உலகக் குடிமகன் – 32 .நா.கண்ணன்.நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என நானறியேன். கொரியக் கடலாய்வு மையத்தின் தென்கடல் ஆய்வகம் என்னைத் தொடர்ந்திருக்கிறது என்பதை டாக்டர் ஓ ஜே ரியோ எனக்கு எழுதிய போதுதான் தெரிந்தது. அவர் என்னை வந்து ஜெர்மனியில் சந்தித்தார். தனது ஆய்வகத்தில் சேர முடியுமா? எனக் கேட்டார். அப்போது எனக்கு கிராக்கி அதிகம். ஆச்சர்யமாக அமெரிக்கா சிகாகோ நகர விமான நிலையத்தில் இறங்கி வெளியேறும் முன் குடியேற்ற அதிகாரி சொன்னார், ஏன் ஜெர்மனியிலிருந்து கொண்டு ஆய்வு செய்கிறாய், அமெரிக்கா வந்துவிடு! என்று..மதுரையிலிருந்து கொண்டு அமெரிக்கக் கனவு கண்டது இந்த அதிகாரிவரை தெரிந்திருக்கிறது. அப்படித்தான் ஐயா நானும் நினைத்தேன். ஆனால், விதி என்னை ஐரோப்பாவில் வைத்திருக்கிறது எனச் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டு, ஒய் நாட்? என்று நகர்ந்து விட்டேன். பத்து வருடங்கள் நான் அரசாங்க ஊழியனாக ஜெர்மனியில் வேலை பார்த்ததால் எனக்கு குடியுரிமை கிடைத்துவிட்டது. ஜெர்மன் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எல்லா நாடுகளுக்கும் எளிதாய் போய்வர முடிந்தது. அங்கு தொடர்ந்து பேராசிரியராக வேலை பார்க்க வேண்டுமெனில் ஹபிலிடேஷன் செய்ய வேண்டும். அது டாக்டர் ஆப் பிலாசபி போன்றது. நான் ஏற்கெனவே இரண்டு முனைவர் பட்டங்கள் வைத்திருக்கிறேன். மூன்றாவதாக இன்னொன்று செய்ய போர் அடித்தது. சரி கொரியா போய்விடலாமென முடிவெடுத்தேன்!.கொரியா பற்றி எனக்கேதும் எண்ணப்பதிவு கிடையாது. கொரியா பற்றி ஜப்பானியர் கொடுத்த அபிப்பிராயம்தான். அது அவர்களை முரடர்கள் என்று காட்டியது. கொரியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருக்கைகளெல்லாம் சின்னதாக இருந்தன. அருகிலிருந்தவர் நெருக்கிக் கொண்டிருந்தார். எனக்கு ஜப்பான் கொடுத்த பிம்பம் நினைவிற்கு வர, இவங்களெல்லாம் முரடர்கள் என நினைத்தேன். அந்த வகையில் ஜப்பானியர் எப்போதும் தமது பண்பான முகமே உலகிற்குத் தெரியும் வண்ணம் நடந்து கொள்வது நினைவிற்கு வந்தது. எனது நகர்வு பிழையுள்ளதோ எனச் சந்தேகம் வந்தது. நான் சோல் நகரில் (சியோல் எனச் சொல்லக்கூடாது) இறங்கி தொங்யோங் எனும் நகருக்கு பேருந்தில் வந்து விடுமாறும் அங்கு டாக்டர் ஓ ஜே ரியோங் என்னைச் சந்திப்பதாக ஏற்பாடு. தெற்கு முகமாகச் செல்லும் பேருந்து நிலையத்தில் இறங்கி டிக்கெட் எடுக்க வேண்டும். நான் தெனாவெட்டாக எனது விசா கார்டை வைத்து டிக்கெட் எடுத்துக் கொள்ளலாமென நீட்டினால், அவர்கள் கைக்காசாகக் கொடுங்கள் என்றனர். அங்கு எந்த ஏடிஎம் மெஷினும் வெளிநாட்டு கார்டை ஏற்றுக்கொண்டு பணம் தரவில்லை. வங்கியில் காசு இருக்கிறது, ஆனால் ஏழையாக ஏதோவொரு பஸ் ஸ்டாண்டில் நான் கையில் பெரிய, பெரிய சூட்கேசுடன். வேறு வழியில்லாமல் என் நிலையை அதே ஊருக்குச் செல்லும் சக பிராணியிடம் சொல்லி எனக்கொரு டிக்கெட் போடுங்கள் தொங்யோங் வந்தவுடன் நண்பரிடம் கேட்டு வாங்கித் தந்து விடுகிறேன் என்று கெஞ்சிக் கூத்தாடி பயணப்பட்டேன். வாழ்வில் நான் யாரிடமும் கடன் வாங்கியதில்லை. கொரியாவில் வாங்கும்படி ஆகிவிட்டது..தொங்யோங் வந்து சேர்ந்தவுடன் கதை முடியவில்லை. அங்கிருந்து ஒரு பஸ் எடுத்து கோஜே (ஜியோஜே என ஆங்கிலத்தில் எழுதுவர்) நகர் வந்து சேர்ந்தோம். பின் அங்கிருந்து ஒரு சிடி பஸ் பிடித்து ஜங்மோக் வந்து சேர்ந்தால் தென்கடலாய்வு மையம், அமைதியாக அழகாக என்னை வரவேற்றது. அப்பாடா! என என் அறையிலிருந்த படுக்கையில் வீழ்ந்தேன். கொரிய வரவேற்பு இதுவரை நான் கண்டவற்றிலிருந்து வேறுபட்டு இருந்தது. இவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது எனத் தெரியவில்லை. அந்த ஆய்வக வளாகம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தது. சீன வாஸ்துவான கீ வரையறுக்கும் கடல், மலை, சின்ன நீரோடை எனக் கச்சிதமாக இருந்தது. ஏதோ அமைதி என்னுள் குடிகொண்டது. இங்கேயே இருந்துவிட வேண்டும் என மனது சொன்னது..அடுத்த நாள் டாக்டர் ஜே என்னை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தி வைத்தார். எல்லோர் கண்களிலும் பரவசம். அங்கு வேலைக்கு வரும் முதல் அயலகர். ஜெர்மனிலிருந்து வரும் ஓர் இந்தியன். ஏற்றுக் கொண்டார்கள், மிக்க அன்போடு. எல்லோரும் பட்லர் இங்கிலீஷ் பேசினர். தமது ஆங்கிலப் பற்றாக்குறை உருவாக்கும் தாழ்வு மனப்பான்மையை ஈடு செய்ய நான் எள் என்றால் எண்ணெய் என்று உதவிக்கரம் நீட்டினர். டாக்டர் ஜே மிக வித்தியாசமான விஞ்ஞானி. அவர் விஞ்ஞானி போலவே நடந்து கொள்ள மாட்டார். அவரை எளிதாக ஒரு நிகழ்வமைப்பாளர் எனச் சொல்லிவிடலாம். எப்போதும் புன்னகை அல்லது வெடிச்சிரிப்பு. அவர் கோபப்பட்டோ, வருத்தப்பட்டோ நான் பார்த்ததே இல்லை. அவர்தான் எங்கள் ஆய்வகப் பிரிவின் தலைமை விஞ்ஞானி. அவருக்கு ஓர் கனவு இருந்தது. அவர் அப்போதுதான் ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் (இது ஐ.நா சபை போன்றது) கீழ் ஆசிய, பசிபிக் ரிங் நாடுகளின் மாணவர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு கடற்சூழலியல் சம்பந்தமாக பயிற்சியளிக்க ஒரு மையத்தை உருவாக்கி வைத்திருந்தார். அதை என்னால் நிர்வகிக்க முடியுமா? எனக் கேட்டார். இது பரிசோதனை நிலைய ஆய்வாளனான எனக்கு புதிய சவாலாக இருந்தது. எனக்குத்தான் சவால்கள் பிடிக்குமே! சரி என்று சொல்லிவிட்டேன். அது எனக்கொரு புதிய உலகைக் காட்டுமென அப்போது அறியவில்லை..கொரியாவின் ஆய்வகம் நான் ஜப்பானில், ஜெர்மனியில் பார்த்த ஆய்வகங்களுக்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் இருந்தது. ஜப்பானியர் போலவே கடினமாக உழைக்கும் மனோபாவத்தை இவர்களிடமும் கண்டேன். கன்பூசிய தத்துவம் அமைத்துக் கொடுத்த சமூகக் கட்டமைப்பு. பெரியோருக்குப் பணிதல், வேலையில் சிறப்பு, வாக்குத் தவறாமை, நாணயமாய் நடத்தல் எனக் கன்பூசிய சமூகம் கச்சிதமாக இருந்தது. அது ஜப்பானிய அமைப்பிலிருந்து வேறுபட்டு இருந்தது. கொரியர்களுக்கு ஆயிரம் முகங்கள் இருக்கவில்லை. பிடித்தால் பிடித்திருக்கிறது என்றனர். பிடிக்கவில்லையென்றால் அதைப் பண்போடு வெளிக்காட்டினர். போகப்போக நம்மவூர் குணங்கள் அவர்களிடம் அதிகம் இருப்பதைக் கண்ணுற்று அதிசயித்தேன்!.தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு "அப்பா" என அழைத்தது. நான் ஏதோ என் பெண் அழைக்கிறாள் என நினைத்துத் திரும்பினால் அதுவொரு கொரியப் பெண். தன் தந்தையை 'அப்பா' என நாம் அழைப்பது போல் அழைத்தது. ஆச்சர்யம்! நிகோங்கோ எனும் ஜப்பானிய மொழியில் தந்தையை 'ஒத்தோசான்' என அழைக்க வேண்டும். ஆனால், இவர்கள் 'அப்பா' என்கின்றனர். ஏதோ நெருங்கிய சம்பந்தம் இருப்பது புரிந்தது. அடுத்து அம்மாவை 'ஒம்மா' என்கின்றனர். ஆனால், பேசும்போது அது 'அம்மா' என்றுதான் ஒலிக்கப்படுகிறது. தமிழில் பயன்படும் இரட்டை கிளவியை அதிகம் பயன்படுத்துவதைக் கண்டேன். பல வகையில் மொழிப் பயன்பாடு தமிழை ஒத்தே இருந்தது. சரி, இவர்கள் இம்மொழியை எப்படி எழுதுகிறார்கள் எனப் பார்த்தால் அப்படியே நம் நெடுங்கணக்கு! உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களைத் தருகின்றன. என்ன தமிழில் இருப்பதுபோல் 247 எழுத்தில்லை. அங்கு 14 மெய், 10 உயிர் எனக்குறைந்து 140 எழுத்தாகக் குறைத்துவிட்டனர். நாம் எழுதுவது போல் உயிர்மெய்க்கென தனி எழுத்தில்லை. க்+அ=க எனில், க்அ என்றே எழுதும் வகை செய்து விட்டனர் 'ஹங்குல்' எனும் கொரிய எழுத்தில்..எனவே, கொரியா செல்லும் தமிழனுக்கு இவனது பண்பாடு அங்கிருப்பது ஒரு இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருவதை உணர்ந்தேன். இது தெலுங்கு, கன்னடா மக்களுக்கும் பொருந்தும். எனவேதான் நிறையத் தெலுங்கர்களும் தமிழர்களும் அங்கு விருப்போடு வாழ்வதைக் கண்டேன். பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பம் வழங்கும் ஐடி வேலைகள். அங்குள்ள பிரம்மாண்ட கப்பல் கட்டும் கம்பெனிகள் இந்தியர்களை வேலைக்கு வைத்து இருக்கின்றனர். கோஜே தீவு கப்பல் கட்டுமானத்திற்கு பெயர் பெற்ற தீவு. சாம்சுங், தேவு கம்பெனிகள்தான் கோஜே தீவின் ராஜாக்கள். ஒருவகையில், மெல்ல, மெல்ல கொரியா தமிழர்களுக்கு இன்னொரு அமீரகமாக உருவாகி வருவதைக் கண்டேன்!.(தொடரும்)
உலகக் குடிமகன் – 32 .நா.கண்ணன்.நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என நானறியேன். கொரியக் கடலாய்வு மையத்தின் தென்கடல் ஆய்வகம் என்னைத் தொடர்ந்திருக்கிறது என்பதை டாக்டர் ஓ ஜே ரியோ எனக்கு எழுதிய போதுதான் தெரிந்தது. அவர் என்னை வந்து ஜெர்மனியில் சந்தித்தார். தனது ஆய்வகத்தில் சேர முடியுமா? எனக் கேட்டார். அப்போது எனக்கு கிராக்கி அதிகம். ஆச்சர்யமாக அமெரிக்கா சிகாகோ நகர விமான நிலையத்தில் இறங்கி வெளியேறும் முன் குடியேற்ற அதிகாரி சொன்னார், ஏன் ஜெர்மனியிலிருந்து கொண்டு ஆய்வு செய்கிறாய், அமெரிக்கா வந்துவிடு! என்று..மதுரையிலிருந்து கொண்டு அமெரிக்கக் கனவு கண்டது இந்த அதிகாரிவரை தெரிந்திருக்கிறது. அப்படித்தான் ஐயா நானும் நினைத்தேன். ஆனால், விதி என்னை ஐரோப்பாவில் வைத்திருக்கிறது எனச் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டு, ஒய் நாட்? என்று நகர்ந்து விட்டேன். பத்து வருடங்கள் நான் அரசாங்க ஊழியனாக ஜெர்மனியில் வேலை பார்த்ததால் எனக்கு குடியுரிமை கிடைத்துவிட்டது. ஜெர்மன் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எல்லா நாடுகளுக்கும் எளிதாய் போய்வர முடிந்தது. அங்கு தொடர்ந்து பேராசிரியராக வேலை பார்க்க வேண்டுமெனில் ஹபிலிடேஷன் செய்ய வேண்டும். அது டாக்டர் ஆப் பிலாசபி போன்றது. நான் ஏற்கெனவே இரண்டு முனைவர் பட்டங்கள் வைத்திருக்கிறேன். மூன்றாவதாக இன்னொன்று செய்ய போர் அடித்தது. சரி கொரியா போய்விடலாமென முடிவெடுத்தேன்!.கொரியா பற்றி எனக்கேதும் எண்ணப்பதிவு கிடையாது. கொரியா பற்றி ஜப்பானியர் கொடுத்த அபிப்பிராயம்தான். அது அவர்களை முரடர்கள் என்று காட்டியது. கொரியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருக்கைகளெல்லாம் சின்னதாக இருந்தன. அருகிலிருந்தவர் நெருக்கிக் கொண்டிருந்தார். எனக்கு ஜப்பான் கொடுத்த பிம்பம் நினைவிற்கு வர, இவங்களெல்லாம் முரடர்கள் என நினைத்தேன். அந்த வகையில் ஜப்பானியர் எப்போதும் தமது பண்பான முகமே உலகிற்குத் தெரியும் வண்ணம் நடந்து கொள்வது நினைவிற்கு வந்தது. எனது நகர்வு பிழையுள்ளதோ எனச் சந்தேகம் வந்தது. நான் சோல் நகரில் (சியோல் எனச் சொல்லக்கூடாது) இறங்கி தொங்யோங் எனும் நகருக்கு பேருந்தில் வந்து விடுமாறும் அங்கு டாக்டர் ஓ ஜே ரியோங் என்னைச் சந்திப்பதாக ஏற்பாடு. தெற்கு முகமாகச் செல்லும் பேருந்து நிலையத்தில் இறங்கி டிக்கெட் எடுக்க வேண்டும். நான் தெனாவெட்டாக எனது விசா கார்டை வைத்து டிக்கெட் எடுத்துக் கொள்ளலாமென நீட்டினால், அவர்கள் கைக்காசாகக் கொடுங்கள் என்றனர். அங்கு எந்த ஏடிஎம் மெஷினும் வெளிநாட்டு கார்டை ஏற்றுக்கொண்டு பணம் தரவில்லை. வங்கியில் காசு இருக்கிறது, ஆனால் ஏழையாக ஏதோவொரு பஸ் ஸ்டாண்டில் நான் கையில் பெரிய, பெரிய சூட்கேசுடன். வேறு வழியில்லாமல் என் நிலையை அதே ஊருக்குச் செல்லும் சக பிராணியிடம் சொல்லி எனக்கொரு டிக்கெட் போடுங்கள் தொங்யோங் வந்தவுடன் நண்பரிடம் கேட்டு வாங்கித் தந்து விடுகிறேன் என்று கெஞ்சிக் கூத்தாடி பயணப்பட்டேன். வாழ்வில் நான் யாரிடமும் கடன் வாங்கியதில்லை. கொரியாவில் வாங்கும்படி ஆகிவிட்டது..தொங்யோங் வந்து சேர்ந்தவுடன் கதை முடியவில்லை. அங்கிருந்து ஒரு பஸ் எடுத்து கோஜே (ஜியோஜே என ஆங்கிலத்தில் எழுதுவர்) நகர் வந்து சேர்ந்தோம். பின் அங்கிருந்து ஒரு சிடி பஸ் பிடித்து ஜங்மோக் வந்து சேர்ந்தால் தென்கடலாய்வு மையம், அமைதியாக அழகாக என்னை வரவேற்றது. அப்பாடா! என என் அறையிலிருந்த படுக்கையில் வீழ்ந்தேன். கொரிய வரவேற்பு இதுவரை நான் கண்டவற்றிலிருந்து வேறுபட்டு இருந்தது. இவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது எனத் தெரியவில்லை. அந்த ஆய்வக வளாகம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தது. சீன வாஸ்துவான கீ வரையறுக்கும் கடல், மலை, சின்ன நீரோடை எனக் கச்சிதமாக இருந்தது. ஏதோ அமைதி என்னுள் குடிகொண்டது. இங்கேயே இருந்துவிட வேண்டும் என மனது சொன்னது..அடுத்த நாள் டாக்டர் ஜே என்னை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தி வைத்தார். எல்லோர் கண்களிலும் பரவசம். அங்கு வேலைக்கு வரும் முதல் அயலகர். ஜெர்மனிலிருந்து வரும் ஓர் இந்தியன். ஏற்றுக் கொண்டார்கள், மிக்க அன்போடு. எல்லோரும் பட்லர் இங்கிலீஷ் பேசினர். தமது ஆங்கிலப் பற்றாக்குறை உருவாக்கும் தாழ்வு மனப்பான்மையை ஈடு செய்ய நான் எள் என்றால் எண்ணெய் என்று உதவிக்கரம் நீட்டினர். டாக்டர் ஜே மிக வித்தியாசமான விஞ்ஞானி. அவர் விஞ்ஞானி போலவே நடந்து கொள்ள மாட்டார். அவரை எளிதாக ஒரு நிகழ்வமைப்பாளர் எனச் சொல்லிவிடலாம். எப்போதும் புன்னகை அல்லது வெடிச்சிரிப்பு. அவர் கோபப்பட்டோ, வருத்தப்பட்டோ நான் பார்த்ததே இல்லை. அவர்தான் எங்கள் ஆய்வகப் பிரிவின் தலைமை விஞ்ஞானி. அவருக்கு ஓர் கனவு இருந்தது. அவர் அப்போதுதான் ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் (இது ஐ.நா சபை போன்றது) கீழ் ஆசிய, பசிபிக் ரிங் நாடுகளின் மாணவர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு கடற்சூழலியல் சம்பந்தமாக பயிற்சியளிக்க ஒரு மையத்தை உருவாக்கி வைத்திருந்தார். அதை என்னால் நிர்வகிக்க முடியுமா? எனக் கேட்டார். இது பரிசோதனை நிலைய ஆய்வாளனான எனக்கு புதிய சவாலாக இருந்தது. எனக்குத்தான் சவால்கள் பிடிக்குமே! சரி என்று சொல்லிவிட்டேன். அது எனக்கொரு புதிய உலகைக் காட்டுமென அப்போது அறியவில்லை..கொரியாவின் ஆய்வகம் நான் ஜப்பானில், ஜெர்மனியில் பார்த்த ஆய்வகங்களுக்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் இருந்தது. ஜப்பானியர் போலவே கடினமாக உழைக்கும் மனோபாவத்தை இவர்களிடமும் கண்டேன். கன்பூசிய தத்துவம் அமைத்துக் கொடுத்த சமூகக் கட்டமைப்பு. பெரியோருக்குப் பணிதல், வேலையில் சிறப்பு, வாக்குத் தவறாமை, நாணயமாய் நடத்தல் எனக் கன்பூசிய சமூகம் கச்சிதமாக இருந்தது. அது ஜப்பானிய அமைப்பிலிருந்து வேறுபட்டு இருந்தது. கொரியர்களுக்கு ஆயிரம் முகங்கள் இருக்கவில்லை. பிடித்தால் பிடித்திருக்கிறது என்றனர். பிடிக்கவில்லையென்றால் அதைப் பண்போடு வெளிக்காட்டினர். போகப்போக நம்மவூர் குணங்கள் அவர்களிடம் அதிகம் இருப்பதைக் கண்ணுற்று அதிசயித்தேன்!.தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு "அப்பா" என அழைத்தது. நான் ஏதோ என் பெண் அழைக்கிறாள் என நினைத்துத் திரும்பினால் அதுவொரு கொரியப் பெண். தன் தந்தையை 'அப்பா' என நாம் அழைப்பது போல் அழைத்தது. ஆச்சர்யம்! நிகோங்கோ எனும் ஜப்பானிய மொழியில் தந்தையை 'ஒத்தோசான்' என அழைக்க வேண்டும். ஆனால், இவர்கள் 'அப்பா' என்கின்றனர். ஏதோ நெருங்கிய சம்பந்தம் இருப்பது புரிந்தது. அடுத்து அம்மாவை 'ஒம்மா' என்கின்றனர். ஆனால், பேசும்போது அது 'அம்மா' என்றுதான் ஒலிக்கப்படுகிறது. தமிழில் பயன்படும் இரட்டை கிளவியை அதிகம் பயன்படுத்துவதைக் கண்டேன். பல வகையில் மொழிப் பயன்பாடு தமிழை ஒத்தே இருந்தது. சரி, இவர்கள் இம்மொழியை எப்படி எழுதுகிறார்கள் எனப் பார்த்தால் அப்படியே நம் நெடுங்கணக்கு! உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களைத் தருகின்றன. என்ன தமிழில் இருப்பதுபோல் 247 எழுத்தில்லை. அங்கு 14 மெய், 10 உயிர் எனக்குறைந்து 140 எழுத்தாகக் குறைத்துவிட்டனர். நாம் எழுதுவது போல் உயிர்மெய்க்கென தனி எழுத்தில்லை. க்+அ=க எனில், க்அ என்றே எழுதும் வகை செய்து விட்டனர் 'ஹங்குல்' எனும் கொரிய எழுத்தில்..எனவே, கொரியா செல்லும் தமிழனுக்கு இவனது பண்பாடு அங்கிருப்பது ஒரு இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருவதை உணர்ந்தேன். இது தெலுங்கு, கன்னடா மக்களுக்கும் பொருந்தும். எனவேதான் நிறையத் தெலுங்கர்களும் தமிழர்களும் அங்கு விருப்போடு வாழ்வதைக் கண்டேன். பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பம் வழங்கும் ஐடி வேலைகள். அங்குள்ள பிரம்மாண்ட கப்பல் கட்டும் கம்பெனிகள் இந்தியர்களை வேலைக்கு வைத்து இருக்கின்றனர். கோஜே தீவு கப்பல் கட்டுமானத்திற்கு பெயர் பெற்ற தீவு. சாம்சுங், தேவு கம்பெனிகள்தான் கோஜே தீவின் ராஜாக்கள். ஒருவகையில், மெல்ல, மெல்ல கொரியா தமிழர்களுக்கு இன்னொரு அமீரகமாக உருவாகி வருவதைக் கண்டேன்!.(தொடரும்)