தொடர்கதை ஓவியம் : தமிழ்.கே.பாரதி.பீச்சில் அதிகக் கூட்டமில்லை. சிறிது நேரம் நடைபாதையில் நடந்துவிட்டு மணல்பரப்பில் உட்கார்ந்தாள் மீனாட்சி. கொஞ்சம் நடந்ததிலேயே லேசாக மூச்சு வாங்கியது. கட்டியிருந்த காட்டன் புடைவையின் தலைப்பை இழுத்துவிட்டுக் கொண்டு அவள் அருகில் உட்கார்ந்தாள் மனோகரி..மீனாட்சிக்கு கவுன்சிலிங் நடக்கிறது. வழக்கமாக அவள் கணவர்தான் அவளை அழைத்துப்போவார். இன்று அவர் ஊரில் இல்லை என்பதால் மனோகரி அழைத்துப்போனாள்.."எனக்கு துணையெல்லாம் தேவைப்படவில்லை மனோகரி. தனியாகவே போய் வருவேன்" என்று நம்பிக்கையுடன் சொன்னாள் மீனாட்சி.."உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது மீனாட்சி. கவுன்சிலிங்கை முடித்துக் கொண்டு இருவருமாக பீச்சுக்குப் போய்வரலாம்.".திவ்யா குழந்தையுடன் சரத் வீட்டுக்குப் போனதிலிருந்து மறுபடியும் சோகத்தில் மூழ்கினாள் மீனாட்சி. அதற்காகத்தான் இப்போது கவுன்சிலிங்..இதுவரை நான்கு கவுன்சிலிங் முடிந்துவிட்டது. மீனாட்சியின் முகத்தில் நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கிறது..பள்ளிக்கூட நாட்களை நினைவுகூர்ந்து எதையாவது பேசினால் மீனாட்சிக்கு உற்சாகம் பொங்கிவிடும். மனோகரியும், அவளுமாக தங்கள் பால்யகால அனுபவங்களை அசைபோட்டார்கள்..சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு தொலைதூரத்தில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.."நாமெல்லாம் வளராம அப்படியே சின்னவங்களாகவே இருந்திருக்க மாட்டோமான்னு தோணுது மனோகரி" என்றாள்..அவள் நிகழ்காலத்திற்கு வந்துவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்டாள் மனோகரி.."ஏன் மீனாட்சி, இந்த வாழ்க்கைக்கு என்ன குறை? நாம நல்லாத்தானே இருக்கோம்?"."ஏதோ இருக்கோம்." லேசான சலிப்பு எட்டிப் பார்த்தது அவள் குரலில்..மனோகரி அவளைக் கூர்ந்து பார்த்தாள்.."நீ எப்படிதான் நவீனை அனுப்பிவிட்டு சாதாரணமா இருக்கியோ! எனக்கு ஆச்சரியமா இருக்கு. என்னால திவ்யாவை உள்ளுர்ல கல்யாணம் செஞ்சு கொடுத்து அனுப்பினதையே தாங்கமுடியல."."நாம வாழ்க்கையில ஒவ்வொரு கட்டத்துக்கும் நம்மை இயல்பா தயார் செஞ்சுக்க வேணாமா மீனாட்சி?"."தயார் செஞ்சுக்கிட்டு இருக்கிறதாதான் நான் நினைச்சுக்கிட்டேன். ஆனா முடியலை மனோகரி. நீ எப்படி சமாளிக்கிறே? எனக்காவது அவரு கூட இருக்காரு. நீ தனியா வேற இருக்கே.".மனோகரி புன்னகைத்தாள்.."வாழ்க்கைன்னா இப்படிதான்னு சிலதெல்லாம் ஏற்கெனவே தீர்மானம் ஆயிருக்கு. நம் பிள்ளைகளை கல்யாணத்துக்காகவோ படிப்புக்காகவோ பிரிய வேண்டியிருக்கும்னு முன்கூட்டியே தெரிஞ்ச விஷயம்தான். அப்போதைக்கு கஷ்டமாதான் இருக்கும். நான் இல்லைன்னு சொல்லல. அதைப் பக்குவமா ஏத்துக்கணும். "."அந்த பக்குவம்தான் எனக்கு இல்லைன்னு தோணுது."."உனக்கு மட்டும்னு சொல்லாதே… நிறையப் பேருக்கு இந்த மாற்றங்களை ஏத்துக்க முடியல. என் பழைய ஹெச்.ஓ.டி. மாதவி முத்துக்குமரனைப் பற்றி உனக்கு சொல்லியிருக்கேன் இல்லையா? அவங்ககூட தன் பிள்ளை தன்னை விட்டு விலகிவிட்டதா நினைச்சு உருகறாங்க. இப்படி நிறையப் பேர்."."என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல மனோகரி. உன்னால எப்படி முடியுதுன்னு நான் கேட்டேன்."."குறிப்பா எதுவும் சொல்லத் தெரியலை. நான் சின்ன வயசுலேயே நிறைய இழப்பைப் பார்த்துவிட்டேன். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.".இந்த பதிலே போதுமானது என்று தோன்றியது. மீனாட்சியிடம் கலீல் கிப்ரானைப் பற்றியெல்லாம் பேசமுடியாது. 'போரடிக்காதே மனோகரி' என்று முகத்துக்கு நேராக சொல்லிவிடுவாள்.."எதிர்பார்த்த விஷயங்களையே அது நேரும்போது நம்மால எடுத்துக்க முடியலையே! கொஞ்சம் நினைச்சுப் பாரு. எதிர்பார்க்காத விஷயங்கள் தாக்கும்போது எப்படி இருக்கும்னு! அந்தமாதிரியான அனுபவங்கள்தான் நம்மைப் பக்குவப்படுத்துது.".மீனாட்சி காதில் வாங்கிக் கொள்கிறாளா என்பது தெரியவில்லை. சுண்டல் விற்றுக் கொண்டிருந்த பையனை கவனித்துக் கொண்டிருந்தாள்..அந்தப் பையன் இவர்கள் அருகில் வந்தான். எப்படியும் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் சுண்டலைப் பொட்டலமாகக் கட்டினான்.."உன் ஊர் எதுப்பா?" என்று கேட்டாள் மனோகரி.."ராமநாதபுரம். எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான்" என்று கூடுதலாக தகவலைச் சொன்னான்..சுண்டல் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு காசு வாங்கிக் கொண்டு கடமை வீரனைப் போல் அவன் நகர்ந்தான்..வெள்ளந்தியான அவன் முகமும், கையில் இருந்த தழும்புகளும் பரிதாபத்தைத் தூண்டியது.."பார்த்தியா மீனாட்சி, இந்த சின்ன வயசில் பிழைப்புக்காக எவ்வளவு தூரம் வந்திருக்கிறான்?"."அவன் அம்மாவும் கூட வந்திருப்பாளாக இருக்கும். அவள் செய்து தரும் சுண்டலைத் தானே இவன் விற்கிறான்?"."அவனைக் கூப்பிட்டு விசாரித்துப் பார். நிச்சயமாக அப்படி இருக்காது. அவன் அம்மா ஏஜெண்டு மூலமாக இவனை பஸ் ஏற்றி அனுப்பியிருப்பாள். இப்படி நிறைய பையன்கள் படிப்பைத் தொலைத்துவிட்டு இங்கே பிழைக்க வர்றாங்க.".மீனாட்சியால் நம்ப முடியவில்லை.."அப்படியா சொல்றே? உனக்கெப்படி மனோகரி இதெல்லாம் தெரியும்?"."இவங்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார். உனக்கும் தெரியவரும். "."சுற்றியிருக்கிற சின்னஞ்சிறுசுகளின் கஷ்டத்தைப் பார்த்தால் நம் கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லை."."நாம் கிளம்பலாம் மனோகரி" என்று சட்டென்று எழுந்து கொண்டாள் மீனாட்சி..சுயபச்சாதாபத்தில் மூழ்கியிருந்த அவளுக்கு மனோகரியின் பேச்சு ரசிக்கவில்லை..…...புத்தக அலமாரியை சீர் செய்து கொண்டிருந்த போது மறுபடியும் அந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. டாக்டர் சிவநேசன் எழுதிய புத்தகம். அதன் பின் அட்டையில் இருந்த மின்னஞ்சல் முகவரியை அப்போதுதான் கவனித்தாள் மனோகரி..இந்தப் புத்தகத்தைப் பற்றிய தன் கருத்தை அவருக்குத் தெரிவிக்காதது உருத்திக் கொண்டிருந்தது. ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடலாம். அதுதான் சரி. நினைத்தவுடனேயே செயலில் இறங்கினாள்..அடுத்த அரைமணிக்கெல்லாம் அவரிடமிருந்து பதில் அஞ்சல் வந்தது. அவள் வாசிப்பின் ஆழத்தை பாராட்டி எழுதியிருந்தார். அதைப் படித்தபோது மனோகரிக்கு ஒரு கூச்ச உணர்வு ஏற்பட்டது..'….இந்த காலத்தில் அபூர்வமாகிவிட்ட ஒரு ஆழ்ந்த வாசிப்பும், புரிதலும் என்னை பிரமிக்க வைத்தது….'.எப்படிப்பட்ட அறிவாளி அவர்! அவரது பாராட்டு இவளுக்கு முக்கியமாகத் தோன்றியது. அன்று முழுக்க அவள் முகத்தில் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது..கல்லூரியில் நுழைந்தபோது இனியா எதிரில் வந்தாள்.."உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க மேடம்.".எதிரிலிருந்த இளம் தம்பதிகளை இவளுக்கு யார் என்று தெரியவில்லை. அவர்களாக அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும் என்று காத்திருந்தாள்.."வணக்கம் மேடம்! ஐ ஆம் மோகன். எங்க அம்மாவை உங்களுக்குத் தெரியும். இந்த டிபார்ட்மென்டில் ஒர்க் பண்ணியிருக்காங்க. இவங்க என் ஒய்ப் ரம்யா."."உங்க அம்மா பேரு?"."மாதவி முத்துக்குமரன்."."ஓ! மாதவி மேடத்தின் மகனா நீங்க? அம்மா நல்லா இருக்காங்களா?"."நல்லாதான் இருக்காங்க மேடம். நான் உங்களைப் பார்க்க வந்தது ரம்யாவுக்காகதான். நீயே சொல்லேன் ரம்யா."."மேடம் நான் எம்.ஏ. எக்கனாமிக்ஸ் படிச்சிருக்கேன். இப்ப பி.எச்.டி பண்ணனும்னு தோணுது. நம்ம காலேஜுல கைடு யாராவது கிடைப்பாங்களா?"."அதுக்கென்ன? எக்கனாமிக்ஸ் டிபார்ட்மென்டுல நான் உங்களை அறிமுகம் செஞ்சு வெக்கிறேன். மாதவி மேடத்தை தெரியாதவங்களே இருக்க முடியாது. கட்டாயம் உதவி செய்வாங்க.".அவர்களை அழைத்துக் கொண்டு பொருளாதாரத் துறைக்கு சென்றாள் மனோகரி. அவள் நினைத்ததுபோல விஷயம் அவ்வளவு சுலபத்தில் முடியவில்லை. அங்கிருந்த மூன்று கைடுகளுக்கும் கைவசம் நிறைய மாணவர்கள் ஏற்கெனவே இருந்தார்கள். ஏமாற்றத்துடன் திரும்பி வந்தாள் மனோகரி.."எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு ரம்யா. நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விசாரித்துச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தாள்..இவள் திரும்பி வந்தபோது டிபார்ட்மென்டில் எல்லோரும் இவளைப் பார்ப்பதும் தங்களுக்குள் பேசிக்கொள்வதுமாக இருப்பதை கவனித்தாள். என்னவாக இருக்கும்?."உங்களுக்கு விஷயம் தெரியுமா மேடம்? பத்மாவதி மேடம் விருப்ப ஓய்வு எடுத்துக்கப் போறாங்களாம்." டேவிட் இவளிடம் சொன்ன போது நம்பமுடியாமல் பார்த்தாள் மனோகரி..இந்த ஆண்டு முடிவில் துறைத்தலைவர் கணேசமூர்த்தியும், ரத்னசாமியும் ஓய்வு பெறப் போகிறார்கள். அடுத்த துறைத்தலைவர் பதவிக்காக கனவு கண்டு கொண்டிருந்தாள் பத்மாவதி. அவளாவது விருப்ப ஓய்வில் போவதாவது? இது என்ன புதுக்கதை?."நிஜமாவா சொல்றீங்க?"."ஆமாம் மேடம். அவங்க பொண்ணு நார்த் இண்டியாவில் இருக்காங்களாம். பிஸியான டாக்டர் போலிருக்கு. அவங்களால குடும்பத்தையும் தொழிலையும் சமாளிக்க முடியலையாம். இவங்களை உதவிக்கு கூட வந்து இருன்னு சொல்றாங்களாம். அதனால இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காங்க.".பாவம் பத்மாவதி. அவளுக்கு நிச்சயமாக இதில் பூரண சம்மதம் இருக்காது. ஹெச்.ஓ.டி ஆவது என்பது அவளுக்கு எத்தனை கால கனவு?."நீங்க தயாராகுங்க மேடம். அடுத்த வருஷம் நீங்கதான் ஹெச்.ஓ.டி.".மனோகரி திகைத்தாள். இது என்ன எதிர்பாராத திருப்பம்?.விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் அவள் பத்மாவதியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். இந்த திடீர் மாற்றத்தில் தன் நிலைமை என்ன என்ற உணர்வே அவளுக்கு ஏற்படவில்லை..இங்கே எல்லோருமே யார் எப்போது ஓய்வு பெறுகிறார்கள், யாருக்கு எப்போது பதவி உயர்வு என்ற பட்டியலை மனப்பாடமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்..ஆனால் மனோகரிக்கு இதிலெல்லாம் அக்கறையே இல்லை. பாடம் நடத்துவதில் கிடைக்கும் மனநிறைவு பதவியில் கிடைக்காது என்பதுதான் அவள் எண்ணம்..இந்த திடீர் மாற்றத்துக்கு அவள் மனதளவில் தயாராக இல்லை. நிர்வாகம் என்பது அவ்வளவு சுலபமில்லை. அதுவும் இந்தக் கல்லூரியில்..ஏதோ வந்தோமா பாடம் நடத்தினோமா போனோமா என்ற வரையில் பிரச்னை இல்லை. நிர்வாகத்தினுள் நுழைவதென்பது மனோகரியைப் பொருத்தவரையில் பெரிய சவால்..அன்று அவள் வராந்தாவில் நடந்தபோதும் கார் பார்க்குக்குப் போகும் வழியிலும் எதிர்பட்டவர்கள் அத்தனை பேரும் அவளை ஒரு புதிய மரியாதையுடன் பார்ப்பதை உணரத்தான் செய்தாள். இதுதான் பதவி என்பதோ!.(தொடரும்)
தொடர்கதை ஓவியம் : தமிழ்.கே.பாரதி.பீச்சில் அதிகக் கூட்டமில்லை. சிறிது நேரம் நடைபாதையில் நடந்துவிட்டு மணல்பரப்பில் உட்கார்ந்தாள் மீனாட்சி. கொஞ்சம் நடந்ததிலேயே லேசாக மூச்சு வாங்கியது. கட்டியிருந்த காட்டன் புடைவையின் தலைப்பை இழுத்துவிட்டுக் கொண்டு அவள் அருகில் உட்கார்ந்தாள் மனோகரி..மீனாட்சிக்கு கவுன்சிலிங் நடக்கிறது. வழக்கமாக அவள் கணவர்தான் அவளை அழைத்துப்போவார். இன்று அவர் ஊரில் இல்லை என்பதால் மனோகரி அழைத்துப்போனாள்.."எனக்கு துணையெல்லாம் தேவைப்படவில்லை மனோகரி. தனியாகவே போய் வருவேன்" என்று நம்பிக்கையுடன் சொன்னாள் மீனாட்சி.."உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது மீனாட்சி. கவுன்சிலிங்கை முடித்துக் கொண்டு இருவருமாக பீச்சுக்குப் போய்வரலாம்.".திவ்யா குழந்தையுடன் சரத் வீட்டுக்குப் போனதிலிருந்து மறுபடியும் சோகத்தில் மூழ்கினாள் மீனாட்சி. அதற்காகத்தான் இப்போது கவுன்சிலிங்..இதுவரை நான்கு கவுன்சிலிங் முடிந்துவிட்டது. மீனாட்சியின் முகத்தில் நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கிறது..பள்ளிக்கூட நாட்களை நினைவுகூர்ந்து எதையாவது பேசினால் மீனாட்சிக்கு உற்சாகம் பொங்கிவிடும். மனோகரியும், அவளுமாக தங்கள் பால்யகால அனுபவங்களை அசைபோட்டார்கள்..சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு தொலைதூரத்தில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.."நாமெல்லாம் வளராம அப்படியே சின்னவங்களாகவே இருந்திருக்க மாட்டோமான்னு தோணுது மனோகரி" என்றாள்..அவள் நிகழ்காலத்திற்கு வந்துவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்டாள் மனோகரி.."ஏன் மீனாட்சி, இந்த வாழ்க்கைக்கு என்ன குறை? நாம நல்லாத்தானே இருக்கோம்?"."ஏதோ இருக்கோம்." லேசான சலிப்பு எட்டிப் பார்த்தது அவள் குரலில்..மனோகரி அவளைக் கூர்ந்து பார்த்தாள்.."நீ எப்படிதான் நவீனை அனுப்பிவிட்டு சாதாரணமா இருக்கியோ! எனக்கு ஆச்சரியமா இருக்கு. என்னால திவ்யாவை உள்ளுர்ல கல்யாணம் செஞ்சு கொடுத்து அனுப்பினதையே தாங்கமுடியல."."நாம வாழ்க்கையில ஒவ்வொரு கட்டத்துக்கும் நம்மை இயல்பா தயார் செஞ்சுக்க வேணாமா மீனாட்சி?"."தயார் செஞ்சுக்கிட்டு இருக்கிறதாதான் நான் நினைச்சுக்கிட்டேன். ஆனா முடியலை மனோகரி. நீ எப்படி சமாளிக்கிறே? எனக்காவது அவரு கூட இருக்காரு. நீ தனியா வேற இருக்கே.".மனோகரி புன்னகைத்தாள்.."வாழ்க்கைன்னா இப்படிதான்னு சிலதெல்லாம் ஏற்கெனவே தீர்மானம் ஆயிருக்கு. நம் பிள்ளைகளை கல்யாணத்துக்காகவோ படிப்புக்காகவோ பிரிய வேண்டியிருக்கும்னு முன்கூட்டியே தெரிஞ்ச விஷயம்தான். அப்போதைக்கு கஷ்டமாதான் இருக்கும். நான் இல்லைன்னு சொல்லல. அதைப் பக்குவமா ஏத்துக்கணும். "."அந்த பக்குவம்தான் எனக்கு இல்லைன்னு தோணுது."."உனக்கு மட்டும்னு சொல்லாதே… நிறையப் பேருக்கு இந்த மாற்றங்களை ஏத்துக்க முடியல. என் பழைய ஹெச்.ஓ.டி. மாதவி முத்துக்குமரனைப் பற்றி உனக்கு சொல்லியிருக்கேன் இல்லையா? அவங்ககூட தன் பிள்ளை தன்னை விட்டு விலகிவிட்டதா நினைச்சு உருகறாங்க. இப்படி நிறையப் பேர்."."என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல மனோகரி. உன்னால எப்படி முடியுதுன்னு நான் கேட்டேன்."."குறிப்பா எதுவும் சொல்லத் தெரியலை. நான் சின்ன வயசுலேயே நிறைய இழப்பைப் பார்த்துவிட்டேன். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.".இந்த பதிலே போதுமானது என்று தோன்றியது. மீனாட்சியிடம் கலீல் கிப்ரானைப் பற்றியெல்லாம் பேசமுடியாது. 'போரடிக்காதே மனோகரி' என்று முகத்துக்கு நேராக சொல்லிவிடுவாள்.."எதிர்பார்த்த விஷயங்களையே அது நேரும்போது நம்மால எடுத்துக்க முடியலையே! கொஞ்சம் நினைச்சுப் பாரு. எதிர்பார்க்காத விஷயங்கள் தாக்கும்போது எப்படி இருக்கும்னு! அந்தமாதிரியான அனுபவங்கள்தான் நம்மைப் பக்குவப்படுத்துது.".மீனாட்சி காதில் வாங்கிக் கொள்கிறாளா என்பது தெரியவில்லை. சுண்டல் விற்றுக் கொண்டிருந்த பையனை கவனித்துக் கொண்டிருந்தாள்..அந்தப் பையன் இவர்கள் அருகில் வந்தான். எப்படியும் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் சுண்டலைப் பொட்டலமாகக் கட்டினான்.."உன் ஊர் எதுப்பா?" என்று கேட்டாள் மனோகரி.."ராமநாதபுரம். எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான்" என்று கூடுதலாக தகவலைச் சொன்னான்..சுண்டல் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு காசு வாங்கிக் கொண்டு கடமை வீரனைப் போல் அவன் நகர்ந்தான்..வெள்ளந்தியான அவன் முகமும், கையில் இருந்த தழும்புகளும் பரிதாபத்தைத் தூண்டியது.."பார்த்தியா மீனாட்சி, இந்த சின்ன வயசில் பிழைப்புக்காக எவ்வளவு தூரம் வந்திருக்கிறான்?"."அவன் அம்மாவும் கூட வந்திருப்பாளாக இருக்கும். அவள் செய்து தரும் சுண்டலைத் தானே இவன் விற்கிறான்?"."அவனைக் கூப்பிட்டு விசாரித்துப் பார். நிச்சயமாக அப்படி இருக்காது. அவன் அம்மா ஏஜெண்டு மூலமாக இவனை பஸ் ஏற்றி அனுப்பியிருப்பாள். இப்படி நிறைய பையன்கள் படிப்பைத் தொலைத்துவிட்டு இங்கே பிழைக்க வர்றாங்க.".மீனாட்சியால் நம்ப முடியவில்லை.."அப்படியா சொல்றே? உனக்கெப்படி மனோகரி இதெல்லாம் தெரியும்?"."இவங்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார். உனக்கும் தெரியவரும். "."சுற்றியிருக்கிற சின்னஞ்சிறுசுகளின் கஷ்டத்தைப் பார்த்தால் நம் கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லை."."நாம் கிளம்பலாம் மனோகரி" என்று சட்டென்று எழுந்து கொண்டாள் மீனாட்சி..சுயபச்சாதாபத்தில் மூழ்கியிருந்த அவளுக்கு மனோகரியின் பேச்சு ரசிக்கவில்லை..…...புத்தக அலமாரியை சீர் செய்து கொண்டிருந்த போது மறுபடியும் அந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. டாக்டர் சிவநேசன் எழுதிய புத்தகம். அதன் பின் அட்டையில் இருந்த மின்னஞ்சல் முகவரியை அப்போதுதான் கவனித்தாள் மனோகரி..இந்தப் புத்தகத்தைப் பற்றிய தன் கருத்தை அவருக்குத் தெரிவிக்காதது உருத்திக் கொண்டிருந்தது. ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடலாம். அதுதான் சரி. நினைத்தவுடனேயே செயலில் இறங்கினாள்..அடுத்த அரைமணிக்கெல்லாம் அவரிடமிருந்து பதில் அஞ்சல் வந்தது. அவள் வாசிப்பின் ஆழத்தை பாராட்டி எழுதியிருந்தார். அதைப் படித்தபோது மனோகரிக்கு ஒரு கூச்ச உணர்வு ஏற்பட்டது..'….இந்த காலத்தில் அபூர்வமாகிவிட்ட ஒரு ஆழ்ந்த வாசிப்பும், புரிதலும் என்னை பிரமிக்க வைத்தது….'.எப்படிப்பட்ட அறிவாளி அவர்! அவரது பாராட்டு இவளுக்கு முக்கியமாகத் தோன்றியது. அன்று முழுக்க அவள் முகத்தில் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது..கல்லூரியில் நுழைந்தபோது இனியா எதிரில் வந்தாள்.."உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க மேடம்.".எதிரிலிருந்த இளம் தம்பதிகளை இவளுக்கு யார் என்று தெரியவில்லை. அவர்களாக அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும் என்று காத்திருந்தாள்.."வணக்கம் மேடம்! ஐ ஆம் மோகன். எங்க அம்மாவை உங்களுக்குத் தெரியும். இந்த டிபார்ட்மென்டில் ஒர்க் பண்ணியிருக்காங்க. இவங்க என் ஒய்ப் ரம்யா."."உங்க அம்மா பேரு?"."மாதவி முத்துக்குமரன்."."ஓ! மாதவி மேடத்தின் மகனா நீங்க? அம்மா நல்லா இருக்காங்களா?"."நல்லாதான் இருக்காங்க மேடம். நான் உங்களைப் பார்க்க வந்தது ரம்யாவுக்காகதான். நீயே சொல்லேன் ரம்யா."."மேடம் நான் எம்.ஏ. எக்கனாமிக்ஸ் படிச்சிருக்கேன். இப்ப பி.எச்.டி பண்ணனும்னு தோணுது. நம்ம காலேஜுல கைடு யாராவது கிடைப்பாங்களா?"."அதுக்கென்ன? எக்கனாமிக்ஸ் டிபார்ட்மென்டுல நான் உங்களை அறிமுகம் செஞ்சு வெக்கிறேன். மாதவி மேடத்தை தெரியாதவங்களே இருக்க முடியாது. கட்டாயம் உதவி செய்வாங்க.".அவர்களை அழைத்துக் கொண்டு பொருளாதாரத் துறைக்கு சென்றாள் மனோகரி. அவள் நினைத்ததுபோல விஷயம் அவ்வளவு சுலபத்தில் முடியவில்லை. அங்கிருந்த மூன்று கைடுகளுக்கும் கைவசம் நிறைய மாணவர்கள் ஏற்கெனவே இருந்தார்கள். ஏமாற்றத்துடன் திரும்பி வந்தாள் மனோகரி.."எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு ரம்யா. நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விசாரித்துச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தாள்..இவள் திரும்பி வந்தபோது டிபார்ட்மென்டில் எல்லோரும் இவளைப் பார்ப்பதும் தங்களுக்குள் பேசிக்கொள்வதுமாக இருப்பதை கவனித்தாள். என்னவாக இருக்கும்?."உங்களுக்கு விஷயம் தெரியுமா மேடம்? பத்மாவதி மேடம் விருப்ப ஓய்வு எடுத்துக்கப் போறாங்களாம்." டேவிட் இவளிடம் சொன்ன போது நம்பமுடியாமல் பார்த்தாள் மனோகரி..இந்த ஆண்டு முடிவில் துறைத்தலைவர் கணேசமூர்த்தியும், ரத்னசாமியும் ஓய்வு பெறப் போகிறார்கள். அடுத்த துறைத்தலைவர் பதவிக்காக கனவு கண்டு கொண்டிருந்தாள் பத்மாவதி. அவளாவது விருப்ப ஓய்வில் போவதாவது? இது என்ன புதுக்கதை?."நிஜமாவா சொல்றீங்க?"."ஆமாம் மேடம். அவங்க பொண்ணு நார்த் இண்டியாவில் இருக்காங்களாம். பிஸியான டாக்டர் போலிருக்கு. அவங்களால குடும்பத்தையும் தொழிலையும் சமாளிக்க முடியலையாம். இவங்களை உதவிக்கு கூட வந்து இருன்னு சொல்றாங்களாம். அதனால இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காங்க.".பாவம் பத்மாவதி. அவளுக்கு நிச்சயமாக இதில் பூரண சம்மதம் இருக்காது. ஹெச்.ஓ.டி ஆவது என்பது அவளுக்கு எத்தனை கால கனவு?."நீங்க தயாராகுங்க மேடம். அடுத்த வருஷம் நீங்கதான் ஹெச்.ஓ.டி.".மனோகரி திகைத்தாள். இது என்ன எதிர்பாராத திருப்பம்?.விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் அவள் பத்மாவதியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். இந்த திடீர் மாற்றத்தில் தன் நிலைமை என்ன என்ற உணர்வே அவளுக்கு ஏற்படவில்லை..இங்கே எல்லோருமே யார் எப்போது ஓய்வு பெறுகிறார்கள், யாருக்கு எப்போது பதவி உயர்வு என்ற பட்டியலை மனப்பாடமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்..ஆனால் மனோகரிக்கு இதிலெல்லாம் அக்கறையே இல்லை. பாடம் நடத்துவதில் கிடைக்கும் மனநிறைவு பதவியில் கிடைக்காது என்பதுதான் அவள் எண்ணம்..இந்த திடீர் மாற்றத்துக்கு அவள் மனதளவில் தயாராக இல்லை. நிர்வாகம் என்பது அவ்வளவு சுலபமில்லை. அதுவும் இந்தக் கல்லூரியில்..ஏதோ வந்தோமா பாடம் நடத்தினோமா போனோமா என்ற வரையில் பிரச்னை இல்லை. நிர்வாகத்தினுள் நுழைவதென்பது மனோகரியைப் பொருத்தவரையில் பெரிய சவால்..அன்று அவள் வராந்தாவில் நடந்தபோதும் கார் பார்க்குக்குப் போகும் வழியிலும் எதிர்பட்டவர்கள் அத்தனை பேரும் அவளை ஒரு புதிய மரியாதையுடன் பார்ப்பதை உணரத்தான் செய்தாள். இதுதான் பதவி என்பதோ!.(தொடரும்)