ஒரு நிருபரின் டைரி – 29.– எஸ். சந்திரமெளலி.அந்தப் பெண்மணி பயணம் செய்த விமானம் ஜெர்மனியில் ஃப்ரங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். 'தன்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பவர் யார்' என்று யோசித்தபடியே சில வினாடிகள் சுற்றுமுற்றும் பார்த்தார். ஒருவர் தன் கையில் பிடித்துக் கொண்டிருந்த அட்டையைப் பார்த்தவுடன், அந்த மனிதர்தான் தன்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பவர் என்று இவருக்குப் புரிந்துவிட்டது. நேரே அவரை நோக்கிச் சென்றார். அவர் கையில் பிடித்துக் கொண்டிருந்த அட்டையில் எழுதப்பட்டிருந்த பெருக்கல் கணக்குக்கு விடை எழுதிவிட்டு, அவரைப் பார்த்து புன்னகை செய்தார். அந்த மனிதருக்கு ஒரே மகிழ்ச்சி. சுற்றிலும் நின்றுகொண்டிருந்தவர்களுக்கு லேசான குழப்பம். அந்தப் பெண்மணி கணித மேதை சகுந்தலா தேவி. "புடைவை கட்டிய நான் சகுந்தலா தேவியாக இருக்கலாம்" என அவரால் யூகித்துவிட முடியும். ஆனால், என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பதை அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தன்னை அடையாளம் காண்பித்தவிதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது" என்று கூறினார் சகுந்தலா தேவி..1998ஆம் ஆண்டில், மனிதக் கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி ஒரு தடவை சென்னை வந்திருந்தபோது, அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அவர் கணிதத்தில் மட்டுமில்லை ஜோதிடத்திலும் புலி. அவர் சென்னை வந்திருந்தது கணிதம் தொடர்பான நிகழ்ச்சிக்காக இல்லை; ஜோதிடம் சொல்வதற்காகத்தான்! ஒரு நாள் காலை ஹிந்து பேப்பரில் கணித மேதை சகுந்தலா தேவி, ஜோதிட ஆலோசனைகள் வழங்குவதாகவும், அப்பாயின்ட்மென்ட் தேவையெனில் தொடர்புக்கு ஒரு தொலைபேசி எண்ணும் தரப்பட்டிருந்தது. ஆர்வம் உந்த, அந்த எண்ணுக்கு தொலைபேசி, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கல்கி பத்திரிக்கை பேட்டிக்காக நேரம் கேட்டேன். "சந்தோஷம்! எப்போ வறீங்க?" என்று தமிழிலேயே கேட்டார். அவருக்கு சௌகரியமான ஒரு நேரத்தில் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்தேன். 'ஒரு கணித மேதை என்ற வகையில், உங்களுக்கு ஏற்பட்ட வித்தியாசமான, மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்' என்று நான் கேட்டபோதுதான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜெர்மனி விமான நிலைய அனுபவத்தைச் சொன்னார்..சகுந்தலாதேவி பெங்களூரில் பிறந்தவர். (பிறந்த தேதி: 1929 நவம்பர் 4 ) ஏழை பிரமாணக் குடும்பம். அவருடைய அப்பாவுக்கு சர்க்கஸ் கம்பெனியில் சாகசங்கள் செய்துகாட்டும் வேலை. சர்க்கஸ் காட்சிகளில் அந்தரத்தில் தொங்குவது, சிங்கத்தின் வாயில் கையைவிடுவது, கயிற்றின் மேல் நடப்பது, மேஜிக் வித்தைகளைச் செய்வது, சீட்டுக்கட்டுகளில் எண் வித்தைகளைச் செய்வது போன்றவை அவர் செய்து காட்டிக் கைதட்டல் பெறுவார். இப்படியாக பிழைப்பு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் ஒருசுபயோக சுபதினத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வீட்டில் தன் மகளுக்கு அப்பா விளையாட்டாக சில சீட்டுக் கட்டு வித்தைகளை செய்து காட்ட, அவற்றைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த சகுந்தலா தேவி, அடுத்து அந்த சீட்டுக்கட்டு டிரிக்குகளை செய்து காட்டினார். அப்பாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அப்போது சகுந்தலாவுக்கு வயது மூன்று..அப்பா சர்க்கஸ் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டார். ஊர் ஊராக மகளை அழைத்துக் கொண்டு போய் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் மகளின் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறனை அரங்கேற்றினார். அப்பாவுக்கு வருமானம். மகளுக்கு பேரும், புகழும். சகுந்தலா தேவியின் ஆறாவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்திலும், அதன் பிறகு எட்டாவது வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் நடந்த சகுந்தலா தேவியின் நிகழ்ச்சிகள் எல்லோரும் அவரைத் திரும்பிப்பார்க்க வைத்தன..பத்து வயதில் அவரை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால், மூன்று மாதங்கள் பள்ளிக்கூடம் சென்ற அவர் அத்துடன் நின்றுவிட்டார். அந்த வயதிலேயே உயர் கணிதம் படிக்கும் மாணவர்களுடைய கணக்குகளை அனாயாசமாகப் போட்டு அசத்துவாராம் சகுந்தலா தேவி. 1944ல் லண்டன் சென்று கணித நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தியதும், அவருக்கு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் அழைப்புகள் வந்தது..1950-ல் பிபிசி தொலைக்காட்சி நிருபர் லெஸ்லி மிட்செல் சகுந்தலாதேவியைப் பேட்டி கண்டார். நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்பேட்டியில் கேட்கப்பட்ட ஒரு கணக்குக்கு சகுந்தலா தேவி அளித்த பதில் தவறு என்றார் லெஸ்லி. ஆனால், தன்னுடைய பதில் சரியென்று சகுந்தலா தேவி வாதிட்டார். அதை பிபிசி அப்போது ஏற்கவில்லை என்றாலும் கூட பின்னர் சகுந்தலா கூறிய பதிலே சரியானது எனத் தன் தவறை பிபிசி நிர்வாகம் ஒப்புக்கொண்டது..1977-ல் அமெரிக்காவில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு கணிதப் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் சகுந்தலா தேவி பங்கேற்றார். 201 என்ற எண்ணுக்கான 23வது மூலம் என்ன என்பதை மனக்கணக்காகவே போட்டு, '546,372,891' என்று 50 விநாடிகளில் விடை அளித்தார். அந்தக் காலக்கட்டதில் 'யூனிவாக் 1101' என்ற கம்ப்யூட்டர்தான் மிகவும் நவீனமான கம்ப்யூட்டர் என கருதப்பட்டது. சகுந்தலா தேவி மனக்கணக்காகப் போட்டு விடை கண்டுபிடித்த கணக்கிற்கான விடையை கணக்கிட அந்த நவீனக் கம்ப்யூட்டர் நான்கு நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. கம்ப்யூட்டரைவிட சூப்பர் ஸ்பீடாக மனதுக்குள்ளேயே கணக்குப் போட்டு சரியான விடை அளித்த சகுந்தலா தேவி அங்கிருந்த பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்..1980ல் நடந்த இன்னொரு சுவாரசியமான சம்பவம். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் தன் இஷ்டத்துக்கு 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என்று பதிமூன்று இலக்க எண்கள் இரண்டினை எடுத்துக் கொடுத்தது. இந்த இரண்டு எண்களையும் பெருக்கினால் 26 இலக்கங்களில் ஒரு எண் கிடைக்கும், மனதிலேயே 28 விநாடிகளில் இந்த பெருக்கல் கணக்கினைப் போட்டுவிட்டார் சகுந்தலா தேவி. மயக்கம் போட்டுவிடாதீர்கள். அவர் சொன்ன சரியான விடை: 18,947,668,177,995,426,462,773,730. இதற்காகத்தான் அவருக்கு 'கின்னஸ் சாதனையாளர்' என்ற பெருமை கிடைத்தது..அவரைப் பற்றிய தகவல்கள் ஒரு பக்கம் இருக்க, என்னுடைய சந்திப்பின்போது அவர் பகிர்ந்துகொண்ட இன்னும் சில சுவாரசியமான அனுபவங்களைப் பார்க்கலாமா?.ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்த சமயம், ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனார் சகுந்தலா தேவி. ஒவ்வொரு பொருளாக எடுக்கும்போதே அதனுடைய விலையைப் பார்த்து, அப்படியே கூட்டிக்கொண்டே வந்தார். பில் போடும் இடத்துக்கு வந்ததும், சூப்பர் மார்க்கெட் ஊழியர் பில் போடத்துவங்கும் முன்பாகவே இத்தனை டாலர் என்று சொல்லி, இவர் பணத்தைக் கொடுத்தார். அந்த ஊழியர் கிண்டலாக, "மனிதக் கம்ப்யூட்டர் என்ற நினைப்போ?" என்று கேட்க, சகுந்தலா தேவி, மிகவும் அமைதியாக, "என்னை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்! என் பெயர் சகுந்தலா தேவி! நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்!" என்று சொல்ல, அந்த ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி! "ஓ! அந்த கணித ஜீனியசா நீங்கள்? ரொம்ப சாரி! என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று சொன்னார்..இன்னொரு தடவை சூப்பர் மார்க்கெட் போயிருந்தபோது, பில் போடும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏதோ பிரச்னை. பில் போட முடியவில்லை. சகுந்தலா தேவி, வாடிக்கையாளர்கள் வாங்கி இருக்கும் ஐட்டங்களின் விலையைப் பார்த்துக்கொண்டே வந்து, மனதிலேயே கூட்டி அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையைச் சொல்ல, வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்தார்கள். கடை ஊழியர்கள், "மேடம்! நீங்கள் எங்களுடனேயே இருந்துவிடுங்கள்! ரொம்ப சௌகரியமாக இருக்கிறது!" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்..ஒரு விமான நிலையத்தில், ஒருவர் சகுந்தலா தேவியைப் பார்த்துவிட்டு,"அட! இப்போதெல்லாம் கம்ப்யூட்டர்கள் புடைவைக் கட்டிக்கொண்டு, விமானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டனவா? என்று அவர் அடித்த கமெண்ட்டை நான் ரொம்ப ரசித்து, அவருக்கு நன்றி சொன்னேன்" என்று உற்சாகமாகக் கூறினார் சகுந்தலா தேவி..பெங்களூரில் அவர் வசித்தபோது, அவர் வீட்டு மிக்ஸி ரிப்பேர் ஆகிவிட்டது. ஒரு கடையில் ரிப்பேருக்குக் கொடுத்தார். கடைக்காரர், சொன்ன நேரத்தில் மிக்ஸியை ரிப்பேர் செய்து கொடுக்காமல் இழுத்து அடித்தார். வெறுத்துப் போன சகுந்தலா தேவி, "நான் யார் தெரியுமா? எனக்கு நேரம் எவ்வளவு முக்கியம் தெரியுமா? என்னை இப்படி இழுத்தடிக்கிறீர்களே?" என்று கோபமாக கேட்டார். "ஓ! அவ்வளவு பிசியான ஆளா நீங்கள்? உங்க பேர்?" என்ன என்று அலட்சியமாகக் கேட்க, சகுந்தலா தேவி தான் யார் என்று சொன்னார். அவ்வளவுதான்! "ஐயோ! உங்களை அடையாளம் தெரியாத முட்டாளாக இருந்துவிட்டேனே!" என்று வருத்தப்பட்டதுடன், "நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த நாளில் சிறுமியான நீங்கள் வந்து உங்கள் கணிதப் புலமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தி எங்களை எல்லாம் பிரமிப்பில் ஆழ்த்தினீர்கள்!" என்று பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார். அப்புறமென்ன? அந்தக் கடைக்காரர் அவருடைய மிக்ஸியை உடனடியாக ரிப்பேர் செய்து கொடுத்துவிட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?.தமாஷான அனுபவம் ஏதாவது? என்று கேட்டபோது அவர் கூறினார்."ஓரு நாட்டின் ஜனாதிபதியை (நாடு மற்றும் ஜனாதிபதியின் பெயரைச் சொல்லவில்லை) சந்தித்தபோது, அவர் "நீங்கள் கணித மேதையாயிற்றே! பெரிய பெரிய கணக்குகளை எல்லாம், மனதிலேயே போட்டு, விடை சொல்லுவீர்களே! எனக்கு ஏதாவது கணக்கு கொடுங்கள்! நான் விடை சொல்லுகிறேன்!" என்றார். நான் அவரை கஷ்டமான கணக்கை கொடுத்து தர்மசங்கடப்படுத்தாமல் ரொம்ப எளிமையாக "பத்தின் வர்க்கம்" (Square of 10) என்ன? என்று கேட்டேன். அவர் பட்டென்று "20" என்றார். "எப்படி?" என்று கேட்டபோது, "10 X 2 =20" என்று சொல்லி பெருமையோடு என்னைப் பார்த்தார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மனதுக்குள்ளே தலையில் அடித்துக் கொண்டு, "கிரேட்!" என்று பாராட்டிவிட்டு, சப்ஜெக்ட்டை மாற்றினேன்..சென்னை வந்ததும், தன் செயலாளருடன் சரவணபவனுக்கு சாப்பிடச் சென்றாராம். சாம்பார் வடையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த இரண்டு பேரில் ஒருவர், " அவரைப் பார்த்தால் சகுந்தலா தேவி மாதிரி இருக்கு!" என்று சொல்ல, மற்றவர், "முட்டாளே! அவர் எதற்குடா சரவண பவனுக்கு சாப்பிட வருகிறார்?" என்று தலையில் தட்டினார். இவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு புறப்படும்போது கூட அவர்களின் விவாதம் தொடர்ந்துகொண்டிருந்ததாம்! சொல்லிச் சிரித்தார் சகுந்தலா தேவி..இன்னொரு விஷயம் தெரியுமா? ஏப்ரல் 2013ல் பெங்களூரில் சகுந்தலா தேவி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 2020ல் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. படத்தில் சகுந்தலா தேவியாக நடித்தவர் இந்தி நடிகை வித்யாபாலன். ஒரிஜினல் சகுந்தலா தேவியை பேட்டி கண்ட நான், சினிமாவில் சகுந்தலா தேவியாக நடித்த விதியாபாலனை அவரது சகுந்தலா தேவி அனுபவம் குறித்து பேட்டி கண்டேன். அவர் மும்பையில் இருந்து ஜூம் செயலி மூலமாக ஜாலியாக பேட்டி அளித்தார்..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 29.– எஸ். சந்திரமெளலி.அந்தப் பெண்மணி பயணம் செய்த விமானம் ஜெர்மனியில் ஃப்ரங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். 'தன்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பவர் யார்' என்று யோசித்தபடியே சில வினாடிகள் சுற்றுமுற்றும் பார்த்தார். ஒருவர் தன் கையில் பிடித்துக் கொண்டிருந்த அட்டையைப் பார்த்தவுடன், அந்த மனிதர்தான் தன்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பவர் என்று இவருக்குப் புரிந்துவிட்டது. நேரே அவரை நோக்கிச் சென்றார். அவர் கையில் பிடித்துக் கொண்டிருந்த அட்டையில் எழுதப்பட்டிருந்த பெருக்கல் கணக்குக்கு விடை எழுதிவிட்டு, அவரைப் பார்த்து புன்னகை செய்தார். அந்த மனிதருக்கு ஒரே மகிழ்ச்சி. சுற்றிலும் நின்றுகொண்டிருந்தவர்களுக்கு லேசான குழப்பம். அந்தப் பெண்மணி கணித மேதை சகுந்தலா தேவி. "புடைவை கட்டிய நான் சகுந்தலா தேவியாக இருக்கலாம்" என அவரால் யூகித்துவிட முடியும். ஆனால், என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பதை அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தன்னை அடையாளம் காண்பித்தவிதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது" என்று கூறினார் சகுந்தலா தேவி..1998ஆம் ஆண்டில், மனிதக் கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி ஒரு தடவை சென்னை வந்திருந்தபோது, அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அவர் கணிதத்தில் மட்டுமில்லை ஜோதிடத்திலும் புலி. அவர் சென்னை வந்திருந்தது கணிதம் தொடர்பான நிகழ்ச்சிக்காக இல்லை; ஜோதிடம் சொல்வதற்காகத்தான்! ஒரு நாள் காலை ஹிந்து பேப்பரில் கணித மேதை சகுந்தலா தேவி, ஜோதிட ஆலோசனைகள் வழங்குவதாகவும், அப்பாயின்ட்மென்ட் தேவையெனில் தொடர்புக்கு ஒரு தொலைபேசி எண்ணும் தரப்பட்டிருந்தது. ஆர்வம் உந்த, அந்த எண்ணுக்கு தொலைபேசி, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கல்கி பத்திரிக்கை பேட்டிக்காக நேரம் கேட்டேன். "சந்தோஷம்! எப்போ வறீங்க?" என்று தமிழிலேயே கேட்டார். அவருக்கு சௌகரியமான ஒரு நேரத்தில் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்தேன். 'ஒரு கணித மேதை என்ற வகையில், உங்களுக்கு ஏற்பட்ட வித்தியாசமான, மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்' என்று நான் கேட்டபோதுதான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜெர்மனி விமான நிலைய அனுபவத்தைச் சொன்னார்..சகுந்தலாதேவி பெங்களூரில் பிறந்தவர். (பிறந்த தேதி: 1929 நவம்பர் 4 ) ஏழை பிரமாணக் குடும்பம். அவருடைய அப்பாவுக்கு சர்க்கஸ் கம்பெனியில் சாகசங்கள் செய்துகாட்டும் வேலை. சர்க்கஸ் காட்சிகளில் அந்தரத்தில் தொங்குவது, சிங்கத்தின் வாயில் கையைவிடுவது, கயிற்றின் மேல் நடப்பது, மேஜிக் வித்தைகளைச் செய்வது, சீட்டுக்கட்டுகளில் எண் வித்தைகளைச் செய்வது போன்றவை அவர் செய்து காட்டிக் கைதட்டல் பெறுவார். இப்படியாக பிழைப்பு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் ஒருசுபயோக சுபதினத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வீட்டில் தன் மகளுக்கு அப்பா விளையாட்டாக சில சீட்டுக் கட்டு வித்தைகளை செய்து காட்ட, அவற்றைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த சகுந்தலா தேவி, அடுத்து அந்த சீட்டுக்கட்டு டிரிக்குகளை செய்து காட்டினார். அப்பாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அப்போது சகுந்தலாவுக்கு வயது மூன்று..அப்பா சர்க்கஸ் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டார். ஊர் ஊராக மகளை அழைத்துக் கொண்டு போய் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் மகளின் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறனை அரங்கேற்றினார். அப்பாவுக்கு வருமானம். மகளுக்கு பேரும், புகழும். சகுந்தலா தேவியின் ஆறாவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்திலும், அதன் பிறகு எட்டாவது வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் நடந்த சகுந்தலா தேவியின் நிகழ்ச்சிகள் எல்லோரும் அவரைத் திரும்பிப்பார்க்க வைத்தன..பத்து வயதில் அவரை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால், மூன்று மாதங்கள் பள்ளிக்கூடம் சென்ற அவர் அத்துடன் நின்றுவிட்டார். அந்த வயதிலேயே உயர் கணிதம் படிக்கும் மாணவர்களுடைய கணக்குகளை அனாயாசமாகப் போட்டு அசத்துவாராம் சகுந்தலா தேவி. 1944ல் லண்டன் சென்று கணித நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தியதும், அவருக்கு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் அழைப்புகள் வந்தது..1950-ல் பிபிசி தொலைக்காட்சி நிருபர் லெஸ்லி மிட்செல் சகுந்தலாதேவியைப் பேட்டி கண்டார். நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்பேட்டியில் கேட்கப்பட்ட ஒரு கணக்குக்கு சகுந்தலா தேவி அளித்த பதில் தவறு என்றார் லெஸ்லி. ஆனால், தன்னுடைய பதில் சரியென்று சகுந்தலா தேவி வாதிட்டார். அதை பிபிசி அப்போது ஏற்கவில்லை என்றாலும் கூட பின்னர் சகுந்தலா கூறிய பதிலே சரியானது எனத் தன் தவறை பிபிசி நிர்வாகம் ஒப்புக்கொண்டது..1977-ல் அமெரிக்காவில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு கணிதப் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் சகுந்தலா தேவி பங்கேற்றார். 201 என்ற எண்ணுக்கான 23வது மூலம் என்ன என்பதை மனக்கணக்காகவே போட்டு, '546,372,891' என்று 50 விநாடிகளில் விடை அளித்தார். அந்தக் காலக்கட்டதில் 'யூனிவாக் 1101' என்ற கம்ப்யூட்டர்தான் மிகவும் நவீனமான கம்ப்யூட்டர் என கருதப்பட்டது. சகுந்தலா தேவி மனக்கணக்காகப் போட்டு விடை கண்டுபிடித்த கணக்கிற்கான விடையை கணக்கிட அந்த நவீனக் கம்ப்யூட்டர் நான்கு நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. கம்ப்யூட்டரைவிட சூப்பர் ஸ்பீடாக மனதுக்குள்ளேயே கணக்குப் போட்டு சரியான விடை அளித்த சகுந்தலா தேவி அங்கிருந்த பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்..1980ல் நடந்த இன்னொரு சுவாரசியமான சம்பவம். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் தன் இஷ்டத்துக்கு 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என்று பதிமூன்று இலக்க எண்கள் இரண்டினை எடுத்துக் கொடுத்தது. இந்த இரண்டு எண்களையும் பெருக்கினால் 26 இலக்கங்களில் ஒரு எண் கிடைக்கும், மனதிலேயே 28 விநாடிகளில் இந்த பெருக்கல் கணக்கினைப் போட்டுவிட்டார் சகுந்தலா தேவி. மயக்கம் போட்டுவிடாதீர்கள். அவர் சொன்ன சரியான விடை: 18,947,668,177,995,426,462,773,730. இதற்காகத்தான் அவருக்கு 'கின்னஸ் சாதனையாளர்' என்ற பெருமை கிடைத்தது..அவரைப் பற்றிய தகவல்கள் ஒரு பக்கம் இருக்க, என்னுடைய சந்திப்பின்போது அவர் பகிர்ந்துகொண்ட இன்னும் சில சுவாரசியமான அனுபவங்களைப் பார்க்கலாமா?.ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்த சமயம், ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனார் சகுந்தலா தேவி. ஒவ்வொரு பொருளாக எடுக்கும்போதே அதனுடைய விலையைப் பார்த்து, அப்படியே கூட்டிக்கொண்டே வந்தார். பில் போடும் இடத்துக்கு வந்ததும், சூப்பர் மார்க்கெட் ஊழியர் பில் போடத்துவங்கும் முன்பாகவே இத்தனை டாலர் என்று சொல்லி, இவர் பணத்தைக் கொடுத்தார். அந்த ஊழியர் கிண்டலாக, "மனிதக் கம்ப்யூட்டர் என்ற நினைப்போ?" என்று கேட்க, சகுந்தலா தேவி, மிகவும் அமைதியாக, "என்னை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்! என் பெயர் சகுந்தலா தேவி! நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்!" என்று சொல்ல, அந்த ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி! "ஓ! அந்த கணித ஜீனியசா நீங்கள்? ரொம்ப சாரி! என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று சொன்னார்..இன்னொரு தடவை சூப்பர் மார்க்கெட் போயிருந்தபோது, பில் போடும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏதோ பிரச்னை. பில் போட முடியவில்லை. சகுந்தலா தேவி, வாடிக்கையாளர்கள் வாங்கி இருக்கும் ஐட்டங்களின் விலையைப் பார்த்துக்கொண்டே வந்து, மனதிலேயே கூட்டி அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையைச் சொல்ல, வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்தார்கள். கடை ஊழியர்கள், "மேடம்! நீங்கள் எங்களுடனேயே இருந்துவிடுங்கள்! ரொம்ப சௌகரியமாக இருக்கிறது!" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்..ஒரு விமான நிலையத்தில், ஒருவர் சகுந்தலா தேவியைப் பார்த்துவிட்டு,"அட! இப்போதெல்லாம் கம்ப்யூட்டர்கள் புடைவைக் கட்டிக்கொண்டு, விமானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டனவா? என்று அவர் அடித்த கமெண்ட்டை நான் ரொம்ப ரசித்து, அவருக்கு நன்றி சொன்னேன்" என்று உற்சாகமாகக் கூறினார் சகுந்தலா தேவி..பெங்களூரில் அவர் வசித்தபோது, அவர் வீட்டு மிக்ஸி ரிப்பேர் ஆகிவிட்டது. ஒரு கடையில் ரிப்பேருக்குக் கொடுத்தார். கடைக்காரர், சொன்ன நேரத்தில் மிக்ஸியை ரிப்பேர் செய்து கொடுக்காமல் இழுத்து அடித்தார். வெறுத்துப் போன சகுந்தலா தேவி, "நான் யார் தெரியுமா? எனக்கு நேரம் எவ்வளவு முக்கியம் தெரியுமா? என்னை இப்படி இழுத்தடிக்கிறீர்களே?" என்று கோபமாக கேட்டார். "ஓ! அவ்வளவு பிசியான ஆளா நீங்கள்? உங்க பேர்?" என்ன என்று அலட்சியமாகக் கேட்க, சகுந்தலா தேவி தான் யார் என்று சொன்னார். அவ்வளவுதான்! "ஐயோ! உங்களை அடையாளம் தெரியாத முட்டாளாக இருந்துவிட்டேனே!" என்று வருத்தப்பட்டதுடன், "நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த நாளில் சிறுமியான நீங்கள் வந்து உங்கள் கணிதப் புலமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தி எங்களை எல்லாம் பிரமிப்பில் ஆழ்த்தினீர்கள்!" என்று பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார். அப்புறமென்ன? அந்தக் கடைக்காரர் அவருடைய மிக்ஸியை உடனடியாக ரிப்பேர் செய்து கொடுத்துவிட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?.தமாஷான அனுபவம் ஏதாவது? என்று கேட்டபோது அவர் கூறினார்."ஓரு நாட்டின் ஜனாதிபதியை (நாடு மற்றும் ஜனாதிபதியின் பெயரைச் சொல்லவில்லை) சந்தித்தபோது, அவர் "நீங்கள் கணித மேதையாயிற்றே! பெரிய பெரிய கணக்குகளை எல்லாம், மனதிலேயே போட்டு, விடை சொல்லுவீர்களே! எனக்கு ஏதாவது கணக்கு கொடுங்கள்! நான் விடை சொல்லுகிறேன்!" என்றார். நான் அவரை கஷ்டமான கணக்கை கொடுத்து தர்மசங்கடப்படுத்தாமல் ரொம்ப எளிமையாக "பத்தின் வர்க்கம்" (Square of 10) என்ன? என்று கேட்டேன். அவர் பட்டென்று "20" என்றார். "எப்படி?" என்று கேட்டபோது, "10 X 2 =20" என்று சொல்லி பெருமையோடு என்னைப் பார்த்தார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மனதுக்குள்ளே தலையில் அடித்துக் கொண்டு, "கிரேட்!" என்று பாராட்டிவிட்டு, சப்ஜெக்ட்டை மாற்றினேன்..சென்னை வந்ததும், தன் செயலாளருடன் சரவணபவனுக்கு சாப்பிடச் சென்றாராம். சாம்பார் வடையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த இரண்டு பேரில் ஒருவர், " அவரைப் பார்த்தால் சகுந்தலா தேவி மாதிரி இருக்கு!" என்று சொல்ல, மற்றவர், "முட்டாளே! அவர் எதற்குடா சரவண பவனுக்கு சாப்பிட வருகிறார்?" என்று தலையில் தட்டினார். இவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு புறப்படும்போது கூட அவர்களின் விவாதம் தொடர்ந்துகொண்டிருந்ததாம்! சொல்லிச் சிரித்தார் சகுந்தலா தேவி..இன்னொரு விஷயம் தெரியுமா? ஏப்ரல் 2013ல் பெங்களூரில் சகுந்தலா தேவி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 2020ல் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. படத்தில் சகுந்தலா தேவியாக நடித்தவர் இந்தி நடிகை வித்யாபாலன். ஒரிஜினல் சகுந்தலா தேவியை பேட்டி கண்ட நான், சினிமாவில் சகுந்தலா தேவியாக நடித்த விதியாபாலனை அவரது சகுந்தலா தேவி அனுபவம் குறித்து பேட்டி கண்டேன். அவர் மும்பையில் இருந்து ஜூம் செயலி மூலமாக ஜாலியாக பேட்டி அளித்தார்..(தொடரும்)