எஸ். சந்திரமௌலி.இந்தியா தனது விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவினை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஆகஸ்ட் 15 : இவர்களும் கொண்டாடுகிறார்கள்!.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை நம்முடன் சேர்ந்து இன்னும் சில நாடுகளும் கொண்டாடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை எந்தெந்த நாடுகள்?.பக்ரைன் (1971ஆக. 15 சுதந்திரம் பெற்றது), அமிர்த வடகொரியா மற்றும் தென் கொரியா (ஜப்பானிய ஆதிக்கத்தில் இருந்து 1945ல் சுதந்திரம் பெற்றன), காங்கோ (1960ல் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது). லிச்சென்ஸ்டீன் (உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான இது ஜெர்மனியிடமிருந்து 1940ல் சுதந்திரம் பெற்றது)..ஆனால், இந்த நாடுகளைப்போல் இல்லாமல் நாம் கடந்து வந்த சரித்திரப் பாதை போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது. அதில் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாமா?.ஜாலியன் வாலாபாக்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது ஜாலியன்வாலாபாக் என்றும், அங்கே ஆங்கிலேயே ஜெனரல் டயர் நடத்திய படுகொலை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கியமான சம்பவம் என்பதும் நமக்குத் தெரியும். பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரத்தில் உள்ள சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு வெகு அருகில் உள்ள பூங்காவின் பெயர்தான் ஜாலியன் வாலா. பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்தும், உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்களை கைது செய்ததை ஆட்சேபித்தும் மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க அங்கே ஒன்று திரண்டனர். அந்தப் பூங்காவின் உள்ளே செல்ல மிகக் குறுகிய ஒரு வழி மட்டுமே உண்டு. மற்ற பக்கங்களில் எல்லாம் கட்டிடங்கள் உள்ளதால் வெளியேற வேறு வழி ஏதுமில்லை. அமைதியாகத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் ஜெனரல் டயர். வெறும் 300 பேர் இறந்ததாக பிரிட்டிஷ் அரசு கூறினாலும், உண்மையில் 1500க்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்ததாகவும், 1200 பேர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது. பூங்காவின் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பட்டுத் தெறித்த குறிகளை இன்றும் காணலாம். உயிர் நீத்த அப்பாவி மக்களின் தியாகத்தின் அடையாளமாக தற்போது அங்கே ஓர் அணையா ஜோதி எரிந்துகொண்டிருக்கிறது.."பாபுஜிக்கு ஜெயம் ஹோகயா!".1930ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி. அதிகாலையில் அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் வழக்கம்போல பிரார்த்தனையை முடித்தார் மகாத்மா காந்தி. சரியாக காலை 6.30க்கு 78 தொண்டர்களோடு, ஆசிரமவாசிகளிடம் விடைபெற்றுக் கொண்டு தண்டியை நோக்கிப் புறப்பட்டார் காந்திஜி. அப்போது, "இந்த உப்பு சத்தியாகிரகத்தில் வெற்றி பெறாமல் ஆசிரமத்துக்குத் திரும்பமாட்டேன். வெற்றி பெறாவிட்டால், என் சவம் கடலில் மிதக்கும்" என்றார் மகாத்மா காந்தி. அதைக் கேட்ட மக்கள்"பாபுஜிக்கு ஜெயம் ஹோகயா!" (காந்திஜிக்கு வெற்றி கிடைக்கட்டும்!) என முழக்கமிட்டனர்..காங்கிரஸ் கட்சியில் பிளவு.இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளை நடத்தியுள்ளது என்றாலும், 1907ல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாடு கட்சியில் வரலாற்றில் மிக முக்கியமானது. அங்கேதான் காங்கிரசின் "மாடரேட்ஸ்" என அழைக்கப்பட்ட மிதவாதிகளுக்கும், "எக்ஸ்டிரிமிஸ்ட்ஸ்" என அழைக்கப்பட்ட அ-மிதவாதிகளுக்கும் வெளிப்படையாக மோதல் வெடித்தது. அ-மிதவாதிகளின் தலைவரான திலகருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் வெகுண்டெழுந்தனர். செருப்பு விட்டெறியப்பட்டது. நாற்காலிகள் பறந்தன. மாநாட்டு வளாகத்தில் போலிஸ் நுழைந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மிதவாதப் பிரிவின் முக்கிய தலைவர்கள் ரகசியமாகக் கூடி ஆலோசனை நடத்தினார்கள். "காங்கிரஸ் கட்சியில் வன்முறைக்கு இடமில்லை" என்று கூறி அ-மிதவாதிகளை கட்சியிலிருந்து நீக்கினார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியில் நரியான பிரிட்டிஷ் அரசாங்கம் மனதுக்குள்ளே மகிழ்ந்தது..காலா பானி.சிப்பாய் கலகத்துக்குப் பின், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கடுமையான எதிர்வினையாற்றுபவர்களை அந்தமான் சிறைக்கு அனுப்புவதை வழக்கமாக்கிக் கொண்டது. அங்கே உள்ள செல்லுலார் ஜெயில் 1896ல் ஆரம்பித்து, கட்டி முடிக்க பத்தாண்டுகள் ஆனது. இந்த சிறை வளாகத்தில் மொத்தம் ஏழு சிரைச்சாலைகள். ஒவ்வொரு சிறைச்சாலையும் மூன்று மாடிகள். மொத்தம் சுமார் 700 அறைகள். ஒவ்வொரு அறையும் 15 அடிக்கு 9 அடி அளவுள்ளவை. பத்தடி உயரத்தில் ஒரு சிறு ஜன்னல் இருக்கும். ஓர் அறையில் அடைக்கப்பட்ட கைதியால் சிறைச்சாலையின் வேறு எந்த அறையில் அடைக்கப்பட்ட கைதியையும் பார்க்கக் கூட முடியாதவகையில் வடிவமைக்கப்பட்ட சிறைச்சாலைதான் செல்லுலார் ஜெயில்..மகாத்மா காந்தி மற்றும் ரபீந்திரநாத் தாகூரின் முயற்சியால் 1937-38ல் அந்தமான் சிறையில் இருந்த அரசியல் கைதிகள் அனைவரும், இந்தியாவின் மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். 1939ல் முழுமையாக காலி செய்யப்பட்ட செல்லுலார் சிறை இன்று இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கறுமையான பக்கங்களுக்கு சாட்சி சொல்லும் அருங்காட்சியகமாக உள்ளது..வாழ்க தமிழகம்!.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றினை முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்தது மத்திய அரசு. ஆனால், அந்தக் குழுவின் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லாத நிலையில், முதலில் இந்திய மாநில அரசுகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் போரில் தமது மாநிலங்களின் வரலாற்றுப் பங்களிப்பை புத்தகமாக வெளிக்கொண்டு வருவது என்றும், அவற்றைத் தொகுத்து இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதலாம் என முடிவு செய்யப்பட்டது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களும் தத்தம் மாநில சுதந்திரப் போராட்ட வரலாற்ரை வெளியிட்டுவிட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பெரும் வாட்டமுற்ற சிலம்புச் செல்வர் மா.பொ.சி. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கினை ஆராய்ச்சி செய்து, தனது 'செங்கோல்' பத்திரிகையில் எழுதினார். அதுவே பின்னர், "'விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக சுமார் 1600 பக்கங்களில் புத்தகமாக வெளியானது. ஓர் அரசாங்கம் செய்யவேண்டிய பணியை தனிமனிதராக செய்து சரித்திரம் படைத்தார் ம.பொ.சி..கப்பலில் கைதிகளாய் பர்மாவுக்கு.1927ல் பஞ்சாபில் கால்வாயில் ஓடும் தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 'கால்வாய் வரி' என்ற கடுமையான வரி போடப்பட்டது. வீட்டு வரியும் கடுமையாய் உயர்த்தப்பட்டது. 'பஞ்சாபி' என்ற பத்திரிகை, இவற்றைக் கடுமையாக சாடியது. இது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கோபத்தில் ஆழ்த்தியது. வெகுண்டு எழுந்த மக்களை, ஒருங்கிணைத்தனர் லாலா லஜபத் ராயும், பகத் சிங்கின் சித்தப்பாவான அஜித்சிங்கும். ஆட்சியாளர்களின் கோபம் இவர்கள் மீது திரும்பியது. இவர்களை இப்படியே விட்டு வைத்தால் ஆபத்து என்று சொல்லி, வைஸ்ராயிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று அவர்களைக் கைது செய்து, தனி ரயிலில் கொல்கத்தா துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கிருந்து கப்பல் மூலம் பர்மாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த மாண்டலாய் சிறையில் அடைத்தனர்.
எஸ். சந்திரமௌலி.இந்தியா தனது விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவினை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஆகஸ்ட் 15 : இவர்களும் கொண்டாடுகிறார்கள்!.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை நம்முடன் சேர்ந்து இன்னும் சில நாடுகளும் கொண்டாடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை எந்தெந்த நாடுகள்?.பக்ரைன் (1971ஆக. 15 சுதந்திரம் பெற்றது), அமிர்த வடகொரியா மற்றும் தென் கொரியா (ஜப்பானிய ஆதிக்கத்தில் இருந்து 1945ல் சுதந்திரம் பெற்றன), காங்கோ (1960ல் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது). லிச்சென்ஸ்டீன் (உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான இது ஜெர்மனியிடமிருந்து 1940ல் சுதந்திரம் பெற்றது)..ஆனால், இந்த நாடுகளைப்போல் இல்லாமல் நாம் கடந்து வந்த சரித்திரப் பாதை போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது. அதில் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாமா?.ஜாலியன் வாலாபாக்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது ஜாலியன்வாலாபாக் என்றும், அங்கே ஆங்கிலேயே ஜெனரல் டயர் நடத்திய படுகொலை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கியமான சம்பவம் என்பதும் நமக்குத் தெரியும். பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரத்தில் உள்ள சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு வெகு அருகில் உள்ள பூங்காவின் பெயர்தான் ஜாலியன் வாலா. பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்தும், உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்களை கைது செய்ததை ஆட்சேபித்தும் மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க அங்கே ஒன்று திரண்டனர். அந்தப் பூங்காவின் உள்ளே செல்ல மிகக் குறுகிய ஒரு வழி மட்டுமே உண்டு. மற்ற பக்கங்களில் எல்லாம் கட்டிடங்கள் உள்ளதால் வெளியேற வேறு வழி ஏதுமில்லை. அமைதியாகத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் ஜெனரல் டயர். வெறும் 300 பேர் இறந்ததாக பிரிட்டிஷ் அரசு கூறினாலும், உண்மையில் 1500க்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்ததாகவும், 1200 பேர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது. பூங்காவின் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பட்டுத் தெறித்த குறிகளை இன்றும் காணலாம். உயிர் நீத்த அப்பாவி மக்களின் தியாகத்தின் அடையாளமாக தற்போது அங்கே ஓர் அணையா ஜோதி எரிந்துகொண்டிருக்கிறது.."பாபுஜிக்கு ஜெயம் ஹோகயா!".1930ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி. அதிகாலையில் அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் வழக்கம்போல பிரார்த்தனையை முடித்தார் மகாத்மா காந்தி. சரியாக காலை 6.30க்கு 78 தொண்டர்களோடு, ஆசிரமவாசிகளிடம் விடைபெற்றுக் கொண்டு தண்டியை நோக்கிப் புறப்பட்டார் காந்திஜி. அப்போது, "இந்த உப்பு சத்தியாகிரகத்தில் வெற்றி பெறாமல் ஆசிரமத்துக்குத் திரும்பமாட்டேன். வெற்றி பெறாவிட்டால், என் சவம் கடலில் மிதக்கும்" என்றார் மகாத்மா காந்தி. அதைக் கேட்ட மக்கள்"பாபுஜிக்கு ஜெயம் ஹோகயா!" (காந்திஜிக்கு வெற்றி கிடைக்கட்டும்!) என முழக்கமிட்டனர்..காங்கிரஸ் கட்சியில் பிளவு.இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளை நடத்தியுள்ளது என்றாலும், 1907ல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாடு கட்சியில் வரலாற்றில் மிக முக்கியமானது. அங்கேதான் காங்கிரசின் "மாடரேட்ஸ்" என அழைக்கப்பட்ட மிதவாதிகளுக்கும், "எக்ஸ்டிரிமிஸ்ட்ஸ்" என அழைக்கப்பட்ட அ-மிதவாதிகளுக்கும் வெளிப்படையாக மோதல் வெடித்தது. அ-மிதவாதிகளின் தலைவரான திலகருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் வெகுண்டெழுந்தனர். செருப்பு விட்டெறியப்பட்டது. நாற்காலிகள் பறந்தன. மாநாட்டு வளாகத்தில் போலிஸ் நுழைந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மிதவாதப் பிரிவின் முக்கிய தலைவர்கள் ரகசியமாகக் கூடி ஆலோசனை நடத்தினார்கள். "காங்கிரஸ் கட்சியில் வன்முறைக்கு இடமில்லை" என்று கூறி அ-மிதவாதிகளை கட்சியிலிருந்து நீக்கினார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியில் நரியான பிரிட்டிஷ் அரசாங்கம் மனதுக்குள்ளே மகிழ்ந்தது..காலா பானி.சிப்பாய் கலகத்துக்குப் பின், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கடுமையான எதிர்வினையாற்றுபவர்களை அந்தமான் சிறைக்கு அனுப்புவதை வழக்கமாக்கிக் கொண்டது. அங்கே உள்ள செல்லுலார் ஜெயில் 1896ல் ஆரம்பித்து, கட்டி முடிக்க பத்தாண்டுகள் ஆனது. இந்த சிறை வளாகத்தில் மொத்தம் ஏழு சிரைச்சாலைகள். ஒவ்வொரு சிறைச்சாலையும் மூன்று மாடிகள். மொத்தம் சுமார் 700 அறைகள். ஒவ்வொரு அறையும் 15 அடிக்கு 9 அடி அளவுள்ளவை. பத்தடி உயரத்தில் ஒரு சிறு ஜன்னல் இருக்கும். ஓர் அறையில் அடைக்கப்பட்ட கைதியால் சிறைச்சாலையின் வேறு எந்த அறையில் அடைக்கப்பட்ட கைதியையும் பார்க்கக் கூட முடியாதவகையில் வடிவமைக்கப்பட்ட சிறைச்சாலைதான் செல்லுலார் ஜெயில்..மகாத்மா காந்தி மற்றும் ரபீந்திரநாத் தாகூரின் முயற்சியால் 1937-38ல் அந்தமான் சிறையில் இருந்த அரசியல் கைதிகள் அனைவரும், இந்தியாவின் மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். 1939ல் முழுமையாக காலி செய்யப்பட்ட செல்லுலார் சிறை இன்று இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கறுமையான பக்கங்களுக்கு சாட்சி சொல்லும் அருங்காட்சியகமாக உள்ளது..வாழ்க தமிழகம்!.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றினை முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்தது மத்திய அரசு. ஆனால், அந்தக் குழுவின் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லாத நிலையில், முதலில் இந்திய மாநில அரசுகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் போரில் தமது மாநிலங்களின் வரலாற்றுப் பங்களிப்பை புத்தகமாக வெளிக்கொண்டு வருவது என்றும், அவற்றைத் தொகுத்து இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதலாம் என முடிவு செய்யப்பட்டது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களும் தத்தம் மாநில சுதந்திரப் போராட்ட வரலாற்ரை வெளியிட்டுவிட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பெரும் வாட்டமுற்ற சிலம்புச் செல்வர் மா.பொ.சி. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கினை ஆராய்ச்சி செய்து, தனது 'செங்கோல்' பத்திரிகையில் எழுதினார். அதுவே பின்னர், "'விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக சுமார் 1600 பக்கங்களில் புத்தகமாக வெளியானது. ஓர் அரசாங்கம் செய்யவேண்டிய பணியை தனிமனிதராக செய்து சரித்திரம் படைத்தார் ம.பொ.சி..கப்பலில் கைதிகளாய் பர்மாவுக்கு.1927ல் பஞ்சாபில் கால்வாயில் ஓடும் தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 'கால்வாய் வரி' என்ற கடுமையான வரி போடப்பட்டது. வீட்டு வரியும் கடுமையாய் உயர்த்தப்பட்டது. 'பஞ்சாபி' என்ற பத்திரிகை, இவற்றைக் கடுமையாக சாடியது. இது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கோபத்தில் ஆழ்த்தியது. வெகுண்டு எழுந்த மக்களை, ஒருங்கிணைத்தனர் லாலா லஜபத் ராயும், பகத் சிங்கின் சித்தப்பாவான அஜித்சிங்கும். ஆட்சியாளர்களின் கோபம் இவர்கள் மீது திரும்பியது. இவர்களை இப்படியே விட்டு வைத்தால் ஆபத்து என்று சொல்லி, வைஸ்ராயிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று அவர்களைக் கைது செய்து, தனி ரயிலில் கொல்கத்தா துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கிருந்து கப்பல் மூலம் பர்மாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த மாண்டலாய் சிறையில் அடைத்தனர்.