சுமிதா ரமேஷின் 'துபாய் எக்ஸ்போ 2020' நேரடி ரிப்போர்ட், அபாரம்… அட்டகாசம்…அற்புதம்! இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், துபாய்க்கே நேரில் சென்று கண்காட்சியைப் பார்த்து மகிழ்ந்த பரவச அனுபவத்தைத் தந்தது! கூடவே, எந்தவொரு வெற்றிக்கும் தெளிவான திட்டமிடலும் கூடுதலான உழைப்பும் அடிப்படை என்பதை உரைக்காமல், உணர வைத்த உன்னதமான கட்டுரை !.ரஷ்யா – உக்ரைன் போரின் தாக்கத்தால் உண்டான விளைவுகளை, ரத்தினச் சுருக்கமாக விளக்கியிருந்த தலையங்கம் அருமை மட்டுமல்ல…மிகச் சரியான எச்சரிக்கை மணியும் கூட! இந்த தருணத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியும் குறைக்கப்பட்டிருப்பதை குறிப்பாக சுட்டிக்காட்ட தவறாத கல்கியின் கடமை உணர்வுக்கு சபாஷ்! 'அறிவியலின் ஆகச்சிறந்த நவீன கண்டுபிடிப்புகளால், உயர உயரப் பறந்து கொண்டிருக்கும் மனிதன், ஆறறிவுக்கு அழகான- இலக்கணமான – 'போரில்லாத அமைதி உலகத்தை 'எப்போது படைக்கப் போகிறான் ' என்ற ஆதங்கம், நெஞ்சத்தின் அடி ஆழத்தில் இருந்து ஏக்கமாய் பீறிட்டெழுகிறது!.– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் உலக நாடுகள் முழுவதும் விலைவாசி உயர்வு மற்றும் பல இன்னல்கள் அடைவது கவலை தரக்கூடிய ஒரு விஷயம் என்பதும் அதை ஐக்கிய நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது அதைவிட உக்கிரமான விஷயம் என்பதும் உண்மை..– சி. கார்த்திகேயன், சாத்தூர்.துபாய் எக்ஸ்போவின் தரமான பத்து கட்டிடத்தை காட்டியதுடன் தமிழக முதல்வர் திறந்து வைத்த அரங்கத்தையும் காட்டி இருக்கலாம்..– மதுரை குழந்தைவேலு.எஸ்.எல். நாணு எழுதிய 'மதிற்சுவர்' சிறுகதை மிகவும் அருமை. அந்த கதையில் "சுவரில் முருகன் இருந்த கோவிலும் வெறுமையாக இருந்தது" என்ற வரிகளை படித்ததும் புல்லரித்தது. மிகவும் யதார்த்தமான மிக அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்..– உஷா முத்துராமன், மதுரை."ரத்தம், ரணம், ரௌத்ரம்" என்ற RRR படத்தின் சினிமா விமர்சனத்தை படித்ததும் புல்லரித்தது. ராஜமௌலி அவர்களால் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தபோது கூட அவ்வளவு சிலிர்ப்பு ஏற்படவில்லை. மிக எதார்த்தமாக அருமையாக நேரில் பார்ப்பது போன்ற ஒரு விமர்சனத்தை கொடுத்து படத்தினுடைய முழு கதையும் எனக்குப் புரியவைத்த "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள் நன்றி..– பிரகதாநவநீதன், மதுரை.கடைசிப் பக்கத்தில் அதிக பக்கங்களை படிக்க உதவும் செயலிகளைப் பற்றி எழுதும்போது அண்ணாமலையை சுற்றச்சொல்வதுசுஜாதா தேசிகனின் குறும்பின் உச்சகட்டம்..– ராகினி, வேலூர்.நீங்கள் கேட்டவை பதிலில் ஜெயமோகனை சாடியிருப்பது தராசாரின் துணிச்சலைக் காட்டுகிறது..– கண்ணன், நெல்லை.உலகப் பொருளாதாரம் குறித்த கட்டுரை ஒரு தெளிவான பார்வை.-ராஜேஷ், திண்டுக்கல்.தாய்வீடு திரும்பும் கல்வெட்டுகள் மகிழ்ச்சியளிக்கும் செய்தி..– சாந்த குமாரி, திருமங்கலம்.ஒருவரின் உண்மையான அன்பையும், அறிவையும் பேச்சின் மூலம் அறிய முடியாது. செயல்பாட்டினால் கண்டிப்பாக அறியலாம். நம்மை காத்து கொள்வது எந்நிலையிலும் கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியான வாழ்க்கை வாழ்வதுதான். கிருபானந்த வாரியாரின் அருளுரை கேட்டு வாழ்ந்தால் நலம் பெறலாம்..– கலைமதி, சென்னை
சுமிதா ரமேஷின் 'துபாய் எக்ஸ்போ 2020' நேரடி ரிப்போர்ட், அபாரம்… அட்டகாசம்…அற்புதம்! இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், துபாய்க்கே நேரில் சென்று கண்காட்சியைப் பார்த்து மகிழ்ந்த பரவச அனுபவத்தைத் தந்தது! கூடவே, எந்தவொரு வெற்றிக்கும் தெளிவான திட்டமிடலும் கூடுதலான உழைப்பும் அடிப்படை என்பதை உரைக்காமல், உணர வைத்த உன்னதமான கட்டுரை !.ரஷ்யா – உக்ரைன் போரின் தாக்கத்தால் உண்டான விளைவுகளை, ரத்தினச் சுருக்கமாக விளக்கியிருந்த தலையங்கம் அருமை மட்டுமல்ல…மிகச் சரியான எச்சரிக்கை மணியும் கூட! இந்த தருணத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியும் குறைக்கப்பட்டிருப்பதை குறிப்பாக சுட்டிக்காட்ட தவறாத கல்கியின் கடமை உணர்வுக்கு சபாஷ்! 'அறிவியலின் ஆகச்சிறந்த நவீன கண்டுபிடிப்புகளால், உயர உயரப் பறந்து கொண்டிருக்கும் மனிதன், ஆறறிவுக்கு அழகான- இலக்கணமான – 'போரில்லாத அமைதி உலகத்தை 'எப்போது படைக்கப் போகிறான் ' என்ற ஆதங்கம், நெஞ்சத்தின் அடி ஆழத்தில் இருந்து ஏக்கமாய் பீறிட்டெழுகிறது!.– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் உலக நாடுகள் முழுவதும் விலைவாசி உயர்வு மற்றும் பல இன்னல்கள் அடைவது கவலை தரக்கூடிய ஒரு விஷயம் என்பதும் அதை ஐக்கிய நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது அதைவிட உக்கிரமான விஷயம் என்பதும் உண்மை..– சி. கார்த்திகேயன், சாத்தூர்.துபாய் எக்ஸ்போவின் தரமான பத்து கட்டிடத்தை காட்டியதுடன் தமிழக முதல்வர் திறந்து வைத்த அரங்கத்தையும் காட்டி இருக்கலாம்..– மதுரை குழந்தைவேலு.எஸ்.எல். நாணு எழுதிய 'மதிற்சுவர்' சிறுகதை மிகவும் அருமை. அந்த கதையில் "சுவரில் முருகன் இருந்த கோவிலும் வெறுமையாக இருந்தது" என்ற வரிகளை படித்ததும் புல்லரித்தது. மிகவும் யதார்த்தமான மிக அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்..– உஷா முத்துராமன், மதுரை."ரத்தம், ரணம், ரௌத்ரம்" என்ற RRR படத்தின் சினிமா விமர்சனத்தை படித்ததும் புல்லரித்தது. ராஜமௌலி அவர்களால் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தபோது கூட அவ்வளவு சிலிர்ப்பு ஏற்படவில்லை. மிக எதார்த்தமாக அருமையாக நேரில் பார்ப்பது போன்ற ஒரு விமர்சனத்தை கொடுத்து படத்தினுடைய முழு கதையும் எனக்குப் புரியவைத்த "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள் நன்றி..– பிரகதாநவநீதன், மதுரை.கடைசிப் பக்கத்தில் அதிக பக்கங்களை படிக்க உதவும் செயலிகளைப் பற்றி எழுதும்போது அண்ணாமலையை சுற்றச்சொல்வதுசுஜாதா தேசிகனின் குறும்பின் உச்சகட்டம்..– ராகினி, வேலூர்.நீங்கள் கேட்டவை பதிலில் ஜெயமோகனை சாடியிருப்பது தராசாரின் துணிச்சலைக் காட்டுகிறது..– கண்ணன், நெல்லை.உலகப் பொருளாதாரம் குறித்த கட்டுரை ஒரு தெளிவான பார்வை.-ராஜேஷ், திண்டுக்கல்.தாய்வீடு திரும்பும் கல்வெட்டுகள் மகிழ்ச்சியளிக்கும் செய்தி..– சாந்த குமாரி, திருமங்கலம்.ஒருவரின் உண்மையான அன்பையும், அறிவையும் பேச்சின் மூலம் அறிய முடியாது. செயல்பாட்டினால் கண்டிப்பாக அறியலாம். நம்மை காத்து கொள்வது எந்நிலையிலும் கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியான வாழ்க்கை வாழ்வதுதான். கிருபானந்த வாரியாரின் அருளுரை கேட்டு வாழ்ந்தால் நலம் பெறலாம்..– கலைமதி, சென்னை