ஓவியம்: ரஜினி."மாப்பிள்ளை ஐ.டி.ல ஒர்க் பண்றாருன்னு சொன்னீங்களே?"."ஆமா… ஐ.டி. கார்டு ரெடி பண்ணி, லேமினேட் பண்ணும் வேலைல இருக்காரு.".– சி.பி.செந்தில்குமார், சென்னிமலை."நன்றி அறிவிப்புக் கூட்டத்துல தலைவர் அஞ்சு விரலை விரித்துக் காட்றாரே, கட்சி மாறிட்டாரா?"."இல்ல… அடுத்தபடியா அஞ்சு வருஷம் கழிச்சு சந்திக்கலாம்னு சிம்பாலிக்கா சொல்றாரு!".– வி. ரேவதி, தஞ்சை."மன்னா! நடுராத்திரியில் எழுந்திரிச்சு ஏன் அழறீங்க?"."மகாராணி! உங்களை எதிரி நாட்டு மன்னன் கடத்திக்கொண்டு போய் விட்டதாகக் கனவு கண்டேன்."."அது, கனவுதானே மன்னா, அதுக்குப்போய் அழுவாங்களா?"."அதனாலதான் அழறேன் மகாராணி!".– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா."எங்க ஆபிஸ் ரொம்ப சைலன்டா இருக்கும்."."நிஜமாவா?"."ஆமாம்… குண்டூசி விழுந்தாக்கூட தூங்கிகிட்டு இருக்கும் மேனேஜர் உடனே கண் முழிச்சுப்பாரு.".– தீபிகாசாரதி, சென்னை."நம்ம தலைவர் நகைக் கடைகளைத் திறக்கக் கூப்பிட்டா உடனே ஒத்துக் கிறாரே ஏன்?"."முன்காலத்துல அந்தக் கடைகளை ராத்திரியில திறந்தவர்தானே!".– சி.ஆர்.ஹரிஹரன்,ஆலுவா, கேரளா.."
ஓவியம்: ரஜினி."மாப்பிள்ளை ஐ.டி.ல ஒர்க் பண்றாருன்னு சொன்னீங்களே?"."ஆமா… ஐ.டி. கார்டு ரெடி பண்ணி, லேமினேட் பண்ணும் வேலைல இருக்காரு.".– சி.பி.செந்தில்குமார், சென்னிமலை."நன்றி அறிவிப்புக் கூட்டத்துல தலைவர் அஞ்சு விரலை விரித்துக் காட்றாரே, கட்சி மாறிட்டாரா?"."இல்ல… அடுத்தபடியா அஞ்சு வருஷம் கழிச்சு சந்திக்கலாம்னு சிம்பாலிக்கா சொல்றாரு!".– வி. ரேவதி, தஞ்சை."மன்னா! நடுராத்திரியில் எழுந்திரிச்சு ஏன் அழறீங்க?"."மகாராணி! உங்களை எதிரி நாட்டு மன்னன் கடத்திக்கொண்டு போய் விட்டதாகக் கனவு கண்டேன்."."அது, கனவுதானே மன்னா, அதுக்குப்போய் அழுவாங்களா?"."அதனாலதான் அழறேன் மகாராணி!".– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா."எங்க ஆபிஸ் ரொம்ப சைலன்டா இருக்கும்."."நிஜமாவா?"."ஆமாம்… குண்டூசி விழுந்தாக்கூட தூங்கிகிட்டு இருக்கும் மேனேஜர் உடனே கண் முழிச்சுப்பாரு.".– தீபிகாசாரதி, சென்னை."நம்ம தலைவர் நகைக் கடைகளைத் திறக்கக் கூப்பிட்டா உடனே ஒத்துக் கிறாரே ஏன்?"."முன்காலத்துல அந்தக் கடைகளை ராத்திரியில திறந்தவர்தானே!".– சி.ஆர்.ஹரிஹரன்,ஆலுவா, கேரளா.."