கவர் ஸ்டோரி.– ரமணன்.ஆயுதமேந்தாத ஒரு அஹிம்சைப் புரட்சிக்குப் பின்னர் கிடைத்த இந்திய சுதந்திரத்தின் முதல் அடையாளச் சின்னம் நமது தேசியக் கொடி. இந்தக் கொடியின் பாரம்பரியத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்கத் தனிச் சட்டமும் கையாளும் விதிமுறைகளும் உள்ளன.தேசியக்கொடியை அரசு அலுவலகங்களில் தினமும் பறக்கவிடலாம். ஆனால், குடியரசு, சுதந்திர தினங்களில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் மற்றும் நமது இல்லங்களில் பறக்கவிடப்படலாம் என்பது விதி..தனியாரும் தங்கள் இல்லத்தில் தினமும் ஏற்றும் வகையில் இதை மாற்றி அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 2002ல் ஜிண்டால் என்பவர் போட்ட பொதுநல வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி இப்போது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றலாம். ஆனால், ஏற்றும் முறை, நேரம், ஏற்றி இறக்கும் நேரத்தில் கொடிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைகளின் விதிமுறைகளில் மாற்றமில்லை எனச் சொல்லப்பட்டது..தேசியக் கொடியை யார் தயாரிக்கிறார்கள்?.கதர் மற்றும் கிராம வாரிய கமிஷனின் கர்நாடக மாநிலப் பிரிவுதான் மத்திய அரசால் கொடி தயாரிக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே நிறுவனம். தரக் கட்டுப்பாடுகளினாலும் ஆண்டு முழுவதும் விற்பனையில்லாததாலும் கொடிகளின் விலை அதிகமாகியிருக்கிறது. குறைந்தபட்ச விலை 100 ரூபாய்..தேசியக்கொடி தயாரிப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வாழும் இடமான அங்கு, நடைப்பெற வேண்டும் என்று எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து கர்நாடகாவின் தட்வாட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி கிராமத்தில் கர்நாடகா காதி கிராமோதகா சம்யுக்த சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு இந்திய தேசிய கொடியை செய்வதற்கான உரிமை அளிக்கப்பட்டது..ஹூப்ளியை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் உற்பத்தி வசதிகளுடன், ஜவுளி வேதியியலில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி கல்லூரியும் உள்ளது..அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம், தேர்ந்தெடுத்த கதர்துணியை "பிரோ ஆப் இந்தியன் ஸ்டான்ட்ஸ்' அமைப்புக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் கிடைத்தபின் அதில் வண்ணம் ஏற்றிக் கொடியாக தைத்த பின்னர் மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். தையலின் வகைகளுக்குக்கூட விதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கொடியின் அளவு என்பது ஏற்றுவதற்கு வசதியாகக் கயிறு நுழைக்க உருவாக்கப்பட்டிருக்கும் பகுதியைச் சேர்க்காமல் கணக்கிடப்படும். கயிறு கோர்க்கும் பகுதிக்குக் கொடியின் வண்ணங்களிலேயே சற்று கனமான வேறு வகை கதர் பயன்படுத்தப்பட வேண்டும்.அரசு மரியாதைக்காக, அஞ்சலிக்காக, மரணத்துக்குப் பின் சவப்பெட்டியின் மீது போர்த்தப்படும் கொடியின் அளவுகள் கூட சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வகைக் கொடிகள் கம்பங்களில் ஏற்றமுடியாதபடி வடிவமைக்கப்பட்டிருக்கும். கொடியின் அளவுகள் மட்டுமில்லை, பயன்படுத்த வேண்டிய கதர்த்துணியின் தரமும், ஒரு சதுர அங்குலத்தில் எவ்வளவு நூல் இழைகள் என்பதும் கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது..ஜீன்ஸ் துணியை விட அதிக அடர்த்தியான ஒருவகை துணியில் மட்டுமே கொடிகளை இம்மையம் தயாரிக்கிறது. இவர்களது நெசவுப்பிரிவு பகல்கோட்டில் உள்ளது. மூன்று லாட்களில் கொடிகள், மூவர்ணத்தில் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக டை செய்யும். பின்னர் துணி சரியான அளவில், வடிவில் வெட்டப்பட்டு, நடுவில் நீல நிறத்தில் அசோக சக்கரம் அச்சடிக்கப்படும். கடைசியாக மூன்று வர்ண துணிகள் சேர்த்து தைக்கப்பட்டு ஒரே இந்திய கொடியாக தயாரிக்கப்படும்..KKGSS-ல் 60 தையல் மெஷின்கள் உள்ளது. ஒரே மாதிரியாக இங்கே தைக்கப்படும். ஒவ்வொரு துணியும், 18 முறையான தரக்கண்காணிப்புக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படும். கொடியின் அகலமும், நீளமும், சரியாக 2:3 என்ற அடிப்படையில், இருப்பக்கமும் நீல நிற சக்கரம் அச்சிடப்படும்..கடந்த ஆண்டு தேசியக் கொடிகளின் விற்பனை இரண்டு மடங்காகப் பெருகியிருந்தது. "பிரதமரின் இல்லம்தோறும் தேசியக்கொடி" என்ற அறிவிப்பினால் இந்த ஆண்டு ஆர்டர்கள் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்த கிராம மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்..காரணம் இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002-ல் செய்யப்பட்டிருக்கும் ஒரு திருத்தம் அதன்படி 2021 டிசம்பர் 30 தேதியிட்ட உத்தரவில், பாலியஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது கைத்தறி, விசைத்தறி, பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, பட்டு, காதி துணியால் தேசியக்கொடி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, எல்லாவற்றிக்கும் BIS அனுமதியும் அவசியமில்லை..இந்த உத்தரவினால் ஆர்டர்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் கொடிகளை தயாரித்து அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்றுகொண்டிருக்கின்றன். தமிழ் நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 3 ஷிப்ட்களில் வேலை நடந்தது. இதுபோல் நாட்டின் பல ஆடை தயாரிக்கும் நிறுவனங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது..பெருமளவில் மக்கள் தேசியக்கொடியை ஏற்றப்போகிறார்கள் என்று நாம் மனம் மகிழ்ந்தாலும், "பாரம்பரியமான கையால் நூற்ற கதர் நூலில் கைத்தறிகளில் உருவாகும் கொடிகள் மெல்ல அழிந்துவிடுமோ" என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.
கவர் ஸ்டோரி.– ரமணன்.ஆயுதமேந்தாத ஒரு அஹிம்சைப் புரட்சிக்குப் பின்னர் கிடைத்த இந்திய சுதந்திரத்தின் முதல் அடையாளச் சின்னம் நமது தேசியக் கொடி. இந்தக் கொடியின் பாரம்பரியத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்கத் தனிச் சட்டமும் கையாளும் விதிமுறைகளும் உள்ளன.தேசியக்கொடியை அரசு அலுவலகங்களில் தினமும் பறக்கவிடலாம். ஆனால், குடியரசு, சுதந்திர தினங்களில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் மற்றும் நமது இல்லங்களில் பறக்கவிடப்படலாம் என்பது விதி..தனியாரும் தங்கள் இல்லத்தில் தினமும் ஏற்றும் வகையில் இதை மாற்றி அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 2002ல் ஜிண்டால் என்பவர் போட்ட பொதுநல வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி இப்போது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றலாம். ஆனால், ஏற்றும் முறை, நேரம், ஏற்றி இறக்கும் நேரத்தில் கொடிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைகளின் விதிமுறைகளில் மாற்றமில்லை எனச் சொல்லப்பட்டது..தேசியக் கொடியை யார் தயாரிக்கிறார்கள்?.கதர் மற்றும் கிராம வாரிய கமிஷனின் கர்நாடக மாநிலப் பிரிவுதான் மத்திய அரசால் கொடி தயாரிக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே நிறுவனம். தரக் கட்டுப்பாடுகளினாலும் ஆண்டு முழுவதும் விற்பனையில்லாததாலும் கொடிகளின் விலை அதிகமாகியிருக்கிறது. குறைந்தபட்ச விலை 100 ரூபாய்..தேசியக்கொடி தயாரிப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வாழும் இடமான அங்கு, நடைப்பெற வேண்டும் என்று எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து கர்நாடகாவின் தட்வாட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி கிராமத்தில் கர்நாடகா காதி கிராமோதகா சம்யுக்த சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு இந்திய தேசிய கொடியை செய்வதற்கான உரிமை அளிக்கப்பட்டது..ஹூப்ளியை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் உற்பத்தி வசதிகளுடன், ஜவுளி வேதியியலில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி கல்லூரியும் உள்ளது..அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம், தேர்ந்தெடுத்த கதர்துணியை "பிரோ ஆப் இந்தியன் ஸ்டான்ட்ஸ்' அமைப்புக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் கிடைத்தபின் அதில் வண்ணம் ஏற்றிக் கொடியாக தைத்த பின்னர் மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். தையலின் வகைகளுக்குக்கூட விதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கொடியின் அளவு என்பது ஏற்றுவதற்கு வசதியாகக் கயிறு நுழைக்க உருவாக்கப்பட்டிருக்கும் பகுதியைச் சேர்க்காமல் கணக்கிடப்படும். கயிறு கோர்க்கும் பகுதிக்குக் கொடியின் வண்ணங்களிலேயே சற்று கனமான வேறு வகை கதர் பயன்படுத்தப்பட வேண்டும்.அரசு மரியாதைக்காக, அஞ்சலிக்காக, மரணத்துக்குப் பின் சவப்பெட்டியின் மீது போர்த்தப்படும் கொடியின் அளவுகள் கூட சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வகைக் கொடிகள் கம்பங்களில் ஏற்றமுடியாதபடி வடிவமைக்கப்பட்டிருக்கும். கொடியின் அளவுகள் மட்டுமில்லை, பயன்படுத்த வேண்டிய கதர்த்துணியின் தரமும், ஒரு சதுர அங்குலத்தில் எவ்வளவு நூல் இழைகள் என்பதும் கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது..ஜீன்ஸ் துணியை விட அதிக அடர்த்தியான ஒருவகை துணியில் மட்டுமே கொடிகளை இம்மையம் தயாரிக்கிறது. இவர்களது நெசவுப்பிரிவு பகல்கோட்டில் உள்ளது. மூன்று லாட்களில் கொடிகள், மூவர்ணத்தில் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக டை செய்யும். பின்னர் துணி சரியான அளவில், வடிவில் வெட்டப்பட்டு, நடுவில் நீல நிறத்தில் அசோக சக்கரம் அச்சடிக்கப்படும். கடைசியாக மூன்று வர்ண துணிகள் சேர்த்து தைக்கப்பட்டு ஒரே இந்திய கொடியாக தயாரிக்கப்படும்..KKGSS-ல் 60 தையல் மெஷின்கள் உள்ளது. ஒரே மாதிரியாக இங்கே தைக்கப்படும். ஒவ்வொரு துணியும், 18 முறையான தரக்கண்காணிப்புக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படும். கொடியின் அகலமும், நீளமும், சரியாக 2:3 என்ற அடிப்படையில், இருப்பக்கமும் நீல நிற சக்கரம் அச்சிடப்படும்..கடந்த ஆண்டு தேசியக் கொடிகளின் விற்பனை இரண்டு மடங்காகப் பெருகியிருந்தது. "பிரதமரின் இல்லம்தோறும் தேசியக்கொடி" என்ற அறிவிப்பினால் இந்த ஆண்டு ஆர்டர்கள் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்த கிராம மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்..காரணம் இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002-ல் செய்யப்பட்டிருக்கும் ஒரு திருத்தம் அதன்படி 2021 டிசம்பர் 30 தேதியிட்ட உத்தரவில், பாலியஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது கைத்தறி, விசைத்தறி, பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, பட்டு, காதி துணியால் தேசியக்கொடி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, எல்லாவற்றிக்கும் BIS அனுமதியும் அவசியமில்லை..இந்த உத்தரவினால் ஆர்டர்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் கொடிகளை தயாரித்து அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்றுகொண்டிருக்கின்றன். தமிழ் நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 3 ஷிப்ட்களில் வேலை நடந்தது. இதுபோல் நாட்டின் பல ஆடை தயாரிக்கும் நிறுவனங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது..பெருமளவில் மக்கள் தேசியக்கொடியை ஏற்றப்போகிறார்கள் என்று நாம் மனம் மகிழ்ந்தாலும், "பாரம்பரியமான கையால் நூற்ற கதர் நூலில் கைத்தறிகளில் உருவாகும் கொடிகள் மெல்ல அழிந்துவிடுமோ" என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.