தலையங்கம்.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் உரிய பலன்கள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டாலும், அது ஒரு சில மாதங்களுக்குமேல் நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் இத்தகைய தடையை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது. ஜூலை 1 முதல் இது அமலுக்கு வந்திருக்கிறது. ..இன்று காணுமிடமெல்லாம் நிறைந்திருப்பது பிளாஸ்டிக் பைகள், காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகைப் பொருட்கள், தேநீர்க் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பயன்பாட்டிலிருக்கும் இவை உருவாக்கும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை..பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இது ஒரு பெட்ரோலியம் வகையை சார்ந்தது.பிளாஸ்டிக் பைகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல. ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகிறது. இந்தக் காலங்களில் மண்ணின் திறன் அமைப்பையும், மண் சத்துக்களையும் பிளாஸ்டிக் மெல்ல மெல்ல அழிக்கிறது. நாட்டின் சூழ்நிலைகளை மாசுபடுத்துகிறது. முக்கியமாக பிளாஸ்டிக் பைகள், நமது அன்றாட வாழ்வில் உருவாகும் கழிவுகளாக மாறி, மனிதகுலத்துக்கு எதிராக பெரும் சவாலாக நிற்கிறது.கடந்த பல ஆண்டுகளாக, சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் இந்தத் தீமைகளை எடுத்துச் சொன்னாலும் ஊடகங்கள் எழுதித்தள்ளினாலும் இந்தத் தீமை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நுகர்வோர் இதை ஓர் எளிய இலவச வசதியாக கருதுவதுதான்..இந்தியாவில் 2009ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் தடை விதித்தன. கோவா, குஜராத், கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நெகிழிப் பயன்பாட்டிற்குப் பகுதி அளவு தடை விதிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் இதற்கான தடை விதிக்கப்பட்டது. பஞ்சாப் அரசும் அண்மையில் நெகிழிப் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது. ஆனால், கட்டுப்பாட்டு விதிகள் மிகக் கண்டிப்பான வகையில் பின்பற்றப்பட்ட இடங்களில் மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள் பலனளித்தன. உதாரணமாகத் தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலைப்பகுதி நகரங்களில் சின்னஞ்சிறு கிராமங்களில் கூட பிளாஸ்டி பைகள் பயன்படுத்துவதில்லை. மாறாக மதுரை போன்ற பெருநகரங்களில் இதன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது..இந்தியாவில் கடந்த 2019-20ம் ஆண்டில் 34 லட்சம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகியுள்ளன. இவை, தீங்கு விளைவிக்கும் அபாயகரமான புகை மற்றும் வாயுக்களை வெளியிடுவதால் இவற்றை எரிக்க முடியாது..இந்த பேராபத்தை உணர்ந்து நாடு தழுவிய சட்டமாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் ஜூலை 1 முதல் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்வதுடன், தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் என்கின்றன விதிகள்.."கடுமையான சட்டங்கள் மட்டுமே இதற்குத் தீர்வு" என்ற நிலையில் ஒன்றிய அரசு இந்த முடிவை அறிவித்திருக்கிறது. இதுபோன்ற எந்தச் சட்டமும், விதிகளும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாவிட்டால் முழு வெற்றி அடைந்ததில்லை என்பது. வரலாறு.."நம் நாட்டை தூய்மையாகவும், பசுமையாகவும் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவாக உருவாக்குவோம் என ஒவ்வொரு குடிமகனும், வணிகர்களும், தனக்கென உறுதிமொழியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதை வாழ்நாள் முழுவதும் காக்கவேண்டும்.
தலையங்கம்.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் உரிய பலன்கள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டாலும், அது ஒரு சில மாதங்களுக்குமேல் நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் இத்தகைய தடையை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது. ஜூலை 1 முதல் இது அமலுக்கு வந்திருக்கிறது. ..இன்று காணுமிடமெல்லாம் நிறைந்திருப்பது பிளாஸ்டிக் பைகள், காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகைப் பொருட்கள், தேநீர்க் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பயன்பாட்டிலிருக்கும் இவை உருவாக்கும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை..பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இது ஒரு பெட்ரோலியம் வகையை சார்ந்தது.பிளாஸ்டிக் பைகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல. ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகிறது. இந்தக் காலங்களில் மண்ணின் திறன் அமைப்பையும், மண் சத்துக்களையும் பிளாஸ்டிக் மெல்ல மெல்ல அழிக்கிறது. நாட்டின் சூழ்நிலைகளை மாசுபடுத்துகிறது. முக்கியமாக பிளாஸ்டிக் பைகள், நமது அன்றாட வாழ்வில் உருவாகும் கழிவுகளாக மாறி, மனிதகுலத்துக்கு எதிராக பெரும் சவாலாக நிற்கிறது.கடந்த பல ஆண்டுகளாக, சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் இந்தத் தீமைகளை எடுத்துச் சொன்னாலும் ஊடகங்கள் எழுதித்தள்ளினாலும் இந்தத் தீமை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நுகர்வோர் இதை ஓர் எளிய இலவச வசதியாக கருதுவதுதான்..இந்தியாவில் 2009ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் தடை விதித்தன. கோவா, குஜராத், கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நெகிழிப் பயன்பாட்டிற்குப் பகுதி அளவு தடை விதிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் இதற்கான தடை விதிக்கப்பட்டது. பஞ்சாப் அரசும் அண்மையில் நெகிழிப் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது. ஆனால், கட்டுப்பாட்டு விதிகள் மிகக் கண்டிப்பான வகையில் பின்பற்றப்பட்ட இடங்களில் மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள் பலனளித்தன. உதாரணமாகத் தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலைப்பகுதி நகரங்களில் சின்னஞ்சிறு கிராமங்களில் கூட பிளாஸ்டி பைகள் பயன்படுத்துவதில்லை. மாறாக மதுரை போன்ற பெருநகரங்களில் இதன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது..இந்தியாவில் கடந்த 2019-20ம் ஆண்டில் 34 லட்சம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகியுள்ளன. இவை, தீங்கு விளைவிக்கும் அபாயகரமான புகை மற்றும் வாயுக்களை வெளியிடுவதால் இவற்றை எரிக்க முடியாது..இந்த பேராபத்தை உணர்ந்து நாடு தழுவிய சட்டமாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் ஜூலை 1 முதல் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்வதுடன், தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் என்கின்றன விதிகள்.."கடுமையான சட்டங்கள் மட்டுமே இதற்குத் தீர்வு" என்ற நிலையில் ஒன்றிய அரசு இந்த முடிவை அறிவித்திருக்கிறது. இதுபோன்ற எந்தச் சட்டமும், விதிகளும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாவிட்டால் முழு வெற்றி அடைந்ததில்லை என்பது. வரலாறு.."நம் நாட்டை தூய்மையாகவும், பசுமையாகவும் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவாக உருவாக்குவோம் என ஒவ்வொரு குடிமகனும், வணிகர்களும், தனக்கென உறுதிமொழியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதை வாழ்நாள் முழுவதும் காக்கவேண்டும்.