"அரண்மனை ஆராய்ச்சி மணியின் டங்…டங்…தொடர் சத்தத்தின் தொல்லை தாங்க முடியலை. தொட்டதற்கெல்லாம், மணியை அடிச்சு, மக்கள் தூக்கத்தை கெடுக்கறாங்க. இந்த மணி ஓசையை நிறுத்த வழி கண்டுபிடியுங்க அமைச்சரே…"."மணி அடிக்க, 'மணி' வசூலித்து, அதுக்கு மேல 'மணி வரி'ன்னு, புதிதாக ஒரு வரியை அறிவிச்சா, ஒருத்தொருக்கு ஒருத்தர், மணி கூட கேட்டுக்க மாட்டாங்க மன்னா…"."இது 'மணி' மேட்டர்..வியாபாரத்திற்கு கழுகு போல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற வங்கிகள், 'மணி லோன்'னு ஒரு கடன் திட்டத்தை அறிவிச்சு, மணி அடிக்க மக்களை ஊக்குவிக்கிற ஆபத்து, அதில் இருக்குங்கறதை ஞாபகத்தில் வச்சுக்கோங்க அமைச்சரே…"."அப்ப, ஒருத்தருக்கும் கைக்கு எட்ட முடியாத உயரத்தில் மணியை தூக்கி கட்டிடுவோம் மன்னா…"."அப்புறம் மணி (த) உரிமை போராட்டம் நடத்துவாங்களே…"."மக்களுக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கிட்டா, அவுங்க எதுக்கு மணி அடிக்கப் போறாங்க மன்னா…?"."அது எனக்கு தெரியாதாக்கும்…சுத்த பைத்தியமா இருக்கீங்களே… குறுக்கு யோசனைகள் சொல்வதுதான் மணியான மந்திரிக்கு அழகு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அமைச்சரே.. இல்லைன்னா, குறுக்கு யோசனை அலவன்ஸ் 'மணி' கட் ஆயிடும்…".அலவன்ஸ் கட் என்றதும், அமைச்சரின் கட்டான மூளை நரம்புகள் பின்னிப் பிணைந்து, வேகமாக செயல்பட ஆரம்பித்தன.."ஞாபகம்னு சொன்னதும், ஒரு யோசனை ஞாபகத்துக்கு வந்துவிட்டது மன்னா."."என்ன அது… அடுத்த 'டங்' கிற்குள், டக்னு சொல்லுங்க…"."மக்களின் ஞாபக மறதியை சரியா பயன்படுத்திக்கிட்டா, மணி ஓசை நின்னுடும் மன்னா!"."பேஷ்… பேஷ்… இப்பத்தான் நீங்க யோசிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க. ஒவ்வொரு மெயின் யோசனை சொல்வதற்கு முன்பும், 'டங்…டக்'னு சொல்லி ஆரம்பியுங்க…அப்படி சொல்ற முதல் எட்டு டங் டக்கிற்கு 'யோஜன் திலக்'ங்கற விருது. அடுத்த எட்டிற்கு, டபுள் யோஜன் திலக்'னு விருதுகளோடு கௌரவிக்கப்படும் வாய்ப்பு உண்டு."."அப்ப நான் எட்டிப் பாயனும்னு எதிர்பார்க்கறீங்க… அப்படித்தானே மன்னா…"."எட்டிப் பாய்வீங்களோ… இல்லை எட்டாமல் பாய்வீங்களா… எனக்கு தெரியாது. நான் சொல்ற பிரச்னைகளுக்கு டங்…டக் யோசனைகள் வந்து விழணும்…"."மேலே ஆகாயம்… நடுவில் ஓசோன் படலம். கீழே பூலோகம்!"."என்ன அமைச்சரே… சம்பந்தமே இல்லாம பேசறீங்க?"."ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத விஷயங்களை தொடர்ந்து செய்யணும்னு சொல்ல வந்தேன்."."அப்படின்னா… கொஞ்சம் விளக்கி சொல்லும் அமைச்சரே."."வரியெல்லாம் அதிகம்னு மக்கள் குறை சொல்லிக்கிட்டு இருக்காங்க…"."சாமானியர்களுக்கான வரி குறைப்பெல்லாம் நடக்காதுன்னு உங்களுக்கு தெரியும்தானே?"."ஆம் மன்னா… அதுக்குத்தான் மேலே ஆகாயம்… கீழே…"."போதும் நிறுத்துங்கள்…விஷயத்துக்கு வாங்க."."டங்.டக்..ஒரே பொருளுக்கு இரண்டு விதமான வரி விதிச்சு, எது சௌகரியமோ அதை செலக்ட் பண்ணிக்கலாம்னு ரூல் போடலாம். இந்த டங் டக்கிற்கு 'இரு கோடுகள்'னு பெயர் சூட்டலாம்."."பெரிய கோட்டுக்கு பக்கத்தில், சின்ன கோடு… என் யூகம்… சரிதானே அமைச்சரே?"."நீங்க யூக பரம்பரையில் வந்தவராச்சே. உங்க யூகம் சரிதான் மன்னா… இரண்டு விதமான வரி திட்டங்களை அறிவிச்சு, முதலில் மக்களை குழப்பிடணும்"."ஆமா… மக்களை குழப்பிட்டாலே, பாதி வேலை முடிஞ்சுடுச்சுன்னு அர்த்தம்…"."அதில், ஏற்கெனவே இருப்பது குறைவாகவும், இன்னொன்று கொஞ்சம் கூடுதலான வரியா இருக்கணும். எந்த வரி திட்டத்தை தேர்வு செய்வது என்பதில், முடியை பிய்த்துக் கொள்ளும் மக்கள், எதிர்ப்பு குரலை மறந்து விடுவார்கள். இதனால், வரி ஆலோசகர்களுக்கும், பிசினஸ் கல்லா கட்டும். எனவே, வேலையில்லா திண்டாட்டமும் குறையும். ஒரே கல்லில், இரண்டு தேங்காய்!"."பேஷ்… பேஷ்… தேங்காய் என்றதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருது அமைச்சரே..?"."எனக்கு சட்னிதான் ஞாபகம் வருது மன்னா…"."அதனால்தான், பிரமோஷனே இல்லாமல், வெறும் தேங்காய் மூடி மந்திரியாகவே இருக்கிறீர். தேங்காய்னா, உடைக்கணும். எதிரின்னா, ஒடுக்கணும்."."உங்க பஞ்ச் டயலாக்கின் அர்த்தம் இப்ப புரிஞ்சுடுச்சு மன்னா. டங்… டக்… ரெய்டை வச்சுதான் எதிரிகளை ஒடுக்கணும். இதற்கு, 'மிரட்டு பாய்ச்சல்'னு பெயர் வச்சுடலாம்."."இது அரசியல் காழ்ப்புணர்ச்சின்னு கூக்குரல் எழுப்புவாங்களே?"."மேலே ஆகாயம். நடுவில் ஓசோன் படலம். கீழே பூலோகம்…!"."சம்பந்தம் இல்லாத இன்னொரு காரியத்தை பண்ணனும்னு சொல்றீங்க… கரெக்டா…?"."சீக்கிரமே கத்துக்கிட்டீங்க மன்னா. 'நியாஞ்சா' என்ற ஆப்பிரிக்க மொழியை பள்ளிகளில் பாடமாக வைப்போம்னு நம்ம சிப்பாய்களில் ஒருவரை உளறி கொட்ட சொல்லுவோம்."."அப்புறம்..?"."அதற்கு பலத்த எதிர்ப்பு கோஷம் வரும். ரெய்டு விஷயத்தை மறதுடுவாங்க!"."என்னுடைய மச்சானுக்கு, ஒரு தலைமுறை சம்பாத்தியத்துக்கு ஒரு பெரிய காண்ட்ராக்ட் கொடுத்தாகணும். இல்லைன்னா, மகாராணி கண்டபடி ஏசிப் பேசுவா…"."கண்டுபிடிச்சுட்டாங்கன்னா, ஜனங்க ஏசி பேசுவாங்களே மன்னா…"."அதுக்கு எதுவும் டங்…டக் கிடையாதா…?"."இருக்கு மன்னா…டங்…டக். கோடை காலத்திற்கு வீட்டுக்கு ஒரு ஏ.சி. இனாம்னு அறிவிச்சுடுவோம். ஜனங்க கூல் ஆயிடுவாங்க. இதுக்கு, 'கூல் ஆகு கொண்டாடு'ன்னு பேர் வச்சுடுவோம். இதனால், ஏ.சி. தயாரிப்பாளர்கள் உங்களுக்கு விழா எடுப்பாங்க."."கஜானாவில், அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது?"."பணத்தை வச்சுக்கிட்டு, திட்டத்தை அறிவிக்கறதெல்லாம், அறிவிப்பே இல்லை மன்னா."."அப்படின்னா?"."வெறுங்கையால முழம் போடணும்."."அப்படியே, ஜனங்க காதில் பூ சுற்றனுங்கறீங்க… அப்படித்தானே…?"."நீங்க கற்பூறம் மன்னா… நாலு ஏ.சி.க்களை, நமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், கொடுத்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்தீங்கன்னா, திட்டம் நிறைவேறிடுச்சுன்னு அர்த்தம்!"."இது தெரிந்திருந்தா, நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாமே."."இப்பத்தான் வழி தெரிந்துவிட்டதே மன்னா… அடிச்சு நொறுக்குங்க…"."அரசு பல்லக்குகளை அடிச்சு நொறுக்கிய கூட்டத்தில், நம்ம ஆளுங்களும் இருந்தாங்கன்னு கூக்குரல் எழும்புதே… அதை எப்படி சமாளிப்பதாம்…?"."எப்படியாவது நீந்தி வந்துடலாம் மன்னா…?"."அதுதான் எப்படின்னு கேட்கறேன்…?"."டங்…டக்… கிடப்பில் கிடக்கும், பல கோடி ரூபாய் செலவில், கடல் நீரை குடி நீரா மாற்றுகிற திட்டத்தை உடனடியாக அறிவிச்சு, அதற்கு 'உப்பு'மா திட்டம்'னு பெயர் வச்சுடுவோம். அந்த திட்டத்தின் செலவை பார்த்து, எதிராளிங்க கரிச்சு கொட்ட ஆரம்பிப்பாங்க… அதனால், திட்டமும் உள் வாங்கிடும்… பல்லக்கு சமாசாரமும், அதில் அடிபட்டு நொறுங்கி போயிடும்!"."ஆயுத கொள்முதலில், ஊழல்னு புதுசா குரல் கொடுக்கறாங்களே. அதை எப்படி சமாளிப்பதாம்?"." டங்…டக்…பிறந்த குழந்தை பொதுதேர்வு எழுதி பாஸ் செய்தால்தான், பர்த் சர்ட்டிஃபிகேட்னு ஒரு புரட்சி (!) திட்டத்தை அறிவிச்சு, அதற்கு 'புதிய பறவை'ன்னு சம்பந்தமே இல்லாத ஒரு பெயரை சூட்டலாம்…"."இது சுத்த குழந்தைத்தனமான திட்டம்னு எதிர்ப்பு காட்டுவாங்களே."."இந்த திட்டத்தினால், கர்ப்ப காலத்திலேயே, கருவில் வளரும் குழந்தைக்கு அறிவூட்ட, தாய்மார்கள் ட்யூஷன் சென்டருக்கு போக வேண்டாம். ஆஸ்பத்திரியிலேயே வகுப்புகள் நடத்தப்படும்னு சலுகையையும் அறிவிப்போம்…"."இது நிறைவேற்றப் படக்கூடிய திட்டம்னு எனக்கு தோன்றவில்லை அமைச்சரே."."எனக்கு மட்டும் தோன்றியதாக்கும்..?"."பிறகு, எதற்கு இந்த திட்டத்தை அறிவிச்சு, நேரத்தை வீணடிக்கனும்…?"."வேலைக்கு ஆகாத இந்த திட்டத்தை பற்றி சீரியஸா எல்லோரும் விவாதிச்சு, நேரத்தை வீணடிச்சு, பட்டையை கிளப்புவாங்க. உங்களை வார்த்தைகளால் தாக்குவதற்கு, இந்த சப்ஜெக்ட்டை ஒரு ஆயுதமா கூட பயன்படுத்துவாங்க. ஆட்டோமேட்டிக்கா, ஆயுத கொள்முதல் விஷயத்தை மறந்துடுவாங்க..'ராஜ தொந்திரவு' பாடத்தில், இதற்கு 'டேக் டைவர்ஷன்'னு பெயர்."."டேக் டைவர்ஷன்னு சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருது… நகர சாலைகள் குண்டும் குழியுமா இருக்குன்னு புகார் கிளப்புறாங்களே…அது வலுக்காம இருக்க என்ன செய்யலாம்னு யோசியுங்க அமைச்சரே."."டங்..டக்..எதிர் முகாமில் இருப்பவர்களுக்கும், ரோடு காண்ட்ராக்டை பகிர்ந்து கொடுத்துட்டால், வாயை மூடிக்குவாங்க. இந்த சமாதான திட்டத்திற்கு, 'கப்சிப்'னு பெயர் சூட்டி, பங்காளிகளையும் மகிழ்வித்து, குண்டும் குழியுமான பிரச்னையையும் சமன் செய்துடலாம்..!".வேலை இல்லாதவங்களெல்லாம் கூட்டு சேர்ந்து, 'வேலை கொடு..வேலை கொடு'ன்னு அபஸ்வரத்தோடு கோரஸ் பாடறாங்களே..இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது?"."இதை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான் மன்னா…"."அப்புறம் உங்களுக்கும் வேலை போய், நீங்களும் அந்த கும்பலோடு சேர்ந்து கோரஸ் பாட வேண்டியிருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சிந்தியுங்கள் அமைச்சரே…"."டங்…டக்…நம்ம சம்பளத்தை பல மடங்கு உயர்த்துவதற்கான சட்டம் இயற்றி, அதற்கு, 'நமக்கு நாமே உபயம்'னு நாமகரணம் சூட்டுவோம். எதிரிகள் வயிறு எரிந்து, அந்த இயற்கை எரி சக்தியில், எதிர்ப்பு குரல் உயர்ந்து, அது, பெரிய விவாத பொருள் ஆக்கப்படும். அந்த சப்தத்தில், 'வேலை வேண்டும்' கோரஸ் சப்தம் அடங்கிடும் மன்னா."."தனியார் குருகுலங்களில் மாணவர்களிடமிருந்து அநியாயத்திற்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கே… அதை எப்படி சமாளிப்பதாம்?"."அதில் பல குருகுலங்கள் அரசவையின் உறவினர்களால் நடத்தப்படுவது. தேன் கூட்டில் நாம் கை வைக்க முடியுமா மன்னா?"."இந்த தலைவலிக்கு மருந்து சொல்லவில்லை என்றால், உங்கள் தலை மீது, 1008 தேனிக்களை இறக்கி, செல்ல (?) முத்தமிடும் தண்டனை வழங்கப்படும் என்பதை நினைவில் வைத்து யோசியுங்கள் அமைச்சரே…"."இப்படி பய சீன் காட்டி, கொட்டி கொட்டி சிந்திக்க வைக்கற உங்க திறமைக்கு தலை வணங்குகிறேன் மன்னா."."புகழ்ந்தது போதும். விஷயத்திற்கு வாருங்கள் அமைச்சரே… தேன் கூடும் கலையக்கூடாது… ஆனால், கூட்டுப் பக்கம் போய் வந்தது மாதிரியும் இருக்கணும்…"."டங்…டக்…குருகுலங்கள் கட்டணங்களை முழுவதுமாக வசூலித்து முடித்த செய்தி உறுதியான பிறகு, அதிரடி சோதனைக்கு அதிகாரிகளை அனுப்பி சீன் போடலாம். ஆளே இல்லாத இரண்டு குருகுலங்களை, பெயருக்கு சீல் வைத்து விளம்பரம் தேடலாம். இந்த திட்டத்திற்கு, 'கண்டுக்காதே'ன்னு பெயர் சூட்டலாம்.."இப்போதைக்கு இது போதும் அமைச்சரே…"."அப்ப என்னுடைய விருது..?"."மேலே ஆகாயம்… நடுவில் ஓசோன்… கீழே பூமி…"."என்னிடம் கற்றுக் கொண்டதை என்னிடமே பிரயோகித்து அல்வா கொடுத்துட்டீங்களே மன்னா… அதனால், உங்களுக்கு'அல்வா கொண்டான்' னு பட்டம் சூட்டி, விழா எடுத்துடலாம் மன்னா..!"."விழாவுக்கு உடனே ஏற்பாடு செய்துடுங்க அமைச்சரே… அந்த விழாவில், அல்வாவை நம் தேசிய பலகாரமாக அறிவிச்சுடலாம்..!"."ரைட்டான திட்டங்களை, பல குழப்பங்களுடன் ராங்கான நேரங்களில் அறிவித்து பட்டையை கிளப்பும் நீங்கள், முதன் முறையாக, அல்வா திட்டத்தை ரைட்டான நேரத்தில் அறிவிக்கப் போகும் யோசனைக்கு, டங்..டக் சார்பில் பாராட்டுகள் மன்னா!"
"அரண்மனை ஆராய்ச்சி மணியின் டங்…டங்…தொடர் சத்தத்தின் தொல்லை தாங்க முடியலை. தொட்டதற்கெல்லாம், மணியை அடிச்சு, மக்கள் தூக்கத்தை கெடுக்கறாங்க. இந்த மணி ஓசையை நிறுத்த வழி கண்டுபிடியுங்க அமைச்சரே…"."மணி அடிக்க, 'மணி' வசூலித்து, அதுக்கு மேல 'மணி வரி'ன்னு, புதிதாக ஒரு வரியை அறிவிச்சா, ஒருத்தொருக்கு ஒருத்தர், மணி கூட கேட்டுக்க மாட்டாங்க மன்னா…"."இது 'மணி' மேட்டர்..வியாபாரத்திற்கு கழுகு போல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற வங்கிகள், 'மணி லோன்'னு ஒரு கடன் திட்டத்தை அறிவிச்சு, மணி அடிக்க மக்களை ஊக்குவிக்கிற ஆபத்து, அதில் இருக்குங்கறதை ஞாபகத்தில் வச்சுக்கோங்க அமைச்சரே…"."அப்ப, ஒருத்தருக்கும் கைக்கு எட்ட முடியாத உயரத்தில் மணியை தூக்கி கட்டிடுவோம் மன்னா…"."அப்புறம் மணி (த) உரிமை போராட்டம் நடத்துவாங்களே…"."மக்களுக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கிட்டா, அவுங்க எதுக்கு மணி அடிக்கப் போறாங்க மன்னா…?"."அது எனக்கு தெரியாதாக்கும்…சுத்த பைத்தியமா இருக்கீங்களே… குறுக்கு யோசனைகள் சொல்வதுதான் மணியான மந்திரிக்கு அழகு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அமைச்சரே.. இல்லைன்னா, குறுக்கு யோசனை அலவன்ஸ் 'மணி' கட் ஆயிடும்…".அலவன்ஸ் கட் என்றதும், அமைச்சரின் கட்டான மூளை நரம்புகள் பின்னிப் பிணைந்து, வேகமாக செயல்பட ஆரம்பித்தன.."ஞாபகம்னு சொன்னதும், ஒரு யோசனை ஞாபகத்துக்கு வந்துவிட்டது மன்னா."."என்ன அது… அடுத்த 'டங்' கிற்குள், டக்னு சொல்லுங்க…"."மக்களின் ஞாபக மறதியை சரியா பயன்படுத்திக்கிட்டா, மணி ஓசை நின்னுடும் மன்னா!"."பேஷ்… பேஷ்… இப்பத்தான் நீங்க யோசிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க. ஒவ்வொரு மெயின் யோசனை சொல்வதற்கு முன்பும், 'டங்…டக்'னு சொல்லி ஆரம்பியுங்க…அப்படி சொல்ற முதல் எட்டு டங் டக்கிற்கு 'யோஜன் திலக்'ங்கற விருது. அடுத்த எட்டிற்கு, டபுள் யோஜன் திலக்'னு விருதுகளோடு கௌரவிக்கப்படும் வாய்ப்பு உண்டு."."அப்ப நான் எட்டிப் பாயனும்னு எதிர்பார்க்கறீங்க… அப்படித்தானே மன்னா…"."எட்டிப் பாய்வீங்களோ… இல்லை எட்டாமல் பாய்வீங்களா… எனக்கு தெரியாது. நான் சொல்ற பிரச்னைகளுக்கு டங்…டக் யோசனைகள் வந்து விழணும்…"."மேலே ஆகாயம்… நடுவில் ஓசோன் படலம். கீழே பூலோகம்!"."என்ன அமைச்சரே… சம்பந்தமே இல்லாம பேசறீங்க?"."ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத விஷயங்களை தொடர்ந்து செய்யணும்னு சொல்ல வந்தேன்."."அப்படின்னா… கொஞ்சம் விளக்கி சொல்லும் அமைச்சரே."."வரியெல்லாம் அதிகம்னு மக்கள் குறை சொல்லிக்கிட்டு இருக்காங்க…"."சாமானியர்களுக்கான வரி குறைப்பெல்லாம் நடக்காதுன்னு உங்களுக்கு தெரியும்தானே?"."ஆம் மன்னா… அதுக்குத்தான் மேலே ஆகாயம்… கீழே…"."போதும் நிறுத்துங்கள்…விஷயத்துக்கு வாங்க."."டங்.டக்..ஒரே பொருளுக்கு இரண்டு விதமான வரி விதிச்சு, எது சௌகரியமோ அதை செலக்ட் பண்ணிக்கலாம்னு ரூல் போடலாம். இந்த டங் டக்கிற்கு 'இரு கோடுகள்'னு பெயர் சூட்டலாம்."."பெரிய கோட்டுக்கு பக்கத்தில், சின்ன கோடு… என் யூகம்… சரிதானே அமைச்சரே?"."நீங்க யூக பரம்பரையில் வந்தவராச்சே. உங்க யூகம் சரிதான் மன்னா… இரண்டு விதமான வரி திட்டங்களை அறிவிச்சு, முதலில் மக்களை குழப்பிடணும்"."ஆமா… மக்களை குழப்பிட்டாலே, பாதி வேலை முடிஞ்சுடுச்சுன்னு அர்த்தம்…"."அதில், ஏற்கெனவே இருப்பது குறைவாகவும், இன்னொன்று கொஞ்சம் கூடுதலான வரியா இருக்கணும். எந்த வரி திட்டத்தை தேர்வு செய்வது என்பதில், முடியை பிய்த்துக் கொள்ளும் மக்கள், எதிர்ப்பு குரலை மறந்து விடுவார்கள். இதனால், வரி ஆலோசகர்களுக்கும், பிசினஸ் கல்லா கட்டும். எனவே, வேலையில்லா திண்டாட்டமும் குறையும். ஒரே கல்லில், இரண்டு தேங்காய்!"."பேஷ்… பேஷ்… தேங்காய் என்றதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருது அமைச்சரே..?"."எனக்கு சட்னிதான் ஞாபகம் வருது மன்னா…"."அதனால்தான், பிரமோஷனே இல்லாமல், வெறும் தேங்காய் மூடி மந்திரியாகவே இருக்கிறீர். தேங்காய்னா, உடைக்கணும். எதிரின்னா, ஒடுக்கணும்."."உங்க பஞ்ச் டயலாக்கின் அர்த்தம் இப்ப புரிஞ்சுடுச்சு மன்னா. டங்… டக்… ரெய்டை வச்சுதான் எதிரிகளை ஒடுக்கணும். இதற்கு, 'மிரட்டு பாய்ச்சல்'னு பெயர் வச்சுடலாம்."."இது அரசியல் காழ்ப்புணர்ச்சின்னு கூக்குரல் எழுப்புவாங்களே?"."மேலே ஆகாயம். நடுவில் ஓசோன் படலம். கீழே பூலோகம்…!"."சம்பந்தம் இல்லாத இன்னொரு காரியத்தை பண்ணனும்னு சொல்றீங்க… கரெக்டா…?"."சீக்கிரமே கத்துக்கிட்டீங்க மன்னா. 'நியாஞ்சா' என்ற ஆப்பிரிக்க மொழியை பள்ளிகளில் பாடமாக வைப்போம்னு நம்ம சிப்பாய்களில் ஒருவரை உளறி கொட்ட சொல்லுவோம்."."அப்புறம்..?"."அதற்கு பலத்த எதிர்ப்பு கோஷம் வரும். ரெய்டு விஷயத்தை மறதுடுவாங்க!"."என்னுடைய மச்சானுக்கு, ஒரு தலைமுறை சம்பாத்தியத்துக்கு ஒரு பெரிய காண்ட்ராக்ட் கொடுத்தாகணும். இல்லைன்னா, மகாராணி கண்டபடி ஏசிப் பேசுவா…"."கண்டுபிடிச்சுட்டாங்கன்னா, ஜனங்க ஏசி பேசுவாங்களே மன்னா…"."அதுக்கு எதுவும் டங்…டக் கிடையாதா…?"."இருக்கு மன்னா…டங்…டக். கோடை காலத்திற்கு வீட்டுக்கு ஒரு ஏ.சி. இனாம்னு அறிவிச்சுடுவோம். ஜனங்க கூல் ஆயிடுவாங்க. இதுக்கு, 'கூல் ஆகு கொண்டாடு'ன்னு பேர் வச்சுடுவோம். இதனால், ஏ.சி. தயாரிப்பாளர்கள் உங்களுக்கு விழா எடுப்பாங்க."."கஜானாவில், அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது?"."பணத்தை வச்சுக்கிட்டு, திட்டத்தை அறிவிக்கறதெல்லாம், அறிவிப்பே இல்லை மன்னா."."அப்படின்னா?"."வெறுங்கையால முழம் போடணும்."."அப்படியே, ஜனங்க காதில் பூ சுற்றனுங்கறீங்க… அப்படித்தானே…?"."நீங்க கற்பூறம் மன்னா… நாலு ஏ.சி.க்களை, நமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், கொடுத்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்தீங்கன்னா, திட்டம் நிறைவேறிடுச்சுன்னு அர்த்தம்!"."இது தெரிந்திருந்தா, நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாமே."."இப்பத்தான் வழி தெரிந்துவிட்டதே மன்னா… அடிச்சு நொறுக்குங்க…"."அரசு பல்லக்குகளை அடிச்சு நொறுக்கிய கூட்டத்தில், நம்ம ஆளுங்களும் இருந்தாங்கன்னு கூக்குரல் எழும்புதே… அதை எப்படி சமாளிப்பதாம்…?"."எப்படியாவது நீந்தி வந்துடலாம் மன்னா…?"."அதுதான் எப்படின்னு கேட்கறேன்…?"."டங்…டக்… கிடப்பில் கிடக்கும், பல கோடி ரூபாய் செலவில், கடல் நீரை குடி நீரா மாற்றுகிற திட்டத்தை உடனடியாக அறிவிச்சு, அதற்கு 'உப்பு'மா திட்டம்'னு பெயர் வச்சுடுவோம். அந்த திட்டத்தின் செலவை பார்த்து, எதிராளிங்க கரிச்சு கொட்ட ஆரம்பிப்பாங்க… அதனால், திட்டமும் உள் வாங்கிடும்… பல்லக்கு சமாசாரமும், அதில் அடிபட்டு நொறுங்கி போயிடும்!"."ஆயுத கொள்முதலில், ஊழல்னு புதுசா குரல் கொடுக்கறாங்களே. அதை எப்படி சமாளிப்பதாம்?"." டங்…டக்…பிறந்த குழந்தை பொதுதேர்வு எழுதி பாஸ் செய்தால்தான், பர்த் சர்ட்டிஃபிகேட்னு ஒரு புரட்சி (!) திட்டத்தை அறிவிச்சு, அதற்கு 'புதிய பறவை'ன்னு சம்பந்தமே இல்லாத ஒரு பெயரை சூட்டலாம்…"."இது சுத்த குழந்தைத்தனமான திட்டம்னு எதிர்ப்பு காட்டுவாங்களே."."இந்த திட்டத்தினால், கர்ப்ப காலத்திலேயே, கருவில் வளரும் குழந்தைக்கு அறிவூட்ட, தாய்மார்கள் ட்யூஷன் சென்டருக்கு போக வேண்டாம். ஆஸ்பத்திரியிலேயே வகுப்புகள் நடத்தப்படும்னு சலுகையையும் அறிவிப்போம்…"."இது நிறைவேற்றப் படக்கூடிய திட்டம்னு எனக்கு தோன்றவில்லை அமைச்சரே."."எனக்கு மட்டும் தோன்றியதாக்கும்..?"."பிறகு, எதற்கு இந்த திட்டத்தை அறிவிச்சு, நேரத்தை வீணடிக்கனும்…?"."வேலைக்கு ஆகாத இந்த திட்டத்தை பற்றி சீரியஸா எல்லோரும் விவாதிச்சு, நேரத்தை வீணடிச்சு, பட்டையை கிளப்புவாங்க. உங்களை வார்த்தைகளால் தாக்குவதற்கு, இந்த சப்ஜெக்ட்டை ஒரு ஆயுதமா கூட பயன்படுத்துவாங்க. ஆட்டோமேட்டிக்கா, ஆயுத கொள்முதல் விஷயத்தை மறந்துடுவாங்க..'ராஜ தொந்திரவு' பாடத்தில், இதற்கு 'டேக் டைவர்ஷன்'னு பெயர்."."டேக் டைவர்ஷன்னு சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருது… நகர சாலைகள் குண்டும் குழியுமா இருக்குன்னு புகார் கிளப்புறாங்களே…அது வலுக்காம இருக்க என்ன செய்யலாம்னு யோசியுங்க அமைச்சரே."."டங்..டக்..எதிர் முகாமில் இருப்பவர்களுக்கும், ரோடு காண்ட்ராக்டை பகிர்ந்து கொடுத்துட்டால், வாயை மூடிக்குவாங்க. இந்த சமாதான திட்டத்திற்கு, 'கப்சிப்'னு பெயர் சூட்டி, பங்காளிகளையும் மகிழ்வித்து, குண்டும் குழியுமான பிரச்னையையும் சமன் செய்துடலாம்..!".வேலை இல்லாதவங்களெல்லாம் கூட்டு சேர்ந்து, 'வேலை கொடு..வேலை கொடு'ன்னு அபஸ்வரத்தோடு கோரஸ் பாடறாங்களே..இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது?"."இதை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான் மன்னா…"."அப்புறம் உங்களுக்கும் வேலை போய், நீங்களும் அந்த கும்பலோடு சேர்ந்து கோரஸ் பாட வேண்டியிருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சிந்தியுங்கள் அமைச்சரே…"."டங்…டக்…நம்ம சம்பளத்தை பல மடங்கு உயர்த்துவதற்கான சட்டம் இயற்றி, அதற்கு, 'நமக்கு நாமே உபயம்'னு நாமகரணம் சூட்டுவோம். எதிரிகள் வயிறு எரிந்து, அந்த இயற்கை எரி சக்தியில், எதிர்ப்பு குரல் உயர்ந்து, அது, பெரிய விவாத பொருள் ஆக்கப்படும். அந்த சப்தத்தில், 'வேலை வேண்டும்' கோரஸ் சப்தம் அடங்கிடும் மன்னா."."தனியார் குருகுலங்களில் மாணவர்களிடமிருந்து அநியாயத்திற்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கே… அதை எப்படி சமாளிப்பதாம்?"."அதில் பல குருகுலங்கள் அரசவையின் உறவினர்களால் நடத்தப்படுவது. தேன் கூட்டில் நாம் கை வைக்க முடியுமா மன்னா?"."இந்த தலைவலிக்கு மருந்து சொல்லவில்லை என்றால், உங்கள் தலை மீது, 1008 தேனிக்களை இறக்கி, செல்ல (?) முத்தமிடும் தண்டனை வழங்கப்படும் என்பதை நினைவில் வைத்து யோசியுங்கள் அமைச்சரே…"."இப்படி பய சீன் காட்டி, கொட்டி கொட்டி சிந்திக்க வைக்கற உங்க திறமைக்கு தலை வணங்குகிறேன் மன்னா."."புகழ்ந்தது போதும். விஷயத்திற்கு வாருங்கள் அமைச்சரே… தேன் கூடும் கலையக்கூடாது… ஆனால், கூட்டுப் பக்கம் போய் வந்தது மாதிரியும் இருக்கணும்…"."டங்…டக்…குருகுலங்கள் கட்டணங்களை முழுவதுமாக வசூலித்து முடித்த செய்தி உறுதியான பிறகு, அதிரடி சோதனைக்கு அதிகாரிகளை அனுப்பி சீன் போடலாம். ஆளே இல்லாத இரண்டு குருகுலங்களை, பெயருக்கு சீல் வைத்து விளம்பரம் தேடலாம். இந்த திட்டத்திற்கு, 'கண்டுக்காதே'ன்னு பெயர் சூட்டலாம்.."இப்போதைக்கு இது போதும் அமைச்சரே…"."அப்ப என்னுடைய விருது..?"."மேலே ஆகாயம்… நடுவில் ஓசோன்… கீழே பூமி…"."என்னிடம் கற்றுக் கொண்டதை என்னிடமே பிரயோகித்து அல்வா கொடுத்துட்டீங்களே மன்னா… அதனால், உங்களுக்கு'அல்வா கொண்டான்' னு பட்டம் சூட்டி, விழா எடுத்துடலாம் மன்னா..!"."விழாவுக்கு உடனே ஏற்பாடு செய்துடுங்க அமைச்சரே… அந்த விழாவில், அல்வாவை நம் தேசிய பலகாரமாக அறிவிச்சுடலாம்..!"."ரைட்டான திட்டங்களை, பல குழப்பங்களுடன் ராங்கான நேரங்களில் அறிவித்து பட்டையை கிளப்பும் நீங்கள், முதன் முறையாக, அல்வா திட்டத்தை ரைட்டான நேரத்தில் அறிவிக்கப் போகும் யோசனைக்கு, டங்..டக் சார்பில் பாராட்டுகள் மன்னா!"