உங்கள் குரல்.'மாட்டு வண்டிகளில் வந்திறங்கிய இலக்கிய சீர் வரிசைகள்' கல்கியின் தனித்துவம். நிலையற்ற பொன் பொருளை விட நிலையான அறிவு செல்வம் சிறந்தது என உணர்த்தியது சீர் வரிசை.– மதுரை குழந்தைவேலு, சென்னை.தி.மு.க.வின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு உண்மையான காரணம் குறித்து வாசகி ஒருவர் கேட்ட கேள்விக்கு , 'மக்களிடம் அவர்கள் செலுத்திய மூன்றெழுத்துதான். நான் அ-ன்–பு என்பதைச் சொல்லுகிறேன்' என்பதை படித்து விட்டு 'நீங்கள் தவறதலாக எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்' என்பதை படித்ததும் 'சரியான அந்த மூன்றெழுத்தை உணர்ந்து கொண்டேன்.– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.."பாராட்டுவோம் நன்றி சொல்வோம்" என்ற "தலையங்கம்" மிகவும் அருமை இந்திய மாணவர்கள் 20 ஆயிரம் பேர் உக்ரைனில் படிக்கிறார் என்ற செய்தியும் அவர்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்றும் தெளிவாக விளக்கி இந்தப் போரினை பற்றி ஒரு தெளிவை கொடுத்தது.– பிரகதா, மதுரை.."போரும் அமைதியும்" என்ற சிறப்பு கட்டுரை பல கேள்விகளுக்கு பதில் சொல்வது போல இருந்தது. 'ஏன் இந்த போர்' என்றே தெரியாது இருப்பவர்களுக்கும் 'அந்தப் போர் எப்படி வந்தது, அதனால், பாதிக்கப்பட்டது எப்படி' என்று படங்களுடன் பார்த்ததும் உள்ளம் பதைபதைத்தது. மிகவும் அருமையான சிறப்பு கட்டுரை பிரசுரித்து அனைவருக்கும் உக்ரரைன் போர் பற்றி அழகாக தெளிவுபடுத்திய "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள்.– நந்தினிகிருஷ்ணன், மதுரை – 625 006.ரமணரின் அமுதமொழி வாழ்வின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது. படிக்க படிக்க பேரின்பம் தருகிறது. கடவுளின் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே நான் என்பதை உணருகிறபோது பணிவு வருகிறது. தீமைகளைச் செய்யாது, தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து, மகிழ்ச்சி, மன நிறைவு பெறுவோம். அமுதமொழி உயிர்மொழி.– நெல்லை குரலோன், நெல்லை.பிறர் பசியினைப் பாேக்கும் நற்பண்பு யாருக்கு உள்ளதாே அவர்கள் நிச்சயம் சாெர்க்கத்திற்கு செல்வர். ஆனந்தனின் சிறுகதை அற்புத படைப்பு "பசி" மனித சமூகத்தின் எழுச்சிக்கு வித்து என்பர்.– து.சேரன், ஆலங்குளம்
உங்கள் குரல்.'மாட்டு வண்டிகளில் வந்திறங்கிய இலக்கிய சீர் வரிசைகள்' கல்கியின் தனித்துவம். நிலையற்ற பொன் பொருளை விட நிலையான அறிவு செல்வம் சிறந்தது என உணர்த்தியது சீர் வரிசை.– மதுரை குழந்தைவேலு, சென்னை.தி.மு.க.வின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு உண்மையான காரணம் குறித்து வாசகி ஒருவர் கேட்ட கேள்விக்கு , 'மக்களிடம் அவர்கள் செலுத்திய மூன்றெழுத்துதான். நான் அ-ன்–பு என்பதைச் சொல்லுகிறேன்' என்பதை படித்து விட்டு 'நீங்கள் தவறதலாக எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்' என்பதை படித்ததும் 'சரியான அந்த மூன்றெழுத்தை உணர்ந்து கொண்டேன்.– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.."பாராட்டுவோம் நன்றி சொல்வோம்" என்ற "தலையங்கம்" மிகவும் அருமை இந்திய மாணவர்கள் 20 ஆயிரம் பேர் உக்ரைனில் படிக்கிறார் என்ற செய்தியும் அவர்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்றும் தெளிவாக விளக்கி இந்தப் போரினை பற்றி ஒரு தெளிவை கொடுத்தது.– பிரகதா, மதுரை.."போரும் அமைதியும்" என்ற சிறப்பு கட்டுரை பல கேள்விகளுக்கு பதில் சொல்வது போல இருந்தது. 'ஏன் இந்த போர்' என்றே தெரியாது இருப்பவர்களுக்கும் 'அந்தப் போர் எப்படி வந்தது, அதனால், பாதிக்கப்பட்டது எப்படி' என்று படங்களுடன் பார்த்ததும் உள்ளம் பதைபதைத்தது. மிகவும் அருமையான சிறப்பு கட்டுரை பிரசுரித்து அனைவருக்கும் உக்ரரைன் போர் பற்றி அழகாக தெளிவுபடுத்திய "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள்.– நந்தினிகிருஷ்ணன், மதுரை – 625 006.ரமணரின் அமுதமொழி வாழ்வின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது. படிக்க படிக்க பேரின்பம் தருகிறது. கடவுளின் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே நான் என்பதை உணருகிறபோது பணிவு வருகிறது. தீமைகளைச் செய்யாது, தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து, மகிழ்ச்சி, மன நிறைவு பெறுவோம். அமுதமொழி உயிர்மொழி.– நெல்லை குரலோன், நெல்லை.பிறர் பசியினைப் பாேக்கும் நற்பண்பு யாருக்கு உள்ளதாே அவர்கள் நிச்சயம் சாெர்க்கத்திற்கு செல்வர். ஆனந்தனின் சிறுகதை அற்புத படைப்பு "பசி" மனித சமூகத்தின் எழுச்சிக்கு வித்து என்பர்.– து.சேரன், ஆலங்குளம்