கட்டுரை, படங்கள் :ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.காட்சிகளின் அலங்கார ரூபங்கள்…!.மதுரையம்பதியில் புராண வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில், அங்கு அரங்கேறிய காட்சிகள்தான் பரமன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் இப்போதும் ஆண்டுதோறும், சொக்கநாதரே ஒரு கூலியாளாக வேடம் பூண்டு பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வானது உற்சவமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் மேற்கண்ட உற்சவம் நடைபெறுகிறது. இங்கு தான் சில வீதிகள் தமிழ் மாதங்களின் பெயரால் அமையப் பெற்றுள்ளன. அது தனி வரலாறு. அதற்கு முன்னதாக பரமன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வினை என்னவென்று சற்று தெரிந்து கொள்வோம்..சமீபத்தில் (2021 அக்டோபர் – நவம்பர்) பெய்த பெரு மழை போல, முன்னொரு காலத்தில் விடாது அடைமழை பொழிந்துள்ளது. அப்போது பாண்டிய மன்னன் அரசாண்ட காலம். வைகை ஆறு பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. எங்கே கரைகள் உடைந்து விடுமோ என்கிற அச்சம் மன்னனுக்கு. அதனால் மதுரை மக்களுக்குக் கட்டளையிடுகிறான். வைகையாற்றுக் கரையினைப் பலப்படுத்தவும் சீர்படுத்தவும் வேலைகள், மதுரை மாநகர மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அந்த வகையில் வந்தி எனும் மூதாட்டிக்கு அவளது பங்காக, கொஞ்சம் மண்ணை வெட்டிப் போட்டு வைகைக் கரையினைப் பலப்படுத்த வேண்டும் என்பது பாண்டிய மன்னனின் அரச கட்டளை. அது சரி. இந்த வந்தி யார்?.வைகை ஆற்றங்கரையோரமாக பிட்டு அவித்து விற்று, அதன் வருவாய் மூலமாகத் தன் வயிற்றைக் கழுவி வருபவள் தான் வந்தி எனும் பெயர் கொண்ட வயோதிக மூதாட்டி. வயது மூப்பு, உடல் தள்ளாமை காரணங்களால் மன்னனின் கட்டளைக்குக் கீழ் பணிந்து களப்பணியாற்ற முடியவில்லை. மிகவும் கவலையுற்று, இறைவனிடம் வேண்டுகிறாள் வந்தி. அப்போது பிட்டு விற்கும் இடம் வழியாக, தோளில் மண்வெட்டி சுமந்து கூலியாள் ஒருவன் நடந்து வருகிறான். இவனே சரியான ஆள் என்கிற திருப்தியுடன், குந்தி அவனை அருகே அழைக்கிறாள். தனது இயலாமையை அவனிடம் எடுத்து உரைக்கிறாள். "இம்புட்டு தானே? அதுக்கோசரம் தான் நா மம்புட்டியோட வந்துருக்கேனாக்கும். உம் பங்கு மண்ணை நா வெட்டிப் போட்டுடுறேன்." என்கிறான்.."நீ மவராசனா இருப்பேப்பா" இது கிழவி.."நா மவராசனா இருக்குறது அப்புறமா பாத்துக்குவோம். நா உம்மோட பங்கு மண்ணை வெட்டிப் போட்டா… எனக்கு என்ன கூலி தருவே. அதை மொதல்ல சொல்லு" என்கிறான். "உனக்குக் கூலியா தர என்ட்ட பணங்காசு ஏதுமில்லே. நா அவிச்சு வெச்சிருக்குறதுல நாலு புட்டு தர்றேன்."."அதுவும் சரி தான். இப்ப எனக்கு ரொம்பப் பசிக்குது. மொதல்ல பிட்டு கொடு." "பசியோட நீயுந்தான் எப்பிடி மண்ணு வெட்டுவே? நாலு புட்டு தர்றேன். திண்ணுட்டுப் போயி வெட்டிப் போடு மண்ணை."."அதுக்கு தானே நானு மம்புட்டி கூடையோட வந்துருக்கேன். சரீங்க தாயீ. என்னோடப் பசியாறக் குடுங்க." வயிறாரச் சாப்பிடுகிறான். சாப்பிட்டு முடித்து விட்டு வைகை ஆற்றங்கரை நோக்கிக் கிளம்புகிறான். அந்தக் கூலியாளின் தோளிலே மண்வெட்டி. தலையிலே ஒரு கூடை..உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு அல்லவா? கூடையைத் தலைக்கு வாகாக வைத்துக் கொண்டு தரையிலே படுத்துத் தூங்கி விடுகிறான் அந்தக் கூலியாள். வைகைக் கரையினைப் பலப்படுத்தும் பணிகளை மேர்பார்வையிட பவனி வருகிறார் பாண்டிய மன்னன். பிட்டு விற்கும் வந்தியிடம் கேட்கிறார். "என்னோட வயசுக்கும் உடம்புக்கும் என்னால மண்ணை வெட்டிப் போட்டு தூக்கியாந்து கரையைப் பலப்படுத்த முடியாது மன்னா. அதனாலே…" வந்தி தாழ்ந்த குரலில் பேசுகிறாள். "அதனாலே…??" என்று கர்ஜிக்கிறான் மன்னன். நடந்ததைக் கூறுகிறாள் வந்தி. கரைக்கு விரைகிறான் பாண்டிய மன்னன். அங்கே தலைக்குக் கூடையும் பக்கத்திலே மண்வெட்டியுடன் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான் அந்த வேலையாள்..மன்னனின் கோபம் தலைக்கேறுகிறது. இடுப்பில் இருக்கும் சாட்டையை உருவுகிறான். சாட்டையை வீசுகிறான்… வீசுகிறான்… என்ன ஆச்சர்யம்? வீசிய சாட்டையின் ஒரு அடி கூட அந்தக் கூலியாள் மீதாக விழவே இல்லை. மாறாக வீசிய சாட்டையின் ஒவ்வொரு அடியும் மன்னன் மீதாகவும் மதுரையம்பதியில் வாழ்வோர் ஒவ்வொருவர் மீதாகவும் அந்தச் சாட்டையடி விழுந்து கொண்டே இருந்தது. அப்போது தான் மன்னனுக்குப் புலப்பட்டது. வந்ததும், கூலிக்கு பிட்டு வாங்கி சாப்பிட்டதும், சாப்பிட்டு இப்போது படுத்து உறங்கிக் கொண்டிருப்பதும் சாதாரணக் கூலியாள் இல்லை என்று. பாண்டிய மன்னனின் கண்ணெதிரே ரிஷப வாகனத்தில் பரமனாகிய பரமேஸ்வரனும் பார்வதியும் தோன்றுகின்றனர். மெய்சிலிர்த்துப் போகிறான் பாண்டிய மன்னன்.."மன்னா… தன் உடலாலும் மனதாலும் நற்காரியங்கள் செய்ய இயலாதவர்கள் உள்ளம் உருகி வேண்டுகையில், அவர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவுவதே இந்தப் பரமனின் திருவிளையாடல். அதனை மெய்ப்பிக்க வேண்டியே யாம் இங்கு எழுந்தருளினோம்." என்று அசரீரியாகக் குரல் கேட்கிறது. பரமனே நேரில் வந்து பிட்டுக்கு மண் சுமந்த புராண வரலாறு இது தான்..மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளில், இந்த உற்சவம் நடக்கிறது. ஆனால், மேற்சொல்லி வந்தது போலத் தொடர் காட்சிப்படிம அலங்கார ரூபங்களாக நடத்தப்படுவதில்லை. திருச்சியில் வசிக்கும் "அலங்காரம்" கணேஷ் குருக்கள் என்பவருக்கு, அந்தப் புராண நிகழ்வினையே அடுத்தடுத்தக் காட்சிகளில் கண் முன்னே அலங்கார ரூபங்களாகக் கட்டமைத்து நிறுவினால் என்னவென்று அவரது மனதிலே தோன்றியது. உடனே செயல்படவும் தொடங்கி விட்டார்.."திருச்சி பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் கோயில். அங்கு பைரவர் சந்நிதியில் இந்த அலங்காரம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு அங்கேயே காட்சியருளுதலாக வைக்கப்பட்டிருந்தது..எனது நான்கைந்து உதவியாளர்கள் துணை கொண்டு இரண்டு நாளில் அலங்கார ரூபங்களை உருவாக்கினோம். பரமன் பிட்டுக்கு மண் சுமந்த புராண கால வரலாற்றினை நான்கைந்து காட்சிகளாகப் பிரித்து அதனை வகைமைப்படுத்திக் கொண்டோம். பைரவர் சந்நிதியில் பக்தர்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைத்திருந்தோம்" என்கிறார் திருச்சியில் வசித்து வரும் "அலங்காரம்" கணேஷ் குருக்கள்.
கட்டுரை, படங்கள் :ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.காட்சிகளின் அலங்கார ரூபங்கள்…!.மதுரையம்பதியில் புராண வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில், அங்கு அரங்கேறிய காட்சிகள்தான் பரமன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் இப்போதும் ஆண்டுதோறும், சொக்கநாதரே ஒரு கூலியாளாக வேடம் பூண்டு பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வானது உற்சவமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் மேற்கண்ட உற்சவம் நடைபெறுகிறது. இங்கு தான் சில வீதிகள் தமிழ் மாதங்களின் பெயரால் அமையப் பெற்றுள்ளன. அது தனி வரலாறு. அதற்கு முன்னதாக பரமன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வினை என்னவென்று சற்று தெரிந்து கொள்வோம்..சமீபத்தில் (2021 அக்டோபர் – நவம்பர்) பெய்த பெரு மழை போல, முன்னொரு காலத்தில் விடாது அடைமழை பொழிந்துள்ளது. அப்போது பாண்டிய மன்னன் அரசாண்ட காலம். வைகை ஆறு பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. எங்கே கரைகள் உடைந்து விடுமோ என்கிற அச்சம் மன்னனுக்கு. அதனால் மதுரை மக்களுக்குக் கட்டளையிடுகிறான். வைகையாற்றுக் கரையினைப் பலப்படுத்தவும் சீர்படுத்தவும் வேலைகள், மதுரை மாநகர மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அந்த வகையில் வந்தி எனும் மூதாட்டிக்கு அவளது பங்காக, கொஞ்சம் மண்ணை வெட்டிப் போட்டு வைகைக் கரையினைப் பலப்படுத்த வேண்டும் என்பது பாண்டிய மன்னனின் அரச கட்டளை. அது சரி. இந்த வந்தி யார்?.வைகை ஆற்றங்கரையோரமாக பிட்டு அவித்து விற்று, அதன் வருவாய் மூலமாகத் தன் வயிற்றைக் கழுவி வருபவள் தான் வந்தி எனும் பெயர் கொண்ட வயோதிக மூதாட்டி. வயது மூப்பு, உடல் தள்ளாமை காரணங்களால் மன்னனின் கட்டளைக்குக் கீழ் பணிந்து களப்பணியாற்ற முடியவில்லை. மிகவும் கவலையுற்று, இறைவனிடம் வேண்டுகிறாள் வந்தி. அப்போது பிட்டு விற்கும் இடம் வழியாக, தோளில் மண்வெட்டி சுமந்து கூலியாள் ஒருவன் நடந்து வருகிறான். இவனே சரியான ஆள் என்கிற திருப்தியுடன், குந்தி அவனை அருகே அழைக்கிறாள். தனது இயலாமையை அவனிடம் எடுத்து உரைக்கிறாள். "இம்புட்டு தானே? அதுக்கோசரம் தான் நா மம்புட்டியோட வந்துருக்கேனாக்கும். உம் பங்கு மண்ணை நா வெட்டிப் போட்டுடுறேன்." என்கிறான்.."நீ மவராசனா இருப்பேப்பா" இது கிழவி.."நா மவராசனா இருக்குறது அப்புறமா பாத்துக்குவோம். நா உம்மோட பங்கு மண்ணை வெட்டிப் போட்டா… எனக்கு என்ன கூலி தருவே. அதை மொதல்ல சொல்லு" என்கிறான். "உனக்குக் கூலியா தர என்ட்ட பணங்காசு ஏதுமில்லே. நா அவிச்சு வெச்சிருக்குறதுல நாலு புட்டு தர்றேன்."."அதுவும் சரி தான். இப்ப எனக்கு ரொம்பப் பசிக்குது. மொதல்ல பிட்டு கொடு." "பசியோட நீயுந்தான் எப்பிடி மண்ணு வெட்டுவே? நாலு புட்டு தர்றேன். திண்ணுட்டுப் போயி வெட்டிப் போடு மண்ணை."."அதுக்கு தானே நானு மம்புட்டி கூடையோட வந்துருக்கேன். சரீங்க தாயீ. என்னோடப் பசியாறக் குடுங்க." வயிறாரச் சாப்பிடுகிறான். சாப்பிட்டு முடித்து விட்டு வைகை ஆற்றங்கரை நோக்கிக் கிளம்புகிறான். அந்தக் கூலியாளின் தோளிலே மண்வெட்டி. தலையிலே ஒரு கூடை..உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு அல்லவா? கூடையைத் தலைக்கு வாகாக வைத்துக் கொண்டு தரையிலே படுத்துத் தூங்கி விடுகிறான் அந்தக் கூலியாள். வைகைக் கரையினைப் பலப்படுத்தும் பணிகளை மேர்பார்வையிட பவனி வருகிறார் பாண்டிய மன்னன். பிட்டு விற்கும் வந்தியிடம் கேட்கிறார். "என்னோட வயசுக்கும் உடம்புக்கும் என்னால மண்ணை வெட்டிப் போட்டு தூக்கியாந்து கரையைப் பலப்படுத்த முடியாது மன்னா. அதனாலே…" வந்தி தாழ்ந்த குரலில் பேசுகிறாள். "அதனாலே…??" என்று கர்ஜிக்கிறான் மன்னன். நடந்ததைக் கூறுகிறாள் வந்தி. கரைக்கு விரைகிறான் பாண்டிய மன்னன். அங்கே தலைக்குக் கூடையும் பக்கத்திலே மண்வெட்டியுடன் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான் அந்த வேலையாள்..மன்னனின் கோபம் தலைக்கேறுகிறது. இடுப்பில் இருக்கும் சாட்டையை உருவுகிறான். சாட்டையை வீசுகிறான்… வீசுகிறான்… என்ன ஆச்சர்யம்? வீசிய சாட்டையின் ஒரு அடி கூட அந்தக் கூலியாள் மீதாக விழவே இல்லை. மாறாக வீசிய சாட்டையின் ஒவ்வொரு அடியும் மன்னன் மீதாகவும் மதுரையம்பதியில் வாழ்வோர் ஒவ்வொருவர் மீதாகவும் அந்தச் சாட்டையடி விழுந்து கொண்டே இருந்தது. அப்போது தான் மன்னனுக்குப் புலப்பட்டது. வந்ததும், கூலிக்கு பிட்டு வாங்கி சாப்பிட்டதும், சாப்பிட்டு இப்போது படுத்து உறங்கிக் கொண்டிருப்பதும் சாதாரணக் கூலியாள் இல்லை என்று. பாண்டிய மன்னனின் கண்ணெதிரே ரிஷப வாகனத்தில் பரமனாகிய பரமேஸ்வரனும் பார்வதியும் தோன்றுகின்றனர். மெய்சிலிர்த்துப் போகிறான் பாண்டிய மன்னன்.."மன்னா… தன் உடலாலும் மனதாலும் நற்காரியங்கள் செய்ய இயலாதவர்கள் உள்ளம் உருகி வேண்டுகையில், அவர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவுவதே இந்தப் பரமனின் திருவிளையாடல். அதனை மெய்ப்பிக்க வேண்டியே யாம் இங்கு எழுந்தருளினோம்." என்று அசரீரியாகக் குரல் கேட்கிறது. பரமனே நேரில் வந்து பிட்டுக்கு மண் சுமந்த புராண வரலாறு இது தான்..மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளில், இந்த உற்சவம் நடக்கிறது. ஆனால், மேற்சொல்லி வந்தது போலத் தொடர் காட்சிப்படிம அலங்கார ரூபங்களாக நடத்தப்படுவதில்லை. திருச்சியில் வசிக்கும் "அலங்காரம்" கணேஷ் குருக்கள் என்பவருக்கு, அந்தப் புராண நிகழ்வினையே அடுத்தடுத்தக் காட்சிகளில் கண் முன்னே அலங்கார ரூபங்களாகக் கட்டமைத்து நிறுவினால் என்னவென்று அவரது மனதிலே தோன்றியது. உடனே செயல்படவும் தொடங்கி விட்டார்.."திருச்சி பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் கோயில். அங்கு பைரவர் சந்நிதியில் இந்த அலங்காரம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு அங்கேயே காட்சியருளுதலாக வைக்கப்பட்டிருந்தது..எனது நான்கைந்து உதவியாளர்கள் துணை கொண்டு இரண்டு நாளில் அலங்கார ரூபங்களை உருவாக்கினோம். பரமன் பிட்டுக்கு மண் சுமந்த புராண கால வரலாற்றினை நான்கைந்து காட்சிகளாகப் பிரித்து அதனை வகைமைப்படுத்திக் கொண்டோம். பைரவர் சந்நிதியில் பக்தர்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைத்திருந்தோம்" என்கிறார் திருச்சியில் வசித்து வரும் "அலங்காரம்" கணேஷ் குருக்கள்.