? மு.க. ஸ்டாலின் – பிரதமர் உடனான சந்திப்பு?– சி. கார்த்திகேயன், சாத்தூர்.! ஒரு மாநில முதல்வர் நாட்டின் பிரதமரை சந்திப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வர் பிரதமரைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நம் முதல்வர் ஸ்டாலினின் சந்திப்பை ஊதிப் பெரிய பலூனாக்கிய பெருமை நம் ஊடகங்களுடையது. கீழே உள்ள கேள்விக்கான பதிலைப் பாருங்கள் புரிந்துகொள்வீர்கள்..? தொலைக்காட்சியில் விவாதங்கள் நடத்த நெறியாளர்களுக்குத் தனித்திறமை வேண்டுமல்லாவா?– சண்முக சுந்தரம், தூத்துக்குடி.! நிச்சயமாக. இல்லாத பஞ்சில் இழையெடுத்து, அதை நூலாக்கி, ஆடை நெய்வதைப் போல் அபாரத் திறமை வேண்டும். விவாதத்திற்கே அவசியமில்லாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு, அதை ஒரு மணிநேரத்துக்கும் மேல் விவாதிக்கும் திறனும், பங்குகொள்ளாத அரசியல் கட்சிகளுக்காக 'பத்திரிகையாளார், அரசியல் விமர்சகர்' என்ற போர்வையில் விவாதிப்பவர்களை ஊக்கப்படுத்தவும் நிச்சயமாகத் தனித்திறன் வேண்டும்..? புது தில்லியில் தி.மு.க. அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே… இப்போது கலைஞா் கருணாநிதி இருந்திருந்தால் ? ? ? ! ! !– ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்..! திட்டமும், அனுமதிகளும் அவர் இருக்கும்போதே பெறப்பட்டது என்பதால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார். நூலகப் பகுதியை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருப்பார்..? கல்லடி படாத காய்ச்ச மரம்?-ராமன், திருச்சி.! பலா மரம். பலா பழங்களை மட்டுமில்லை, காய்களைக்கூட கல்லெறிந்து பறிக்க முடியாது..? பாரதியிடம் தராசார் வியந்த விஷயம் எதுவோ?– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.! ஒன்றா- இரண்டா? பரவலாக ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டிருக்கும் பாரதி ஒரு பன்முக ஆளுமையாக மிளிர்ந்த கவிஞன். எழுத்தாளன், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளன், உள்நாட்டு அரசியல் மட்டுமில்லாமல் உலக அரசியல் அறிந்த அரசியல்வாதி, பெண்விடுதலை, சமூக நீதி பேசிய போராளி, பத்திரிகையாளன், மொழிபெயப்பாளன், கார்ட்டூனிஸ்ட் இப்படி பல முகங்களைக் கொண்ட இந்த மனிதன் அனைத்தையும் தன் குறுகிய வாழ்நாளில் சாதித்திருப்பதை நினைத்து இன்றும் வியந்துக்கொண்டிருக்கிறேன்..? புத்தக வாசிப்பு இப்போது அதிகரித்திருக்கிறதா?– சாவித்திரி. பெங்களுரு.! புத்தக கண்காட்சிகளின் விற்பனை எண்ணிக்கை நம்பிக்கையை தருகிறது. ஆனால் சிறு வயதில் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டு வருகிறது. அமெரிக்காவில் பார்னெஸ் & நோபள் என்ற சங்கிலித்தொடர் புத்தகக் கடைகள் இருக்கின்றன. பிரம்மாண்டமானவை. உள்ளே காபி, ஜூஸ் என்று கிடைக்கும். சாப்பிட்டபடி படிக்கலாம். கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உலோகச் சிலைகள் இவை. வெயில் மழை, பனியென்று பார்க்காமல் உட்கார வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து படிக்கும் பிள்ளைகளைக் காட்டும் காட்சி. அறிவுத்தேடல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். சிலைகள் மட்டுமில்லை, கடைகளின் உள்ளேயும் குழந்தைகள் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இப்படி படிப்பதை பார்க்கலாம். சாப்பிடும்போது படிப்பதற்காக அங்கு அம்மாக்கள் திட்டுவதில்லை..? 'தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும்' என நாடாளுமன்றத்தில் தி.மு.க. தீர்மானம் கொண்டுவருகிறதே?– ராஜேஷ், ஶ்ரீபெரும்புதூர்..! நீட் மசோதா மட்டுமில்லை, அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் உட்பட 11 தீர்மானங்கள் அவர் மேசையில் உறங்குகின்றன. இது சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல். அவற்றை திருப்பியும் அனுப்பாமல், குடியரசு தலைவருக்கும் அனுப்பாமல் காலங்கடத்துவது 'ஆளுநர் தம் பணிகளைச் செய்யாமல் அரசியல் சார்பு நிலைப்பாட்டை எடுக்கிறார்' என்று எழும் சந்தேகத்தை தவிர்க்க இயலவில்லை. அந்த நிலையில் தி.மு.க.விற்கு இதைச் செய்வதைத் தவிர வேறுவழியில்லை..? தமிழக பா.ஜ.க. தலைவருக்கு 'ஒய் செக்யூரிட்டி' வழங்கப்பட்டி ருப்பது எதைக் காட்டுகிறது?– ஜோஸ், அயன்புரம்.! அவருக்கு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரிடம் உள்ள செல்வாக்கையும், 'இப்படி செய்வதின் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்துவிடலாம்' என்ற அந்த கட்சியின் தேசியத் தலைமை நம்புவதையும்..? நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது ஏற்புடையதா?– ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.! ஆங்கிலம் அறிந்திருந்தும் அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது கேள்வி கேட்ட உறுப்பினரை அவமதிக்கும் செயல் என சசி தரூர் கூட சொல்லியிருக்கிறார். இப்போது நாடாளுமன்றத்தில் உடனடி மொழிபெயர்ப்பு கருவிகள், காதணி ஒலிபெருக்கிகள் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. பிற மொழிக் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்பது என்ற நீண்ட நாள் நடைமுறையை கைவிட்டவர்கள் சில பா.ஜ.க. அமைச்சர்கள்..? இன்றைய இலங்கை நிலை நாளை இந்தியாவிற்கும் வருமோ?– தமிழ்மகன், பாளையங்கோட்டை.நிச்சயம் வராது. எத்தகைய மோசமான பொருளாதார நிலையை அடைந்தாலும் அதிலிருந்து மீள, அனுபவத்தால் கற்றவர்கள் நாம். மன்மோகன்சிங், நரசிம்மராவ் கூட்டணி மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை வெற்றிகரமாக தடுத்து நாட்டை மீட்டவர்கள். ஆட்சியில் எந்த கட்சியிருந்தாளும் அவசியம் நேரும் போது ஆவன செய்வார்கள். அவசியங்கள் தான் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் தாய் என்பது இதற்கும் பொருந்தும்.
? மு.க. ஸ்டாலின் – பிரதமர் உடனான சந்திப்பு?– சி. கார்த்திகேயன், சாத்தூர்.! ஒரு மாநில முதல்வர் நாட்டின் பிரதமரை சந்திப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வர் பிரதமரைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நம் முதல்வர் ஸ்டாலினின் சந்திப்பை ஊதிப் பெரிய பலூனாக்கிய பெருமை நம் ஊடகங்களுடையது. கீழே உள்ள கேள்விக்கான பதிலைப் பாருங்கள் புரிந்துகொள்வீர்கள்..? தொலைக்காட்சியில் விவாதங்கள் நடத்த நெறியாளர்களுக்குத் தனித்திறமை வேண்டுமல்லாவா?– சண்முக சுந்தரம், தூத்துக்குடி.! நிச்சயமாக. இல்லாத பஞ்சில் இழையெடுத்து, அதை நூலாக்கி, ஆடை நெய்வதைப் போல் அபாரத் திறமை வேண்டும். விவாதத்திற்கே அவசியமில்லாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு, அதை ஒரு மணிநேரத்துக்கும் மேல் விவாதிக்கும் திறனும், பங்குகொள்ளாத அரசியல் கட்சிகளுக்காக 'பத்திரிகையாளார், அரசியல் விமர்சகர்' என்ற போர்வையில் விவாதிப்பவர்களை ஊக்கப்படுத்தவும் நிச்சயமாகத் தனித்திறன் வேண்டும்..? புது தில்லியில் தி.மு.க. அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே… இப்போது கலைஞா் கருணாநிதி இருந்திருந்தால் ? ? ? ! ! !– ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்..! திட்டமும், அனுமதிகளும் அவர் இருக்கும்போதே பெறப்பட்டது என்பதால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார். நூலகப் பகுதியை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருப்பார்..? கல்லடி படாத காய்ச்ச மரம்?-ராமன், திருச்சி.! பலா மரம். பலா பழங்களை மட்டுமில்லை, காய்களைக்கூட கல்லெறிந்து பறிக்க முடியாது..? பாரதியிடம் தராசார் வியந்த விஷயம் எதுவோ?– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.! ஒன்றா- இரண்டா? பரவலாக ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டிருக்கும் பாரதி ஒரு பன்முக ஆளுமையாக மிளிர்ந்த கவிஞன். எழுத்தாளன், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளன், உள்நாட்டு அரசியல் மட்டுமில்லாமல் உலக அரசியல் அறிந்த அரசியல்வாதி, பெண்விடுதலை, சமூக நீதி பேசிய போராளி, பத்திரிகையாளன், மொழிபெயப்பாளன், கார்ட்டூனிஸ்ட் இப்படி பல முகங்களைக் கொண்ட இந்த மனிதன் அனைத்தையும் தன் குறுகிய வாழ்நாளில் சாதித்திருப்பதை நினைத்து இன்றும் வியந்துக்கொண்டிருக்கிறேன்..? புத்தக வாசிப்பு இப்போது அதிகரித்திருக்கிறதா?– சாவித்திரி. பெங்களுரு.! புத்தக கண்காட்சிகளின் விற்பனை எண்ணிக்கை நம்பிக்கையை தருகிறது. ஆனால் சிறு வயதில் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டு வருகிறது. அமெரிக்காவில் பார்னெஸ் & நோபள் என்ற சங்கிலித்தொடர் புத்தகக் கடைகள் இருக்கின்றன. பிரம்மாண்டமானவை. உள்ளே காபி, ஜூஸ் என்று கிடைக்கும். சாப்பிட்டபடி படிக்கலாம். கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உலோகச் சிலைகள் இவை. வெயில் மழை, பனியென்று பார்க்காமல் உட்கார வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து படிக்கும் பிள்ளைகளைக் காட்டும் காட்சி. அறிவுத்தேடல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். சிலைகள் மட்டுமில்லை, கடைகளின் உள்ளேயும் குழந்தைகள் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இப்படி படிப்பதை பார்க்கலாம். சாப்பிடும்போது படிப்பதற்காக அங்கு அம்மாக்கள் திட்டுவதில்லை..? 'தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும்' என நாடாளுமன்றத்தில் தி.மு.க. தீர்மானம் கொண்டுவருகிறதே?– ராஜேஷ், ஶ்ரீபெரும்புதூர்..! நீட் மசோதா மட்டுமில்லை, அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் உட்பட 11 தீர்மானங்கள் அவர் மேசையில் உறங்குகின்றன. இது சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல். அவற்றை திருப்பியும் அனுப்பாமல், குடியரசு தலைவருக்கும் அனுப்பாமல் காலங்கடத்துவது 'ஆளுநர் தம் பணிகளைச் செய்யாமல் அரசியல் சார்பு நிலைப்பாட்டை எடுக்கிறார்' என்று எழும் சந்தேகத்தை தவிர்க்க இயலவில்லை. அந்த நிலையில் தி.மு.க.விற்கு இதைச் செய்வதைத் தவிர வேறுவழியில்லை..? தமிழக பா.ஜ.க. தலைவருக்கு 'ஒய் செக்யூரிட்டி' வழங்கப்பட்டி ருப்பது எதைக் காட்டுகிறது?– ஜோஸ், அயன்புரம்.! அவருக்கு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரிடம் உள்ள செல்வாக்கையும், 'இப்படி செய்வதின் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்துவிடலாம்' என்ற அந்த கட்சியின் தேசியத் தலைமை நம்புவதையும்..? நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது ஏற்புடையதா?– ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.! ஆங்கிலம் அறிந்திருந்தும் அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது கேள்வி கேட்ட உறுப்பினரை அவமதிக்கும் செயல் என சசி தரூர் கூட சொல்லியிருக்கிறார். இப்போது நாடாளுமன்றத்தில் உடனடி மொழிபெயர்ப்பு கருவிகள், காதணி ஒலிபெருக்கிகள் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. பிற மொழிக் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்பது என்ற நீண்ட நாள் நடைமுறையை கைவிட்டவர்கள் சில பா.ஜ.க. அமைச்சர்கள்..? இன்றைய இலங்கை நிலை நாளை இந்தியாவிற்கும் வருமோ?– தமிழ்மகன், பாளையங்கோட்டை.நிச்சயம் வராது. எத்தகைய மோசமான பொருளாதார நிலையை அடைந்தாலும் அதிலிருந்து மீள, அனுபவத்தால் கற்றவர்கள் நாம். மன்மோகன்சிங், நரசிம்மராவ் கூட்டணி மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை வெற்றிகரமாக தடுத்து நாட்டை மீட்டவர்கள். ஆட்சியில் எந்த கட்சியிருந்தாளும் அவசியம் நேரும் போது ஆவன செய்வார்கள். அவசியங்கள் தான் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் தாய் என்பது இதற்கும் பொருந்தும்.