அருளுரை.மதம் புனிதமான குறிக்கோள்களை வளர்க்கவே முயல்கிறது.பல நூல்கள் இந்தக் காலத்தில் மூலபாஷை மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் சுவை உருமாறிப் போவதும் உண்டு. ஒரு விஷயம் மனிதன் சொன்னால், அது வந்த வாக்கில், வருகிற வாக்கில் இருந்தால், ஒரு காலத்தில் இல்லாமல் மற்றொரு காலத்தில் அதன் உண்மைப் பொருளைத் தெரிந்துகொள்ள முடியும். ஒரு பொருளைச் சொல்ல ஒரு மொழியில் அழகான சொல் ஒன்று இருக்கும். மொழிபெயர்த்தால் அதற்கேற்ற சொல் இதர மொழியில் இருக்காது. சில சமயங்களில் நாலைந்து வார்த்தை போட்டுச் சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டி இருக்கும். ஒரு வார்த்தை எந்த இடத்தில், எந்த அபிப்பிராயத்தைப் பெயர்ப்பில் காணமுடியாமற் போகலாம். இரண்டாவது, மொழிபெயர்க்கிறவன் தனது ஞானத்துக்குப் போலதான் பொருள் பண்ணிக்கொண்டு செல்ல, ஒருவன் செய்த மொழிபெயர்ப்பு சரியல்ல என்று இன்னொருவன் சொல்லவும் கூடும். பண்ணுகிறவனுடைய பிராயத்துக்கும், பாஷாஞானத்துக்கும் ஏற்றபடி மொழிபெயர்ப்பு இருக்கும். இப்படியாகப் பல பெயர்ப்புகள் ஏற்பட்டு, அவற்றில் எதை எடுத்துக்கொள்வது என்ற சந்தேகம் வரும்போது, மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டி வரும்..ஆகவேதான், மூலமாகிய வேதத்தை அப்படியே கொள்ளவேண்டும். மூலமாக இருக்கும் ஒரே வேதத்தை தங்கள் கருத்துக்கு ஏற்றபடி, பொருள்கொண்டு, ஒவ்வொரு ஆசாரியரும் ஒவ்வொரு சித்தாந்தத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆசாரியர்கள் தம்தம் சித்தாந்தங்களையே ஆதாரமாகக் கொண்டு மூலமதத்தை மாற்றி, வெவ்வேறு மதம் செய்து விடவில்லை. மூலம் ஒன்றாக இருக்கிறது. மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இருந்து கொண்டதால்தான், அந்தந்த ஆசாரிய புருஷருக்கு ஏற்றபடிக்குக் காலம் புது அபிப்பிராயம் சேர்த்து வந்திருந்து ஆதாரமான வேதத்தை மாற்றாமல் அப்படியே கொண்டுவர, அதை ரட்சித்துவந்ததால்தான் அந்தந்தப் பிராயம் இன்னொரு தனிமதமாகப் போகவேண்டிய நிலை ஏற்படாமல் இருந்து வந்திருக்கிறது. இந்த மதமெல்லாம் வைதியமதம் என்ற பொதுப் பெயரும் கொண்டு வந்திருக்கிறது..'மொழி' என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சண்டை போடாமல், மூலமான வேதம் – சாஸ்திரம் அவற்றை அந்தந்த பாஷையில் பெயர்த்து, தெரிந்துகொள்ள முயலுவதும்தான் சரியானது..'மதம்' என்ற சொல்லுக்கும், அறிவைக் கொடுக்கும் 'மதி' என்ற சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதியை வளர்ப்பதற்கும், வலிமைப்படுத்துவதற்கும் உரியதுதான் மதம். எல்லா மதங்களுமே முக்கியமாக இவ்வாறு தம்மைத்தாமே உயர்த்திக்கொள்ளும் வழியைத்தான் காட்டுகின்றன. இதன்மூலம் மனிதன் சமூகத்தில் ஒற்றுமையையும், அமைதியையும் வளர்க்க வேண்டும் என்றே எல்லா மதங்களும் சொல்லுகின்றன..மனிதன் மனத்தில் புனிதமான குறிக்கோள்களை வளர்க்கவே மதம் முயல்கிறது. ஆனால், மனிதன் அவற்றை வளரவிடுவதில்லை. போட்டிப் போட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் அழித்து அதிகாரத்தைத் தேடவே முயல்கிறார்கள். இதற்காக மதம் ஒரு சிலரை ஒன்று சேர்க்கவும், வேறு சிலரை வேறுபடுத்தவும் பயன்படுகிறது. இந்த முறையில் பயன்படுத்தப்படும்போது, மதத்தின் அடிப்படையே வெறுப்புக்கும், விரோதத்துக்கும் வழிவகுப்பதையும் காண்கிறோம். ஆனால், இந்த நிலைக்கு மதம் பொறுப்பாளி அல்ல..'நான் என்ற அகந்தையைத் துறக்க வேண்டும்' என்றும், 'பிற உயிர்கள் எல்லாவற்றிலும் இறைவனையே பார்க்க வேண்டும்' என்றும்தான் மதம் சொல்லுகிறது. குறிப்பாக இந்துமதம் காட்டும் பேருண்மை இதுவே. இந்த அடிப்படையில் நாம் ஒருவரோடு மற்றவர் பழகினால் அதை அன்பு மதமாகப் பார்க்க முடியும். அதனால் அதன் மூலம் அன்பையும் பரிவையும் வளர்த்துக்கொள்ளவும் முடியும். 'அனைவரும் ஒன்றே' என்ற ஆதாரமான ஒற்றுமை உணர்வையும் அது வளர்க்க முடியும். ஆனால், மனிதன் தனது பேராசையினால், அகங்காரத்தினால், இந்த அடிப்படை உண்மைகளையே தகர்த்து எறிய முயலுகிறான். இவற்றை மறந்துவிட்டதனால் அவன் தனது பண்புகளின் நயத்தையே இழந்துவிடுகிறான். இந்த நிலைக்கு மதம் காரணம் அல்ல..மதம் இல்லாவிட்டாலும் நாடு, ஜாதி, மொழி, இனம் என்ற பல்வேறு பிரிவினை சக்திகள் அவனை இப்படி ஆட்டுவிக்க முடியும். அதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள மதத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அதைக் குறைகூற முயலக்கூடாது..– ஸ்ரீ சத்யசாயிபாபா
அருளுரை.மதம் புனிதமான குறிக்கோள்களை வளர்க்கவே முயல்கிறது.பல நூல்கள் இந்தக் காலத்தில் மூலபாஷை மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் சுவை உருமாறிப் போவதும் உண்டு. ஒரு விஷயம் மனிதன் சொன்னால், அது வந்த வாக்கில், வருகிற வாக்கில் இருந்தால், ஒரு காலத்தில் இல்லாமல் மற்றொரு காலத்தில் அதன் உண்மைப் பொருளைத் தெரிந்துகொள்ள முடியும். ஒரு பொருளைச் சொல்ல ஒரு மொழியில் அழகான சொல் ஒன்று இருக்கும். மொழிபெயர்த்தால் அதற்கேற்ற சொல் இதர மொழியில் இருக்காது. சில சமயங்களில் நாலைந்து வார்த்தை போட்டுச் சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டி இருக்கும். ஒரு வார்த்தை எந்த இடத்தில், எந்த அபிப்பிராயத்தைப் பெயர்ப்பில் காணமுடியாமற் போகலாம். இரண்டாவது, மொழிபெயர்க்கிறவன் தனது ஞானத்துக்குப் போலதான் பொருள் பண்ணிக்கொண்டு செல்ல, ஒருவன் செய்த மொழிபெயர்ப்பு சரியல்ல என்று இன்னொருவன் சொல்லவும் கூடும். பண்ணுகிறவனுடைய பிராயத்துக்கும், பாஷாஞானத்துக்கும் ஏற்றபடி மொழிபெயர்ப்பு இருக்கும். இப்படியாகப் பல பெயர்ப்புகள் ஏற்பட்டு, அவற்றில் எதை எடுத்துக்கொள்வது என்ற சந்தேகம் வரும்போது, மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டி வரும்..ஆகவேதான், மூலமாகிய வேதத்தை அப்படியே கொள்ளவேண்டும். மூலமாக இருக்கும் ஒரே வேதத்தை தங்கள் கருத்துக்கு ஏற்றபடி, பொருள்கொண்டு, ஒவ்வொரு ஆசாரியரும் ஒவ்வொரு சித்தாந்தத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆசாரியர்கள் தம்தம் சித்தாந்தங்களையே ஆதாரமாகக் கொண்டு மூலமதத்தை மாற்றி, வெவ்வேறு மதம் செய்து விடவில்லை. மூலம் ஒன்றாக இருக்கிறது. மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இருந்து கொண்டதால்தான், அந்தந்த ஆசாரிய புருஷருக்கு ஏற்றபடிக்குக் காலம் புது அபிப்பிராயம் சேர்த்து வந்திருந்து ஆதாரமான வேதத்தை மாற்றாமல் அப்படியே கொண்டுவர, அதை ரட்சித்துவந்ததால்தான் அந்தந்தப் பிராயம் இன்னொரு தனிமதமாகப் போகவேண்டிய நிலை ஏற்படாமல் இருந்து வந்திருக்கிறது. இந்த மதமெல்லாம் வைதியமதம் என்ற பொதுப் பெயரும் கொண்டு வந்திருக்கிறது..'மொழி' என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சண்டை போடாமல், மூலமான வேதம் – சாஸ்திரம் அவற்றை அந்தந்த பாஷையில் பெயர்த்து, தெரிந்துகொள்ள முயலுவதும்தான் சரியானது..'மதம்' என்ற சொல்லுக்கும், அறிவைக் கொடுக்கும் 'மதி' என்ற சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதியை வளர்ப்பதற்கும், வலிமைப்படுத்துவதற்கும் உரியதுதான் மதம். எல்லா மதங்களுமே முக்கியமாக இவ்வாறு தம்மைத்தாமே உயர்த்திக்கொள்ளும் வழியைத்தான் காட்டுகின்றன. இதன்மூலம் மனிதன் சமூகத்தில் ஒற்றுமையையும், அமைதியையும் வளர்க்க வேண்டும் என்றே எல்லா மதங்களும் சொல்லுகின்றன..மனிதன் மனத்தில் புனிதமான குறிக்கோள்களை வளர்க்கவே மதம் முயல்கிறது. ஆனால், மனிதன் அவற்றை வளரவிடுவதில்லை. போட்டிப் போட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் அழித்து அதிகாரத்தைத் தேடவே முயல்கிறார்கள். இதற்காக மதம் ஒரு சிலரை ஒன்று சேர்க்கவும், வேறு சிலரை வேறுபடுத்தவும் பயன்படுகிறது. இந்த முறையில் பயன்படுத்தப்படும்போது, மதத்தின் அடிப்படையே வெறுப்புக்கும், விரோதத்துக்கும் வழிவகுப்பதையும் காண்கிறோம். ஆனால், இந்த நிலைக்கு மதம் பொறுப்பாளி அல்ல..'நான் என்ற அகந்தையைத் துறக்க வேண்டும்' என்றும், 'பிற உயிர்கள் எல்லாவற்றிலும் இறைவனையே பார்க்க வேண்டும்' என்றும்தான் மதம் சொல்லுகிறது. குறிப்பாக இந்துமதம் காட்டும் பேருண்மை இதுவே. இந்த அடிப்படையில் நாம் ஒருவரோடு மற்றவர் பழகினால் அதை அன்பு மதமாகப் பார்க்க முடியும். அதனால் அதன் மூலம் அன்பையும் பரிவையும் வளர்த்துக்கொள்ளவும் முடியும். 'அனைவரும் ஒன்றே' என்ற ஆதாரமான ஒற்றுமை உணர்வையும் அது வளர்க்க முடியும். ஆனால், மனிதன் தனது பேராசையினால், அகங்காரத்தினால், இந்த அடிப்படை உண்மைகளையே தகர்த்து எறிய முயலுகிறான். இவற்றை மறந்துவிட்டதனால் அவன் தனது பண்புகளின் நயத்தையே இழந்துவிடுகிறான். இந்த நிலைக்கு மதம் காரணம் அல்ல..மதம் இல்லாவிட்டாலும் நாடு, ஜாதி, மொழி, இனம் என்ற பல்வேறு பிரிவினை சக்திகள் அவனை இப்படி ஆட்டுவிக்க முடியும். அதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள மதத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அதைக் குறைகூற முயலக்கூடாது..– ஸ்ரீ சத்யசாயிபாபா