உலகக் குடிமகன் – 16.– நா.கண்ணன்.நான் ஆய்வு செய்ய ஆரம்பித்த காலக்கட்டம் மிக முக்கியமானது. விலங்கியல், தாவரவியல் என்ற பழைய கணக்கெல்லாம் மறைந்து அனைத்து ஆய்வும் செல்லுலார் உயிரியல், மூலக்கூறு உயிரியல், உயிர் வேதியியல் என நிலைபெறும் காலம். அமெரிக்க உயிரியல் விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனும் பிரித்தானிய பூதவியலாளர் பிரான்சிஸ் கிரிக்கும் முதன் முதலாக டி.என்.ஏ எனும் மரபணுவின் தன்மையை விளக்கி நோபல் பரிசு பெற்றதுதான் இத்தனை மாற்றத்திற்கும் காரணம். 1860ல் சுவிஸ் விஞ்ஞானி பிரடெரிக் மிஷ்ஷர் என்பவர் டி.என்.ஏ வின் இருப்பைச் சொன்னாலும், 1953 ல் வாட்சனும் கிரிக்கும் அதை முழுவதுமாக விளக்கிய போதுதான் அந்த மடை மாற்றம் நிகழ்ந்தது..அதே போல் என்னைக் கவர்ந்த சூழலியல் பற்றிய பிரக்ஞை அமெரிக்க மீன் வளத்துறை அலுவலர் ரேச்சல் கார்சன் எழுதி 1962ல் வெளிவந்த "மௌனிக்கப்பட்ட இளவேனில்" எனும் நூலின் மூலமாகவே நிகழ்கிறது. 'பசுமைப் புரட்சி' என்ற பெயரில் உலகமெங்கும் செயற்கை உயிர்க் கொல்லிகள் நிரம்ப வயல் வெளிகளில், தோட்டங்களில், காடுகளில் தெளிக்கப்பட்டன. பூச்சி கொல்லிகளின் விளைவுகள் என்னவென்று அறியாமலே டி.டி.டி போன்ற வேதிமங்கள் இராணுவ வீரர்களின் தலையில் தூவப்பட்டது. பேன், பிற பூச்சிகள் காடுகளில் அலையும் சிப்பாய்களை தொந்தரவு செய்யாமல் இருக்க உடல் முழுவதும் டி.டி.டி தூவப்பட்டது. நான் இளங்கலை ஆய்வாக கரப்பான் பூச்சியை டி.டி.டி எப்படி கொல்கிறது என்றுதான் ஆராய்ந்தேன். நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இப்பூச்சி கொல்லி, தெளிக்கப்பட்ட சில நிமிடங்களில் கரப்பான் பூச்சியை வலுப்பு வரச் செய்து துடி துடிக்கக் கொல்வதைக் கண்ணாறக் கண்டுள்ளேன். ஆனால் ஐரோப்பாவில் இதை இராணுவ வீரர்களின் உடல் முழுவதும் தூவினார்கள் என்றால் அதன் பின் விளைவுகள் எப்படி இருந்திருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. இந்த ஆய்வை ஏன் தொடங்கினேன் என அப்போது தெரியவில்லை..ஆனால், இதைவிடக் கொடிய விஷமான 'டைஆக்சின்' எனும் வேதிமம் கலந்த ஏஜெண்ட் ஆரஞ்சு எனும் களைக்கொல்லி வியட்நாம் போரில் தெளிக்கப்பட்ட போது காடுகள் அழிந்தன. ஆனால் இம்மருந்து பட்ட வியட்நாமியர் பல தலைமுறைகளுக்கு உடல் குறைபாடுகளோடு வாழும் நிலை ஏற்பட்டது. நான் ஜப்பானில் செய்த ஆய்வின் முக்கிய ஆய்வு பொருளாக இவ்வேதிமங்கள் அமைந்தது, வெறும் தற்செயல் எனத் தோன்றவில்லை. ஆச்சர்யமான வகையில் இவ்வேதிமங்களின் தாக்கம் உயிர் மரபணு மீது அமைந்ததால்தான் பல தலைமுறைகளுக்கு கை, கால் ஊனமுற்று வியட்நாமியர் அவதிப்பட வேண்டியதாயிற்று. நான் பின்னால் வியட்நாமில் நடந்த சூழலியல் மாநாட்டில் பேசியபோது நேரடியாக இம்மகளைக் கண்ணுற்றேன். அமெரிக்காவின் இக்கொடுஞ்செயல் சகிக்காது அமெரிக்காவை விட்டு கனடா சென்ற விஞ்ஞானிகளுண்டு..பின்னோக்கிப் பார்க்கும் போது பள்ளிப் பருவத்திலிருந்து மாற்றமெனும் அலையில் நான் தொடர்ந்து பயணித்து இருப்பது தெரிகிறது. எனவேதான் நான் ஜப்பானில் செய்த ஆய்வு உலக அளவில் பெரிதும் கவனிக்கப்பட்டது. சர்.சி.வி இராமன் செய்த ஆய்வு இந்தியாவின், உலகின் கவனத்தைப் பெற்றது ஆனால் நான் செய்த ஆய்வு எங்கள் உலகத்தோடு நின்றுவிட்டது. இன்றும்தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், வேதிமச் சூழலியல் என்பது மிக முக்கியமான துறை என்று. சர்.சி.வி இராமனின் ஆய்வு பூதவியல் சார்ந்தது. டி.என்.ஏ எனும் கண்டுபிடிப்பு நிகழும் வரை உலகின் கவனம், நோபல் பரிசுகள் பூதவியலுக்கே சென்று கொண்டிருந்தன. பின் உயிர் வேதியியலுக்கு மாறியது. ஆயினும் சூழலியலின் முக்கியத்துவம் இன்னும் தீவிரமாக கவனிக்கப்படவில்லை..மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பார்வதி தேவி எனது ஜெர்மானிய ஆய்வகத்திற்கு வந்தார்கள். நான் நோபல் பரிசு பெற வேண்டுமென வாழ்த்தினார்கள். ஆனால், இன்றுவரை இத்துறை சார்ந்த எவருக்கும் நோபல் பரிசு செல்லவில்லை. உண்மையில் கடந்த 50 வருடங்களில் நாம் உலகிற்குச் செய்திருக்கும் தீமைகளைக் கணக்கிட்டால் இத்துறை மீதுதான் அனைத்து கவனமும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மனிதனின் அசட்டைக்கு ஓர் அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது..ஐன்ஸ்டைனுக்குப் பிறகு உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். அவர் சாகும் முன் சில அறிவியல் ஆரூடங்கள் சொன்னார். அதிலொன்று மனித இனம் இன்னும் ஆயிரம் வருடங்களில் அழிந்துவிடும் என்பது. பூமியின் வளங்களை ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு மொட்டை அடிக்கின்றன. வளங்கற்ற பூமி மனிதனைத் தக்கவைக்காது என்பது அவர் கணக்கு. அமெரிக்க முதல்வர் டொனால்ட் டிரம்ப் வந்து ஏடாகூடமான அரசியல் செய்த போது ஸ்டீபன் மனித இனம் நூறு வருடங்கள் கூடத் தாங்காது என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்..தொலைநோக்கற்ற சமகால அரசியல், பொருளாதாரப் பின்னடைவுகள், சூழலியல் கேடுகள் இவைகளை நோக்குறும்போது மனித இனம் இன்னும் நூறு வருடங்கள் இம்மண்ணில் வாழாது என்பது அவர் கணிப்பு. உலகின் தலைசிறந்த ஓர் விஞ்ஞானி இப்படிச் சொல்கிறாரே, என உலகு விழித்துக் கொள்ள வேண்டாமோ? ஆனால் அது இன்னும் அசட்டை செய்கிறது. சமீபத்திய ஒரு கருத்தரங்கில் இந்திய வானியல் துறை சார்ந்த ஓர் உயர் அதிகாரியிடம் இந்த ஆரூடம் பற்றிப் பேசினேன். அவர் அசட்டையாகச் சொன்னார், அவர் ஏதோ சொன்னார், சொல்லிவிட்டுப் போய் விட்டார். நாம் அதற்குள் மாற்றுக் கிரகத்திற்குப் போய் விடுவோமென்று. மாற்றுக் கிரகத்திற்கு குடி பெயர்வது என்பது அவ்வளவு எளிதான காரியமா? உலகம் முழுவதையும் யார் கூட்டிக்கொண்டு போவார்கள்? இது எப்படி அடுத்த நூறு வருடத்திற்குள் நடக்கும்? கையிலிருக்கும் ஒரு பறவை மரக்கிளையிலிருக்கும் இரண்டு பறவைகளைவிட உசத்தி என்றொரு பழமொழி உண்டு. நம் கையில் ஓர் வளமான பூமி இருக்கிறது. அது வளச் சுழற்சி முறையில் உயிரை இத்தனை நாள் தக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த 50 வருடங்களில் மனிதன் உலகின் 60% பல்லின வளத்தைச் சூறையாடிவிட்டான். இனிமேல் வன விலங்குகளை வண்டலூர் காட்சியகத்தில்தான் காணலாம்!.இவையெல்லாம் எனக்கு 70களிலேயே காட்சிப்பட்டன. இல்லையெனில் கல்லூரி வகுப்பை 'கட்' செய்துவிட்டு நூலகத்திலிருந்து எடுத்து வந்த சூழலியல் நூல்களை நான் படிப்பானேன்? ஆனால், எனது ஆர்வத்திற்கான சரியான ஆய்வகம் எனக்குக் கிடைக்கவில்லை. உயிரியல் பள்ளியில் யாருக்கும் இத்துறை சார் அறிவோ ஆர்வமோ இல்லை. பூச்சிகொல்லிகளை விற்கும் கம்பெனிகள் அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டு நிர்பந்தத்திற்காக அவை பற்றி ஆராய எங்கள் ஆய்வகம் வந்தனர். அவர்களுக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்து தந்தால் நிதி உதவி செய்வதாகச் சொன்னார்கள். ஜெ.ஜெவிற்கு இந்த வருமானத்தை இழக்க விருப்பமில்லை. எனவே, எனக்கு நானூறு ரூபாய் உதவிப் பணமாகக் கொடுத்துவிட்டு மீதத்தை உயிர் வேதியியல் ஆய்விற்குப் பயன்படுத்திக் கொண்டார். அதே காலத்தில் மத்திய அரசின் உதவிப் பணம் ஆயிரத்து ஐநூறுக்கு மேல் வழங்கப்பட்டது. எனக்கும் வேறு வழியில்லை..பூச்சிகொல்லி கம்பெனிகள் அவர்களது பூச்சி கொல்லிகளை வயல் வெளிகளில் தெளித்துவிட்டு சாம்பிளோடு என்னிடம் வருவார்கள். தெளித்த நாளிலிருந்து கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு எத்தனை நாட்களில் அவை மறைகின்றன என நான் கண்டு சொல்லவேண்டும். இதைச் சொல்வதற்கான உபகரணங்கள் அங்கு ஏதுமில்லை. அங்கு என்ன இருக்கிறதோ அதை வைத்து நான் கண்டு சொன்னேன். எனக்கு உதவித்தொகை வழங்கியது பாயர் கம்பெனி. அதுவொரு ஜெர்மன் கம்பெனி. அவர்களது வேதியியல் அணுகுமுறைகளை நான் பின் பற்றினேன். ஆயினும், தேவையான உபகரணங்கள் இல்லை. எனவே, மும்பையிலிருக்கும் அவர்கள் ஆய்வகத்திற்குச் சென்று பார்வையிட்டேன். முதன் முறையாக ஒரு ஜெர்மன் ஆய்வகத்தைக் காண்கிறேன். அதன் சுத்தம், ஒழுங்குமுறை என்னை மிகவும் கவர்ந்தது. நான் "ஜெர்மனி செல்வேன்" என்று கனவில்கூட அப்போது நினைக்கவில்லை. அந்த ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி ஒரு ஜெர்மானியர். அவருக்கு மதுரையிலிருந்து ஒரு ஆய்வு மாணவன் அவர்கள் வேதிமங்களில் ஆய்வு செய்கிறான் என்றறிந்தவுடன் மிகவும் அன்பாக என்னைக் கவனித்துக் கொண்டார். அவரோடு மதிய உணவை நான் உண்டேன்..அப்போது அவர் ஜெர்மன் வாழ்வு பற்றி என்னிடம் நிறையச் சொன்னார். நான் அவரிடம் கேட்டேன், "எப்படி நீங்கள் இந்த வெயிலைத் தாங்குகிறீர்கள்" என்று? அவர் அலுப்போடு சொன்னார், ஜெர்மன் கோடையில் இரண்டு டிகிரி ஏறி விட்டால்கூட எல்லோரும் வீட்டிற்குப் போய் படுத்துவிடுவர் என்று. மும்பையில்கூட மதிய உணவிற்குப் பின் ஆய்வின் வேகம் குறைகிறது எனும் உண்மையை சுட்டிக்காட்டினார். மும்பையில் ஒரு வாரம் இருந்துவிட்டு மதுரை திரும்பினேன். ஏதோ வெளிநாடு போய்விட்டு வந்த மாதிரி இருந்தது. உயிரியல் பள்ளியில் எல்லோரும் ஓர் அமெரிக்கக் கனவுடனே உலாவிக் கொண்டிருந்தனர். ஆனால், அவ்வாய்ப்பு சட்டென யாருக்கும் கிடைக்கவில்லை. வெளிநாட்டிற்கு எந்த மாணவரும் பயணமும் செய்ததில்லை. விமானத்தைக் கண்டதில்லை. முதன் முதலில் எங்கள் ஆய்வகத்திலிருந்து சோமசுந்தரம் சென்று வந்தான். எனக்கு அவன் சீனியர் என்றாலும் அப்படிப் பழகமாட்டான். எனக்கு ரொம்ப நெருக்கம். அவன் ஒரு கருத்தரங்கில் பங்குகொள்ள சுவிட்சர்லாந்து போய் வந்தான். அவன் தன் அயலக அனுபவம் பற்றிச் சொன்னதிலேயே என் ஆர்வத்தைத் தூண்டியது, அங்கு எவ்வாறு சந்திரனும் சூரியனும் வானில் நேர் வட்டப்பார்வையில் செல்லாமல், சாய்ந்து பயணிக்கிறது எனும் உண்மைதான். எனக்கு உச்சி வெயில் என்றால் கடிகாரத்தில் 12 மணி போல் நடு வானில் நிற்கும் என்பதுதான் புரிதல். ஆனால் சூரியன் எப்படி வானில் சாய்ந்து பயணிக்கும் என எனக்குப் புரியவில்லை, பின்னால் நான் ஜெர்மனியில் வாழும் போது இரவு 10:30 வரை சூரியன் மறையாமல் அந்தி சாய்வதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அது எவ்வளவு தூரம் சாய்ந்து பயணிக்கிறது எனில் பனிக்காலத்தில் மாலை மூணரை மணிக்கே அஸ்தமனமாகிவிடும். கோடையில் பகற்பொழுது அதிகம். பனிக்காலத்தில் அது மிகக்குறைவு. காலையில் அலுவலகம் செல்லும் போது சூரியன் கண்ணில் படாது, திரும்ப வீடு வரும் போதும் இருக்காது. வெட்ட வெளிச்சத்தில் வாழ்ந்த எனக்கு அது புதுமையாய் இருந்தது..எப்போது வெளிநாடு செல்வோம்? என மாணவர்கள் தங்களுக்குள் கை ரேகை பார்ப்போம். முன்னால் போன மாணவர்களின் ரேகையில் சில அதிசயமான பதிவுகள் இருப்பதாக ஒரு கதையுண்டு. அதே ரேகை நமக்கும் உண்டா என்பதே எங்கள் கேள்வி. அயலகம் செல்லும் வெறியில் ஹபீப் ஒருமுறை "ரேகை இல்லையெனில் கையைக் கிழித்தாவது அதை உருவாக்குவோம்" என்பதுதான்! அயலகம் அவ்வளவு ஈர்த்தது எங்களை!.(தொடரும்)
உலகக் குடிமகன் – 16.– நா.கண்ணன்.நான் ஆய்வு செய்ய ஆரம்பித்த காலக்கட்டம் மிக முக்கியமானது. விலங்கியல், தாவரவியல் என்ற பழைய கணக்கெல்லாம் மறைந்து அனைத்து ஆய்வும் செல்லுலார் உயிரியல், மூலக்கூறு உயிரியல், உயிர் வேதியியல் என நிலைபெறும் காலம். அமெரிக்க உயிரியல் விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனும் பிரித்தானிய பூதவியலாளர் பிரான்சிஸ் கிரிக்கும் முதன் முதலாக டி.என்.ஏ எனும் மரபணுவின் தன்மையை விளக்கி நோபல் பரிசு பெற்றதுதான் இத்தனை மாற்றத்திற்கும் காரணம். 1860ல் சுவிஸ் விஞ்ஞானி பிரடெரிக் மிஷ்ஷர் என்பவர் டி.என்.ஏ வின் இருப்பைச் சொன்னாலும், 1953 ல் வாட்சனும் கிரிக்கும் அதை முழுவதுமாக விளக்கிய போதுதான் அந்த மடை மாற்றம் நிகழ்ந்தது..அதே போல் என்னைக் கவர்ந்த சூழலியல் பற்றிய பிரக்ஞை அமெரிக்க மீன் வளத்துறை அலுவலர் ரேச்சல் கார்சன் எழுதி 1962ல் வெளிவந்த "மௌனிக்கப்பட்ட இளவேனில்" எனும் நூலின் மூலமாகவே நிகழ்கிறது. 'பசுமைப் புரட்சி' என்ற பெயரில் உலகமெங்கும் செயற்கை உயிர்க் கொல்லிகள் நிரம்ப வயல் வெளிகளில், தோட்டங்களில், காடுகளில் தெளிக்கப்பட்டன. பூச்சி கொல்லிகளின் விளைவுகள் என்னவென்று அறியாமலே டி.டி.டி போன்ற வேதிமங்கள் இராணுவ வீரர்களின் தலையில் தூவப்பட்டது. பேன், பிற பூச்சிகள் காடுகளில் அலையும் சிப்பாய்களை தொந்தரவு செய்யாமல் இருக்க உடல் முழுவதும் டி.டி.டி தூவப்பட்டது. நான் இளங்கலை ஆய்வாக கரப்பான் பூச்சியை டி.டி.டி எப்படி கொல்கிறது என்றுதான் ஆராய்ந்தேன். நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இப்பூச்சி கொல்லி, தெளிக்கப்பட்ட சில நிமிடங்களில் கரப்பான் பூச்சியை வலுப்பு வரச் செய்து துடி துடிக்கக் கொல்வதைக் கண்ணாறக் கண்டுள்ளேன். ஆனால் ஐரோப்பாவில் இதை இராணுவ வீரர்களின் உடல் முழுவதும் தூவினார்கள் என்றால் அதன் பின் விளைவுகள் எப்படி இருந்திருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. இந்த ஆய்வை ஏன் தொடங்கினேன் என அப்போது தெரியவில்லை..ஆனால், இதைவிடக் கொடிய விஷமான 'டைஆக்சின்' எனும் வேதிமம் கலந்த ஏஜெண்ட் ஆரஞ்சு எனும் களைக்கொல்லி வியட்நாம் போரில் தெளிக்கப்பட்ட போது காடுகள் அழிந்தன. ஆனால் இம்மருந்து பட்ட வியட்நாமியர் பல தலைமுறைகளுக்கு உடல் குறைபாடுகளோடு வாழும் நிலை ஏற்பட்டது. நான் ஜப்பானில் செய்த ஆய்வின் முக்கிய ஆய்வு பொருளாக இவ்வேதிமங்கள் அமைந்தது, வெறும் தற்செயல் எனத் தோன்றவில்லை. ஆச்சர்யமான வகையில் இவ்வேதிமங்களின் தாக்கம் உயிர் மரபணு மீது அமைந்ததால்தான் பல தலைமுறைகளுக்கு கை, கால் ஊனமுற்று வியட்நாமியர் அவதிப்பட வேண்டியதாயிற்று. நான் பின்னால் வியட்நாமில் நடந்த சூழலியல் மாநாட்டில் பேசியபோது நேரடியாக இம்மகளைக் கண்ணுற்றேன். அமெரிக்காவின் இக்கொடுஞ்செயல் சகிக்காது அமெரிக்காவை விட்டு கனடா சென்ற விஞ்ஞானிகளுண்டு..பின்னோக்கிப் பார்க்கும் போது பள்ளிப் பருவத்திலிருந்து மாற்றமெனும் அலையில் நான் தொடர்ந்து பயணித்து இருப்பது தெரிகிறது. எனவேதான் நான் ஜப்பானில் செய்த ஆய்வு உலக அளவில் பெரிதும் கவனிக்கப்பட்டது. சர்.சி.வி இராமன் செய்த ஆய்வு இந்தியாவின், உலகின் கவனத்தைப் பெற்றது ஆனால் நான் செய்த ஆய்வு எங்கள் உலகத்தோடு நின்றுவிட்டது. இன்றும்தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், வேதிமச் சூழலியல் என்பது மிக முக்கியமான துறை என்று. சர்.சி.வி இராமனின் ஆய்வு பூதவியல் சார்ந்தது. டி.என்.ஏ எனும் கண்டுபிடிப்பு நிகழும் வரை உலகின் கவனம், நோபல் பரிசுகள் பூதவியலுக்கே சென்று கொண்டிருந்தன. பின் உயிர் வேதியியலுக்கு மாறியது. ஆயினும் சூழலியலின் முக்கியத்துவம் இன்னும் தீவிரமாக கவனிக்கப்படவில்லை..மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பார்வதி தேவி எனது ஜெர்மானிய ஆய்வகத்திற்கு வந்தார்கள். நான் நோபல் பரிசு பெற வேண்டுமென வாழ்த்தினார்கள். ஆனால், இன்றுவரை இத்துறை சார்ந்த எவருக்கும் நோபல் பரிசு செல்லவில்லை. உண்மையில் கடந்த 50 வருடங்களில் நாம் உலகிற்குச் செய்திருக்கும் தீமைகளைக் கணக்கிட்டால் இத்துறை மீதுதான் அனைத்து கவனமும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மனிதனின் அசட்டைக்கு ஓர் அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது..ஐன்ஸ்டைனுக்குப் பிறகு உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். அவர் சாகும் முன் சில அறிவியல் ஆரூடங்கள் சொன்னார். அதிலொன்று மனித இனம் இன்னும் ஆயிரம் வருடங்களில் அழிந்துவிடும் என்பது. பூமியின் வளங்களை ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு மொட்டை அடிக்கின்றன. வளங்கற்ற பூமி மனிதனைத் தக்கவைக்காது என்பது அவர் கணக்கு. அமெரிக்க முதல்வர் டொனால்ட் டிரம்ப் வந்து ஏடாகூடமான அரசியல் செய்த போது ஸ்டீபன் மனித இனம் நூறு வருடங்கள் கூடத் தாங்காது என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்..தொலைநோக்கற்ற சமகால அரசியல், பொருளாதாரப் பின்னடைவுகள், சூழலியல் கேடுகள் இவைகளை நோக்குறும்போது மனித இனம் இன்னும் நூறு வருடங்கள் இம்மண்ணில் வாழாது என்பது அவர் கணிப்பு. உலகின் தலைசிறந்த ஓர் விஞ்ஞானி இப்படிச் சொல்கிறாரே, என உலகு விழித்துக் கொள்ள வேண்டாமோ? ஆனால் அது இன்னும் அசட்டை செய்கிறது. சமீபத்திய ஒரு கருத்தரங்கில் இந்திய வானியல் துறை சார்ந்த ஓர் உயர் அதிகாரியிடம் இந்த ஆரூடம் பற்றிப் பேசினேன். அவர் அசட்டையாகச் சொன்னார், அவர் ஏதோ சொன்னார், சொல்லிவிட்டுப் போய் விட்டார். நாம் அதற்குள் மாற்றுக் கிரகத்திற்குப் போய் விடுவோமென்று. மாற்றுக் கிரகத்திற்கு குடி பெயர்வது என்பது அவ்வளவு எளிதான காரியமா? உலகம் முழுவதையும் யார் கூட்டிக்கொண்டு போவார்கள்? இது எப்படி அடுத்த நூறு வருடத்திற்குள் நடக்கும்? கையிலிருக்கும் ஒரு பறவை மரக்கிளையிலிருக்கும் இரண்டு பறவைகளைவிட உசத்தி என்றொரு பழமொழி உண்டு. நம் கையில் ஓர் வளமான பூமி இருக்கிறது. அது வளச் சுழற்சி முறையில் உயிரை இத்தனை நாள் தக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த 50 வருடங்களில் மனிதன் உலகின் 60% பல்லின வளத்தைச் சூறையாடிவிட்டான். இனிமேல் வன விலங்குகளை வண்டலூர் காட்சியகத்தில்தான் காணலாம்!.இவையெல்லாம் எனக்கு 70களிலேயே காட்சிப்பட்டன. இல்லையெனில் கல்லூரி வகுப்பை 'கட்' செய்துவிட்டு நூலகத்திலிருந்து எடுத்து வந்த சூழலியல் நூல்களை நான் படிப்பானேன்? ஆனால், எனது ஆர்வத்திற்கான சரியான ஆய்வகம் எனக்குக் கிடைக்கவில்லை. உயிரியல் பள்ளியில் யாருக்கும் இத்துறை சார் அறிவோ ஆர்வமோ இல்லை. பூச்சிகொல்லிகளை விற்கும் கம்பெனிகள் அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டு நிர்பந்தத்திற்காக அவை பற்றி ஆராய எங்கள் ஆய்வகம் வந்தனர். அவர்களுக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்து தந்தால் நிதி உதவி செய்வதாகச் சொன்னார்கள். ஜெ.ஜெவிற்கு இந்த வருமானத்தை இழக்க விருப்பமில்லை. எனவே, எனக்கு நானூறு ரூபாய் உதவிப் பணமாகக் கொடுத்துவிட்டு மீதத்தை உயிர் வேதியியல் ஆய்விற்குப் பயன்படுத்திக் கொண்டார். அதே காலத்தில் மத்திய அரசின் உதவிப் பணம் ஆயிரத்து ஐநூறுக்கு மேல் வழங்கப்பட்டது. எனக்கும் வேறு வழியில்லை..பூச்சிகொல்லி கம்பெனிகள் அவர்களது பூச்சி கொல்லிகளை வயல் வெளிகளில் தெளித்துவிட்டு சாம்பிளோடு என்னிடம் வருவார்கள். தெளித்த நாளிலிருந்து கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு எத்தனை நாட்களில் அவை மறைகின்றன என நான் கண்டு சொல்லவேண்டும். இதைச் சொல்வதற்கான உபகரணங்கள் அங்கு ஏதுமில்லை. அங்கு என்ன இருக்கிறதோ அதை வைத்து நான் கண்டு சொன்னேன். எனக்கு உதவித்தொகை வழங்கியது பாயர் கம்பெனி. அதுவொரு ஜெர்மன் கம்பெனி. அவர்களது வேதியியல் அணுகுமுறைகளை நான் பின் பற்றினேன். ஆயினும், தேவையான உபகரணங்கள் இல்லை. எனவே, மும்பையிலிருக்கும் அவர்கள் ஆய்வகத்திற்குச் சென்று பார்வையிட்டேன். முதன் முறையாக ஒரு ஜெர்மன் ஆய்வகத்தைக் காண்கிறேன். அதன் சுத்தம், ஒழுங்குமுறை என்னை மிகவும் கவர்ந்தது. நான் "ஜெர்மனி செல்வேன்" என்று கனவில்கூட அப்போது நினைக்கவில்லை. அந்த ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி ஒரு ஜெர்மானியர். அவருக்கு மதுரையிலிருந்து ஒரு ஆய்வு மாணவன் அவர்கள் வேதிமங்களில் ஆய்வு செய்கிறான் என்றறிந்தவுடன் மிகவும் அன்பாக என்னைக் கவனித்துக் கொண்டார். அவரோடு மதிய உணவை நான் உண்டேன்..அப்போது அவர் ஜெர்மன் வாழ்வு பற்றி என்னிடம் நிறையச் சொன்னார். நான் அவரிடம் கேட்டேன், "எப்படி நீங்கள் இந்த வெயிலைத் தாங்குகிறீர்கள்" என்று? அவர் அலுப்போடு சொன்னார், ஜெர்மன் கோடையில் இரண்டு டிகிரி ஏறி விட்டால்கூட எல்லோரும் வீட்டிற்குப் போய் படுத்துவிடுவர் என்று. மும்பையில்கூட மதிய உணவிற்குப் பின் ஆய்வின் வேகம் குறைகிறது எனும் உண்மையை சுட்டிக்காட்டினார். மும்பையில் ஒரு வாரம் இருந்துவிட்டு மதுரை திரும்பினேன். ஏதோ வெளிநாடு போய்விட்டு வந்த மாதிரி இருந்தது. உயிரியல் பள்ளியில் எல்லோரும் ஓர் அமெரிக்கக் கனவுடனே உலாவிக் கொண்டிருந்தனர். ஆனால், அவ்வாய்ப்பு சட்டென யாருக்கும் கிடைக்கவில்லை. வெளிநாட்டிற்கு எந்த மாணவரும் பயணமும் செய்ததில்லை. விமானத்தைக் கண்டதில்லை. முதன் முதலில் எங்கள் ஆய்வகத்திலிருந்து சோமசுந்தரம் சென்று வந்தான். எனக்கு அவன் சீனியர் என்றாலும் அப்படிப் பழகமாட்டான். எனக்கு ரொம்ப நெருக்கம். அவன் ஒரு கருத்தரங்கில் பங்குகொள்ள சுவிட்சர்லாந்து போய் வந்தான். அவன் தன் அயலக அனுபவம் பற்றிச் சொன்னதிலேயே என் ஆர்வத்தைத் தூண்டியது, அங்கு எவ்வாறு சந்திரனும் சூரியனும் வானில் நேர் வட்டப்பார்வையில் செல்லாமல், சாய்ந்து பயணிக்கிறது எனும் உண்மைதான். எனக்கு உச்சி வெயில் என்றால் கடிகாரத்தில் 12 மணி போல் நடு வானில் நிற்கும் என்பதுதான் புரிதல். ஆனால் சூரியன் எப்படி வானில் சாய்ந்து பயணிக்கும் என எனக்குப் புரியவில்லை, பின்னால் நான் ஜெர்மனியில் வாழும் போது இரவு 10:30 வரை சூரியன் மறையாமல் அந்தி சாய்வதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அது எவ்வளவு தூரம் சாய்ந்து பயணிக்கிறது எனில் பனிக்காலத்தில் மாலை மூணரை மணிக்கே அஸ்தமனமாகிவிடும். கோடையில் பகற்பொழுது அதிகம். பனிக்காலத்தில் அது மிகக்குறைவு. காலையில் அலுவலகம் செல்லும் போது சூரியன் கண்ணில் படாது, திரும்ப வீடு வரும் போதும் இருக்காது. வெட்ட வெளிச்சத்தில் வாழ்ந்த எனக்கு அது புதுமையாய் இருந்தது..எப்போது வெளிநாடு செல்வோம்? என மாணவர்கள் தங்களுக்குள் கை ரேகை பார்ப்போம். முன்னால் போன மாணவர்களின் ரேகையில் சில அதிசயமான பதிவுகள் இருப்பதாக ஒரு கதையுண்டு. அதே ரேகை நமக்கும் உண்டா என்பதே எங்கள் கேள்வி. அயலகம் செல்லும் வெறியில் ஹபீப் ஒருமுறை "ரேகை இல்லையெனில் கையைக் கிழித்தாவது அதை உருவாக்குவோம்" என்பதுதான்! அயலகம் அவ்வளவு ஈர்த்தது எங்களை!.(தொடரும்)