மகேஷ் குமார்.கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் 'கிரி சலூன்'. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக, பார்க்க மிலிட்டரி ஆள் போல் தோற்றம். கண்களைப் போலவே பேச்சும் குரலும் தீர்க்கமாக இருக்கும். அந்தக் காலத்து நிரஞ்சன் போல பென்சில் மீசை. தலையில் இறுக்கமான வெள்ளை காடாத்துணிக் குல்லா. சலூனில் வேலை செய்தாலும் இஸ்திரி செய்யப்பட்ட பேண்டும் – அரைக்கை சட்டையுமாக நீட்டாக ஆபீசர் போல இருப்பார். சிறு பையன்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் வாங்க போங்க என்று மரியாதையாகவே விளிப்பார்.."வாங்க மகேஸ்… அப்பா பேங்குக்குப் போகைல சொல்லிட்டுத்தான் போனாரு நீங்க வருவீங்கன்னு. உக்காருங்க. இதோ முடிச்சுட்டு அடுத்து நீங்கதான்…" பேசும்போதே கத்தரிக்கோலும் சீப்புமாக கைகள் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்கும். "அரசியல் பேசக்கூடாது" என்ற போர்டு பெரிதாக கண்ணில் அறையும். அந்த போர்டைத் தவிர வேறு சாமி படங்களோ, தலைவர் படங்களோ எதுவும் இல்லாமல் சுவர்கள் பளீரென்று இருக்கும். மூலைகளில் ஒட்டடை கூட இருக்காது. பொருட்கள் எல்லாம் அதனதன் இடத்தில் சுத்தமாக இருக்கும்..திடீரென்று ஒருநாள் கடை மூடப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு அங்கே ஒரு டெய்லர் கடை. உள்ளே கிரி மாமா!!."வாப்பா மகேஸ்… சலூன் போரடிச்சுப் போச்சு. அதான் டெய்லரிங் ஆரம்பிச்சுட்டேன். கடை எப்பிடி இருக்கு?" என்று சிரித்தார்.."எங்க போயிட்டீங்க? திடீர்னு மாயமாயிட்டீங்க…"."திண்டுக்கல் போயிட்டேன். சிறுமலை தெரியுமா? அங்க ஒரு பெரியவர் இருக்காரு… அவருகிட்ட தியானத்துக்குப் போயிட்டேன். வந்து இதை ஆரம்பிச்சாச்சு. இனிமே கட்டிங்க்கு நீங்க சேகர் கடைக்குத்தான் போகணும்" என்று சிரித்தார்.."உங்களுக்கு டெய்லரிங்கும் தெரியுமா? அப்புறம் ஏன் சலூன் வெச்சிருந்தீங்க?"."அதெல்லாம் ஒரு தேடல் மகேஸ்… இப்ப சொன்னா புரியுமான்னு தெரியல…" என்று மீண்டும் சிரித்தார். எனக்கும் புரியவில்லை..ஒரு வருடமோ என்னவோதான்… அந்தக் கடையும் மூடப்பட்டது. அப்பாவிடம் கேட்டபோது, "அவர் அப்படித்தான்… மறுபடி சிறுமலை போயிட்டாரா இருக்கும்" என்று அசிரத்தையாகச் சொன்னார்..2-3 மாதங்கள் கழித்து வீட்டு வாசலில் "அப்பா இருக்காரா மகேஸ்?" என்று குரல். கிரி மாமா !! கையில் சில சோன்பப்டி பொட்டலங்கள். வெளியே தெருவில் ஒரு கை வண்டி. நடுவே பொசுபொசுவென பட்டு நூல்கண்டுகள் போல சோன்பப்டி நிரம்பிய ஒரு பெரிய கண்ணாடி ஜாடி. நாலு பக்கமும் கயிற்றால் இறுக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் சிறிய தராசும் கட்டிக் கொடுக்க பேப்பர்களும். ஆச்சரியமாகப் பார்த்தேன்.."அப்பாவை பேங்குல பார்த்தேன். கால் கிலோ வீட்டுல குடுக்கச் சொன்னார். காசு குடுத்துட்டார்"."என்ன மாமா இது? திடீர் திடீர்னு என்னென்னவோ பண்றீங்க?"."அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. காத்து வீசுதில்ல?" என்றார்.."காத்து வீசுதா?"."நம்ம சிறுமலைப் பெரியவர் சொன்னது. அது அப்படித்தான்" என்று சொல்லி, சோன்பப்டி பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு வழக்கமான சிரிப்புடன் போய்விட்டார்..அதன் பிறகு ஊரின் பல தெருக்களில் சோன்பப்டி வண்டியுடன் அவரைப் பார்க்கும்போதெல்லாம் எங்கள் பார்வை சந்தித்தால் பெரிதாகப் புன்னகைப்பார்..ஆனால், அதுவும் ஓரிரு வருடங்கள்தான். பாலிடெக்னிக் போக பஸ் நிலையத்தில் நிற்கும்போது ஒருநாள் அவர் பஸ்ஸில் இருந்து இறங்குவதைப் பார்த்தேன். பஸ்ஸின் பின்பக்கம் போய் ஏணியில் அவரே மேலே ஏறி சில சுமைகளைக் கீழே இறக்கினார். ஏதாவது உதவி தேவைப்படுமோ என்று பக்கத்தில் போனேன்.."கிரி மாமா….".துணியால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்த அந்த சுமைகளை ஓரமாக வைத்துவிட்டுத் திரும்பினார்.."அட… மகேஸ்.. இங்க என்ன பண்ற?"."பஸ்ஸுக்கு நிக்கறேன். பாலிடெக்னிக் போகணும். நீங்க என்ன இங்க? ரொம்ப நாளா பாக்கல… புது வியாபாரமா?"."ஆமா… காத்து வீசிடிச்சில்ல? இப்ப புடைவை, வேட்டி, லுங்கி வியாபாரம். போன வாரம் அப்பாவைப் பார்த்தேன். வீடு மாறிட்டீங்களாமே? ம்ம்.. கொஞ்சம் தூரம்தான்…. சனி ஞாயிறுல வரேன்னு அப்பாகிட்ட சொல்லுங்க… வாங்க கலர் சாப்பிடலாம்…." என்று அருகில் இருந்த சோடா தொட்டிக்குப் போய் பன்னீர் சோடா குடித்தோம்..எனக்கு ஆச்சரியம் தீரவில்லை. என்னமோ காத்து வீசுதுங்கறார். மாத்தி மாத்தி என்னென்னவோ வியாபாரம்… இது எப்படி சாத்தியம்?.அந்த சனிக்கிழமை மாலை புது வீட்டைத் தேடி வந்துவிட்டார். வீட்டில் நான் மட்டும்தான் இருந்தேன். அதே நீட்டான ஆபீசர் தோற்றம். நெற்றிச் சுருக்கங்கள் வயதாகிக்கொண்டிருப்பதை சொல்கிறதா இல்லை அவர் பார்த்த தொழில்களைச் சொல்கிறதா?."புது வீடு நல்லா இருக்கு. அப்பா பாத்துப் பாத்துக் கட்டினாரு இல்ல? சிரமம்தான்… வெளில திண்ணை காத்தோட்டமா குளுகுளுன்னு இருக்கு இல்ல" என்று சொல்லியபடி துணி மூட்டைகளை சைக்கிளிலிருந்து எடுத்துவந்து திண்ணையில் வைத்தார்..ஒரு செம்பு தண்ணீர் கொடுத்தபடியே "வீட்ல யாரும் இல்லையே… அம்மாவும் கோயிலுக்குப் போயிருக்காங்க" என்றேன்..ஒரே மூச்சில் செம்புத் தண்ணீரையும் குடித்துவிட்டு "பரவால்ல. கொஞ்ச நேரம் இருக்கேன். வந்தா பாத்துட்டு பிடிச்சா வாங்கிக்கட்டும்" என்றார். வழக்கமான பெரிய சிரிப்பு.."உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும். ஏன் புதுசு புதுசா ஏதாவது தொழில் மாத்திக்கிட்டே இருக்கீங்க? கேட்டா காத்து வீசுதுங்கறீங்க? புரியலையே….".வழக்கத்தை விடவும் இன்னும் பெரியதாகச் சிரித்தார். பிறகு கிழக்கே கையைக் காட்டி "அதோ அங்க இருக்குது சிறுமலை. திடீர்னு அங்க போகணும்னு தோணும். போய் பெரியவரைப் பார்ப்பேன். ஒவ்வொரு தடவை போய் வரும்போதும் மனசுல ஒரு அலை அடிக்கும். காத்து திசை மாறும். இதைச் செய்…போ…ன்னு உள்ள.. (நெஞ்சைத் தொட்டுக் காட்டி) உள்ள்ள்ள்ள்ள இருந்து சொல்லும். அது என்னவா இருந்தாலும் அதுக்குண்டான புத்தி தன்னால வந்துரும். புரியுதா?" என்று நேராகப் பார்த்தார்..அப்போது புரியவில்லை. இன்று நான் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிகிறது..(தொடரும்).ஓவியம்: ராஜன்
மகேஷ் குமார்.கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் 'கிரி சலூன்'. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக, பார்க்க மிலிட்டரி ஆள் போல் தோற்றம். கண்களைப் போலவே பேச்சும் குரலும் தீர்க்கமாக இருக்கும். அந்தக் காலத்து நிரஞ்சன் போல பென்சில் மீசை. தலையில் இறுக்கமான வெள்ளை காடாத்துணிக் குல்லா. சலூனில் வேலை செய்தாலும் இஸ்திரி செய்யப்பட்ட பேண்டும் – அரைக்கை சட்டையுமாக நீட்டாக ஆபீசர் போல இருப்பார். சிறு பையன்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் வாங்க போங்க என்று மரியாதையாகவே விளிப்பார்.."வாங்க மகேஸ்… அப்பா பேங்குக்குப் போகைல சொல்லிட்டுத்தான் போனாரு நீங்க வருவீங்கன்னு. உக்காருங்க. இதோ முடிச்சுட்டு அடுத்து நீங்கதான்…" பேசும்போதே கத்தரிக்கோலும் சீப்புமாக கைகள் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்கும். "அரசியல் பேசக்கூடாது" என்ற போர்டு பெரிதாக கண்ணில் அறையும். அந்த போர்டைத் தவிர வேறு சாமி படங்களோ, தலைவர் படங்களோ எதுவும் இல்லாமல் சுவர்கள் பளீரென்று இருக்கும். மூலைகளில் ஒட்டடை கூட இருக்காது. பொருட்கள் எல்லாம் அதனதன் இடத்தில் சுத்தமாக இருக்கும்..திடீரென்று ஒருநாள் கடை மூடப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு அங்கே ஒரு டெய்லர் கடை. உள்ளே கிரி மாமா!!."வாப்பா மகேஸ்… சலூன் போரடிச்சுப் போச்சு. அதான் டெய்லரிங் ஆரம்பிச்சுட்டேன். கடை எப்பிடி இருக்கு?" என்று சிரித்தார்.."எங்க போயிட்டீங்க? திடீர்னு மாயமாயிட்டீங்க…"."திண்டுக்கல் போயிட்டேன். சிறுமலை தெரியுமா? அங்க ஒரு பெரியவர் இருக்காரு… அவருகிட்ட தியானத்துக்குப் போயிட்டேன். வந்து இதை ஆரம்பிச்சாச்சு. இனிமே கட்டிங்க்கு நீங்க சேகர் கடைக்குத்தான் போகணும்" என்று சிரித்தார்.."உங்களுக்கு டெய்லரிங்கும் தெரியுமா? அப்புறம் ஏன் சலூன் வெச்சிருந்தீங்க?"."அதெல்லாம் ஒரு தேடல் மகேஸ்… இப்ப சொன்னா புரியுமான்னு தெரியல…" என்று மீண்டும் சிரித்தார். எனக்கும் புரியவில்லை..ஒரு வருடமோ என்னவோதான்… அந்தக் கடையும் மூடப்பட்டது. அப்பாவிடம் கேட்டபோது, "அவர் அப்படித்தான்… மறுபடி சிறுமலை போயிட்டாரா இருக்கும்" என்று அசிரத்தையாகச் சொன்னார்..2-3 மாதங்கள் கழித்து வீட்டு வாசலில் "அப்பா இருக்காரா மகேஸ்?" என்று குரல். கிரி மாமா !! கையில் சில சோன்பப்டி பொட்டலங்கள். வெளியே தெருவில் ஒரு கை வண்டி. நடுவே பொசுபொசுவென பட்டு நூல்கண்டுகள் போல சோன்பப்டி நிரம்பிய ஒரு பெரிய கண்ணாடி ஜாடி. நாலு பக்கமும் கயிற்றால் இறுக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் சிறிய தராசும் கட்டிக் கொடுக்க பேப்பர்களும். ஆச்சரியமாகப் பார்த்தேன்.."அப்பாவை பேங்குல பார்த்தேன். கால் கிலோ வீட்டுல குடுக்கச் சொன்னார். காசு குடுத்துட்டார்"."என்ன மாமா இது? திடீர் திடீர்னு என்னென்னவோ பண்றீங்க?"."அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. காத்து வீசுதில்ல?" என்றார்.."காத்து வீசுதா?"."நம்ம சிறுமலைப் பெரியவர் சொன்னது. அது அப்படித்தான்" என்று சொல்லி, சோன்பப்டி பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு வழக்கமான சிரிப்புடன் போய்விட்டார்..அதன் பிறகு ஊரின் பல தெருக்களில் சோன்பப்டி வண்டியுடன் அவரைப் பார்க்கும்போதெல்லாம் எங்கள் பார்வை சந்தித்தால் பெரிதாகப் புன்னகைப்பார்..ஆனால், அதுவும் ஓரிரு வருடங்கள்தான். பாலிடெக்னிக் போக பஸ் நிலையத்தில் நிற்கும்போது ஒருநாள் அவர் பஸ்ஸில் இருந்து இறங்குவதைப் பார்த்தேன். பஸ்ஸின் பின்பக்கம் போய் ஏணியில் அவரே மேலே ஏறி சில சுமைகளைக் கீழே இறக்கினார். ஏதாவது உதவி தேவைப்படுமோ என்று பக்கத்தில் போனேன்.."கிரி மாமா….".துணியால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்த அந்த சுமைகளை ஓரமாக வைத்துவிட்டுத் திரும்பினார்.."அட… மகேஸ்.. இங்க என்ன பண்ற?"."பஸ்ஸுக்கு நிக்கறேன். பாலிடெக்னிக் போகணும். நீங்க என்ன இங்க? ரொம்ப நாளா பாக்கல… புது வியாபாரமா?"."ஆமா… காத்து வீசிடிச்சில்ல? இப்ப புடைவை, வேட்டி, லுங்கி வியாபாரம். போன வாரம் அப்பாவைப் பார்த்தேன். வீடு மாறிட்டீங்களாமே? ம்ம்.. கொஞ்சம் தூரம்தான்…. சனி ஞாயிறுல வரேன்னு அப்பாகிட்ட சொல்லுங்க… வாங்க கலர் சாப்பிடலாம்…." என்று அருகில் இருந்த சோடா தொட்டிக்குப் போய் பன்னீர் சோடா குடித்தோம்..எனக்கு ஆச்சரியம் தீரவில்லை. என்னமோ காத்து வீசுதுங்கறார். மாத்தி மாத்தி என்னென்னவோ வியாபாரம்… இது எப்படி சாத்தியம்?.அந்த சனிக்கிழமை மாலை புது வீட்டைத் தேடி வந்துவிட்டார். வீட்டில் நான் மட்டும்தான் இருந்தேன். அதே நீட்டான ஆபீசர் தோற்றம். நெற்றிச் சுருக்கங்கள் வயதாகிக்கொண்டிருப்பதை சொல்கிறதா இல்லை அவர் பார்த்த தொழில்களைச் சொல்கிறதா?."புது வீடு நல்லா இருக்கு. அப்பா பாத்துப் பாத்துக் கட்டினாரு இல்ல? சிரமம்தான்… வெளில திண்ணை காத்தோட்டமா குளுகுளுன்னு இருக்கு இல்ல" என்று சொல்லியபடி துணி மூட்டைகளை சைக்கிளிலிருந்து எடுத்துவந்து திண்ணையில் வைத்தார்..ஒரு செம்பு தண்ணீர் கொடுத்தபடியே "வீட்ல யாரும் இல்லையே… அம்மாவும் கோயிலுக்குப் போயிருக்காங்க" என்றேன்..ஒரே மூச்சில் செம்புத் தண்ணீரையும் குடித்துவிட்டு "பரவால்ல. கொஞ்ச நேரம் இருக்கேன். வந்தா பாத்துட்டு பிடிச்சா வாங்கிக்கட்டும்" என்றார். வழக்கமான பெரிய சிரிப்பு.."உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும். ஏன் புதுசு புதுசா ஏதாவது தொழில் மாத்திக்கிட்டே இருக்கீங்க? கேட்டா காத்து வீசுதுங்கறீங்க? புரியலையே….".வழக்கத்தை விடவும் இன்னும் பெரியதாகச் சிரித்தார். பிறகு கிழக்கே கையைக் காட்டி "அதோ அங்க இருக்குது சிறுமலை. திடீர்னு அங்க போகணும்னு தோணும். போய் பெரியவரைப் பார்ப்பேன். ஒவ்வொரு தடவை போய் வரும்போதும் மனசுல ஒரு அலை அடிக்கும். காத்து திசை மாறும். இதைச் செய்…போ…ன்னு உள்ள.. (நெஞ்சைத் தொட்டுக் காட்டி) உள்ள்ள்ள்ள்ள இருந்து சொல்லும். அது என்னவா இருந்தாலும் அதுக்குண்டான புத்தி தன்னால வந்துரும். புரியுதா?" என்று நேராகப் பார்த்தார்..அப்போது புரியவில்லை. இன்று நான் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிகிறது..(தொடரும்).ஓவியம்: ராஜன்