"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசறதுன்னா என்னன்னு தெரியுமா சார்?"."என்னன்னு சொல்லுங்க சார்…?"."உள் பாக்கெட்ல பணத்தை வச்சுக்கிட்டு, யாராவது கடன் கேட்டாபத்து பைசா கூட இல்லன்னு சொல்றதுதான் சார்…!".– வி. ரேவதி, தஞ்சை.போலிஸ்: "தொடர்ந்து இரவு நேரத்திலேயே திருடி இருக்கியே ஏன்?"."பகலில் வெளியே போக முடியலை சார்! வெயில் ரொம்ப ஜாஸ்தியாயிட்டது!!".– கீழை அ.கதிர்வேல்.."ஆபரேஷனை நினைச்சா உடம்பே நடுங்குது டாக்டர்?"."பயப்படாதீங்க, உடல் நடுக்கத்துக்கு தனியா ட்ரீட்மெண்ட் பண்ணிடறேன்!".– வி. ரேவதி, தஞ்சை."தமிழ் ஆசிரியர் உன்னை ஏண்டா அப்படி அடிச்சார்?"."இரட்டைக்கிளவிக்கு உதாரணம் கேட்டார். இரண்டு ஔவையார்கள் என்று சொன்னேன்!".– கீழை அ.கதிர்வேல்."எவ்வளவு நாள் தங்கலாம்னு இருக்கீங்க…?"."ஏன்… நீங்க எங்கேயாவது வெளியூர் பிளான் வச்சிருக்கீங்களா?"."உங்க பதிலை வச்சுதான் அதை முடிவு பண்ணணும்…!".– வி. ரேவதி, தஞ்சை."சுண்டல்காரன் உன் கன்னத்தில் ஓங்கி அறைஞ்சிட்டானாமே!"."நானும் சும்மா விடல… சுண்டல் பாக்கிக்கு சரியாப் போச்சுப்பான்னு சொல்லிட்டேன் டார்லிங்!".-பி.ஜி.பி.இசக்கி , சென்னை
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசறதுன்னா என்னன்னு தெரியுமா சார்?"."என்னன்னு சொல்லுங்க சார்…?"."உள் பாக்கெட்ல பணத்தை வச்சுக்கிட்டு, யாராவது கடன் கேட்டாபத்து பைசா கூட இல்லன்னு சொல்றதுதான் சார்…!".– வி. ரேவதி, தஞ்சை.போலிஸ்: "தொடர்ந்து இரவு நேரத்திலேயே திருடி இருக்கியே ஏன்?"."பகலில் வெளியே போக முடியலை சார்! வெயில் ரொம்ப ஜாஸ்தியாயிட்டது!!".– கீழை அ.கதிர்வேல்.."ஆபரேஷனை நினைச்சா உடம்பே நடுங்குது டாக்டர்?"."பயப்படாதீங்க, உடல் நடுக்கத்துக்கு தனியா ட்ரீட்மெண்ட் பண்ணிடறேன்!".– வி. ரேவதி, தஞ்சை."தமிழ் ஆசிரியர் உன்னை ஏண்டா அப்படி அடிச்சார்?"."இரட்டைக்கிளவிக்கு உதாரணம் கேட்டார். இரண்டு ஔவையார்கள் என்று சொன்னேன்!".– கீழை அ.கதிர்வேல்."எவ்வளவு நாள் தங்கலாம்னு இருக்கீங்க…?"."ஏன்… நீங்க எங்கேயாவது வெளியூர் பிளான் வச்சிருக்கீங்களா?"."உங்க பதிலை வச்சுதான் அதை முடிவு பண்ணணும்…!".– வி. ரேவதி, தஞ்சை."சுண்டல்காரன் உன் கன்னத்தில் ஓங்கி அறைஞ்சிட்டானாமே!"."நானும் சும்மா விடல… சுண்டல் பாக்கிக்கு சரியாப் போச்சுப்பான்னு சொல்லிட்டேன் டார்லிங்!".-பி.ஜி.பி.இசக்கி , சென்னை