடித்துக் கொண்டு ஓடி ஓடி வருவான்? எத்தனை நாட்கள்தான் லீவு லீவு என்று விடுப்பு எடுப்பான். ஒரு அதிகாரி என்ற பொறுப்பில் இருக்கும் அவனுக்கு அந்த மாதிரியான திடீர் சமாசாரங்கள் சாத்தியமா? அதற்கெல்லாம் ஒரு மனசு வேணும்தான். பரி பக்குவம் இல்லாதவர்களால் அம்மாதிரி அநாயாசமான சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்வது என்பது சாத்தியமேயில்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்க, நிறையக் கஷ்டங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறானே?.கடவுள் ஸ்தானத்தில்தான் வைத்து நாங்கள் எங்கள் அண்ணாவை வணங்கிக் கொண்டிருக்கிறோம். பார்ப்பவர்களுக்கு வெளியே எதுவும் தெரியாது. அப்படித் தெரிவது போல் நடந்து கொண்டால் அது விளம்பரமாகாதா? விலையற்று நிற்காதா? மதிப்பு மிக்கவைகளை அப்படி டமாரம் போட முடியாதே? மானசீகமாய் மதிக்கப்பட வேண்டியவை செய்திகளாய் நிற்பதும் பளிரெனத் தெரியச் செய்வதும் அநாகரீகமாயிற்றே?.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் அப்பா. தன் மூக்குப் பொடிப் பழக்கத்தைக் கூடக் கடைசிக் காலத்தில் நிறுத்தி விட்டார். சதா நாம ஜெபம் என்று இருந்தவர். மணிக்கணக்காக உட்கார்ந்து நிறைய ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு மதியம் ரெண்டு மணிக்கு மேல்தான் சாப்பிட உட்காருவார். அவருக்கு இப்படித் துன்பம் வரலாமா? கடவுளுக்கே அடுக்காதுதான். காலை பலகாரம் என்பது கிடையாது. பத்து வயசிலிருந்து தனது எழுபதாவது வயசுவரை ஓடியாடி உழைத்தவர். ஓட்டலில் நெருப்பு முன் நின்று நின்றே அவர் வாழ்க்கை கழிந்து விட்டது. எங்கள் அறுவரின் வாழ்க்கை (மூன்று பெண்கள், மூன்று ஆண்கள்) செழித்தது. வாழ்க்கையில் இனிப் படுவதற்குக் கஷ்டங்களே இல்லை என்றே சொல்லலாம். யார் அவரவர் அனுபவத்தைச் சொன்னாலும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இங்கு ஏற்கெனவே பழகியவைகளாய்த்தான் இருக்கும். வறுமையிற் செம்மை. அது ஒன்றுதான் எங்களை அடையாளப்படுத்திய மேன்மை..சுந்தர் ஒட்டடை எடுத்துக் கொண்டிருந்தான். அண்ணாவுக்கும் மன்னிக்கும் தூசி ஆவதில்லை. இவனுக்கும் ஆகாதுதான். ஆனாலும் காட்டிக் கொள்ள முடியாது வந்த இடத்தில் அவன் வீட்டிலேயே தூசி அடித்துவிட்டு நாலு நாளைக்குத் தொடர்ந்து தும்மிக் கொண்டிருப்பான். ஏதேனும் மாத்திரைகளை வாங்கி முழுங்கிக் கொண்டிருப்பான். எப்படியானாலும் அது ஒரு வாரம் இருந்துதான் போகும். ஏன் இப்படி தெனமும் தும்மிக்கிட்டேயிருக்கீங்க…? என்பார்கள் ஆபீசில். அவனின் அடையாளம் அதுதான். தும்மல் சுந்தர்…! ஒரு நாளைக்கு ரெண்டு மூணு கர்சீப் ஆகும்..வந்த இடத்தில் இதையெல்லாம் காண்பிக்க இயலாது. முகத்தைத் துண்டால் கட்டிக் கொண்டு எம்பி எம்பி தூசிகளை எடுத்துக் கொண்டிருந்தான். மாசக் கணக்கில் அடைந்து கிடக்கும் தூசி துப்பட்டை நெடி தூக்கியது. எல்லா ஊரிலும், எல்லா வீடுகளிலும்தான் பல்லிகள் இருக்கின்றன. ஆனால் சென்னை வீடுகளில் உள்ள பல்லிகள் ரொம்ப விசேஷம். ஏறக்குறைய ஒரு முதலையைப் போலிருந்தன அவைகள். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பல்லி அடிபட்டுப் போகிறது. அருவருப்போடு அதை ஒரு பழந்துணியில் எடுத்து வெளியே வீச வேண்டியிருக்கிறது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல் எங்கிருந்தோ வரும் காக்கை அதை ஒரே கொத்தாகக் கொத்தித் தூக்கிக் கொண்டு போய் விடுகிறது..எதுக்கு இதெல்லாம் செய்ற…? என்பான் அண்ணா. இருக்கட்டும் என்று பதில் சொல்வான். அது பிடித்திருந்தது. தேவையாவும் இருந்தது. மாவிலைகளும், காய்ந்த மாம்பூக்களும், சுள்ளிகளுமாய் மொட்டை மாடி ஒரே குப்பையாய் இருக்கும். அவைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்வான். எல்லாமே அவனாய்ச் செய்வதுதான். அடர்ந்த மரக்கிளைகளுக்கு நடுவே ஒரு ஆந்தை அமைதியாய் உட்கார்ந்து கொண்டு யாருக்கும் தென்படாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்கும். என்னவோ பழி வாங்குவதற்காகக் காத்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றும். அந்த முழி இவன் நினைவிலேயே நிற்கும். அதை ஒரு முறை செல்லில் படம் பிடித்தான். அந்தப் புகைப்படத்திலும் ஆந்தையை அடர்ந்த கிளைகளுக்கு நடுவே தேடத்தான் வேண்டியிருந்தது..தண்ணீர் தொட்டி கழுவி மாமாங்கமாச்சு என்று எட்டிப் பார்க்கையில் தோன்றும். மன்னியிடமிருந்து சேந்தியில் உள்ள பெரிய அண்டாவை இறக்கி, கழுவி, அதில் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, தொட்டி காலி ஆனதும் கழுவக் கிளம்புவான். தேங்காய் நாரும், ப்ளீச்சிங் பவுடரும் எடுத்துக் கொண்டு, பாசம் போக சுத்தமாய்ச் சுரண்டிக் கழுவி ஊற விட்டு, பிறகு அலம்பி அலசி, தொட்டியைப் பளிச்சென்று ஆக்கி வெயிலில் உலர வைப்பான். சமயங்களில் லாரித் தண்ணீரும் வாங்க வேண்டியிருந்தது. நிலத்தடி நீர் காணாமல் போகும் அபாயமும் உண்டு.."ஹப்பா.. பிரமாதம்….எவ்வளவு சுத்தமாயிடுத்து…..பளிச்சுன்னு இருக்கு….இன்னும் ஆறு மாசத்துக்குக் கவலையில்லை…" என்று மன்னி வாய் விட்டு மனம் விட்டுச் சொல்கையில் மனசு திருப்தி அடையும். "வந்ததற்கு ஏதோ உபயோகமாய் நாலு காரியம் செய்து விட்டுப் போனோம்" என்கிற மன ஆறுதல். "அம்மா அப்பாவைப் பராமரிக்கும் பணியில் ஆள் இல்லையே" என்ற குறையைச் சமன் செய்யும் கடமை இது. ஆனால், அண்ணா எப்போதும் எதுவும் சொன்னதில்லை. இதிலெல்லாம் திருப்தியில்லை என்பதுபோல் தோன்றும் அவன் இருப்பு. செய்தாலும் சரி…செய்யாவிட்டாலும் சரி….காரியார்த்தமானதை மட்டும் பேசிவிட்டு அமைதியாகி விடுவான். அதுதான் அவன் இயல்பு என்றும் சொல்வதற்கில்லை. மனதிற்குள் ஏதோ கோபம் இருக்கத்தான் செய்கிறது. ரெண்டு நாளைக்கு என்று வந்து செல்பவனை எதற்கு சங்கடப்படுத்திக் கொண்டு என்றும் இருக்கலாம். அந்த அமைதியே பயத்தை ஏற்படுத்தும். என்று வெடிக்கப் போகிறதோ, அப்பொழுது யார் மாட்டப் போகிறோமோ என்று தோன்றிக் கொண்டேயிருக்கும். அவனாகக் கூப்பிட்டு ஏதேனும் பேசினால்தான் பேசுவான். அல்லாமல் நெருங்குவதில்லை. 'என்ன சொல்லிவிடுவானோ' என்கிற அச்சம்தான். குற்றமுள்ள நெஞ்சு..நானும் சரி, நடு அண்ணா சங்கரனும் சரி, போத் எம்ப்ளாய்ட் ஃபேமிலி. அவனுக்கு ரெண்டு, எனக்கு ஒண்ணு…என்று காலையில் எழுந்து அவர்களைப் பள்ளிக்குத் தயார் பண்ணி அனுப்பிவிட்டு, மதியச் சாப்பாடு கட்டிக் கொண்டு கிளம்பவே மூச்சைப் பிடித்தாற்போல் ஆகிவிடும். அத்தோடு அத்தனை குண விசேஷம் இல்லை என்றும் சொல்லலாம். பெரியண்ணா மன்னி மாதிரி வராது. யாரையும் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு குறையும் சொன்னதில்லை. அப்பா அம்மாவை வைத்துக் கொள்வதில் என்றும் இம்மியும் முகம் சுருங்கியதில்லை. இத்தனை ஆண்டுகளில் எப்பொழுதுமே அவர்கள் இருப்பில் சிடுக்கு விழுந்ததில்லை. ஆனாலும் அவள மாதிரிப் பொறுமையும், பொறுப்பும் அவாளுக்கெல்லாம் வராதுடா….! அதனாலதானே நாங்க இங்க நிம்மதியா இருக்க முடியறது…இல்லன்னா எங்க பொழப்பு நாறிப் போகுமே…! என்பாள் அம்மா. மன்னி மீது அம்மாவுக்கு அவ்வளவு மதிப்பு. மரியாதை என்றே சொல்லலாம். ஒருவரின் நாணயமான இருப்புத்தானே மற்றவர்களை அச்சப்படுத்தும். அடங்கியிருக்கச் செய்யும்..அப்பா யாரைப்பற்றியும் எதுவும் சொன்னதில்லை. அவர்பாட்டுக்குக் கிருஷ்ணா ராமா என்றிருப்பார். அப்படியிருக்கும் மனுஷனுக்கு இப்படியொரு அனுபவயோகம் வந்துவிட்டதே என்று எங்களுக்கெல்லாம் மிகுந்த வேதனையாயிருந்தது. இந்த மாதிரி சங்கடம் அனுபவிப்பதற்கு இவர் போய்ச் சேரலாம் என்று நாங்களே நினைக்க ஆரம்பித்து விட்டோம். வலியோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தார். கண்ணை மூடிக் கொண்டு அப்படியே படுத்திருப்பார். இப்டியே என்னைக் கொண்டு போயிடு கடவுளே…!.இறைவா சீக்கிரமே அவரைக் கூப்பிட்டுக்கோ…அவர் படுற துன்பத்தை என்னால கண் கொண்டு பார்க்க முடியலை….என்று அம்மா சதா வேண்டி கண் கலங்கிக் கொண்டிருந்தாள். எந்த நேரமும் பிரார்த்தனைதான் அவளுக்கு. வேண்டும் வேண்டுதலில் அவள் நிம்மதியாய்ப் போய் விடுவாள் போலிருந்தது. அவ்வளவு துயரம். உடல் நலிவு. தரித்திரக் கஷ்டம் பட்ட காலங்களில் கூட அவள் இவ்வளவு வேதனைப்பட்டதில்லை..இருவரையும் பார்த்துப் பார்த்து கண்ணீர் வடிக்காத குறை எங்களுக்கு. மன பாரத்தோடேயே திரிந்தோம். இதுவரை மூன்று முறை ஆஸ்பத்திரி போய்த் திரும்பி விட்டார் அப்பா. அம்மா பல்லெடுக்க என்று ஒரு முறை போய் வந்தாள். எல்லாப் பல்லும் எடுத்தாயிற்று. பொக்கை வாய் ஆகிப் போனது. பல் இல்லாத அந்தப் பொக்கை வாய் முகமும் அம்மாவுக்கு அழகாய்த்தான் இருந்தது. அப்பாவுக்கு சாகும்வரை ஒரு பல் கூட விழவில்லை. அத்தனை முடியாத காலத்திலும் தட்டை, முறுக்கு என்று உள்ளே தள்ளிக் கொண்டுதான் இருந்தார். பார்ப்பவர்கள் எண்பத்தியாறு ஆச்சா? என்று கேட்டு வியந்தார்கள்? ஆனால் உட்கார்ந்த மேனிக்கே அல்லது படுத்த வாகிலேயே அப்பா அனுபவிக்கும் அந்த உடலுறுப்புகள் செயலிழப்பு வியாதிக் கொடுமை சொல்லி மாளாது. இடது கையும் என்றோ செயலிழந்து போனது. அது பெருங்கொடுமை. தனிக் கதை. பெட் ஃபேன் வைத்துத்தான் அப்பாவுக்கு எல்லாம். கடைசிவரை அம்மாதான் எடுத்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அலம்பி விட்டாள். கை திரும்பிப் பின்னால் வராது அப்பாவுக்கு. நன்னா அலம்பு…ஒட்டிண்டிருக்கு போலத் தெரியறது என்று படுத்துவார் அப்பா..அந்த அறைக் கதவு சாத்தியேதான் இருக்கும். இரண்டு பக்கங்களில் கதவு உண்டு அந்த அறைக்கு. ஒன்று ஹாலோடு சேர்ந்தது. இன்னொரு கதவு சமையலறையோடு. இரண்டு அறையும், ஒரு ஹாலும், ஒரு கிச்சனும் உள்ள அந்தச் சின்ன வீட்டில் நடக்காத விசேஷங்களில்லை. எல்லா நல்ல காரியங்களும் அந்த அண்ணா வீட்டில்தான் நடந்தேறியிருக்கின்றன. தங்கைகளுக்கு வளைகாப்புகள், என் வீட்டுக்காரி நீலாவுக்கு சீமந்தம், என்றும், வருடா வருடம் வரும் முக்கிய விசேஷ நாட்களும் எனப் புண்ணிய ஷேத்திரமாய் விளங்கியது அந்த வீடு. அந்தப் பகுதி மாமா மாமிகள் என்று எவரேனும் வந்து கொண்டேயிருப்பார்கள். அப்பா அம்மாவிடம் நலம் விசாரித்து, நமஸ்கரித்து ஆசி வாங்கிச் செல்வார்கள். அப்பாவை விட அம்மாவுக்கு அப்படி ஒரு முகராசி. அந்த லட்சுமி களை அவளின் பெரும் சொத்து..போதும் நிறுத்திக்கோ…இன்னும் ஆஸ்பத்திரிக்கு வேறே போகணுமே….அதுக்குத்தானே வந்திருக்கே…ராத்திரி பூராவும் பஸ்ல தூங்காம வந்திருப்பே…அசதியாகி நீ விழுந்திடப் போறே…என்றாள் மன்னி. சீக்கிரம் ஆஸ்பத்திரி கிளம்பு என்று உணர்த்துகிறாளோ?.அதான் சங்கரண்ணா இருக்கானே அங்கே. நாளைக்குக் கூட நான் ஆஸ்பத்திரி போகலாமில்லே…இல்ல ராத்திரி போயிடறேன். நான் போய் அவனை ரிலீஃப் பண்ணினா அவன் வந்து நல்லா ஒரு தூக்கம் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாமே….நான் பார்த்துப்பேனே அப்பாவை…!.அப்பா இம்முறை வீடு திரும்புவார் என்றே தோன்றவில்லை. ஏறக்குறைய எல்லா உறுப்புகளும் செயலிழந்து விட்டன என்றே சொல்லலாம். கீழே ட்யூப் மாற்றியதற்கு ஊசி போட்டார்கள் என்றும் மாற்றியதே அப்பாவுக்குத் தெரியாது என்றும் அண்ணா சொன்னான். மூச்சு மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. விழியே திறக்கவில்லை. கண்களை மூடியபடியேதான் கிடந்தார் அப்பா. அதற்கே சக்தியில்லைபோல் தோன்றியது. நான் போய் நின்றபோது காது வழியே சொன்னான் சங்கரன் அண்ணா. அப்பாவுக்குக் கேட்டதா தெரியவில்லை. அடுத்து சில நாட்கள்தான் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது..நீ போய் குளிச்சி சாப்டிட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு வந்தாப் போதும்…என்றேன் நான். அசதில நீ படுக்கைல விழுந்திடப்போறே என்று மன்னி சொன்னதில் பயந்து போய் உடனே கிளம்பி வந்து விட்டேன். முடங்கினால் அசதி கண்டு விடும். அங்கேர்ந்து கிளம்பி இங்க தூங்க வந்திருக்கானா என்று விட்டால்? மனசுதான் என்னென்னவோ நினைத்துப் பார்க்கிறதே…!.இல்ல…இல்ல….உனக்கு விஷயம் தெரியாதா? நான் வந்ததுலேர்ந்து இங்கதான் இருக்கேன்..இதோ பார் என் பேக். அதோடவே வந்துட்டேன். ஜம்பு அய்யர் டிபன் ஸ்டால்னு ஒரு சின்னக் கடை இருக்கு பாரு…வர்ற வழிக்கு பார்த்திருப்பியே…அனுமார் கோயில் பக்கம்….அங்கதான் டிபன், சாப்பாடு…..அப்பாவுக்கு இங்க என்ன கொடுக்கச் சொல்றாங்களோ அதைக் கொடுத்திட்டிருக்கேன். இங்கதான் குளியல்….படுக்கை… தூக்கம்…சகலமும்…..அப்டியா….வீட்டுக்கே போகலியா….? என்றேன் நான் ஒன்றும் புரியாமல்..வந்த அன்னிக்குப் போய் இறங்கினேன். அத்தோட சரி….ஒரு வேளை டிபன் சாப்டிட்டு இங்க வந்தேன் பாரு…அன்னிலேர்ந்து இங்கதான் டேரா….! எதுக்கு? இங்க இருக்கிறதுல என்ன சிரமம்? காசக் கொடுத்தா சாப்பாடு கொடுக்கிறான்….இந்தா…இப்டிக் கீழே படுத்து உருண்டுட்டுப் போறோம்…செத்தா போறோம்….நாம என்ன வெளில இருந்ததேயில்லையா? ஊட்டி, சேலம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டைன்னு எத்தனை ஊர்ல கழிச்சிருக்கேன்…எல்லாம் ஓட்டல் சாப்பாடுதான்…எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டேயில்ல…..கழியாமயா போறது? அப்பாவப் பார்த்துக்கணும்…அவ்வளவுதானே…இங்கேயிருந்தே பார்த்தா போறது…? அங்க போய்ப் போய் வரணும்னு என்ன சட்டமா?-எதுக்கு வெட்டி அலைச்சல்?-நம்பளால ஒருத்தருக்கு எதுக்கு சிரமம்? – சொல்லிவிட்டு பார்த்துக்கோ…பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்…என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கக்கூசை நோக்கிப் போனான் சங்கரண்ணா..அவன் பேச்சு எதையோ உணர்த்துவது போலிருந்தது எனக்கு. ஒருத்தருக்கு என்ற அந்த வார்த்தை வித்தியாசமாயிருந்தது…! எப்படிக் கேட்பது? என்னவென்று கேட்பது? புரியவில்லை. ஆனால் எதுவோ உறுத்தியது..ரெண்டு நா ஒரு நாள்னு வந்துட்டு வந்துட்டு, தலையைக் காண்பிச்சிட்டுப் போனாப் போதுமா? கடமை முடிஞ்சிதா? இருந்து பார்க்கட்டும்… அப்பத்தானே தெரியும் கஷ்டம்…எனக்கு மட்டும்தான் விதிச்சிருக்கா? அவாளுக்குக் கடமையில்லையா? முழுக்க இருந்து, பார்த்து, எல்லா பேமென்டும் பண்ணிட்டு, டிஸ்சார்ஜ் பண்ணி அப்பாவைக் கொண்டுவந்து வீடு சேர்த்திட்டுப் போகட்டும்…எத்தனை நாள் லீவு…அது இதுன்னு எதுவும் கேட்டுக்காதே… வேணும்னா எக்ஸ்டென்ட் பண்ணிக்கட்டும்…நமக்கென்ன வந்தது? அது அவா பாடு…..புரிஞ்சிதா? ஆபீஸ் கிளம்பறேன் நான்…கவனம்…!.நான் வெளியேறி வாசல் கேட் கொண்டியைப் போடுவது வரை என் காதில் அத்தனை பேச்சும் சுளீரென்று வந்து விழுந்தன. கேட்டால் கேட்கட்டுமே என்று சொன்னது போலவேயிருந்தது. ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல.. நான் கடைசித் தம்பி. என்னிடம் கொஞ்சம் சுதந்திரம் இருக்கும்தானே? நான் பார்க்க வளர்ந்தவன். இவன் காது கேட்க நாலு வார்த்தை சொல்ல எனக்கு உரிமையில்லையா? அதன் தாக்கத்தை சங்கரண்ணா இங்கு எதிரொலிக்கிறானோ….? இதை அவன் எங்ஙனம் உணர்ந்திருப்பான்?.வந்த அன்னிலேர்ந்து இங்கதான் கிடக்கிறேன், குறைஞ்சா போய்ட்டேன்….? ஏன் இந்த விரக்தி? அவனுக்கு அம்பு எந்த திசையிலிருந்து, என்ன ரூபத்தில் வந்ததோ?.நானும் இப்படியே இங்கிருந்து கழித்து விட்டால் என்ன? தீவிரமாய் யோசனை போனது எனக்கு…!!
சுந்தர்…கொல்லைப் பக்கம் செடிகளுக்கு பாத்ரூம் தண்ணி சரியா போக மாட்டேங்குது…அதக் கொஞ்சம் வாய்க்கால் வெட்டி பாத்தி பண்ணி விடேன்….சரி மன்னி… சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பின் பக்கம் போனான். ஒவ்வொரு முறை வரும்போதும் இந்த வேலையைச் செய்வதுதான். கருவேப்பிலை, மாமரம், மாதுளை, கொய்யா…பப்பாளி, நார்த்தங்காய் என்று ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதுபோல் வாய்க்காலைச் சீராக வெட்டி, வழியமைத்து, குளிக்கும், பாத்திரம் தேய்க்கும் துணி துவைக்கும் தண்ணீர் அனைத்தும் வீணாகாமல் அவைகளுக்குப் போய்ச் சேருவதுபோல் தோட்டப் பகுதியைச் சரிசெய்து விடுவான். மன்னி சொல்லாவிட்டாலும் இவனே செய்து விடுவான். வேலைகளைச் சொல்லிச் செய்வதைவிட, எடுத்துச் செய்வது பெருமை சேர்க்கும். எதிராளிக்கும் திருப்தி தரும். கருவேப்பிலைச் செடி மரமாய் உயராமல் அங்கங்கே கிளைகளை ஒடித்து விட்டு கை நீட்டிப் பறிப்பதுபோல் குட்டையாய் பரந்து வளரும் வகையில் சீர் செய்வான்..பிரதி மாதமும் அலுவலக வேலை என்று ஏதேனும் ஒரு பணி நிமித்தம் இவனைச் சென்னைக்கு அனுப்பி விடுவார்கள். 'நானே போகிறேன்' என்று வலிய அந்த வேலையைத் தனதாக்கிக் கொண்டான். மாத திட்டப் பணிகள் சாதனை அறிக்கையைக் குறிப்பிட்ட தேதியில் தலைமை அலுவலகத்தில் கொண்டு சேர்த்தாக வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தக்க விளக்கம் அளித்துத் திருப்திப்படுத்த வேண்டும். அத்தோடு பணியாளர்கள் சம்பளத்திற்கான சான்றினைப் பெற்று, தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே கொண்டு சேர்த்தாகவும் வேண்டும். அதனால் சென்னைக்கு வந்தானென்றால் அதிக பட்சம் இரண்டு நாட்கள்தான் இருக்க முடியும். தவறினால் மூன்று நாட்கள். அவ்வளவே…! அந்த மூன்று நாட்கள் சம்பள தேதியை நெருங்காமல் இருக்க வேண்டும். அது முக்கியம்..வெறும் இரண்டு நாளில் நந்தனத்தில் இருக்கும் தலைமை அலுவலகம் போவதற்கும், பிறகு தலைமைச் செயலகம் செல்வதற்குமே நேரம் சரியாக இருக்கும். அறிக்கை கொடுப்பதென்னவோ சுலபமாக முடிந்து விடும். ஆனால் சம்பளச் சான்று பெறுவதுதான் உறுதியாகச் செய்ய வேண்டிய பணி. அதைப் பெறாமல் ஊர் திரும்ப முடியாது. திரும்பினாலும் வெறுங் கையோடு அலுவலகம் சென்று நிற்க முடியாது. திட்டுதான் விழும்..என்னங்க கையை வீசிட்டு வர்றீங்க….இதுக்குத்தான் உங்களை சென்னைக்கு அனுப்பறதா? என்று சீறி விடுவார்கள். இன்னிக்கு, நாளைக்கு தபால்ல கண்டிப்பா வந்திரும்…என்கிற பதில் அவர்களைத் திருப்திப்படுத்தாது. ஒரு நாள் தாமதமானாலும் கையோடு சான்றினை வாங்கிக் கொண்டு போய் பிரசன்னமாவதுதான் உகந்தது. ஒண்ணாம் தேதி சம்பளம் கைக்கு வரவில்லையென்றால் பணியாளர்கள் கொதித்து விடுவார்கள்..மாவட்டத்தின் மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட அலுவலகங்களுக்கான சம்பளச் சான்று அது. மாதக் கடைசி தேதி இல்லையானாலும், ஒன்று இரண்டு தேதிகளுக்கு மேற்பட்டு சம்பளம் தாமதமானால், பணியாளர்கள் ஆடிப் போவார்கள். ஆகையால் சென்னை செல்வதன் சாதிக்க வேண்டிய பணி சம்பளச் சான்று பெறுவதுதான். அரசின் தற்காலிகத் திட்டங்களுக்கெல்லாம் இதுதான் கதி. முதல் ஓராண்டுக்கு அரசாணை வந்துவிடும். பிறகு மாதா மாதம் காவடிதான் எடுக்க வேண்டும். காரணம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அரசாணை வர சற்று தாமதம் ஆகும்..வேறே யாரையும் அனுப்ப மாட்டாங்களா? உங்களையேதான் போகச் சொல்றாங்க…?-சந்தேகமாகவே கேட்பாள் நீலா. திட்டப் பிரிவு பார்க்கும் உதவியாளர்தான் போக வேண்டும்…என்பதே இவன் பதிலாக இருக்கும். வேறு ஒருவரை போகச் செய்து விட முடியும்தான். அதற்கும் தயாராகத்தான் சிலர் இருந்தனர். சென்னை செல்வதில் பலருக்கு சந்தோஷமும் அவசியமும் இருந்தது..யார் சென்னை செல்கிறார்களோ அவர்களிடம் பல கோரிக்கைகள் சேர்ந்து விடும். எனக்கு டூ வீலர் லோன் சாங்ஷன் ஆயிடுச்சான்னு பார்த்திட்டு வாங்க….என் வீட்டு மனை பர்சேஸ் அனுமதி என்ன ஸ்டேஜ்னு பார்த்து முடிச்சிட்டு வாங்க…என்னோட அகௌன்ட் ஸ்லிப் இன்னும் வரல்லே…ஏ.ஜிஸ்.ஆபீஸ் போயிட்டு வந்திடுங்க…என்று ஆளுக்கொன்றாகச் சொல்லிவிடுவார்கள். தி.நகர் ரயில்வே ஸ்டேஷன் பின் பக்கமா இறங்கி இந்த மருந்துக்கடைக்குப் போய் மூட்டு வலி எண்ணெயை வாங்கிட்டு வந்திடுங்க…..இம்மாதிரிப் பலவும் உண்டு. தட்டவும் முடியாது. இருக்கும் இரண்டு நாளில் எத்தனை இடங்களுக்குத்தான் செல்ல முடியும்? செக்ரடேரியட் சென்றாலே ஒரு நாள் போச்சு…! இருந்தாலும் பணியாள நண்பர்களின் அன்பான கோரிக்கைகளை மறுக்க இயலாது. எப்படியாவது அலைந்து திரிந்து எல்லா வேலைகளையும் முடித்துப் போய் நின்றால்தான் பெருமை. அவர்களுக்கும் சந்தோஷம். எப்போதும் இவனிடம் அவர்களின் கோரிக்கைகள் பென்டிங் இருந்துக் கொண்டேயிருக்கும். அடுத்த மாசம் போகைல….என்று சொல்லிக் குறித்துக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். நண்பர்களுக்கு செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி..இதைச் சாக்கிட்டுத்தான் பிரதி மாதமும் அண்ணா வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான். அப்பா இவன் வருவதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறார். பார்பர் வேண்டாம்….சுந்தர் வரட்டும் என்று. அவன் வந்து ஷேவிங் செய்து, தாடி எடுத்து விட்டால்தான் திருப்தி. அக்குளிலும் எடுத்திடு என்று தயக்கமின்றிக் கூறுவார் அப்பா. அவருக்கு இதையெல்லாம் சொல்கிறோமே என்பதான களங்கமெல்லாம் கிடையாது? அவனும் சங்கடப்படுவதில்லை. அது சேவை. பார்பர் ஷாப்பில் கூட அத்தனை சுத்தமாக எடுத்துவிட மாட்டார்கள். அதனிலும் சுத்தமாக இவன் வழித்து விட்டுவிடுவான். ஒருமுறை கூட சிறு துளி ரத்தக் காயம் ஏற்பட்டது கிடையாது. தளர்ந்த தோலில் எப்படி நேக்காக, நோகாமல் எடுக்க வேண்டும் என்று நன்றாய் கைலாவகம் பழகியிருந்தது. "முடி வெட்டுவதையும் என்னால் செய்ய முடியும்" என்று அப்பாவுக்கு அதையும் செய்து பழகி விட்டான். ஜோரா இருக்கே….என்பார் பின்புறம் கண்ணாடி காண்பிப்பதைப் பார்த்துக் கொண்டு. இவனுக்கு அவ்வளவு திருப்திப் படாதுதான். இருந்தாலும் "மோசமில்லை" என்று நினைத்துக் கொள்வான். கொல்லைப் பக்கம் நாற்காலி போட்டு இந்த வைபவம் நடக்கும். பக்கத்து அபார்ட்மென்டிலிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். பார்த்துட்டுப் போகட்டும். நமக்கு வேலை ஆகணும்…என்று காரியத்தில் கருத்தாய் இருப்பான்..அப்பா படுக்கையில் விழுந்து வருடம் நான்குக்கு மேல் ஆகிவிட்டது. அண்ணாதான் எல்லாம் பார்த்துக் கொள்கிறான். பெரியவனிடம் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாய் உள்ளது. அப்படியே இருந்து கழித்தாகி விட்டது. சில குடும்பங்களில் இருப்பதைப் போல் இங்க ஆறு மாசம், அங்க ஆறுமாசம் என்பதாய் போவதும், வருவதுமான பழக்கம் இங்கு கைகூடவில்லை. அந்தப் பேச்சே எழவில்லை. ஆரம்பத்திலேயே அதைச் செய்திருந்தால் பழகியிருக்குமோ என்னவோ? மனக்குறை என்று எதுவும் இல்லாமல் போயிருக்கலாம். நானும் நடு அண்ணாவும் வருவதும் போவதுமாய் இருந்தோம். வெளியூரான எங்களுக்கு அதுதான் முடிந்தது. நான்தான் ரெகுலர் கஸ்டமர். வந்து செல்பவனை இப்படியும் சொல்லலாமே…! பிரதி மாதமும் வந்து விடுகிறேனே. நான் வந்து செய்ய வேண்டும் என்று வேலைகள் காத்திருக்கிறதே…!.பிறப்புறுப்பில் ட்யூப் செருகி கீழே பாட்டிலோடு இணைத்திருக்கிறது அப்பாவுக்கு. யூரின் இறங்கும் அதன் வழியே. பதினைந்து நாளைக்கொரு முறை ட்யூப் மாற்றும்போதுதான் கொடுமை. ஒவ்வொரு முறையும் டாக்டர் வருவார். மாற்றுவார். வலி தாங்காமல் அந்தத் தெருவே கேட்பதுபோல் அலறுவார் அப்பா. "ஈஸ்வரா…என்னை ஏன் இப்படிக் கஷ்டப்படுத்தறே!…கொஞ்சூண்டு விஷத்தைக் கொடுத்திடுங்கோளேன்… நான் நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுறேன்" என்று கதறுவார் அப்பா. பின்னால் அண்ணாவே அந்த ட்யூப்பைச் செருகப் பழகிக் கொண்டான். திடீரென்று யூரின் அடைத்துக் கொள்ளும். அப்பா கத்து கத்து என்று கத்திக் கதறுவார். மன்னி அண்ணா ஆபீசுக்கு ஃபோன் பண்ணுவாள். அலறியடித்துக் கொண்டு ஓடி வருவான். சில சமயங்களில் யூரினிலுள்ள உப்பு சேர்ந்து சேர்ந்து ட்யூப் வழி குறுகி அடைத்துக் கொள்ளும். அடுத்த முறை மாற்றுவோம் என்று எப்பொழுதாவது விட்டு விடும் சந்தர்ப்பங்களில் இந்தக் கொடுமை நடந்து போகும். எப்பொழுது அடைக்கும் என்று திட்டமாய்ச் சொல்லவும் முடியாது. பதினைந்து நாளுக்கொரு முறை என்பது ஒரு உத்தேசம்தான்.அண்ணா ரொம்ப லோல் பட்டிருக்கிறான் இதில்..இந்த ட்யூப் மாற்றும் வேலையைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் அண்ணா பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் செய்து வருகிறான். அவன் பொறுமையும் பொறுப்பும் அளவிடற்கரியது. கையும் மெய்யும் கலந்து வணங்குதற்குரியது. அவன் ஒருவன் மட்டும் கிடந்து கஷ்டப்பட வேண்டுமென்று தலையெழுத்தா என்ன? உன்னிடம்தான் இருப்போம் என்று அப்பாவும் அம்மாவும் மூத்த அண்ணாவிடம் இருந்து கழித்ததே அவன் பெருமை! அதுதான் எங்களுக்குக் கௌரவம் என்றார்கள். எங்களிடம் இருக்கப் பிரியமில்லாததோ அல்லது வேறு ஏதோ அதிருப்தியோதான் அவர்களை நகர விடாமல் செய்திருந்தது. ஒரேயொரு முறை என்று என் வீட்டிற்கும் நடு அண்ணா வீட்டிற்கும் அப்பாவும் அம்மாவும் வந்து, சென்றிருக்கிறார்கள். பெற்றோர்களின் கால் பட்ட புண்ணியம் உண்டுதான். ஏனோ அவர்களுக்கு அங்கு பொருந்தவில்லை. முகமும் பேச்சும் சுருங்கியே கிடக்கும். மகிழ்ச்சியே தென்படாது. பழகிய இடம் பெரியண்ணா வீடுதான். சென்னைதான். மனதிற்குகந்தது….அண்ணா மன்னியின் ரூபம்..அண்ணா அந்த வைத்தியச் செலவையெல்லாம் பொருட்படுத்தியதேயில்லை. பிரதி மாதமும் நானும் நடு அண்ணாவும் பணம் அனுப்புகிறோம்தான். ஆனாலும் அதற்கு மேலும் மருந்து மாயத்திற்கென்று, டாக்டருக்கென்று ஆகத்தானே செய்யும். அதையெல்லாம் என்றும் கணக்கில் கொண்டதில்லை. இவ்வளவு வேணும், அவ்வளவு வேணும் என்று ஒரு முறை கூடப் பெரியண்ணா எங்களிடம் கேட்டதில்லை. அதெல்லாம் கிடக்கட்டும். அறுபது எட்டும் நிலையில் ஓய்வு பெறப்போகும் வயதில், எத்தனை முறைதான் அவனும் பதறியடித்துக் கொண்டு ஓடி ஓடி வருவான்? எத்தனை நாட்கள்தான் லீவு லீவு என்று விடுப்பு எடுப்பான். ஒரு அதிகாரி என்ற பொறுப்பில் இருக்கும் அவனுக்கு அந்த மாதிரியான திடீர் சமாசாரங்கள் சாத்தியமா? அதற்கெல்லாம் ஒரு மனசு வேணும்தான். பரி பக்குவம் இல்லாதவர்களால் அம்மாதிரி அநாயாசமான சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்வது என்பது சாத்தியமேயில்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்க, நிறையக் கஷ்டங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறானே?.கடவுள் ஸ்தானத்தில்தான் வைத்து நாங்கள் எங்கள் அண்ணாவை வணங்கிக் கொண்டிருக்கிறோம். பார்ப்பவர்களுக்கு வெளியே எதுவும் தெரியாது. அப்படித் தெரிவது போல் நடந்து கொண்டால் அது விளம்பரமாகாதா? விலையற்று நிற்காதா? மதிப்பு மிக்கவைகளை அப்படி டமாரம் போட முடியாதே? மானசீகமாய் மதிக்கப்பட வேண்டியவை செய்திகளாய் நிற்பதும் பளிரெனத் தெரியச் செய்வதும் அநாகரீகமாயிற்றே?.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் அப்பா. தன் மூக்குப் பொடிப் பழக்கத்தைக் கூடக் கடைசிக் காலத்தில் நிறுத்தி விட்டார். சதா நாம ஜெபம் என்று இருந்தவர். மணிக்கணக்காக உட்கார்ந்து நிறைய ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு மதியம் ரெண்டு மணிக்கு மேல்தான் சாப்பிட உட்காருவார். அவருக்கு இப்படித் துன்பம் வரலாமா? கடவுளுக்கே அடுக்காதுதான். காலை பலகாரம் என்பது கிடையாது. பத்து வயசிலிருந்து தனது எழுபதாவது வயசுவரை ஓடியாடி உழைத்தவர். ஓட்டலில் நெருப்பு முன் நின்று நின்றே அவர் வாழ்க்கை கழிந்து விட்டது. எங்கள் அறுவரின் வாழ்க்கை (மூன்று பெண்கள், மூன்று ஆண்கள்) செழித்தது. வாழ்க்கையில் இனிப் படுவதற்குக் கஷ்டங்களே இல்லை என்றே சொல்லலாம். யார் அவரவர் அனுபவத்தைச் சொன்னாலும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இங்கு ஏற்கெனவே பழகியவைகளாய்த்தான் இருக்கும். வறுமையிற் செம்மை. அது ஒன்றுதான் எங்களை அடையாளப்படுத்திய மேன்மை..சுந்தர் ஒட்டடை எடுத்துக் கொண்டிருந்தான். அண்ணாவுக்கும் மன்னிக்கும் தூசி ஆவதில்லை. இவனுக்கும் ஆகாதுதான். ஆனாலும் காட்டிக் கொள்ள முடியாது வந்த இடத்தில் அவன் வீட்டிலேயே தூசி அடித்துவிட்டு நாலு நாளைக்குத் தொடர்ந்து தும்மிக் கொண்டிருப்பான். ஏதேனும் மாத்திரைகளை வாங்கி முழுங்கிக் கொண்டிருப்பான். எப்படியானாலும் அது ஒரு வாரம் இருந்துதான் போகும். ஏன் இப்படி தெனமும் தும்மிக்கிட்டேயிருக்கீங்க…? என்பார்கள் ஆபீசில். அவனின் அடையாளம் அதுதான். தும்மல் சுந்தர்…! ஒரு நாளைக்கு ரெண்டு மூணு கர்சீப் ஆகும்..வந்த இடத்தில் இதையெல்லாம் காண்பிக்க இயலாது. முகத்தைத் துண்டால் கட்டிக் கொண்டு எம்பி எம்பி தூசிகளை எடுத்துக் கொண்டிருந்தான். மாசக் கணக்கில் அடைந்து கிடக்கும் தூசி துப்பட்டை நெடி தூக்கியது. எல்லா ஊரிலும், எல்லா வீடுகளிலும்தான் பல்லிகள் இருக்கின்றன. ஆனால் சென்னை வீடுகளில் உள்ள பல்லிகள் ரொம்ப விசேஷம். ஏறக்குறைய ஒரு முதலையைப் போலிருந்தன அவைகள். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பல்லி அடிபட்டுப் போகிறது. அருவருப்போடு அதை ஒரு பழந்துணியில் எடுத்து வெளியே வீச வேண்டியிருக்கிறது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல் எங்கிருந்தோ வரும் காக்கை அதை ஒரே கொத்தாகக் கொத்தித் தூக்கிக் கொண்டு போய் விடுகிறது..எதுக்கு இதெல்லாம் செய்ற…? என்பான் அண்ணா. இருக்கட்டும் என்று பதில் சொல்வான். அது பிடித்திருந்தது. தேவையாவும் இருந்தது. மாவிலைகளும், காய்ந்த மாம்பூக்களும், சுள்ளிகளுமாய் மொட்டை மாடி ஒரே குப்பையாய் இருக்கும். அவைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்வான். எல்லாமே அவனாய்ச் செய்வதுதான். அடர்ந்த மரக்கிளைகளுக்கு நடுவே ஒரு ஆந்தை அமைதியாய் உட்கார்ந்து கொண்டு யாருக்கும் தென்படாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்கும். என்னவோ பழி வாங்குவதற்காகக் காத்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றும். அந்த முழி இவன் நினைவிலேயே நிற்கும். அதை ஒரு முறை செல்லில் படம் பிடித்தான். அந்தப் புகைப்படத்திலும் ஆந்தையை அடர்ந்த கிளைகளுக்கு நடுவே தேடத்தான் வேண்டியிருந்தது..தண்ணீர் தொட்டி கழுவி மாமாங்கமாச்சு என்று எட்டிப் பார்க்கையில் தோன்றும். மன்னியிடமிருந்து சேந்தியில் உள்ள பெரிய அண்டாவை இறக்கி, கழுவி, அதில் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, தொட்டி காலி ஆனதும் கழுவக் கிளம்புவான். தேங்காய் நாரும், ப்ளீச்சிங் பவுடரும் எடுத்துக் கொண்டு, பாசம் போக சுத்தமாய்ச் சுரண்டிக் கழுவி ஊற விட்டு, பிறகு அலம்பி அலசி, தொட்டியைப் பளிச்சென்று ஆக்கி வெயிலில் உலர வைப்பான். சமயங்களில் லாரித் தண்ணீரும் வாங்க வேண்டியிருந்தது. நிலத்தடி நீர் காணாமல் போகும் அபாயமும் உண்டு.."ஹப்பா.. பிரமாதம்….எவ்வளவு சுத்தமாயிடுத்து…..பளிச்சுன்னு இருக்கு….இன்னும் ஆறு மாசத்துக்குக் கவலையில்லை…" என்று மன்னி வாய் விட்டு மனம் விட்டுச் சொல்கையில் மனசு திருப்தி அடையும். "வந்ததற்கு ஏதோ உபயோகமாய் நாலு காரியம் செய்து விட்டுப் போனோம்" என்கிற மன ஆறுதல். "அம்மா அப்பாவைப் பராமரிக்கும் பணியில் ஆள் இல்லையே" என்ற குறையைச் சமன் செய்யும் கடமை இது. ஆனால், அண்ணா எப்போதும் எதுவும் சொன்னதில்லை. இதிலெல்லாம் திருப்தியில்லை என்பதுபோல் தோன்றும் அவன் இருப்பு. செய்தாலும் சரி…செய்யாவிட்டாலும் சரி….காரியார்த்தமானதை மட்டும் பேசிவிட்டு அமைதியாகி விடுவான். அதுதான் அவன் இயல்பு என்றும் சொல்வதற்கில்லை. மனதிற்குள் ஏதோ கோபம் இருக்கத்தான் செய்கிறது. ரெண்டு நாளைக்கு என்று வந்து செல்பவனை எதற்கு சங்கடப்படுத்திக் கொண்டு என்றும் இருக்கலாம். அந்த அமைதியே பயத்தை ஏற்படுத்தும். என்று வெடிக்கப் போகிறதோ, அப்பொழுது யார் மாட்டப் போகிறோமோ என்று தோன்றிக் கொண்டேயிருக்கும். அவனாகக் கூப்பிட்டு ஏதேனும் பேசினால்தான் பேசுவான். அல்லாமல் நெருங்குவதில்லை. 'என்ன சொல்லிவிடுவானோ' என்கிற அச்சம்தான். குற்றமுள்ள நெஞ்சு..நானும் சரி, நடு அண்ணா சங்கரனும் சரி, போத் எம்ப்ளாய்ட் ஃபேமிலி. அவனுக்கு ரெண்டு, எனக்கு ஒண்ணு…என்று காலையில் எழுந்து அவர்களைப் பள்ளிக்குத் தயார் பண்ணி அனுப்பிவிட்டு, மதியச் சாப்பாடு கட்டிக் கொண்டு கிளம்பவே மூச்சைப் பிடித்தாற்போல் ஆகிவிடும். அத்தோடு அத்தனை குண விசேஷம் இல்லை என்றும் சொல்லலாம். பெரியண்ணா மன்னி மாதிரி வராது. யாரையும் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு குறையும் சொன்னதில்லை. அப்பா அம்மாவை வைத்துக் கொள்வதில் என்றும் இம்மியும் முகம் சுருங்கியதில்லை. இத்தனை ஆண்டுகளில் எப்பொழுதுமே அவர்கள் இருப்பில் சிடுக்கு விழுந்ததில்லை. ஆனாலும் அவள மாதிரிப் பொறுமையும், பொறுப்பும் அவாளுக்கெல்லாம் வராதுடா….! அதனாலதானே நாங்க இங்க நிம்மதியா இருக்க முடியறது…இல்லன்னா எங்க பொழப்பு நாறிப் போகுமே…! என்பாள் அம்மா. மன்னி மீது அம்மாவுக்கு அவ்வளவு மதிப்பு. மரியாதை என்றே சொல்லலாம். ஒருவரின் நாணயமான இருப்புத்தானே மற்றவர்களை அச்சப்படுத்தும். அடங்கியிருக்கச் செய்யும்..அப்பா யாரைப்பற்றியும் எதுவும் சொன்னதில்லை. அவர்பாட்டுக்குக் கிருஷ்ணா ராமா என்றிருப்பார். அப்படியிருக்கும் மனுஷனுக்கு இப்படியொரு அனுபவயோகம் வந்துவிட்டதே என்று எங்களுக்கெல்லாம் மிகுந்த வேதனையாயிருந்தது. இந்த மாதிரி சங்கடம் அனுபவிப்பதற்கு இவர் போய்ச் சேரலாம் என்று நாங்களே நினைக்க ஆரம்பித்து விட்டோம். வலியோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தார். கண்ணை மூடிக் கொண்டு அப்படியே படுத்திருப்பார். இப்டியே என்னைக் கொண்டு போயிடு கடவுளே…!.இறைவா சீக்கிரமே அவரைக் கூப்பிட்டுக்கோ…அவர் படுற துன்பத்தை என்னால கண் கொண்டு பார்க்க முடியலை….என்று அம்மா சதா வேண்டி கண் கலங்கிக் கொண்டிருந்தாள். எந்த நேரமும் பிரார்த்தனைதான் அவளுக்கு. வேண்டும் வேண்டுதலில் அவள் நிம்மதியாய்ப் போய் விடுவாள் போலிருந்தது. அவ்வளவு துயரம். உடல் நலிவு. தரித்திரக் கஷ்டம் பட்ட காலங்களில் கூட அவள் இவ்வளவு வேதனைப்பட்டதில்லை..இருவரையும் பார்த்துப் பார்த்து கண்ணீர் வடிக்காத குறை எங்களுக்கு. மன பாரத்தோடேயே திரிந்தோம். இதுவரை மூன்று முறை ஆஸ்பத்திரி போய்த் திரும்பி விட்டார் அப்பா. அம்மா பல்லெடுக்க என்று ஒரு முறை போய் வந்தாள். எல்லாப் பல்லும் எடுத்தாயிற்று. பொக்கை வாய் ஆகிப் போனது. பல் இல்லாத அந்தப் பொக்கை வாய் முகமும் அம்மாவுக்கு அழகாய்த்தான் இருந்தது. அப்பாவுக்கு சாகும்வரை ஒரு பல் கூட விழவில்லை. அத்தனை முடியாத காலத்திலும் தட்டை, முறுக்கு என்று உள்ளே தள்ளிக் கொண்டுதான் இருந்தார். பார்ப்பவர்கள் எண்பத்தியாறு ஆச்சா? என்று கேட்டு வியந்தார்கள்? ஆனால் உட்கார்ந்த மேனிக்கே அல்லது படுத்த வாகிலேயே அப்பா அனுபவிக்கும் அந்த உடலுறுப்புகள் செயலிழப்பு வியாதிக் கொடுமை சொல்லி மாளாது. இடது கையும் என்றோ செயலிழந்து போனது. அது பெருங்கொடுமை. தனிக் கதை. பெட் ஃபேன் வைத்துத்தான் அப்பாவுக்கு எல்லாம். கடைசிவரை அம்மாதான் எடுத்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அலம்பி விட்டாள். கை திரும்பிப் பின்னால் வராது அப்பாவுக்கு. நன்னா அலம்பு…ஒட்டிண்டிருக்கு போலத் தெரியறது என்று படுத்துவார் அப்பா..அந்த அறைக் கதவு சாத்தியேதான் இருக்கும். இரண்டு பக்கங்களில் கதவு உண்டு அந்த அறைக்கு. ஒன்று ஹாலோடு சேர்ந்தது. இன்னொரு கதவு சமையலறையோடு. இரண்டு அறையும், ஒரு ஹாலும், ஒரு கிச்சனும் உள்ள அந்தச் சின்ன வீட்டில் நடக்காத விசேஷங்களில்லை. எல்லா நல்ல காரியங்களும் அந்த அண்ணா வீட்டில்தான் நடந்தேறியிருக்கின்றன. தங்கைகளுக்கு வளைகாப்புகள், என் வீட்டுக்காரி நீலாவுக்கு சீமந்தம், என்றும், வருடா வருடம் வரும் முக்கிய விசேஷ நாட்களும் எனப் புண்ணிய ஷேத்திரமாய் விளங்கியது அந்த வீடு. அந்தப் பகுதி மாமா மாமிகள் என்று எவரேனும் வந்து கொண்டேயிருப்பார்கள். அப்பா அம்மாவிடம் நலம் விசாரித்து, நமஸ்கரித்து ஆசி வாங்கிச் செல்வார்கள். அப்பாவை விட அம்மாவுக்கு அப்படி ஒரு முகராசி. அந்த லட்சுமி களை அவளின் பெரும் சொத்து..போதும் நிறுத்திக்கோ…இன்னும் ஆஸ்பத்திரிக்கு வேறே போகணுமே….அதுக்குத்தானே வந்திருக்கே…ராத்திரி பூராவும் பஸ்ல தூங்காம வந்திருப்பே…அசதியாகி நீ விழுந்திடப் போறே…என்றாள் மன்னி. சீக்கிரம் ஆஸ்பத்திரி கிளம்பு என்று உணர்த்துகிறாளோ?.அதான் சங்கரண்ணா இருக்கானே அங்கே. நாளைக்குக் கூட நான் ஆஸ்பத்திரி போகலாமில்லே…இல்ல ராத்திரி போயிடறேன். நான் போய் அவனை ரிலீஃப் பண்ணினா அவன் வந்து நல்லா ஒரு தூக்கம் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாமே….நான் பார்த்துப்பேனே அப்பாவை…!.அப்பா இம்முறை வீடு திரும்புவார் என்றே தோன்றவில்லை. ஏறக்குறைய எல்லா உறுப்புகளும் செயலிழந்து விட்டன என்றே சொல்லலாம். கீழே ட்யூப் மாற்றியதற்கு ஊசி போட்டார்கள் என்றும் மாற்றியதே அப்பாவுக்குத் தெரியாது என்றும் அண்ணா சொன்னான். மூச்சு மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. விழியே திறக்கவில்லை. கண்களை மூடியபடியேதான் கிடந்தார் அப்பா. அதற்கே சக்தியில்லைபோல் தோன்றியது. நான் போய் நின்றபோது காது வழியே சொன்னான் சங்கரன் அண்ணா. அப்பாவுக்குக் கேட்டதா தெரியவில்லை. அடுத்து சில நாட்கள்தான் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது..நீ போய் குளிச்சி சாப்டிட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு வந்தாப் போதும்…என்றேன் நான். அசதில நீ படுக்கைல விழுந்திடப்போறே என்று மன்னி சொன்னதில் பயந்து போய் உடனே கிளம்பி வந்து விட்டேன். முடங்கினால் அசதி கண்டு விடும். அங்கேர்ந்து கிளம்பி இங்க தூங்க வந்திருக்கானா என்று விட்டால்? மனசுதான் என்னென்னவோ நினைத்துப் பார்க்கிறதே…!.இல்ல…இல்ல….உனக்கு விஷயம் தெரியாதா? நான் வந்ததுலேர்ந்து இங்கதான் இருக்கேன்..இதோ பார் என் பேக். அதோடவே வந்துட்டேன். ஜம்பு அய்யர் டிபன் ஸ்டால்னு ஒரு சின்னக் கடை இருக்கு பாரு…வர்ற வழிக்கு பார்த்திருப்பியே…அனுமார் கோயில் பக்கம்….அங்கதான் டிபன், சாப்பாடு…..அப்பாவுக்கு இங்க என்ன கொடுக்கச் சொல்றாங்களோ அதைக் கொடுத்திட்டிருக்கேன். இங்கதான் குளியல்….படுக்கை… தூக்கம்…சகலமும்…..அப்டியா….வீட்டுக்கே போகலியா….? என்றேன் நான் ஒன்றும் புரியாமல்..வந்த அன்னிக்குப் போய் இறங்கினேன். அத்தோட சரி….ஒரு வேளை டிபன் சாப்டிட்டு இங்க வந்தேன் பாரு…அன்னிலேர்ந்து இங்கதான் டேரா….! எதுக்கு? இங்க இருக்கிறதுல என்ன சிரமம்? காசக் கொடுத்தா சாப்பாடு கொடுக்கிறான்….இந்தா…இப்டிக் கீழே படுத்து உருண்டுட்டுப் போறோம்…செத்தா போறோம்….நாம என்ன வெளில இருந்ததேயில்லையா? ஊட்டி, சேலம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டைன்னு எத்தனை ஊர்ல கழிச்சிருக்கேன்…எல்லாம் ஓட்டல் சாப்பாடுதான்…எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டேயில்ல…..கழியாமயா போறது? அப்பாவப் பார்த்துக்கணும்…அவ்வளவுதானே…இங்கேயிருந்தே பார்த்தா போறது…? அங்க போய்ப் போய் வரணும்னு என்ன சட்டமா?-எதுக்கு வெட்டி அலைச்சல்?-நம்பளால ஒருத்தருக்கு எதுக்கு சிரமம்? – சொல்லிவிட்டு பார்த்துக்கோ…பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்…என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கக்கூசை நோக்கிப் போனான் சங்கரண்ணா..அவன் பேச்சு எதையோ உணர்த்துவது போலிருந்தது எனக்கு. ஒருத்தருக்கு என்ற அந்த வார்த்தை வித்தியாசமாயிருந்தது…! எப்படிக் கேட்பது? என்னவென்று கேட்பது? புரியவில்லை. ஆனால் எதுவோ உறுத்தியது..ரெண்டு நா ஒரு நாள்னு வந்துட்டு வந்துட்டு, தலையைக் காண்பிச்சிட்டுப் போனாப் போதுமா? கடமை முடிஞ்சிதா? இருந்து பார்க்கட்டும்… அப்பத்தானே தெரியும் கஷ்டம்…எனக்கு மட்டும்தான் விதிச்சிருக்கா? அவாளுக்குக் கடமையில்லையா? முழுக்க இருந்து, பார்த்து, எல்லா பேமென்டும் பண்ணிட்டு, டிஸ்சார்ஜ் பண்ணி அப்பாவைக் கொண்டுவந்து வீடு சேர்த்திட்டுப் போகட்டும்…எத்தனை நாள் லீவு…அது இதுன்னு எதுவும் கேட்டுக்காதே… வேணும்னா எக்ஸ்டென்ட் பண்ணிக்கட்டும்…நமக்கென்ன வந்தது? அது அவா பாடு…..புரிஞ்சிதா? ஆபீஸ் கிளம்பறேன் நான்…கவனம்…!.நான் வெளியேறி வாசல் கேட் கொண்டியைப் போடுவது வரை என் காதில் அத்தனை பேச்சும் சுளீரென்று வந்து விழுந்தன. கேட்டால் கேட்கட்டுமே என்று சொன்னது போலவேயிருந்தது. ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல.. நான் கடைசித் தம்பி. என்னிடம் கொஞ்சம் சுதந்திரம் இருக்கும்தானே? நான் பார்க்க வளர்ந்தவன். இவன் காது கேட்க நாலு வார்த்தை சொல்ல எனக்கு உரிமையில்லையா? அதன் தாக்கத்தை சங்கரண்ணா இங்கு எதிரொலிக்கிறானோ….? இதை அவன் எங்ஙனம் உணர்ந்திருப்பான்?.வந்த அன்னிலேர்ந்து இங்கதான் கிடக்கிறேன், குறைஞ்சா போய்ட்டேன்….? ஏன் இந்த விரக்தி? அவனுக்கு அம்பு எந்த திசையிலிருந்து, என்ன ரூபத்தில் வந்ததோ?.நானும் இப்படியே இங்கிருந்து கழித்து விட்டால் என்ன? தீவிரமாய் யோசனை போனது எனக்கு…!!