வித்யா சுப்ரமணியம்.அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள்.."எனக்கு வேண்டாம்"."ஏன்?"."வெளிய சாப்பிட்டேன்"."ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை"."நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை ஹோட்டல்தான்".அவள் கண்கள் நாலாபுறமும் சுழன்று யாரேனும் இருக்கிறார்களா என்று பதைபதைப்போடு பார்த்தது. நல்லகாலம் நள்ளிரவென்பதால் யாருமில்லை. எல்லோரது அறைக்கதவும் சார்த்தியிருந்தது..அவன் மாடியேறிச்சென்றதும் அவள் எல்லாவற்றையும் மூடி எடுத்து வைத்துவிட்டு மாடிக்கு வந்தாள்.."நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கலாம். இந்த நேரத்தில் நாம தனியா போவது நல்லதில்லை என்று தோன்றுகிறது."."ஏன்? நேரத்துக்கு என்ன குறைச்சல் இப்போ?"."நம்ம குழந்தைக்கு எல்லா உறவுகளும் வேணும்னு ஆசைப்படறேன். கர்ப்ப காலத்தில் என்னை அக்கறையா கவனிச்சு அறிவுரை சொல்லவும், சாப்டியாம்மான்னு அன்போட கேக்கவும், உறவுகள் வேணும்னு நினைக்கறேன்".அவன் திகைப்போடு அவளைப் பார்த்தான்.."ஏன் சொல்லலை?"."சொல்வதற்கு எங்கே விட்டீர்கள்? டாக்டர் கன்ஃபார்ம் பண்ணின அன்றுதான் நீங்க உங்கப்பாவிடம் சொத்தைப் பிரிச்சு கொடுங்கன்னு கேக்கறீங்க. அதுக்குப்பிறகு அன்னிக்கு நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே".அவன் யோசித்தான். அவள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான். இதுபோன்ற நேரத்தில் அவள் நாலுபேரோடு இருப்பதுதான் பாதுகாப்பு. அவனும் பயமின்றி தன் வேலையை கவனிக்கலாம். தனியே அழைத்துச் சென்றுவிட்டு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் அவன்மீதுதான் பழி விழும். பிரசவம் நல்லபடியாக முடியும்வரை சொத்து பிரிப்பது பற்றி வலியுறுத்த வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது..அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான். "சரி… உன் விருப்பப்படியே ஆகட்டும்" என்றவன் அவளை மெல்ல அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்..மைதிலி இழுத்து மூச்சுவிட்டாள். பெரிய ஆஸ்வாசம் ஏற்பட்டது. "தயவுசெய்து இனிமே வீட்டுல சாப்பிடுங்க. எல்லாரிடமும் சகஜமா இருங்க. இங்க யாரும் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யல. நீங்க நல்லார்க்கணும்னுதான் எல்லாரும் நினைக்கறாங்க. நம்ம அணுகுமுறை சரியாக இருந்தால் எல்லாமே நல்லபடியா நடக்கும்.".அவன் மௌனமாக இருந்தான்.."உங்க படம் எந்த அளவுல இருக்கு?"."தயாரிப்பு செலவு நான் நினைச்சதைவிட அதிகமாகுது"."சினிமா எடுப்பது முந்தி மாதிரியில்ல. கடனுக்கு மேல கடன் வாங்குவது நல்லதில்லைன்னு தோணுது".அவன் அவளை முறைத்தான். "அதுக்காக? முன்வெச்ச காலைப் பின் வைக்கச் சொல்றயா?"."ஆழம் தெரியாம காலை விடக்கூடாதில்லையா?"."இப்டி யோசிச்சிருந்தா எங்க தாத்தாவால ஒரு படம்கூட எடுத்திருக்க முடியாது."."அவர் காலம் வேற"."அவர் காலத்துல ஒரு சவரன் தங்கம் இருபது ரூபாய்க்கு வாங்க முடிஞ்சது. இப்போ அப்டியா? இன்னிக்கு ஒரு கிராம் தங்கத்துக்கே பல ஆயிரங்கள் விலை. அதுக்காக நகைக்கடையில் கூட்டம் குறைந்து விட்டதா என்ன? நமக்கு வருஷா வருஷம் வயது கூடிக்கொண்டே வருவது போல விலைவாசியும் கூடிக்கொண்டுதான் போகும். குறையாது"."தாத்தாவுக்குப் பிறகு சினிமா எடுக்கும் ஆசை உங்கப்பாவுக்கு ஏன் வரவில்லை?"."யார் சொன்னார்கள் வரவில்லையென்று? அவரும் இரண்டு படங்கள் எடுத்தார். ஆனா அது சரியா போகல. அதுக்கப்பறம்தான் எங்க தாத்தா பண்ணின சினிமா தொழில் வேண்டாம், அதுக்கு பதில், எங்க கொள்ளு தாத்தா பண்ணின பட்டு ஜவுளி தொழிலே செய்யலாம்னு காஞ்சீபுரத்துல பட்டு ஜவுளி வியாபாரம் ஆரம்பிச்சார். இன்னிவரைக்கும் நல்லா போயிட்ருக்கு"."தாத்தா அடைந்த வெற்றியை உங்கப்பாவால அடைய முடியாதப்போ.. உங்களால…..'ஷட்டப் ! முடிஞ்சா என்கரேஜ் பண்ணு. இல்லன்னா கம்முனு இரு'."அதுக்கில்ல, ஏற்கனவே கடன் வாங்கி இருக்கீங்க. எல்லாத்தையும் அடைக்க முடியுமா?"."கடன் வாங்காம சினிமா எடுக்க முடியாது. கொஞ்சம் அன்பா பேசினா உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதே ஓகே".ஆனந்தன் திரும்பி படுத்துக்கொண்டான்..**** **** ****.கிச்சனில் பெரியண்ணியும், இரண்டாவது அண்ணியும் காய் நறுக்கும் சிறிய டேபிளின் முன் அமர்ந்து காப்பி குடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். மைதிலியைப் பார்த்ததும், குட்மார்னிங் மைதிலி, காப்பி தரவா? என்றாள் சின்ன அண்ணி..நானே போட்டுக்கறேன். நீங்க குடிங்க என்றவள். காப்பி கலந்துகொண்டு வந்து அவர்களோடு அமர்ந்தாள்.."ராத்திரி ஆனந்தன் எப்போ வந்தான்? சாப்ட்டானா?"."ரொம்ப லேட்டா வந்தார். சாப்பிடல"."அவன் அப்பாவாகப் போகும் விஷயத்தை சொன்னயா இல்லையா?"."நேத்திக்குதான் சொன்னேன்"."என்ன சொன்னான்?"."சந்தோஷப்பட்டார்"."சினிமா எடுக்கற ஆளாயிற்றே. சினிமா ஹீரோ மாதிரி உன்னைத் தூக்கிக்கொண்டு சுற்றினானா?"."அதெல்லாம் இல்ல" மைதிலி சிரித்தாள். அண்ணிகளை நினைத்து அவள் வியந்தாள். அத்தனைபேர் மனதையும் ஒருசேர ஆனந்தன் புண்படுத்தியிருந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் அவர்கள் அவளிடம் சகஜமாகவும் அன்பாகவும் பேசியது அவளை நெகிழச் செய்தது. பொதுவாக புகுந்த வீட்டு உறவுகளால்தான் ஒரு பெண்ணுக்கு பிரச்னைகள் வரும். ஆனால், அவளது கெட்டநேரம், புருஷனே பிரச்னைகளுக்குக் காரணமாக நடந்துகொள்கிறான்.."என்ன யோசனை?"."ஒன்றுமில்லை அண்ணி. அவர் உங்க எல்லார் மனதையும் புண்படுத்திட்டார் இல்ல?"."அவன் பேசலை. அவனோட பணத்தேவை பேச வைக்குது. அவன் பங்கு சொத்தைத்தானே பிரிச்சு தரச்சொல்றான். இதெல்லாம் நம்ம மாமனார் முடிவு செய்ய வேண்டிய விஷயம். நமக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்ல. நீ அநாவசியமா மனசைப்போட்டு குழப்பிக்க வேண்டாம் சரியா? பிள்ளைதாய்ச்சி பெண் அநாவசியமா கவலைப்படக்கூடாது. அழக்கூடாது. அது குழந்தையை பாதிக்கும். நீ எப்பவும் சந்தோஷமா இரு"."ராத்திரி நான் அவர்கிட்ட பேசினேன் அண்ணி"."என்னன்னு?"."அவர் பண்றது சரியில்லன்னு சொன்னேன். முதல்முறையாக கருவுற்றிருக்கும் நான் இந்த வீட்டை விட்டு, உங்களையெல்லாம் விட்டு பிரிந்து தனியா வரவிரும்பலை, இந்த வீட்டில் நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். என் குழந்தைக்கு எல்லாரோட அன்பும், அருகாமையும் வேணும்னு சொன்னேன். என் மனதைப் புரிந்துகொண்டார். உன் விருப்பம்போல இங்கேயே இருப்போம். நான் இனி யாரிடமும் எதுவும் கேட்க மாட்டேன்னு சொன்னார்"."ஓ! ரொம்ப சந்தோஷம். நான் சொன்னா மாதிரி உன்னால அவனை உன் வழிக்கு நிச்சயம் கொண்டு வரமுடியும். அவன் மேல மேல கடன் வாங்காம பார்த்துக்கிட்டாலே போதும். திரையுலகம் முந்தி மாதிரியில்ல. கந்துவட்டி மீட்டர் வட்டின்னு நம்மளை தலைகீழா புரட்டி போட்டுடும். இப்போ இங்க ஜெயிப்பது சூதாட்டம் மாதிரிதான். அதிரஷ்டமும் வேணும். நல்ல படங்கள் நாலு நாள்கூட ஓடாது. ஒன்றுமே இல்லாத படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகுது. அவன் ஜெயிச்சா நம்மளைவிட யார் சந்தோஷப்படப் போறாங்க? ஆனால், வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் திரையுலகம். வெற்றி பெற்றால் ஒரு கூட்டமே சூழ்ந்து நின்று பாராட்டும். அதே கொஞ்சம் சறுக்கினாலும், அவசர உதவிக்குக்கூட யாரும் வரமாட்டாங்க. ஒரே ஒரு சொந்த படம் எடுத்து மொத்த சொத்துக்களையும் இழந்து தெருவுக்கு வந்த எத்தனையோ பேரைத் தெரியும். சந்திரபாபுவும், சாவித்திரியும் எல்லார்க்கும் தெரிஞ்ச உதாரணம். இது அவங்க தாத்தா காலம் இல்லன்னு அவன் புரிஞ்சுக்கிட்டா போதும்"."நாம இப்படி சொன்னா டிஸ்கரேஜ் செய்யறோம்னு கோபப்படுகிறார்"."போகப்போக தானா புரிஞ்சுக்குவான். நீ இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டியது உன் வயிற்று சிசுவின் மீதுதான். கருவுற்ற ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையை கர்ப்பத்திலிருந்தே கவனிச்சு, அன்பு காட்டி, அதுக்கு நல்லவற்றைக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கணும்னு சொல்லுவாங்க. உன் குழந்தை வயிற்றுக்குள் வளர வளர அதோட பேசு, அதுக்கு கதை சொல்லு, தாலாட்டு பாடு. அதைப் பார்க்க எத்தனை உறவுகள் வெளிய காத்துக்கொண்டு இருக்காங்கன்னு சொல்லு".பெரியண்ணி சொல்ல மைதிலிக்கு புத்துணர்ச்சி பிறந்தது. வயிற்றை மெல்ல தடவிக்கொண்டாள்..**** **** ****.கருவுற்ற மூன்றாம் மாதம் சாம்பிரதாயப்படி பிறந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றார் அப்பா. பார்த்துப்பார்த்து சமைத்துப் போட்டாள் அம்மா. அக்காக்கள் முடிந்த போதெல்லாம் இனிப்பு காரம் என்று எதையேனும் பண்ணி எடுத்துக் கொண்டுவந்து அவளுக்குக் கொடுத்து அவளோடு சில மணிநேரம் ஜாலியாக பேசி சிரித்தபடி இருந்துவிட்டுப் போனார்கள். அப்பாவின் முகத்தில் மட்டும் ஏதோ சிந்தனை. அவர் சகஜமாக இருக்க முயற்சிப்பது போலத்தோன்றியது.."என்னாச்சுப்பா எப்பவும் ஏதோ ஒரு யோசனை?"."ஒண்ணுமில்லையேம்மா"."அப்டின்னு உங்க வாய்தான் சொல்லுது. ஆனா முகம் அப்டி சொல்லலையே. எங்கிட்ட எதையும் மறைக்காதீங்கப்பா. என்ன கவலைப்பா உங்களுக்கு?"."ஒரு கவலையும் இல்லம்மா." அப்பா புன்னகைத்தபடி அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். மைதிலி மேற்கொண்டு அவரிடம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் அப்பாவைப்பாற்றி அம்மாவிடம் கேட்டாள்.."அப்பாக்கு என்னம்மா பிரச்னை? ஏன் என்னமோ போல இருக்கார்?".இவள் கேட்டதும் அம்மாவின் முகத்தில் சட்டென ஒரு மாற்றம். வினாடி நேரம்தான். "அப்டியெல்லாம் ஒன்றுமில்லையே" என்று சிரித்தாள்.."அம்மா உன் முகம் ஒரு செகண்ட் மாறினதை நா பாத்துட்டேன். தயவுசெய்து சொல்லு. அவருக்கு எதுனா பணப்பிரச்னையா?"."அதெல்லாம் இல்ல மைதிலி. பிறந்த வீட்டுக்கு வந்தயா, நல்லா சாப்பிட்டயா, ஒரு மாசம் சந்தோஷமா இருந்தயான்னு இரு."."அதெப்படிமா இருக்க முடியும்? ஏதோ ஒரு பிரச்னை இருக்குன்னு நல்லா தெரியுது. அப்பறம் எப்டி என்னால சந்தோஷமா இருக்கமுடியும்?"."பிரச்னை ஒண்ணும் இல்லன்னா புரிஞ்சுக்கோ மைதிலி" அம்மாவின் குரலில் கோவமும் சலிப்பும் தெரிய, மைதிலி மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து போனாள். தன் அறைக்கதவை சார்த்திக்கொண்டு பெரியக்காவிடம் பேசினாள்..பெரியக்காவும் ஒரு வினாடி மௌனம் சாதிக்க, மைதிலி பொறுமையிழந்தாள். "நீயாவது சொல்லுக்கா. இல்லாட்டா நான் இங்கேர்ந்து கிளம்பிப் போயிடறேன்." கோபத்தில் வெடித்தாள் மைதிலி..(தொடரும்)
வித்யா சுப்ரமணியம்.அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள்.."எனக்கு வேண்டாம்"."ஏன்?"."வெளிய சாப்பிட்டேன்"."ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை"."நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை ஹோட்டல்தான்".அவள் கண்கள் நாலாபுறமும் சுழன்று யாரேனும் இருக்கிறார்களா என்று பதைபதைப்போடு பார்த்தது. நல்லகாலம் நள்ளிரவென்பதால் யாருமில்லை. எல்லோரது அறைக்கதவும் சார்த்தியிருந்தது..அவன் மாடியேறிச்சென்றதும் அவள் எல்லாவற்றையும் மூடி எடுத்து வைத்துவிட்டு மாடிக்கு வந்தாள்.."நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கலாம். இந்த நேரத்தில் நாம தனியா போவது நல்லதில்லை என்று தோன்றுகிறது."."ஏன்? நேரத்துக்கு என்ன குறைச்சல் இப்போ?"."நம்ம குழந்தைக்கு எல்லா உறவுகளும் வேணும்னு ஆசைப்படறேன். கர்ப்ப காலத்தில் என்னை அக்கறையா கவனிச்சு அறிவுரை சொல்லவும், சாப்டியாம்மான்னு அன்போட கேக்கவும், உறவுகள் வேணும்னு நினைக்கறேன்".அவன் திகைப்போடு அவளைப் பார்த்தான்.."ஏன் சொல்லலை?"."சொல்வதற்கு எங்கே விட்டீர்கள்? டாக்டர் கன்ஃபார்ம் பண்ணின அன்றுதான் நீங்க உங்கப்பாவிடம் சொத்தைப் பிரிச்சு கொடுங்கன்னு கேக்கறீங்க. அதுக்குப்பிறகு அன்னிக்கு நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே".அவன் யோசித்தான். அவள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான். இதுபோன்ற நேரத்தில் அவள் நாலுபேரோடு இருப்பதுதான் பாதுகாப்பு. அவனும் பயமின்றி தன் வேலையை கவனிக்கலாம். தனியே அழைத்துச் சென்றுவிட்டு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் அவன்மீதுதான் பழி விழும். பிரசவம் நல்லபடியாக முடியும்வரை சொத்து பிரிப்பது பற்றி வலியுறுத்த வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது..அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான். "சரி… உன் விருப்பப்படியே ஆகட்டும்" என்றவன் அவளை மெல்ல அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்..மைதிலி இழுத்து மூச்சுவிட்டாள். பெரிய ஆஸ்வாசம் ஏற்பட்டது. "தயவுசெய்து இனிமே வீட்டுல சாப்பிடுங்க. எல்லாரிடமும் சகஜமா இருங்க. இங்க யாரும் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யல. நீங்க நல்லார்க்கணும்னுதான் எல்லாரும் நினைக்கறாங்க. நம்ம அணுகுமுறை சரியாக இருந்தால் எல்லாமே நல்லபடியா நடக்கும்.".அவன் மௌனமாக இருந்தான்.."உங்க படம் எந்த அளவுல இருக்கு?"."தயாரிப்பு செலவு நான் நினைச்சதைவிட அதிகமாகுது"."சினிமா எடுப்பது முந்தி மாதிரியில்ல. கடனுக்கு மேல கடன் வாங்குவது நல்லதில்லைன்னு தோணுது".அவன் அவளை முறைத்தான். "அதுக்காக? முன்வெச்ச காலைப் பின் வைக்கச் சொல்றயா?"."ஆழம் தெரியாம காலை விடக்கூடாதில்லையா?"."இப்டி யோசிச்சிருந்தா எங்க தாத்தாவால ஒரு படம்கூட எடுத்திருக்க முடியாது."."அவர் காலம் வேற"."அவர் காலத்துல ஒரு சவரன் தங்கம் இருபது ரூபாய்க்கு வாங்க முடிஞ்சது. இப்போ அப்டியா? இன்னிக்கு ஒரு கிராம் தங்கத்துக்கே பல ஆயிரங்கள் விலை. அதுக்காக நகைக்கடையில் கூட்டம் குறைந்து விட்டதா என்ன? நமக்கு வருஷா வருஷம் வயது கூடிக்கொண்டே வருவது போல விலைவாசியும் கூடிக்கொண்டுதான் போகும். குறையாது"."தாத்தாவுக்குப் பிறகு சினிமா எடுக்கும் ஆசை உங்கப்பாவுக்கு ஏன் வரவில்லை?"."யார் சொன்னார்கள் வரவில்லையென்று? அவரும் இரண்டு படங்கள் எடுத்தார். ஆனா அது சரியா போகல. அதுக்கப்பறம்தான் எங்க தாத்தா பண்ணின சினிமா தொழில் வேண்டாம், அதுக்கு பதில், எங்க கொள்ளு தாத்தா பண்ணின பட்டு ஜவுளி தொழிலே செய்யலாம்னு காஞ்சீபுரத்துல பட்டு ஜவுளி வியாபாரம் ஆரம்பிச்சார். இன்னிவரைக்கும் நல்லா போயிட்ருக்கு"."தாத்தா அடைந்த வெற்றியை உங்கப்பாவால அடைய முடியாதப்போ.. உங்களால…..'ஷட்டப் ! முடிஞ்சா என்கரேஜ் பண்ணு. இல்லன்னா கம்முனு இரு'."அதுக்கில்ல, ஏற்கனவே கடன் வாங்கி இருக்கீங்க. எல்லாத்தையும் அடைக்க முடியுமா?"."கடன் வாங்காம சினிமா எடுக்க முடியாது. கொஞ்சம் அன்பா பேசினா உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதே ஓகே".ஆனந்தன் திரும்பி படுத்துக்கொண்டான்..**** **** ****.கிச்சனில் பெரியண்ணியும், இரண்டாவது அண்ணியும் காய் நறுக்கும் சிறிய டேபிளின் முன் அமர்ந்து காப்பி குடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். மைதிலியைப் பார்த்ததும், குட்மார்னிங் மைதிலி, காப்பி தரவா? என்றாள் சின்ன அண்ணி..நானே போட்டுக்கறேன். நீங்க குடிங்க என்றவள். காப்பி கலந்துகொண்டு வந்து அவர்களோடு அமர்ந்தாள்.."ராத்திரி ஆனந்தன் எப்போ வந்தான்? சாப்ட்டானா?"."ரொம்ப லேட்டா வந்தார். சாப்பிடல"."அவன் அப்பாவாகப் போகும் விஷயத்தை சொன்னயா இல்லையா?"."நேத்திக்குதான் சொன்னேன்"."என்ன சொன்னான்?"."சந்தோஷப்பட்டார்"."சினிமா எடுக்கற ஆளாயிற்றே. சினிமா ஹீரோ மாதிரி உன்னைத் தூக்கிக்கொண்டு சுற்றினானா?"."அதெல்லாம் இல்ல" மைதிலி சிரித்தாள். அண்ணிகளை நினைத்து அவள் வியந்தாள். அத்தனைபேர் மனதையும் ஒருசேர ஆனந்தன் புண்படுத்தியிருந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் அவர்கள் அவளிடம் சகஜமாகவும் அன்பாகவும் பேசியது அவளை நெகிழச் செய்தது. பொதுவாக புகுந்த வீட்டு உறவுகளால்தான் ஒரு பெண்ணுக்கு பிரச்னைகள் வரும். ஆனால், அவளது கெட்டநேரம், புருஷனே பிரச்னைகளுக்குக் காரணமாக நடந்துகொள்கிறான்.."என்ன யோசனை?"."ஒன்றுமில்லை அண்ணி. அவர் உங்க எல்லார் மனதையும் புண்படுத்திட்டார் இல்ல?"."அவன் பேசலை. அவனோட பணத்தேவை பேச வைக்குது. அவன் பங்கு சொத்தைத்தானே பிரிச்சு தரச்சொல்றான். இதெல்லாம் நம்ம மாமனார் முடிவு செய்ய வேண்டிய விஷயம். நமக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்ல. நீ அநாவசியமா மனசைப்போட்டு குழப்பிக்க வேண்டாம் சரியா? பிள்ளைதாய்ச்சி பெண் அநாவசியமா கவலைப்படக்கூடாது. அழக்கூடாது. அது குழந்தையை பாதிக்கும். நீ எப்பவும் சந்தோஷமா இரு"."ராத்திரி நான் அவர்கிட்ட பேசினேன் அண்ணி"."என்னன்னு?"."அவர் பண்றது சரியில்லன்னு சொன்னேன். முதல்முறையாக கருவுற்றிருக்கும் நான் இந்த வீட்டை விட்டு, உங்களையெல்லாம் விட்டு பிரிந்து தனியா வரவிரும்பலை, இந்த வீட்டில் நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். என் குழந்தைக்கு எல்லாரோட அன்பும், அருகாமையும் வேணும்னு சொன்னேன். என் மனதைப் புரிந்துகொண்டார். உன் விருப்பம்போல இங்கேயே இருப்போம். நான் இனி யாரிடமும் எதுவும் கேட்க மாட்டேன்னு சொன்னார்"."ஓ! ரொம்ப சந்தோஷம். நான் சொன்னா மாதிரி உன்னால அவனை உன் வழிக்கு நிச்சயம் கொண்டு வரமுடியும். அவன் மேல மேல கடன் வாங்காம பார்த்துக்கிட்டாலே போதும். திரையுலகம் முந்தி மாதிரியில்ல. கந்துவட்டி மீட்டர் வட்டின்னு நம்மளை தலைகீழா புரட்டி போட்டுடும். இப்போ இங்க ஜெயிப்பது சூதாட்டம் மாதிரிதான். அதிரஷ்டமும் வேணும். நல்ல படங்கள் நாலு நாள்கூட ஓடாது. ஒன்றுமே இல்லாத படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகுது. அவன் ஜெயிச்சா நம்மளைவிட யார் சந்தோஷப்படப் போறாங்க? ஆனால், வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் திரையுலகம். வெற்றி பெற்றால் ஒரு கூட்டமே சூழ்ந்து நின்று பாராட்டும். அதே கொஞ்சம் சறுக்கினாலும், அவசர உதவிக்குக்கூட யாரும் வரமாட்டாங்க. ஒரே ஒரு சொந்த படம் எடுத்து மொத்த சொத்துக்களையும் இழந்து தெருவுக்கு வந்த எத்தனையோ பேரைத் தெரியும். சந்திரபாபுவும், சாவித்திரியும் எல்லார்க்கும் தெரிஞ்ச உதாரணம். இது அவங்க தாத்தா காலம் இல்லன்னு அவன் புரிஞ்சுக்கிட்டா போதும்"."நாம இப்படி சொன்னா டிஸ்கரேஜ் செய்யறோம்னு கோபப்படுகிறார்"."போகப்போக தானா புரிஞ்சுக்குவான். நீ இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டியது உன் வயிற்று சிசுவின் மீதுதான். கருவுற்ற ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையை கர்ப்பத்திலிருந்தே கவனிச்சு, அன்பு காட்டி, அதுக்கு நல்லவற்றைக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கணும்னு சொல்லுவாங்க. உன் குழந்தை வயிற்றுக்குள் வளர வளர அதோட பேசு, அதுக்கு கதை சொல்லு, தாலாட்டு பாடு. அதைப் பார்க்க எத்தனை உறவுகள் வெளிய காத்துக்கொண்டு இருக்காங்கன்னு சொல்லு".பெரியண்ணி சொல்ல மைதிலிக்கு புத்துணர்ச்சி பிறந்தது. வயிற்றை மெல்ல தடவிக்கொண்டாள்..**** **** ****.கருவுற்ற மூன்றாம் மாதம் சாம்பிரதாயப்படி பிறந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றார் அப்பா. பார்த்துப்பார்த்து சமைத்துப் போட்டாள் அம்மா. அக்காக்கள் முடிந்த போதெல்லாம் இனிப்பு காரம் என்று எதையேனும் பண்ணி எடுத்துக் கொண்டுவந்து அவளுக்குக் கொடுத்து அவளோடு சில மணிநேரம் ஜாலியாக பேசி சிரித்தபடி இருந்துவிட்டுப் போனார்கள். அப்பாவின் முகத்தில் மட்டும் ஏதோ சிந்தனை. அவர் சகஜமாக இருக்க முயற்சிப்பது போலத்தோன்றியது.."என்னாச்சுப்பா எப்பவும் ஏதோ ஒரு யோசனை?"."ஒண்ணுமில்லையேம்மா"."அப்டின்னு உங்க வாய்தான் சொல்லுது. ஆனா முகம் அப்டி சொல்லலையே. எங்கிட்ட எதையும் மறைக்காதீங்கப்பா. என்ன கவலைப்பா உங்களுக்கு?"."ஒரு கவலையும் இல்லம்மா." அப்பா புன்னகைத்தபடி அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். மைதிலி மேற்கொண்டு அவரிடம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் அப்பாவைப்பாற்றி அம்மாவிடம் கேட்டாள்.."அப்பாக்கு என்னம்மா பிரச்னை? ஏன் என்னமோ போல இருக்கார்?".இவள் கேட்டதும் அம்மாவின் முகத்தில் சட்டென ஒரு மாற்றம். வினாடி நேரம்தான். "அப்டியெல்லாம் ஒன்றுமில்லையே" என்று சிரித்தாள்.."அம்மா உன் முகம் ஒரு செகண்ட் மாறினதை நா பாத்துட்டேன். தயவுசெய்து சொல்லு. அவருக்கு எதுனா பணப்பிரச்னையா?"."அதெல்லாம் இல்ல மைதிலி. பிறந்த வீட்டுக்கு வந்தயா, நல்லா சாப்பிட்டயா, ஒரு மாசம் சந்தோஷமா இருந்தயான்னு இரு."."அதெப்படிமா இருக்க முடியும்? ஏதோ ஒரு பிரச்னை இருக்குன்னு நல்லா தெரியுது. அப்பறம் எப்டி என்னால சந்தோஷமா இருக்கமுடியும்?"."பிரச்னை ஒண்ணும் இல்லன்னா புரிஞ்சுக்கோ மைதிலி" அம்மாவின் குரலில் கோவமும் சலிப்பும் தெரிய, மைதிலி மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து போனாள். தன் அறைக்கதவை சார்த்திக்கொண்டு பெரியக்காவிடம் பேசினாள்..பெரியக்காவும் ஒரு வினாடி மௌனம் சாதிக்க, மைதிலி பொறுமையிழந்தாள். "நீயாவது சொல்லுக்கா. இல்லாட்டா நான் இங்கேர்ந்து கிளம்பிப் போயிடறேன்." கோபத்தில் வெடித்தாள் மைதிலி..(தொடரும்)