பார்வை.– ரமணன்.2014ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. செய்தி ஊடகங்களில் கட்டுரைகள், காட்சி ஊடகங்களின் விவாதங்களில் கடுமையான கருத்துகள் தெரிவிக்கப்படுவதும், அதற்கு எழும் எதிர் வினைகளை பா.ஜ.க. அரசும், ஆட்சியும் அலட்சியப்படுத்துவதும் புதிதல்ல..ஆனால், அண்மையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபி குறித்து வெளியிட்ட கருத்துக்கு எதிர்வினையாக கான்பூர் மற்றும் சில நகரங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. பா.ஜ.க.வின் டெல்லி ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நவீன் ஜிண்டாலும் இதுதொடர்பாக சர்ச்சையை கிளப்பும் வகையிலான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். நூபுர் ஷர்மா பா.ஜ.க.வின் முக்கிய செய்தியாளர். தேர்தலில் கெஜ்ஜிரிவாலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர். விவாதங்களில் உணர்ச்சிப் பொங்க பேசக்கூடியவர். கட்சி மேலிடத்தின்ஆசி பெற்றவர்..சமூக ஊடகங்களில் சர்வ தேச அளவில் டிரன்ட் ஆன இந்த விவகாரம் இஸ்லாமிய நாடுகளுடனா உறவில் விரிசல் ஏற்படும் அளவுக்கு கடும் நெருக்கடியை ஒன்றிய அரசுக்கு உருவாக்கியிருக்கிறது..கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சந்தித்துவரும் ஆழமான மதப்பிரிவினையை நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துகள் பிரதிபலிப்பதாக சர்வதேச விமர்சகர்கள் எழுதுகின்றனர். குறிப்பாக நூபுர் ஷர்மாவின் கருத்துகள் ஆட்சேபகரமான வகையில் அமைந்துள்ளதால் இந்தியாவின் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மத பிரிவினை அதிகரித்திருப்பது கவலை கொள்ளச்செய்யும் விஷயம். கடந்த சில வாரங்களாக சில இந்து அமைப்புகள் வாரணாசியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு சென்று, நூற்றாண்டு பழைமையான மசூதியில் வழிபடுவதற்கு அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த மசூதி கோயில் இடிபாடுகளில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அது குறித்து கோபத்தையும் வெறுப்பையும் தூண்டும் வகையிலான விவாதங்களை தொலைக்காட்சி சேனல்கள் நடத்திவருகின்றன. சமூக ஊடகங்களில் பரவலான வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் அவ்வப்போது தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதைப் பார்க்கிறோம்..இந்தப் பிரச்னையில் இப்போது இந்திய இஸ்லாமிய சமூகத்தினருக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் குரல் எழுப்புகின்றன. முகமது நபிகள் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தோனேசியா, ஈராக், மாலத்தீவுகள், ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. முன்னதாக, குவைத், இரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள இந்திய தூதர்களை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. சௌதி அரேபியா இந்த விவகாரம் தொடர்பாக, கடும் வார்த்தைகளை பிரயோகித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நாடுகள் எல்லாம் நம் நட்பு நாடுகளின் பட்டியலில் உள்ளவை.."சர்வதேச விவகாரமாக மாறியிருக்கும் நாட்டின் உள் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்கவில்லை" என்று இந்த நாடுகள் கருதுகின்றன. இந்த இஸ்லாமிய நாடுகளின் கடும் கோபத்தை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் மூலம் உணர முடிகிறது.."இத்தகைய இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பு கருத்துகளுக்கு தண்டனையே வழங்காமல் அவற்றை தொடர அனுமதிப்பது, மனித உரிமைகள் பாதுகாப்பு மீதான கடும் ஆபத்துகளை ஏற்படுத்தும். மேலும், முஸ்லிம்கள் மீதான தவறான அபிப்ராயங்கள் வளரவும் அவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளுவதற்கும் வழிவகுக்கும். இது, வன்முறை மற்றும் வெறுப்பு சுழற்சியை உருவாக்கும்", என கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து பொது மன்னிப்பை எதிர்பார்ப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நமது துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடுவின் கத்தார் பயணத்தின் போது இது நிகழ்ந்திருக்கிறது..சௌதி அரேபியாவும் அதன் அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளது. "பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரின் கருத்துக்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தைப் பதிவு செய்கிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..சில அரபு நாடுகளில் இந்தியாவிற்கு எதிராக எழுந்திருக்கும் போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கின்றன..இந்தியாவை விமர்சிக்கும் ஹேஷ் டேக்குகள் அந்த நாடுகளின் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்நாடுகளின் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இவ்விவகாரம் இடம்பிடித்துள்ளது..இந்திய பொருட்களை புறக்கணிக்க கோரும் ஹேஷ் டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன. கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள அங்காடிகளில் இந்திய பொருட்களை நீக்கும் செய்திகளும் வருகின்றன. குவைத்தில் உள்ள அல்-அர்தியா கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் அரபி மொழியில், "இந்திய பொருட்களை நாங்கள் எடுத்துவிட்டோம்" என்று போர்ட் வைக்கபட்டிருக்கிறது..குதிரை ஓடிய பின் லாயத்தைப் பூட்டிய கதையாக கட்சி செய்தி தொடர்பாளார்களை இடை நீக்கம் செய்வது, தொடர்பாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது போன்ற செயல்களை முன்னெடுத்திருக்கிறது. சர்வதேச அளவில் இஸ்லாமிய நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இன்னும் பிரதமர் ஒரு அறிக்கையை கொடுக்கவில்லை. தூதரகங்களின் மட்டத்தில் சமாளிப்பு வேலைகள் மட்டுமே தொடங்கியிருக்கிறது..நூபுர் ஷர்மா விவகாரத்தில் எனது பார்வையாக சொல்வதில் ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. இஸ்லாமிய மத சின்னங்களை விமர்சிப்பதோ எள்ளி நகையாடுவதோ மிகவும் ஆபத்தான முயற்சி என்பதுதான் அது. குறிப்பாக நபிகள் பற்றிய எந்த விஷயத்திலும் கை வைப்பது ஆபத்தானது. 'Say what you like about Allah, but leave the prophet alone' என்று ஒரு பெர்ஷிய பழமொழி இருக்கிறது. 'அல்லாஹ் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள், ஆனால் நபிகள் மேல் கை வைக்காதே, என்பதுதான் அது..அடுத்தது, இந்த விவகாரத்தில் இந்திய அரசும், கட்சியும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்துவிட்டது. கட்சியினரைக் காப்பற்ற வேண்டிய நிலை அரசின் கண்களை மறைத்துவிட்டது..இந்த விவகாரத்தில் அரசும் கட்சியும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விவகாரம் இந்த அளவுக்கு சென்றிருக்காது.இந்த சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி. பிரித்தாளும் அரசியல் உள் நாட்டில் வெற்றியைக்கொடுக்கலாம். ஆனால், சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பா.ஜ.க. அரசு உணர வேண்டிய நேரம் வந்து விட்டது.
பார்வை.– ரமணன்.2014ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. செய்தி ஊடகங்களில் கட்டுரைகள், காட்சி ஊடகங்களின் விவாதங்களில் கடுமையான கருத்துகள் தெரிவிக்கப்படுவதும், அதற்கு எழும் எதிர் வினைகளை பா.ஜ.க. அரசும், ஆட்சியும் அலட்சியப்படுத்துவதும் புதிதல்ல..ஆனால், அண்மையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபி குறித்து வெளியிட்ட கருத்துக்கு எதிர்வினையாக கான்பூர் மற்றும் சில நகரங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. பா.ஜ.க.வின் டெல்லி ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நவீன் ஜிண்டாலும் இதுதொடர்பாக சர்ச்சையை கிளப்பும் வகையிலான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். நூபுர் ஷர்மா பா.ஜ.க.வின் முக்கிய செய்தியாளர். தேர்தலில் கெஜ்ஜிரிவாலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர். விவாதங்களில் உணர்ச்சிப் பொங்க பேசக்கூடியவர். கட்சி மேலிடத்தின்ஆசி பெற்றவர்..சமூக ஊடகங்களில் சர்வ தேச அளவில் டிரன்ட் ஆன இந்த விவகாரம் இஸ்லாமிய நாடுகளுடனா உறவில் விரிசல் ஏற்படும் அளவுக்கு கடும் நெருக்கடியை ஒன்றிய அரசுக்கு உருவாக்கியிருக்கிறது..கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சந்தித்துவரும் ஆழமான மதப்பிரிவினையை நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துகள் பிரதிபலிப்பதாக சர்வதேச விமர்சகர்கள் எழுதுகின்றனர். குறிப்பாக நூபுர் ஷர்மாவின் கருத்துகள் ஆட்சேபகரமான வகையில் அமைந்துள்ளதால் இந்தியாவின் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மத பிரிவினை அதிகரித்திருப்பது கவலை கொள்ளச்செய்யும் விஷயம். கடந்த சில வாரங்களாக சில இந்து அமைப்புகள் வாரணாசியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு சென்று, நூற்றாண்டு பழைமையான மசூதியில் வழிபடுவதற்கு அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த மசூதி கோயில் இடிபாடுகளில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அது குறித்து கோபத்தையும் வெறுப்பையும் தூண்டும் வகையிலான விவாதங்களை தொலைக்காட்சி சேனல்கள் நடத்திவருகின்றன. சமூக ஊடகங்களில் பரவலான வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் அவ்வப்போது தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதைப் பார்க்கிறோம்..இந்தப் பிரச்னையில் இப்போது இந்திய இஸ்லாமிய சமூகத்தினருக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் குரல் எழுப்புகின்றன. முகமது நபிகள் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தோனேசியா, ஈராக், மாலத்தீவுகள், ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. முன்னதாக, குவைத், இரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள இந்திய தூதர்களை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. சௌதி அரேபியா இந்த விவகாரம் தொடர்பாக, கடும் வார்த்தைகளை பிரயோகித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நாடுகள் எல்லாம் நம் நட்பு நாடுகளின் பட்டியலில் உள்ளவை.."சர்வதேச விவகாரமாக மாறியிருக்கும் நாட்டின் உள் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்கவில்லை" என்று இந்த நாடுகள் கருதுகின்றன. இந்த இஸ்லாமிய நாடுகளின் கடும் கோபத்தை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் மூலம் உணர முடிகிறது.."இத்தகைய இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பு கருத்துகளுக்கு தண்டனையே வழங்காமல் அவற்றை தொடர அனுமதிப்பது, மனித உரிமைகள் பாதுகாப்பு மீதான கடும் ஆபத்துகளை ஏற்படுத்தும். மேலும், முஸ்லிம்கள் மீதான தவறான அபிப்ராயங்கள் வளரவும் அவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளுவதற்கும் வழிவகுக்கும். இது, வன்முறை மற்றும் வெறுப்பு சுழற்சியை உருவாக்கும்", என கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து பொது மன்னிப்பை எதிர்பார்ப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நமது துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடுவின் கத்தார் பயணத்தின் போது இது நிகழ்ந்திருக்கிறது..சௌதி அரேபியாவும் அதன் அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளது. "பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரின் கருத்துக்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தைப் பதிவு செய்கிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..சில அரபு நாடுகளில் இந்தியாவிற்கு எதிராக எழுந்திருக்கும் போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கின்றன..இந்தியாவை விமர்சிக்கும் ஹேஷ் டேக்குகள் அந்த நாடுகளின் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்நாடுகளின் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இவ்விவகாரம் இடம்பிடித்துள்ளது..இந்திய பொருட்களை புறக்கணிக்க கோரும் ஹேஷ் டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன. கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள அங்காடிகளில் இந்திய பொருட்களை நீக்கும் செய்திகளும் வருகின்றன. குவைத்தில் உள்ள அல்-அர்தியா கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் அரபி மொழியில், "இந்திய பொருட்களை நாங்கள் எடுத்துவிட்டோம்" என்று போர்ட் வைக்கபட்டிருக்கிறது..குதிரை ஓடிய பின் லாயத்தைப் பூட்டிய கதையாக கட்சி செய்தி தொடர்பாளார்களை இடை நீக்கம் செய்வது, தொடர்பாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது போன்ற செயல்களை முன்னெடுத்திருக்கிறது. சர்வதேச அளவில் இஸ்லாமிய நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இன்னும் பிரதமர் ஒரு அறிக்கையை கொடுக்கவில்லை. தூதரகங்களின் மட்டத்தில் சமாளிப்பு வேலைகள் மட்டுமே தொடங்கியிருக்கிறது..நூபுர் ஷர்மா விவகாரத்தில் எனது பார்வையாக சொல்வதில் ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. இஸ்லாமிய மத சின்னங்களை விமர்சிப்பதோ எள்ளி நகையாடுவதோ மிகவும் ஆபத்தான முயற்சி என்பதுதான் அது. குறிப்பாக நபிகள் பற்றிய எந்த விஷயத்திலும் கை வைப்பது ஆபத்தானது. 'Say what you like about Allah, but leave the prophet alone' என்று ஒரு பெர்ஷிய பழமொழி இருக்கிறது. 'அல்லாஹ் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள், ஆனால் நபிகள் மேல் கை வைக்காதே, என்பதுதான் அது..அடுத்தது, இந்த விவகாரத்தில் இந்திய அரசும், கட்சியும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்துவிட்டது. கட்சியினரைக் காப்பற்ற வேண்டிய நிலை அரசின் கண்களை மறைத்துவிட்டது..இந்த விவகாரத்தில் அரசும் கட்சியும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விவகாரம் இந்த அளவுக்கு சென்றிருக்காது.இந்த சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி. பிரித்தாளும் அரசியல் உள் நாட்டில் வெற்றியைக்கொடுக்கலாம். ஆனால், சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பா.ஜ.க. அரசு உணர வேண்டிய நேரம் வந்து விட்டது.