காதலின் பொன்வீதியில்.– தனுஜா ஜெயராமன்."காதல் என்பது தூங்கும் மிருகம்மனசுக்குள் விழித்திருக்கும்"….இது எவ்வளவு நிஜமான வார்த்தை. நம் அனைவரின் மனதிலும் காதல் உண்டு. அதற்கு தகுந்த நேரமும் சூழலும் அமையும் போது காதல் பிருமாண்டமாய் விஸ்வரூபம் எடுக்கும். காதலுக்கு சமன்பாடெல்லாம் எழுதிவிட இயலாது. காதலில் அவரவருக்கேற்ற நியாயங்கள் அவ்வப்போது மாறுபடலாம். பொதுவாக காதலென்பது என்ன? என்று பரவலாக கேள்வி வைக்கப்படும். காதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதும் கேள்வியாக வரும். காதல் விளக்க வேண்டியதோ, வார்த்தைகளாய் சொல்லவேண்டியதோ அல்ல? மனதால் உணர வேண்டியது..பொதுவாக காதல் என்பது 'நாம் யாரோடு இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறோமோ, யாரிடம் நம் மனதிலுள்ள அனைத்தையும் எவ்வித ஒளிவுமறைவும், தயக்கமுமின்றி கொட்டிவிடுகிறோமோ, யாருடன் நாம் இருக்கும்போது மிக சந்தோஷமாக உணர்கிறோமோ அவரிடம் நாம் காதல் கொண்டிருக்கிறோம்' என்பதாக அர்த்தம். அப்படியான நபர்களை தேடுங்கள்! அப்படியான நபர்கள் கிடைத்தால் அவர்களை இறுக பற்றிக்கொள்ளுங்கள்! விட்டுவிடாதீர்கள்! அந்த நபருடன் நாம் காதலின் அடுத்த அடியான திருமணபந்தத்திலும் கொஞ்சமும் தயக்கமின்றி கால் வைக்கலாம்..காதலில் பரஸ்பர நம்பிக்கை என்பது முக்கிய பங்கு வகிக்கும் என்பதும் நிஜமே..இவர்/இவள் நம்முடன் இருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது காதல் அல்ல… இவனோ/ இவளோ இல்லையெனில் நமக்கு வாழ்க்கையே இல்லை என நினைக்க வைப்பதே உண்மையான காதல். ஏதோ ஒரு மாயக்குரல் ஒன்று உங்களை பனிகட்டியாய் உருகச்செய்யுமெனில் அதுவும் காதலே. உண்மையாய் கிடைத்த காதலை பத்திரமாய் சேமித்துக்கொள்ளுங்கள். அதனை வாழ்நாள் முழுக்க திரும்ப செலவு செய்ய நேரிடலாம். காதலை அன்பின் விருட்சமாய் விதைத்தால் நாளடைவில் மரமாகி பூத்து குலுங்கி நம்மை மகிழ்விக்கும்தானே. காதலில் கிடைக்கும் அன்பானது நம்மை வாழ்வில் மேல்நோக்கி நகர்த்தி செல்லும் ஆற்றலையும், வாழ்வை வளம்பெறச்செய்யும் வல்லமையும் உடையது..ஒரு உண்மை காதல் எப்படிபட்ட கடுமையான மனிதரையும் பாகாய் உருகச் செய்து மென்மையானவராக மாற்றிவிடும். அதேபோன்று இளகிய மனம் படைத்தவரை இரும்பின் உறுதியாய் மாற்றும் சக்தி காதலுக்கு உண்டு.."நீ சிதறிய ஒருதுளி பேனாமையில்ஒட்டியிருக்கிறது ஓராயிரம் கவிதைகள்"…. .என கவிதையாய் எழுத வைப்பதும் காதல்தான்..பொதுவாக காதல் நமது மென்மையான உணர்வுகளைத் தூண்டி விளையாடும் ஆற்றலைப் பெற்றுள்ளது. காதல் நம்மை சிரிக்கவும் வைக்கும், அழவும் வைக்கும். காதல் நம்மை சோதனையாளராகவும் மாற்றும், சாதனையாளராகவும் ஆக்கும்..காதலுக்காக சாகவும் கூடாது! காதலிக்காம சாகவும் கூடாது! என எங்கேயோ எப்போதோ கேட்ட வரிகள் எவ்வளவு உண்மை. கேட்டதும் மனதில் "பச்"என ஒட்டிக்கொள்ளும் உயிரோட்டமான வரிகள். காதல் ஒரு உன்னதமான உணர்வு.."உனக்காகவென்றே கவிதையை முடிக்கவில்லை முற்றுபெறாதஇடங்களை உன் முத்தத்தால் நிரப்பி விடேன்"...என்ற கவிதைத்துவமான வரிகள் காதலை எவ்வளவு அழகாய் சொல்கிறது..உண்மை காதல் என்பது ஆசை போல் அறுபது நாளிலோ அல்லது மோகம் போல முப்பது நாளிலோ முடிவதல்ல. வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து வரும் இயல்புடையது. "முதுமை பெற்ற காதலெனில் முதுமைவரை ஓடிவரும் " என்ற கவிஞரின் வைரவரிகள் எவ்வளவு சத்தியமானவை..காதலுடனான "நான் இருக்கிறேன்" என்ற ஒற்றை சொல் மரணம் வரை நம்மை தொடர்ந்து வருமாயின் அவர்கள் பேரதிஷ்டசாலிகள் அல்லவா! காதலுடனான ஒரு ஆறுதல் சொல் நமது மலையளவு துன்பத்தையும் கடுகளவு மாற்றிவிடுமே!.காதலுக்கு அப்படியெல்லாம் பெரியதாய் ஒன்றும் செய்திட தேவையில்லை. அழுந்த பிடித்தபடி சாலையைக் கடக்கும் ஒரு ஆதுரமான கைகளோ, கை கோர்த்தபடி ஒன்றாய் நடந்து செல்லும் நேசமோ, கலைந்த தலைகேசம் ஒதுக்கும் ஒற்றை விரல்களோ, ஆறுதலாய் தலைகோதும் கரங்களோ போதுமானது….ஆதலால் காதல் செய்யுங்கள்!!! காதலை கொண்டாடுங்கள்!! மகிழ்ச்சியை பரப்புங்கள்!!! உங்களை சேர்ந்தவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள்!!!
காதலின் பொன்வீதியில்.– தனுஜா ஜெயராமன்."காதல் என்பது தூங்கும் மிருகம்மனசுக்குள் விழித்திருக்கும்"….இது எவ்வளவு நிஜமான வார்த்தை. நம் அனைவரின் மனதிலும் காதல் உண்டு. அதற்கு தகுந்த நேரமும் சூழலும் அமையும் போது காதல் பிருமாண்டமாய் விஸ்வரூபம் எடுக்கும். காதலுக்கு சமன்பாடெல்லாம் எழுதிவிட இயலாது. காதலில் அவரவருக்கேற்ற நியாயங்கள் அவ்வப்போது மாறுபடலாம். பொதுவாக காதலென்பது என்ன? என்று பரவலாக கேள்வி வைக்கப்படும். காதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதும் கேள்வியாக வரும். காதல் விளக்க வேண்டியதோ, வார்த்தைகளாய் சொல்லவேண்டியதோ அல்ல? மனதால் உணர வேண்டியது..பொதுவாக காதல் என்பது 'நாம் யாரோடு இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறோமோ, யாரிடம் நம் மனதிலுள்ள அனைத்தையும் எவ்வித ஒளிவுமறைவும், தயக்கமுமின்றி கொட்டிவிடுகிறோமோ, யாருடன் நாம் இருக்கும்போது மிக சந்தோஷமாக உணர்கிறோமோ அவரிடம் நாம் காதல் கொண்டிருக்கிறோம்' என்பதாக அர்த்தம். அப்படியான நபர்களை தேடுங்கள்! அப்படியான நபர்கள் கிடைத்தால் அவர்களை இறுக பற்றிக்கொள்ளுங்கள்! விட்டுவிடாதீர்கள்! அந்த நபருடன் நாம் காதலின் அடுத்த அடியான திருமணபந்தத்திலும் கொஞ்சமும் தயக்கமின்றி கால் வைக்கலாம்..காதலில் பரஸ்பர நம்பிக்கை என்பது முக்கிய பங்கு வகிக்கும் என்பதும் நிஜமே..இவர்/இவள் நம்முடன் இருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது காதல் அல்ல… இவனோ/ இவளோ இல்லையெனில் நமக்கு வாழ்க்கையே இல்லை என நினைக்க வைப்பதே உண்மையான காதல். ஏதோ ஒரு மாயக்குரல் ஒன்று உங்களை பனிகட்டியாய் உருகச்செய்யுமெனில் அதுவும் காதலே. உண்மையாய் கிடைத்த காதலை பத்திரமாய் சேமித்துக்கொள்ளுங்கள். அதனை வாழ்நாள் முழுக்க திரும்ப செலவு செய்ய நேரிடலாம். காதலை அன்பின் விருட்சமாய் விதைத்தால் நாளடைவில் மரமாகி பூத்து குலுங்கி நம்மை மகிழ்விக்கும்தானே. காதலில் கிடைக்கும் அன்பானது நம்மை வாழ்வில் மேல்நோக்கி நகர்த்தி செல்லும் ஆற்றலையும், வாழ்வை வளம்பெறச்செய்யும் வல்லமையும் உடையது..ஒரு உண்மை காதல் எப்படிபட்ட கடுமையான மனிதரையும் பாகாய் உருகச் செய்து மென்மையானவராக மாற்றிவிடும். அதேபோன்று இளகிய மனம் படைத்தவரை இரும்பின் உறுதியாய் மாற்றும் சக்தி காதலுக்கு உண்டு.."நீ சிதறிய ஒருதுளி பேனாமையில்ஒட்டியிருக்கிறது ஓராயிரம் கவிதைகள்"…. .என கவிதையாய் எழுத வைப்பதும் காதல்தான்..பொதுவாக காதல் நமது மென்மையான உணர்வுகளைத் தூண்டி விளையாடும் ஆற்றலைப் பெற்றுள்ளது. காதல் நம்மை சிரிக்கவும் வைக்கும், அழவும் வைக்கும். காதல் நம்மை சோதனையாளராகவும் மாற்றும், சாதனையாளராகவும் ஆக்கும்..காதலுக்காக சாகவும் கூடாது! காதலிக்காம சாகவும் கூடாது! என எங்கேயோ எப்போதோ கேட்ட வரிகள் எவ்வளவு உண்மை. கேட்டதும் மனதில் "பச்"என ஒட்டிக்கொள்ளும் உயிரோட்டமான வரிகள். காதல் ஒரு உன்னதமான உணர்வு.."உனக்காகவென்றே கவிதையை முடிக்கவில்லை முற்றுபெறாதஇடங்களை உன் முத்தத்தால் நிரப்பி விடேன்"...என்ற கவிதைத்துவமான வரிகள் காதலை எவ்வளவு அழகாய் சொல்கிறது..உண்மை காதல் என்பது ஆசை போல் அறுபது நாளிலோ அல்லது மோகம் போல முப்பது நாளிலோ முடிவதல்ல. வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து வரும் இயல்புடையது. "முதுமை பெற்ற காதலெனில் முதுமைவரை ஓடிவரும் " என்ற கவிஞரின் வைரவரிகள் எவ்வளவு சத்தியமானவை..காதலுடனான "நான் இருக்கிறேன்" என்ற ஒற்றை சொல் மரணம் வரை நம்மை தொடர்ந்து வருமாயின் அவர்கள் பேரதிஷ்டசாலிகள் அல்லவா! காதலுடனான ஒரு ஆறுதல் சொல் நமது மலையளவு துன்பத்தையும் கடுகளவு மாற்றிவிடுமே!.காதலுக்கு அப்படியெல்லாம் பெரியதாய் ஒன்றும் செய்திட தேவையில்லை. அழுந்த பிடித்தபடி சாலையைக் கடக்கும் ஒரு ஆதுரமான கைகளோ, கை கோர்த்தபடி ஒன்றாய் நடந்து செல்லும் நேசமோ, கலைந்த தலைகேசம் ஒதுக்கும் ஒற்றை விரல்களோ, ஆறுதலாய் தலைகோதும் கரங்களோ போதுமானது….ஆதலால் காதல் செய்யுங்கள்!!! காதலை கொண்டாடுங்கள்!! மகிழ்ச்சியை பரப்புங்கள்!!! உங்களை சேர்ந்தவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள்!!!