தலையங்கம்.இந்த ஆண்டு சுதந்திர தினம் இந்தியா சுதந்திரம் அடைந்த 75-ம் ஆண்டின் பெருவிழாவாகும். இந்த நல்ல நாளில் ஒன்றிய அரசு "ஹர் கர் திரங்கா", அதாவது "ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி" என்ற பெருமிதமான முன்னெடுப்பை எடுத்திருக்கிறது. இதன்படி "நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி காட்சிப்படுத்துங்கள்" என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்..ஒவ்வொரு சுதந்திர நாட்டுக்கும் எனச் சொந்தமாக ஒரு கொடி உண்டு. அது அந்தச் சுதந்திர நாட்டின் அடையாளம். இப்போது நாம் பறக்கவிடும் தேசியக் கொடி 22-7-1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை கூடியபோது, இந்திய தேசியக் கொடியாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த நன்னாளில் முதன்முதலாக ஏற்றப்பட்டது..இது நம் நாட்டின் அடையாளத்தைச் சொல்லும் வெறும் சின்னம் மட்டுமில்லை. இது மிக நீண்ட சுதந்திரப் போராட்டச் சரித்திரத்தையும் , பலரின் தியாகங்களையும் சொல்லும் பெருமைக்குரிய சாட்சி. ஆந்திர மாநிலத்தில் பிறந்த பிங்காலி வங்கையா என்பவர் 1921-ம் ஆண்டு மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து, தான் வடிவமைத்த தேசிய கொடியை வழங்கினார். அதாவது நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டும் 46 ஆண்டுகளுக்கு முன்னரே "நம் தேசியக்கொடி" என்று எழுந்த கனவின் சின்னம் இது.."சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹராமா ஹமாரா" என்ற முகமது இக்பால் எழுதிய பாடலை, லதா மங்கேஷ்கர் குரலில் கேட்கும்போது, ஒவ்வொரு இந்தியனின் உடலும் தேசப்பற்றால் சிலிர்க்கும். "உலகில் எல்லாவற்றையும்விட என் நாடு இந்தியாதான் உயர்ந்தது" என்பதுதான் இதன் பொருள்..இதேபோல் "தாய்மண்ணே வணக்கம்" பாடலின் பின்னணியில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும். தேசியக் கொடியைப் பார்க்கும்போதே, "இந்தியா என் நாடு, இந்திய மக்கள் எல்லோரும் இந்தியத் தாயின் பிள்ளைகள்" என்ற உணர்வை எழுப்பும் சக்திவாய்ந்தது நம் தேசியக்கொடி..இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவர்ண கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். அந்த நாட்களில் தேசியக் கொடியை இரவும், பகலும் பறக்கவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. "ஆகஸ்டு மாதம் 13-தேதிக்கும் 15-தேதிக்கும் இடையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நம் தேசியக் கொடியைப் பட்டொளி வீசி பறக்க செய்யுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள்" என்று பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் மீண்டும் விடுத்த கோரிக்கையைப் பெருமிதத்தோடு செயல்படுத்துவதின் மூலம் நம்முடைய, மற்றும் நம் குடும்பத்தினரின் நாட்டுப்பற்றை உறுதிப்படுத்துவோம்..ஜெய் ஹிந்த்.
தலையங்கம்.இந்த ஆண்டு சுதந்திர தினம் இந்தியா சுதந்திரம் அடைந்த 75-ம் ஆண்டின் பெருவிழாவாகும். இந்த நல்ல நாளில் ஒன்றிய அரசு "ஹர் கர் திரங்கா", அதாவது "ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி" என்ற பெருமிதமான முன்னெடுப்பை எடுத்திருக்கிறது. இதன்படி "நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி காட்சிப்படுத்துங்கள்" என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்..ஒவ்வொரு சுதந்திர நாட்டுக்கும் எனச் சொந்தமாக ஒரு கொடி உண்டு. அது அந்தச் சுதந்திர நாட்டின் அடையாளம். இப்போது நாம் பறக்கவிடும் தேசியக் கொடி 22-7-1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை கூடியபோது, இந்திய தேசியக் கொடியாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த நன்னாளில் முதன்முதலாக ஏற்றப்பட்டது..இது நம் நாட்டின் அடையாளத்தைச் சொல்லும் வெறும் சின்னம் மட்டுமில்லை. இது மிக நீண்ட சுதந்திரப் போராட்டச் சரித்திரத்தையும் , பலரின் தியாகங்களையும் சொல்லும் பெருமைக்குரிய சாட்சி. ஆந்திர மாநிலத்தில் பிறந்த பிங்காலி வங்கையா என்பவர் 1921-ம் ஆண்டு மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து, தான் வடிவமைத்த தேசிய கொடியை வழங்கினார். அதாவது நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டும் 46 ஆண்டுகளுக்கு முன்னரே "நம் தேசியக்கொடி" என்று எழுந்த கனவின் சின்னம் இது.."சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹராமா ஹமாரா" என்ற முகமது இக்பால் எழுதிய பாடலை, லதா மங்கேஷ்கர் குரலில் கேட்கும்போது, ஒவ்வொரு இந்தியனின் உடலும் தேசப்பற்றால் சிலிர்க்கும். "உலகில் எல்லாவற்றையும்விட என் நாடு இந்தியாதான் உயர்ந்தது" என்பதுதான் இதன் பொருள்..இதேபோல் "தாய்மண்ணே வணக்கம்" பாடலின் பின்னணியில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும். தேசியக் கொடியைப் பார்க்கும்போதே, "இந்தியா என் நாடு, இந்திய மக்கள் எல்லோரும் இந்தியத் தாயின் பிள்ளைகள்" என்ற உணர்வை எழுப்பும் சக்திவாய்ந்தது நம் தேசியக்கொடி..இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவர்ண கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். அந்த நாட்களில் தேசியக் கொடியை இரவும், பகலும் பறக்கவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. "ஆகஸ்டு மாதம் 13-தேதிக்கும் 15-தேதிக்கும் இடையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நம் தேசியக் கொடியைப் பட்டொளி வீசி பறக்க செய்யுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள்" என்று பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் மீண்டும் விடுத்த கோரிக்கையைப் பெருமிதத்தோடு செயல்படுத்துவதின் மூலம் நம்முடைய, மற்றும் நம் குடும்பத்தினரின் நாட்டுப்பற்றை உறுதிப்படுத்துவோம்..ஜெய் ஹிந்த்.