? "உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யில் வரிச்சலுகை இருப்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல் எதிர்க்கிறார்கள்" என்கின்றனரே பா.ஜ.க.வினர்?– ஜோஷ், அயன்புரம்.! அப்படியா. நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்….அரிசி 25 கிலோ பாக்கிங் மூட்டைக்கு ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 1312-5...அதே அரிசி 26 கிலோ பாக்கிங் மூட்டைக்கு ரூபாய் 1300.ஜிஎஸ்டி.25 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கும்போதுதான் வரி கிடையாது. ஓட்டல் மாதிரி பயன்பாட்டிற்கு மூடைகளாக வாங்கும் போது ஜி.எஸ்.டி. இல்லாத வரிச்சலுகை உண்டு. ஆனால், நடுத்தர மக்களுக்கு வரி. குறைந்த அளவில் அடிக்கடி வாங்கும் பொருளுக்கு வரி போடுவதால் வரி வசூல் கூடும். இது அரசின் நிதிக்கொள்கை. பா.ஜ.க.வினர்களுக்கு இது புரியவில்லை. அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்..? நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தது பற்றி?– சி.கார்த்திகேயன், சாத்தூர்.! சந்தித்ததில் தவறில்லை. மாநில ஆளுநரை ஒரு குடிமகனாக எவரும் சந்திக்கலாம். ஆனால், ஆளுநர் ரவியைச் சந்தித்த பிறகு ரஜினிகாந்த் "ஆளுநருடன் அரசியல் பேசினேன்" என்று பேட்டி அளித்தார்! அரசியல் சாசனப்படி ஆளுநர் என்பவரும், குடியரசு தலைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக விளங்க வேண்டியவர்கள்! அப்படிப்பட்ட நடுநிலைப் பொறுப்பில் உள்ள ஆளுநருடன் "அரசியல் பேசினேன்" என்றும், "2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசினேன்" என்றும் ரஜினி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்! ஆளுநர் "தமிழக மக்கள் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர்" எனப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருப்பதுதான் இடிக்கிறது..? தமிழ் நாட்டில் ஆன்மீகம் வியாபாரமாகிவிட்டதா?– எஸ்.மோகன், கோவில்பட்டி.! எல்லா ஆன்மீகவாதிகளும் வியாபாரிகள் இல்லை. ஆனால், அண்மையில் வெளியாகியிருக்கும் ஒரு தகவல், "தமிழகத்தில் இது தழைத்துக் கொண்டிருக்கும் ஒரு வியாபாரம்" என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 90 நாட்களில் ஈஷா அமைப்பினர் பேஸ்புக் விளம்பரத்துக்கு மட்டும் 8 கோடி செலவிட்டிருக்கிறார்கள்… ஒரு நாளைக்குச் சராசரியாக 8 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். வியாபாரமில்லாமலா விளம்பரத்துக்கு இவ்வளவு செலவு செய்வார்கள் ?.? தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி?– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.! பாராட்டப்பட வேண்டிய சரியான தேர்வு. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவர், ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச் சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருபவர். எளிய வாழ்க்கை, வாழும் சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதி. பத்திரிகையாளர்களைப் பெரிதும் மதிப்பவர்..? கோயில்கள் எல்லாம் ஆக்கிரமிப்புகள் எனக் காரணம் காட்டி இடிக்கப்படுகிறதே, இது எந்த வகையில் நியாயம் தராசாரே?– ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்.! எல்லா கோயில்களும் இடிக்கப்படவில்லை. தமிழகத்தின் பல இடங்களில் பொது இடங்களை ஆக்கிரமித்து, எந்த அனுமதியும் இல்லாமல் கோயில்களை எழுப்பி வரும் பக்தர்களிடம் நன்கொடைகள் பெற்று அந்த கோயில்களைப் பெரிதாக்கி, சிலரின் தொடர் வருமானத்திற்கு வழி செய்து கொண்டிருக்கும் கோயில்களைத்தான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கிறார்கள். தமிழகத்திலிருக்கும் எண்ணற்ற பழமையான கோயில்களைப் புதுப்பித்து வழிபடலாமே..? "அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று சசிகலா கூறியிருக்கிறாரே…?–இரா. அமிர்தவர்ஷினி,புதுச்சேரி – 605001.! எல்லோரும் தனித்தனியாக பயணித்துக்கொண்டே சொல்லும் பயனில்லாத வாசகம் இது. இதைத்தானே அம்மாவை இதய தெய்வமாக வணங்கும் எடப்பாடியும், தர்மயுத்தம் செய்யும் ஓ.பி.எஸ்.ஸும் அ.ம.மு.க. தான் அ.தி.மு.க. என்று தினகரனும் சொல்லுகிறார்..? "நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு என்பது பொய்; நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது" என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே…?– ஶ்ரீவராகன், சென்னை.! நிதியமைச்சரான அவர் "ரிசர்வ் வங்கியின் அறிக்கையைப் படிக்காமல் வந்துவிட்டார்… அல்லது மக்கள் யாரும் படித்திருக்க மாட்டார்கள்" என்று நம்புகிறார்..? மானியம் மற்றும் இலவசம் வழங்குவது இந்திய அரசியலின் மோசமான கலாசாரமாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே…?– கி. சோழராஜன், மதகடிப்பட்டு.! ஒரே இரவில் இதை ஒழிக்க ஒரு மசோதா கொண்டுவந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி விட வேண்டியதுதானே? ஏன் இந்தப் புலம்பல்!.? "பா.ம.க.விடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் இரண்டே நாட்களில் போதைப் பொருள் விற்பனைக்கு முடிவுகட்டி விடுவேன்" என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.! உண்மையாக அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார் என்று நம்பலாம். சிகரெட் பெட்டிகளின் மீது 'புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு' என்ற வாசகங்களைப் போராடி (ஒன்றிய அரசில் அமைச்சராக இருந்தும்) இடம் பெறச் செய்தவர் அவர்..? 2024 பொதுத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடிதான்" என்று அமித்ஷா கூறியிருப்பது பற்றி…– எம். நிர்மலா, வாணரப்பேட்டை.! ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற கட்சி விதியையும், "அடுத்து அவர்தான் நிரந்தர பிரதமர என்று மாற்றப்போகிறார்கள்" என்று அர்த்தம். ."ஏதாவது பிரச்னை என்றால், பிரதமர் மோடி அதைப் பற்றிப் பேசாத வரை உலக நாடுகள் அப்பிரச்னையைத் தொடுவதில்லை" என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து பற்றி…– டாக்டர். இரா. அருண்குமார், வாணரப்பேட்டை, புதுச்சேரி.! உக்ரைன் போர், இலங்கை அரசியல் குழப்பம், அமெரிக்க பொருளாதாரச் சிக்கல், ஐரோப்பிய நாடுகளில் பிரச்னைகளை இவர் பேசாததால்தான் இன்னும் அவர்களால் தீர்க்கப்படவில்லை என்று அமித் ஷா சொல்கிறாரா. பிரதமர்தான் நம் நாட்டிலேயே எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எழுப்பும் பிரச்னைகள் பற்றி எதுவும் பேசுவதில்லையே..? ஆழ்ந்தகன்ற நுண்ணியன் '- விளக்கம் தாருங்களேன்?– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.! கடவுள் நம்பிக்கையுடையவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லும் போது அதனை ஆராய்ந்து அறிந்து 'உண்டு' அல்லது 'இல்லை'யென்று எளிதில் கூற இயலாது என்கிறார்கள். இதைத் தான் "ஐயா, என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்" என்கிறது திருவாசகம். இதற்கு பல அறிஞர்கள் விளக்க உரைகள் எழுதியிருந்தாலும் குன்றக்குடி அடிகளார் மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறார். "பிரபஞ்சம் முழுவதும் நுண் அணுக்கள் நெருங்கிக் கிடக்கின்றன என்றும், கண்ணுக்குப் புலனாகாத ஓரணுவில் ஆயிரக்கணக்கான அணுத்திரள்கள்; அவற்றிற்கு பெரும் ஆற்றல் இருப்பதாக அணு அறிவியல் கூறுகிறது. ஆனாலும் அதை உருவாக்கியது யார்? எப்போது? என்பதை உணர்ந்துகொள்ளும் ஆற்றலை இன்னும் மனிதன் பெறவில்லை" என்ற குன்றக்குடி அடிகளாரின் விளக்கம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது. அண்மையில் நாசாவின் 'ஜேம்ஸ் வெப்' என்ற ராட்சத தொலைக்காட்சி விண்வெளியிலிருந்து அனுப்பிய பிரபஞ்சத்தின் ஒரு சிறிய பகுதியைப் பார்த்தபோது இதை உணர முடிந்தது..? சுதந்திர தினத்தன்று நம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றச் சொல்லுகிறாரே பிரதமர். இதுபோல் வெளிநாடுகளில் அவர்கள் வீடுகளில் கொடியேற்றுவது உண்டா?– பள்ளிப்பாளையம் ரஞ்சனிபிரியன், ஈரோடு.! பல ஐரோப்பிய நாடுகளில் தேசிய நாட்களில் இம்மாதிரி செய்கிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல வீட்டு வாசல்களை அவர்கள் தேசிய கொடி எப்போதும் அலங்கரிக்கும்.
? "உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யில் வரிச்சலுகை இருப்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல் எதிர்க்கிறார்கள்" என்கின்றனரே பா.ஜ.க.வினர்?– ஜோஷ், அயன்புரம்.! அப்படியா. நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்….அரிசி 25 கிலோ பாக்கிங் மூட்டைக்கு ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 1312-5...அதே அரிசி 26 கிலோ பாக்கிங் மூட்டைக்கு ரூபாய் 1300.ஜிஎஸ்டி.25 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கும்போதுதான் வரி கிடையாது. ஓட்டல் மாதிரி பயன்பாட்டிற்கு மூடைகளாக வாங்கும் போது ஜி.எஸ்.டி. இல்லாத வரிச்சலுகை உண்டு. ஆனால், நடுத்தர மக்களுக்கு வரி. குறைந்த அளவில் அடிக்கடி வாங்கும் பொருளுக்கு வரி போடுவதால் வரி வசூல் கூடும். இது அரசின் நிதிக்கொள்கை. பா.ஜ.க.வினர்களுக்கு இது புரியவில்லை. அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்..? நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தது பற்றி?– சி.கார்த்திகேயன், சாத்தூர்.! சந்தித்ததில் தவறில்லை. மாநில ஆளுநரை ஒரு குடிமகனாக எவரும் சந்திக்கலாம். ஆனால், ஆளுநர் ரவியைச் சந்தித்த பிறகு ரஜினிகாந்த் "ஆளுநருடன் அரசியல் பேசினேன்" என்று பேட்டி அளித்தார்! அரசியல் சாசனப்படி ஆளுநர் என்பவரும், குடியரசு தலைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக விளங்க வேண்டியவர்கள்! அப்படிப்பட்ட நடுநிலைப் பொறுப்பில் உள்ள ஆளுநருடன் "அரசியல் பேசினேன்" என்றும், "2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசினேன்" என்றும் ரஜினி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்! ஆளுநர் "தமிழக மக்கள் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர்" எனப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருப்பதுதான் இடிக்கிறது..? தமிழ் நாட்டில் ஆன்மீகம் வியாபாரமாகிவிட்டதா?– எஸ்.மோகன், கோவில்பட்டி.! எல்லா ஆன்மீகவாதிகளும் வியாபாரிகள் இல்லை. ஆனால், அண்மையில் வெளியாகியிருக்கும் ஒரு தகவல், "தமிழகத்தில் இது தழைத்துக் கொண்டிருக்கும் ஒரு வியாபாரம்" என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 90 நாட்களில் ஈஷா அமைப்பினர் பேஸ்புக் விளம்பரத்துக்கு மட்டும் 8 கோடி செலவிட்டிருக்கிறார்கள்… ஒரு நாளைக்குச் சராசரியாக 8 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். வியாபாரமில்லாமலா விளம்பரத்துக்கு இவ்வளவு செலவு செய்வார்கள் ?.? தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி?– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.! பாராட்டப்பட வேண்டிய சரியான தேர்வு. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவர், ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச் சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருபவர். எளிய வாழ்க்கை, வாழும் சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதி. பத்திரிகையாளர்களைப் பெரிதும் மதிப்பவர்..? கோயில்கள் எல்லாம் ஆக்கிரமிப்புகள் எனக் காரணம் காட்டி இடிக்கப்படுகிறதே, இது எந்த வகையில் நியாயம் தராசாரே?– ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்.! எல்லா கோயில்களும் இடிக்கப்படவில்லை. தமிழகத்தின் பல இடங்களில் பொது இடங்களை ஆக்கிரமித்து, எந்த அனுமதியும் இல்லாமல் கோயில்களை எழுப்பி வரும் பக்தர்களிடம் நன்கொடைகள் பெற்று அந்த கோயில்களைப் பெரிதாக்கி, சிலரின் தொடர் வருமானத்திற்கு வழி செய்து கொண்டிருக்கும் கோயில்களைத்தான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கிறார்கள். தமிழகத்திலிருக்கும் எண்ணற்ற பழமையான கோயில்களைப் புதுப்பித்து வழிபடலாமே..? "அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று சசிகலா கூறியிருக்கிறாரே…?–இரா. அமிர்தவர்ஷினி,புதுச்சேரி – 605001.! எல்லோரும் தனித்தனியாக பயணித்துக்கொண்டே சொல்லும் பயனில்லாத வாசகம் இது. இதைத்தானே அம்மாவை இதய தெய்வமாக வணங்கும் எடப்பாடியும், தர்மயுத்தம் செய்யும் ஓ.பி.எஸ்.ஸும் அ.ம.மு.க. தான் அ.தி.மு.க. என்று தினகரனும் சொல்லுகிறார்..? "நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு என்பது பொய்; நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது" என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே…?– ஶ்ரீவராகன், சென்னை.! நிதியமைச்சரான அவர் "ரிசர்வ் வங்கியின் அறிக்கையைப் படிக்காமல் வந்துவிட்டார்… அல்லது மக்கள் யாரும் படித்திருக்க மாட்டார்கள்" என்று நம்புகிறார்..? மானியம் மற்றும் இலவசம் வழங்குவது இந்திய அரசியலின் மோசமான கலாசாரமாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே…?– கி. சோழராஜன், மதகடிப்பட்டு.! ஒரே இரவில் இதை ஒழிக்க ஒரு மசோதா கொண்டுவந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி விட வேண்டியதுதானே? ஏன் இந்தப் புலம்பல்!.? "பா.ம.க.விடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் இரண்டே நாட்களில் போதைப் பொருள் விற்பனைக்கு முடிவுகட்டி விடுவேன்" என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.! உண்மையாக அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார் என்று நம்பலாம். சிகரெட் பெட்டிகளின் மீது 'புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு' என்ற வாசகங்களைப் போராடி (ஒன்றிய அரசில் அமைச்சராக இருந்தும்) இடம் பெறச் செய்தவர் அவர்..? 2024 பொதுத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடிதான்" என்று அமித்ஷா கூறியிருப்பது பற்றி…– எம். நிர்மலா, வாணரப்பேட்டை.! ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற கட்சி விதியையும், "அடுத்து அவர்தான் நிரந்தர பிரதமர என்று மாற்றப்போகிறார்கள்" என்று அர்த்தம். ."ஏதாவது பிரச்னை என்றால், பிரதமர் மோடி அதைப் பற்றிப் பேசாத வரை உலக நாடுகள் அப்பிரச்னையைத் தொடுவதில்லை" என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து பற்றி…– டாக்டர். இரா. அருண்குமார், வாணரப்பேட்டை, புதுச்சேரி.! உக்ரைன் போர், இலங்கை அரசியல் குழப்பம், அமெரிக்க பொருளாதாரச் சிக்கல், ஐரோப்பிய நாடுகளில் பிரச்னைகளை இவர் பேசாததால்தான் இன்னும் அவர்களால் தீர்க்கப்படவில்லை என்று அமித் ஷா சொல்கிறாரா. பிரதமர்தான் நம் நாட்டிலேயே எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எழுப்பும் பிரச்னைகள் பற்றி எதுவும் பேசுவதில்லையே..? ஆழ்ந்தகன்ற நுண்ணியன் '- விளக்கம் தாருங்களேன்?– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.! கடவுள் நம்பிக்கையுடையவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லும் போது அதனை ஆராய்ந்து அறிந்து 'உண்டு' அல்லது 'இல்லை'யென்று எளிதில் கூற இயலாது என்கிறார்கள். இதைத் தான் "ஐயா, என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்" என்கிறது திருவாசகம். இதற்கு பல அறிஞர்கள் விளக்க உரைகள் எழுதியிருந்தாலும் குன்றக்குடி அடிகளார் மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறார். "பிரபஞ்சம் முழுவதும் நுண் அணுக்கள் நெருங்கிக் கிடக்கின்றன என்றும், கண்ணுக்குப் புலனாகாத ஓரணுவில் ஆயிரக்கணக்கான அணுத்திரள்கள்; அவற்றிற்கு பெரும் ஆற்றல் இருப்பதாக அணு அறிவியல் கூறுகிறது. ஆனாலும் அதை உருவாக்கியது யார்? எப்போது? என்பதை உணர்ந்துகொள்ளும் ஆற்றலை இன்னும் மனிதன் பெறவில்லை" என்ற குன்றக்குடி அடிகளாரின் விளக்கம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது. அண்மையில் நாசாவின் 'ஜேம்ஸ் வெப்' என்ற ராட்சத தொலைக்காட்சி விண்வெளியிலிருந்து அனுப்பிய பிரபஞ்சத்தின் ஒரு சிறிய பகுதியைப் பார்த்தபோது இதை உணர முடிந்தது..? சுதந்திர தினத்தன்று நம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றச் சொல்லுகிறாரே பிரதமர். இதுபோல் வெளிநாடுகளில் அவர்கள் வீடுகளில் கொடியேற்றுவது உண்டா?– பள்ளிப்பாளையம் ரஞ்சனிபிரியன், ஈரோடு.! பல ஐரோப்பிய நாடுகளில் தேசிய நாட்களில் இம்மாதிரி செய்கிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல வீட்டு வாசல்களை அவர்கள் தேசிய கொடி எப்போதும் அலங்கரிக்கும்.