சுதந்திர தின ஸ்பெஷல்.– எஸ். சந்திரமௌலி.இந்திய சுதந்திர சட்டத்தின்படி, பிரிட்டிஷ் அரசாங்கம் 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அதாவது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவை, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரித்து சுதந்திரம் அளித்தனர். அந்த சட்டத்திலேயே "இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் வழங்கப்படுகிறது" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடி வருகிறது. ஆனால், இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதியே கொண்டாடுகிறது. ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகள், இப்படி அடுத்தடுத்த நாட்களில் சுதந்திர தினத்தை ஏன் கொண்டாடுகின்றன? வாருங்கள் சற்றே சரித்திரத்தைத் திரும்பிப்பார்க்கலாம்..பாகிஸ்தான் உருவாவதற்கு முழு முதற்காரணமான முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 என்பதைத்தான் ஏற்றுக் கொண்டிருந்தார். சுதந்திரம் அடைந்த பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றுக் கொண்டார் ஜின்னா. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையாற்றினார். அதில் "ஆகஸ்ட் 15ஆம் தேதி காலையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்" என்றுதான் குறிப்பிட்டார். அவரது அந்த உரை, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று காலையில் பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிபரப்பப்படுகிறது. அந்த உரையில் ஜின்னா சுதந்திர தினம் "ஆகஸ்ட் 15ஆம் தேதி" என்று குறிப்பிட்டாலும் கூட அந்த உரை ஆகஸ்ட் 14ஆம் தேதியே கொண்டாடப்படும் சுதந்திர தினத்தன்று ஒலிபரப்பப்படுகிறது..எப்போது இந்த மாற்றம் நடந்தது? எதற்காக இப்படி மாற்றினார்கள்? இதுபற்றி கொஞ்சம் ஆராய்ந்தபோது, பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்து இரண்டுடாண்டுகள் வரை ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட தபால் ஸ்டாம்ப்பில் கூட சுதந்திர தினம் ஆக. 15 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 1948 ஜூலையில் சுதந்திர தின முதலாம் ஆண்டுவிழாவை ஒட்டி பாகிஸ்தான் தபால்துறை வெளியிட்ட நான்கு ஸ்டாம்ப்களிலும் பாக். சுதந்திர தினம் ஆக. 15 என்றுதான் குறிப்பிடப்பட்டது..சுதந்திரம் கிடைத்து 13 மாதங்களில் ஜின்னா மறைந்துவிட்டார். அதன் பிறகு, சுதந்திர தினம் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஒரு சிலர் கூறும் ஒரு காரணம் இது: 1947ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 14-15 ஆகிய நாட்களுக்கு இடையிலான இரவு ரம்ஜான் மாதத்தின் புனிதமாகக் கருதப்படும் 27வது நாளாக அமைந்தது. அந்த புனிதம் கருதி ஆகஸ்ட் 14ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது பாகிஸ்தான்..இன்னொரு தியரியும் சொல்கிறார்கள். ஆக. 14ஆம் தேதி நள்ளிரவில் (அதாவது 15 ஆம் தேதி பிறந்ததும்) இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியில் இந்தியத் தலைவர்களிடமும், கராச்சியில் பாகிஸ்தானிய தலைவர்களிடமும் அந்தந்த நாடுகளின் நிர்வாகப் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டும். மவுண்ட் பேட்டன் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நிர்வாகப் பொறுப்பினை ஒப்படைப்பது பிராக்டிகலாக சாத்தியமில்லை. மேலும், இந்தியாவில் இந்த நிகழ்வினை 14ஆம் தேதி நள்ளிரவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே, மவுண்ட் பேட்டன் ஆக. 13ஆம் தேதியே கராச்சி சென்று, 14ஆம் தேதி பாகிஸ்தானின் அரசியல் சாசன சபையில் நாளை முதல் பாகிஸ்தானின் நிர்வாகம் உங்களிடமே இருக்கும் என அறிவித்தார். எனவே, அதன் அடிப்படையில்தான் பாகிஸ்தான் ஆக 14 ஆம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது..ஆனால், ஒரு வாதத்துக்காக இந்த காரணங்களை ஏற்றுக் கொண்டாலும், "1947, 48 இரண்டு ஆண்டுகளிலும் ஏன் பாகிஸ்தான் ஆக. 15 அன்று சுதந்திர தினம் கொண்டாடியது" என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அவர்கள் தரப்பிலிருந்து சரியான விளக்கம் இல்லை..இன்னொரு பக்கம், "இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தது யார்?" என்ற கேள்விக்கும் விடை உண்டு. 1948ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் பாக், பிரதமர் லியாகத் அலி கானும், அவரது அமைச்சரவை சகாக்களும் பாக். சுதந்திர தினத்தை ஆக 14க்கு மாற்றுவதற்கு முடிவு செய்தனர். பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஜின்னா அதற்கு பச்சைக் கொடி காட்டினார் என்றும் சொல்லப்படுகிறது..இது குறித்து, எத்தனை விதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், பொதுவாக இந்தியா மீதான வெறுப்புதான் இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. "இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே நாம் நம் நாட்டு சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்" என்று அன்றைய ஆட்சியாளர்கள் எடுத்த முடிவுதான் இன்றளவும் செயல்படுத்தப்படுகிறது..பாகிஸ்தானில், சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மாளிகையிலும், பாக். பாராளுமன்றத்திலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கும். 1997ல் பாகிஸ்தான் தனது சுதந்திர தினப் பொன்விழாவினைக் கொண்டாடியபோது, லாகூர் ஸ்டேடியத்தில் பாகிஸ்தானின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். 2004ல், சுதந்திர தினத்தன்று 160 மீ. நீளமும், 100 மீ. அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பாகிஸ்தானின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
சுதந்திர தின ஸ்பெஷல்.– எஸ். சந்திரமௌலி.இந்திய சுதந்திர சட்டத்தின்படி, பிரிட்டிஷ் அரசாங்கம் 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அதாவது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவை, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரித்து சுதந்திரம் அளித்தனர். அந்த சட்டத்திலேயே "இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் வழங்கப்படுகிறது" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடி வருகிறது. ஆனால், இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதியே கொண்டாடுகிறது. ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகள், இப்படி அடுத்தடுத்த நாட்களில் சுதந்திர தினத்தை ஏன் கொண்டாடுகின்றன? வாருங்கள் சற்றே சரித்திரத்தைத் திரும்பிப்பார்க்கலாம்..பாகிஸ்தான் உருவாவதற்கு முழு முதற்காரணமான முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 என்பதைத்தான் ஏற்றுக் கொண்டிருந்தார். சுதந்திரம் அடைந்த பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றுக் கொண்டார் ஜின்னா. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையாற்றினார். அதில் "ஆகஸ்ட் 15ஆம் தேதி காலையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்" என்றுதான் குறிப்பிட்டார். அவரது அந்த உரை, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று காலையில் பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிபரப்பப்படுகிறது. அந்த உரையில் ஜின்னா சுதந்திர தினம் "ஆகஸ்ட் 15ஆம் தேதி" என்று குறிப்பிட்டாலும் கூட அந்த உரை ஆகஸ்ட் 14ஆம் தேதியே கொண்டாடப்படும் சுதந்திர தினத்தன்று ஒலிபரப்பப்படுகிறது..எப்போது இந்த மாற்றம் நடந்தது? எதற்காக இப்படி மாற்றினார்கள்? இதுபற்றி கொஞ்சம் ஆராய்ந்தபோது, பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்து இரண்டுடாண்டுகள் வரை ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட தபால் ஸ்டாம்ப்பில் கூட சுதந்திர தினம் ஆக. 15 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 1948 ஜூலையில் சுதந்திர தின முதலாம் ஆண்டுவிழாவை ஒட்டி பாகிஸ்தான் தபால்துறை வெளியிட்ட நான்கு ஸ்டாம்ப்களிலும் பாக். சுதந்திர தினம் ஆக. 15 என்றுதான் குறிப்பிடப்பட்டது..சுதந்திரம் கிடைத்து 13 மாதங்களில் ஜின்னா மறைந்துவிட்டார். அதன் பிறகு, சுதந்திர தினம் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஒரு சிலர் கூறும் ஒரு காரணம் இது: 1947ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 14-15 ஆகிய நாட்களுக்கு இடையிலான இரவு ரம்ஜான் மாதத்தின் புனிதமாகக் கருதப்படும் 27வது நாளாக அமைந்தது. அந்த புனிதம் கருதி ஆகஸ்ட் 14ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது பாகிஸ்தான்..இன்னொரு தியரியும் சொல்கிறார்கள். ஆக. 14ஆம் தேதி நள்ளிரவில் (அதாவது 15 ஆம் தேதி பிறந்ததும்) இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியில் இந்தியத் தலைவர்களிடமும், கராச்சியில் பாகிஸ்தானிய தலைவர்களிடமும் அந்தந்த நாடுகளின் நிர்வாகப் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டும். மவுண்ட் பேட்டன் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நிர்வாகப் பொறுப்பினை ஒப்படைப்பது பிராக்டிகலாக சாத்தியமில்லை. மேலும், இந்தியாவில் இந்த நிகழ்வினை 14ஆம் தேதி நள்ளிரவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே, மவுண்ட் பேட்டன் ஆக. 13ஆம் தேதியே கராச்சி சென்று, 14ஆம் தேதி பாகிஸ்தானின் அரசியல் சாசன சபையில் நாளை முதல் பாகிஸ்தானின் நிர்வாகம் உங்களிடமே இருக்கும் என அறிவித்தார். எனவே, அதன் அடிப்படையில்தான் பாகிஸ்தான் ஆக 14 ஆம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது..ஆனால், ஒரு வாதத்துக்காக இந்த காரணங்களை ஏற்றுக் கொண்டாலும், "1947, 48 இரண்டு ஆண்டுகளிலும் ஏன் பாகிஸ்தான் ஆக. 15 அன்று சுதந்திர தினம் கொண்டாடியது" என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அவர்கள் தரப்பிலிருந்து சரியான விளக்கம் இல்லை..இன்னொரு பக்கம், "இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தது யார்?" என்ற கேள்விக்கும் விடை உண்டு. 1948ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் பாக், பிரதமர் லியாகத் அலி கானும், அவரது அமைச்சரவை சகாக்களும் பாக். சுதந்திர தினத்தை ஆக 14க்கு மாற்றுவதற்கு முடிவு செய்தனர். பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஜின்னா அதற்கு பச்சைக் கொடி காட்டினார் என்றும் சொல்லப்படுகிறது..இது குறித்து, எத்தனை விதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், பொதுவாக இந்தியா மீதான வெறுப்புதான் இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. "இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே நாம் நம் நாட்டு சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்" என்று அன்றைய ஆட்சியாளர்கள் எடுத்த முடிவுதான் இன்றளவும் செயல்படுத்தப்படுகிறது..பாகிஸ்தானில், சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மாளிகையிலும், பாக். பாராளுமன்றத்திலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கும். 1997ல் பாகிஸ்தான் தனது சுதந்திர தினப் பொன்விழாவினைக் கொண்டாடியபோது, லாகூர் ஸ்டேடியத்தில் பாகிஸ்தானின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். 2004ல், சுதந்திர தினத்தன்று 160 மீ. நீளமும், 100 மீ. அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பாகிஸ்தானின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.