ஒரு நிருபரின் டைரி – 15.– எஸ். சந்திரமெளலி.மல்யுத்த வீரர் ஹரி பிரசாத் சௌராஸியா.1957ஆம் வருடம். வடக்கே மிகப் பிரபலமான 'உஸ்தாத் ரஹ்முதீன் கான்' என்ற இசை மேதையின் கச்சேரி. தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிக்கான அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அரங்கம் ஹவுஸ்ஃபுல். கச்சேரி ஆரம்பிக்க இன்னும் சிறிது நேரம்தான். திடீரென்று உஸ்தாத், தன் கூட இருந்த ஒரு இளைஞரை அழைத்து "நீ கொஞ்ச நேரம் வாசி" என்று சொன்னார். உஸ்தாத் ஆர்டர் போட்டுவிட்டால் அப்பீல் ஏது? அந்த இளைஞர் தன் சந்தூர் சகிதம் மேடைக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தார். "அரங்கம் முழுக்க நிறைந்திருக்கும் ரசிகர்கள் உஸ்தாத்தின் இசையைக் கேட்கத்தான் வந்திருக்கிறார்கள்'' என்பதை நன்றாக உணர்ந்திருந்த அந்த இளைஞர் தன் திறமை முழுவதையும் காட்டி, சந்தூர் இசை மழை பொழிந்தார். இத்தனைக்கும் பக்க வாத்தியமாக தபலா கூட இல்லை..உஸ்தாத் சொன்ன கொஞ்ச நேரம் ஒரு மணி நேரமாக நீண்டது. வாசித்து முடித்த இளைஞரைப் பாராட்டி, "இவர் வாசித்த 'யமா' ராகம் என் மனதில் இன்னமும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு மணி நேரம் நான் இவரது இசையைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை. இந்த மூடில் என்னால் இங்கே கச்சேரி செய்வது என்பது முடியாத காரியம். எனவே என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். இன்றைய இசை நிழ்ச்சி இத்துடன் நிறைவடைந்தது" என்று சொல்லிவிட்டார் உஸ்தாத். அந்த 'யமா'காதக இசை இளைஞர்தான் பண்டிட் சிவகுமார் சர்மா..ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் பண்டிட் சிவகுமார் சர்மா. தாய்மொழி தோக்ரி. அப்பா உமா தத் சர்மா பாடகர். ஐந்து வயதில் அப்பா, மகனுக்கு வாய்ப்பாட்டும், தபலாவும் கற்றுக் கொடுத்தார். பதிமூன்று வயதில் சந்தூர் கற்கத் தொடங்கினார். 27 வயதில் மும்பையில் முதல் கச்சேரி. சந்தூரின் முன் அமர்ந்து தந்திகளை மீட்ட ஆரம்பித்தால், தன் இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுவிடுவார்..ஏர் டெல்லின் மூதாதையரான ஸ்கை செல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு இசை நிகழ்ச்சிக்காக 1997ல் சென்னை வந்தபோது பண்டிட்ஜியை சந்தித்தேன்..'சந்தூர்' என்று ஒரு இசைக்கருவி இருப்பதே இங்கு பலருக்குத் தெரியாது. டான்ஸர் சித்ரா விஸ்வேஸ்வரனின் கணவர் விஸ்வேஸ்வரன் கூட சந்தூர் கலைஞர்தான். வேத காலத்திலிருந்தே இசைக்கப்பட்டு வருகிற மிகப் பழைமையான ஒரு இசைக்கருவி "சந்தூர்". இது வீணை குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் நூறு தந்திகள் இருக்கின்றன. அதனால் இதற்கு "சத தந்தி வீணை" என்ற ஒரு பெயரும் உண்டு. சீனாவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் கூட சந்தூர் வாசிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்.."சந்தூர் இசை மிகவும் மென்மையானது. ஆற்று நீரின் சலசலப்பு போன்றது. தியானம் செய்யும்போது கேட்பதற்கு மிகவும் உகந்தது. ஸ்வீடன் நாட்டில் ஒரு மனோ தத்துவ நிபுணர் தம்மிடம் வருகிற மன நோயாளிகளை அமைதிப்படுத்த சந்தூர் இசையைத்தான் பயன்படுத்துவதாக என் நண்பர் ஒருவர் சொன்னார்" என்று சந்தூர் புகழ் பாடினார் சர்மாஜி..பண்டிட் சிவகுமார் சர்மா மேடையில் சந்தூர் வாசித்துக் கொண்டிருக்கும்போது அவரைப் பாராட்டும் வகையில் ரசித்துக் கைதட்டினால் கூட அவருக்குப் பிடிக்காது. "அது என் கான்சன்டிரேஷனை பாதிக்கும்; வாசித்து முடித்த பிறகு கைதட்டட்டுமே!" என்று சொல்வார். "ரசிகர்கள் எப்படி இசையை ரசிக்க வேண்டும்" என்பதற்குக் கூட அவர் ஒரு ஸ்கேல் வைத்திருக்கிறார். அற்புதமான விஷயங்களை ரசிகர்கள் 'ஹா!" என்று சொல்லி ரசிக்க வேண்டுமாம். 'ஹா!" இதயத்திலிருந்து வரும் ரசனையின் வெளிப்பாடாம்! எல்லோரும் சொல்லும் வழக்கமான 'வாவ்!' வெறுமனே வாயிலிருந்து வரும் வியப்பு! அவ்வளவுதான்!."இன்று மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்துக்கு நம் பாரம்பரிய இசை பலியாகிவிட்டது போலத் தோன்றுகிறதே?" என்று கேட்டபோது, " நம் பாரம்பரிய சங்கீதம் மிகவும் தொன்மையானது; மேற்கத்திய தாக்கத்தால் சுருண்டு போய்விடும் அளவுக்கு பலவீனமானது இல்லை. எல்லா வயதினருக்கும் நம் பாரம்பரிய இசை மீது ஆர்வம் இருக்கிறது; மேற்கத்திய இசை சாட்லைட் சானல்கள் மூலமாக வீடு தேடி வந்துவிடுகிறது; ஆனால் இளைஞர்கள் பாரம்பரிய இசையைத் தேடிச் சென்று ரசிக்கிறார்கள்" என்றார்..காஷ்மீர் பற்றி கனத்த மனசுடன் பேசினார். தீவிரவாதம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியே துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிட்களின் குடும்பங்களுள் இவரது சகோதரரின் குடும்பமும் ஒன்று..பண்டிட் சிவகுமார் சர்மாவும், புல்லாங்குழல் வித்வான் ஹரி பிரசாத் சௌராஸியாவும் இணைந்து ஷிவ்-ஹரி என்ற பெயரில் சில்சிலா, சாந்தினி, பரம்பரா போன்ற சில இந்திப் படங்களுக்கு இசை அமைத் திருக்கிறார்கள்..1997ல், பண்டிட் சிவகுமார் சர்மாவை பேட்டிகண்ட சில நாட்களிலேயே சென்னைக்கு வந்திருந்த ஹரி பிரசாத் சௌராசியாவையும் சந்தித்து பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'நாரத கான சபா'வில் அவரது புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. நிகழ்ச்சி முடிந்து அவர் ஹோட்டலுக்குப் புறப்பட்ட போது என்னையும் காரில் கூட அழைத்துக் கொண்டு சென்றார். காரிலேயே பேட்டி ஆரம்பமானது..சௌராஸியாவின் குடும்பப் பின்னணி ரொம்ப வித்தியாசமானது. அவரது பரம்பரையில் பலரும் மல்யுத்த வீரர்கள். அப்பா உள்ளூர் சாம்பியன். சௌராசியாவுக்குக் கூட இளமைக்காலத்தில் மல்யுத்தம்தான் ஹாபி. மல்யுத்தத்தக் களத்திலிருந்து ஒரு இசை ஞானியை உருவாக்கிய பெருமை சௌராஸியாவின் அம்மாவையே சாரும். சௌராஸியா சின்னப் பையனாக இருந்தபோதே, தன் மடியில் வைத்துக் கொண்டு, ராகங்கள் சொல்லிக் கொடுப்பாராம். அதன் பிறகு முறைப்படி ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்தாராம்..இந்துஸ்தானி பாடகர், புல்லாங்குழலைப் பிடித்தது எப்படி?."புல்லாங்குழல் ஒரு தெய்வீகமான இசைக்கருவி. பகவான் கிருஷ்ணர் என்றால் புல்லாங்குழலும், புல்லாங்குழல் என்றால் கிருஷ்ணரும்தானே நம்முடைய நினைவுக்கு வருகிறது? தவிர, சிறு வயதில் இலகுவாக கையாளக்கூடிய இசைக்கருவியும் அதுதானே? எனவே புல்லாங்குழல் என்னைக் கவர, நான் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டேன். ஒன்பதாவது வயதில் ஒரு இசைவிழாவில் இடையில் 15 நிமிடங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இன்றுவரை ஊர் ஊராக, நாடு, நாடாக பறந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். நம் ஊர் புல்லாங்குழல் மேதை, அமரர் மாலியும், சௌராசியாவும் நெருங்கிய நண்பர்கள். ஒருவர் மீது ஒருவருக்கு அபாரமான மரியாதை; அபிமானம். தவிர, ரமணி, லால்குடி, பாலமுரளி கிருஷ்ணா, உமையாள்புரம் சிவராமன்,எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் என பல தென்னிந்திய வித்வான்களுடன் சேர்ந்து கச்சேரி செய்திருக்கிறார் சௌராசியா..சௌராஸியா பற்றி இன்னும் சில சுவாரசியமான தகவல்களையும் அன்றைக்குத் தெரிந்துக்கொண்டேன். மனுஷர் உ.பி. அரசாங்கத்தில் நாலு வருஷம் ஸ்டெனோகிராஃபராக உத்தியோகம் பார்த்திருக்கிறார். அப்புறம் அகில இந்திய வானொலியில் பணி. அதன் பிறகே முழு நேர இசைக்கலைஞரானார். இவருடைய முக்கியமான குரு அன்ன பூர்ணா தேவி. அவர் புல்லாங்குழல் கலைஞரில்லை; 'கர் பகர்' என்ற இசைக்கருவியை வாசிப்பவர். பத்துப் பன்னிரண்டு வருடங்கள் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு, கச்சேரிகள் செய்துவிட்டுத்தான் சௌராஸியா அவரிடம் சென்றார். அந்த அம்மையார் "அரிச்சுவடியிலிருந்து கற்றுக் கொள்வதாக இருந்தால் நான் கற்றுக் கொடுக்கிறேன்" என்று கண்டிஷன் போட, "அது எப்படி சாத்தியம்?" என்று கேட்டார் சௌராஸியா. "இதுவரை வலது பக்கமாக புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா? இந்தக் கணம் முதல் அதற்கு முழுக்குப் போட்டுவிட்டு, இடது பக்கமாக வாசிப்பதாக இருந்தால் சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் அன்னபூர்ணா தேவி. சௌராஸியா சம்மதிக்க, மீண்டும் அரிச்சுவடி ஆரம்பமானது. இன்று வரை இடதுபக்கம் புல்லாங்குழல் பிடித்துத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறார்..மனுஷருக்கு மறக்க முடியாத அனுபவங்கள் ஏராளம். உதாரணத்துக்கு ஒன்று. பாரிஸ் நகரில் ஒரு டி.வி. லைவ் நிகழ்ச்சி. சௌராஸியா வாசித்துக் கொண்டே இருக்கும்போது திடீரென்று புல்லாங்குழலில் விரிசல். அது இனி பிரயோஜனப்படாது. கையில் வேறு புல்லாங்குழலும் இல்லை. சிக்கலான சூழ்நிலை. என்ன செய்ய? டி.வி. யில் லைவாக இசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆடியன்ஸிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அந்தத் தருணத்தில் அவர் கற்றுக் கொண்ட ஹிந்துஸ்தானி இசை கைகொடுத்தது. சமயோஜிதமாக இந்துஸ்தானி இசை பாட ஆரம்பித்துவிட்டார்..சினிமாவுக்கு இசை அமைக்கும்போது, நீங்கள் காம்பிரமைஸ் பண்ணிக்கொள்ள வேண்டி இருக்குமே? எப்படி சமாளித்தீர்கள்?."நோ காம்பிரமைஸ் என்பதில் நாங்கள் ரொம்ப ஸ்டிரிக்ட். படத்தின் கதையை முழுமையாகக் கேட்காமல் இசை அமைக்க ஒப்புக்கொள்ளவே மாட்டோம். அதில் 'தரமான இசைக்கு வாய்ப்பு இருக்கிறதா' என்று பார்ப்போம். அவசியமானால் அதற்கேற்ப காட்சி அமைப்பை மாற்றும்படி ஆலோசனை சொல்வோம். அதன் பிறகு சிட்சுவேஷனுக்கு ஏற்ப பாடல்களுக்கு இசையமைப்போம். கிளாசிக்கலான பாடல்கள் தவிர, மாஸ் அப்பீலுக்கு பாடல்கள் தேவைப்பட்டால், கிராமிய, நாடோடிப் பாடல்களை நாடிப் போய்விடுவோம்.".நம் ஊர் வீணை பாலசந்தரின் கையெழுத்து வீணை உருவத்திலேயே இருக்கும். அதேபோல சௌராசியா ஆட்டோகிராஃப் போடுகிறபோது கூடவே ஒரு புல்லாங்குழலையும் வரைந்துவிடுவார். அவரது ஆட்டோகிராஃப் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது. சௌராசியா ரசிகர் ஒருவருக்கு அவரது சிடி ஒன்றைப் பரிசளித்தபோது அவரது ஆட்டோகிராஃபையும் சேர்த்துப் பரிசளித்துவிட்டேன்..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 15.– எஸ். சந்திரமெளலி.மல்யுத்த வீரர் ஹரி பிரசாத் சௌராஸியா.1957ஆம் வருடம். வடக்கே மிகப் பிரபலமான 'உஸ்தாத் ரஹ்முதீன் கான்' என்ற இசை மேதையின் கச்சேரி. தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிக்கான அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அரங்கம் ஹவுஸ்ஃபுல். கச்சேரி ஆரம்பிக்க இன்னும் சிறிது நேரம்தான். திடீரென்று உஸ்தாத், தன் கூட இருந்த ஒரு இளைஞரை அழைத்து "நீ கொஞ்ச நேரம் வாசி" என்று சொன்னார். உஸ்தாத் ஆர்டர் போட்டுவிட்டால் அப்பீல் ஏது? அந்த இளைஞர் தன் சந்தூர் சகிதம் மேடைக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தார். "அரங்கம் முழுக்க நிறைந்திருக்கும் ரசிகர்கள் உஸ்தாத்தின் இசையைக் கேட்கத்தான் வந்திருக்கிறார்கள்'' என்பதை நன்றாக உணர்ந்திருந்த அந்த இளைஞர் தன் திறமை முழுவதையும் காட்டி, சந்தூர் இசை மழை பொழிந்தார். இத்தனைக்கும் பக்க வாத்தியமாக தபலா கூட இல்லை..உஸ்தாத் சொன்ன கொஞ்ச நேரம் ஒரு மணி நேரமாக நீண்டது. வாசித்து முடித்த இளைஞரைப் பாராட்டி, "இவர் வாசித்த 'யமா' ராகம் என் மனதில் இன்னமும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு மணி நேரம் நான் இவரது இசையைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை. இந்த மூடில் என்னால் இங்கே கச்சேரி செய்வது என்பது முடியாத காரியம். எனவே என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். இன்றைய இசை நிழ்ச்சி இத்துடன் நிறைவடைந்தது" என்று சொல்லிவிட்டார் உஸ்தாத். அந்த 'யமா'காதக இசை இளைஞர்தான் பண்டிட் சிவகுமார் சர்மா..ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் பண்டிட் சிவகுமார் சர்மா. தாய்மொழி தோக்ரி. அப்பா உமா தத் சர்மா பாடகர். ஐந்து வயதில் அப்பா, மகனுக்கு வாய்ப்பாட்டும், தபலாவும் கற்றுக் கொடுத்தார். பதிமூன்று வயதில் சந்தூர் கற்கத் தொடங்கினார். 27 வயதில் மும்பையில் முதல் கச்சேரி. சந்தூரின் முன் அமர்ந்து தந்திகளை மீட்ட ஆரம்பித்தால், தன் இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுவிடுவார்..ஏர் டெல்லின் மூதாதையரான ஸ்கை செல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு இசை நிகழ்ச்சிக்காக 1997ல் சென்னை வந்தபோது பண்டிட்ஜியை சந்தித்தேன்..'சந்தூர்' என்று ஒரு இசைக்கருவி இருப்பதே இங்கு பலருக்குத் தெரியாது. டான்ஸர் சித்ரா விஸ்வேஸ்வரனின் கணவர் விஸ்வேஸ்வரன் கூட சந்தூர் கலைஞர்தான். வேத காலத்திலிருந்தே இசைக்கப்பட்டு வருகிற மிகப் பழைமையான ஒரு இசைக்கருவி "சந்தூர்". இது வீணை குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் நூறு தந்திகள் இருக்கின்றன. அதனால் இதற்கு "சத தந்தி வீணை" என்ற ஒரு பெயரும் உண்டு. சீனாவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் கூட சந்தூர் வாசிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்.."சந்தூர் இசை மிகவும் மென்மையானது. ஆற்று நீரின் சலசலப்பு போன்றது. தியானம் செய்யும்போது கேட்பதற்கு மிகவும் உகந்தது. ஸ்வீடன் நாட்டில் ஒரு மனோ தத்துவ நிபுணர் தம்மிடம் வருகிற மன நோயாளிகளை அமைதிப்படுத்த சந்தூர் இசையைத்தான் பயன்படுத்துவதாக என் நண்பர் ஒருவர் சொன்னார்" என்று சந்தூர் புகழ் பாடினார் சர்மாஜி..பண்டிட் சிவகுமார் சர்மா மேடையில் சந்தூர் வாசித்துக் கொண்டிருக்கும்போது அவரைப் பாராட்டும் வகையில் ரசித்துக் கைதட்டினால் கூட அவருக்குப் பிடிக்காது. "அது என் கான்சன்டிரேஷனை பாதிக்கும்; வாசித்து முடித்த பிறகு கைதட்டட்டுமே!" என்று சொல்வார். "ரசிகர்கள் எப்படி இசையை ரசிக்க வேண்டும்" என்பதற்குக் கூட அவர் ஒரு ஸ்கேல் வைத்திருக்கிறார். அற்புதமான விஷயங்களை ரசிகர்கள் 'ஹா!" என்று சொல்லி ரசிக்க வேண்டுமாம். 'ஹா!" இதயத்திலிருந்து வரும் ரசனையின் வெளிப்பாடாம்! எல்லோரும் சொல்லும் வழக்கமான 'வாவ்!' வெறுமனே வாயிலிருந்து வரும் வியப்பு! அவ்வளவுதான்!."இன்று மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்துக்கு நம் பாரம்பரிய இசை பலியாகிவிட்டது போலத் தோன்றுகிறதே?" என்று கேட்டபோது, " நம் பாரம்பரிய சங்கீதம் மிகவும் தொன்மையானது; மேற்கத்திய தாக்கத்தால் சுருண்டு போய்விடும் அளவுக்கு பலவீனமானது இல்லை. எல்லா வயதினருக்கும் நம் பாரம்பரிய இசை மீது ஆர்வம் இருக்கிறது; மேற்கத்திய இசை சாட்லைட் சானல்கள் மூலமாக வீடு தேடி வந்துவிடுகிறது; ஆனால் இளைஞர்கள் பாரம்பரிய இசையைத் தேடிச் சென்று ரசிக்கிறார்கள்" என்றார்..காஷ்மீர் பற்றி கனத்த மனசுடன் பேசினார். தீவிரவாதம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியே துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிட்களின் குடும்பங்களுள் இவரது சகோதரரின் குடும்பமும் ஒன்று..பண்டிட் சிவகுமார் சர்மாவும், புல்லாங்குழல் வித்வான் ஹரி பிரசாத் சௌராஸியாவும் இணைந்து ஷிவ்-ஹரி என்ற பெயரில் சில்சிலா, சாந்தினி, பரம்பரா போன்ற சில இந்திப் படங்களுக்கு இசை அமைத் திருக்கிறார்கள்..1997ல், பண்டிட் சிவகுமார் சர்மாவை பேட்டிகண்ட சில நாட்களிலேயே சென்னைக்கு வந்திருந்த ஹரி பிரசாத் சௌராசியாவையும் சந்தித்து பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'நாரத கான சபா'வில் அவரது புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. நிகழ்ச்சி முடிந்து அவர் ஹோட்டலுக்குப் புறப்பட்ட போது என்னையும் காரில் கூட அழைத்துக் கொண்டு சென்றார். காரிலேயே பேட்டி ஆரம்பமானது..சௌராஸியாவின் குடும்பப் பின்னணி ரொம்ப வித்தியாசமானது. அவரது பரம்பரையில் பலரும் மல்யுத்த வீரர்கள். அப்பா உள்ளூர் சாம்பியன். சௌராசியாவுக்குக் கூட இளமைக்காலத்தில் மல்யுத்தம்தான் ஹாபி. மல்யுத்தத்தக் களத்திலிருந்து ஒரு இசை ஞானியை உருவாக்கிய பெருமை சௌராஸியாவின் அம்மாவையே சாரும். சௌராஸியா சின்னப் பையனாக இருந்தபோதே, தன் மடியில் வைத்துக் கொண்டு, ராகங்கள் சொல்லிக் கொடுப்பாராம். அதன் பிறகு முறைப்படி ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்தாராம்..இந்துஸ்தானி பாடகர், புல்லாங்குழலைப் பிடித்தது எப்படி?."புல்லாங்குழல் ஒரு தெய்வீகமான இசைக்கருவி. பகவான் கிருஷ்ணர் என்றால் புல்லாங்குழலும், புல்லாங்குழல் என்றால் கிருஷ்ணரும்தானே நம்முடைய நினைவுக்கு வருகிறது? தவிர, சிறு வயதில் இலகுவாக கையாளக்கூடிய இசைக்கருவியும் அதுதானே? எனவே புல்லாங்குழல் என்னைக் கவர, நான் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டேன். ஒன்பதாவது வயதில் ஒரு இசைவிழாவில் இடையில் 15 நிமிடங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இன்றுவரை ஊர் ஊராக, நாடு, நாடாக பறந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். நம் ஊர் புல்லாங்குழல் மேதை, அமரர் மாலியும், சௌராசியாவும் நெருங்கிய நண்பர்கள். ஒருவர் மீது ஒருவருக்கு அபாரமான மரியாதை; அபிமானம். தவிர, ரமணி, லால்குடி, பாலமுரளி கிருஷ்ணா, உமையாள்புரம் சிவராமன்,எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் என பல தென்னிந்திய வித்வான்களுடன் சேர்ந்து கச்சேரி செய்திருக்கிறார் சௌராசியா..சௌராஸியா பற்றி இன்னும் சில சுவாரசியமான தகவல்களையும் அன்றைக்குத் தெரிந்துக்கொண்டேன். மனுஷர் உ.பி. அரசாங்கத்தில் நாலு வருஷம் ஸ்டெனோகிராஃபராக உத்தியோகம் பார்த்திருக்கிறார். அப்புறம் அகில இந்திய வானொலியில் பணி. அதன் பிறகே முழு நேர இசைக்கலைஞரானார். இவருடைய முக்கியமான குரு அன்ன பூர்ணா தேவி. அவர் புல்லாங்குழல் கலைஞரில்லை; 'கர் பகர்' என்ற இசைக்கருவியை வாசிப்பவர். பத்துப் பன்னிரண்டு வருடங்கள் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு, கச்சேரிகள் செய்துவிட்டுத்தான் சௌராஸியா அவரிடம் சென்றார். அந்த அம்மையார் "அரிச்சுவடியிலிருந்து கற்றுக் கொள்வதாக இருந்தால் நான் கற்றுக் கொடுக்கிறேன்" என்று கண்டிஷன் போட, "அது எப்படி சாத்தியம்?" என்று கேட்டார் சௌராஸியா. "இதுவரை வலது பக்கமாக புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா? இந்தக் கணம் முதல் அதற்கு முழுக்குப் போட்டுவிட்டு, இடது பக்கமாக வாசிப்பதாக இருந்தால் சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் அன்னபூர்ணா தேவி. சௌராஸியா சம்மதிக்க, மீண்டும் அரிச்சுவடி ஆரம்பமானது. இன்று வரை இடதுபக்கம் புல்லாங்குழல் பிடித்துத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறார்..மனுஷருக்கு மறக்க முடியாத அனுபவங்கள் ஏராளம். உதாரணத்துக்கு ஒன்று. பாரிஸ் நகரில் ஒரு டி.வி. லைவ் நிகழ்ச்சி. சௌராஸியா வாசித்துக் கொண்டே இருக்கும்போது திடீரென்று புல்லாங்குழலில் விரிசல். அது இனி பிரயோஜனப்படாது. கையில் வேறு புல்லாங்குழலும் இல்லை. சிக்கலான சூழ்நிலை. என்ன செய்ய? டி.வி. யில் லைவாக இசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆடியன்ஸிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அந்தத் தருணத்தில் அவர் கற்றுக் கொண்ட ஹிந்துஸ்தானி இசை கைகொடுத்தது. சமயோஜிதமாக இந்துஸ்தானி இசை பாட ஆரம்பித்துவிட்டார்..சினிமாவுக்கு இசை அமைக்கும்போது, நீங்கள் காம்பிரமைஸ் பண்ணிக்கொள்ள வேண்டி இருக்குமே? எப்படி சமாளித்தீர்கள்?."நோ காம்பிரமைஸ் என்பதில் நாங்கள் ரொம்ப ஸ்டிரிக்ட். படத்தின் கதையை முழுமையாகக் கேட்காமல் இசை அமைக்க ஒப்புக்கொள்ளவே மாட்டோம். அதில் 'தரமான இசைக்கு வாய்ப்பு இருக்கிறதா' என்று பார்ப்போம். அவசியமானால் அதற்கேற்ப காட்சி அமைப்பை மாற்றும்படி ஆலோசனை சொல்வோம். அதன் பிறகு சிட்சுவேஷனுக்கு ஏற்ப பாடல்களுக்கு இசையமைப்போம். கிளாசிக்கலான பாடல்கள் தவிர, மாஸ் அப்பீலுக்கு பாடல்கள் தேவைப்பட்டால், கிராமிய, நாடோடிப் பாடல்களை நாடிப் போய்விடுவோம்.".நம் ஊர் வீணை பாலசந்தரின் கையெழுத்து வீணை உருவத்திலேயே இருக்கும். அதேபோல சௌராசியா ஆட்டோகிராஃப் போடுகிறபோது கூடவே ஒரு புல்லாங்குழலையும் வரைந்துவிடுவார். அவரது ஆட்டோகிராஃப் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது. சௌராசியா ரசிகர் ஒருவருக்கு அவரது சிடி ஒன்றைப் பரிசளித்தபோது அவரது ஆட்டோகிராஃபையும் சேர்த்துப் பரிசளித்துவிட்டேன்..(தொடரும்)