அன்று காலை தலைமைச் செயலகத்தில் ஒரு பெரிய அறையில் முதல் மந்திரி தலைமையில் சில முக்கிய மந்திரிகளும், அதிகாரிகளும் கூடினார்கள். சற்றே தாமதமாக வந்த துணை முதல்வர் தனக்கென்று இடம் தேடினார். முதல்வருக்கு இருபுறமும் இருந்த எந்த மந்திரியும் எழவில்லை. அவரை ஏற இறங்க பார்த்த முதல்வர்,."இங்க உட்காரணும்னா என் மடியிலதான் உட்காரணும், வேற எங்கயாவது உட்காரய்யா…"என்றார்..வேகமாக நடைபோட்ட துணைமுதல்வர் வாசல்பக்கம் போகாமல் ஓவல் வடிவில் போடப்பட்டிருந்த மேஜை, நாற்காலியின் வரிசையில் சென்று முதல்வருக்கு நேர் எதிரான வளைவில் அமர்ந்தார். அன்றைய கூட்டத்தின் முக்கியமான விவாதம் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதல்வர் பேசத் தொடங்கினார்.."நமக்கெல்லாம் வெளியுலக அறிவு இருக்கணும், அதனால சீனா & ஹாங்காங்க் விவகாரம் பத்தி சில வார்த்தைகள் சொல்லப் போறேன். அதுக்கப்புறம் உள்நாட்டு பிரச்னைக்கு வர்றேன். இரட்டைத்தலைமை என்னைக்கும், எங்கயும் ஒத்து வராது அப்படிங்றதை சீனா & ஹாங்காங்க் பிரச்னையும், டெல்லியில் முதல்வர் & கவர்னர் பிரச்னையும் சொல்ல வருது…" என்றார்..முதல்வர் பேச்சில் குறுக்கிட்ட துணைமுதல்வர், "இங்க இப்போ தண்ணி பிரச்னை பத்திக்கிட்டு எரியுது… அதப்பத்தி பேசுவோமா?"என்றார் முதல்வர்.."தண்ணி எங்கயாவது எரியுமாய்யா…உனக்கு அவ்வளவுதான் அறிவு… சும்மா இருய்யா" என்று துணைமுதல்வரை அடக்கினார்..சுற்றுச்சூழல் மந்திரி எழுந்து, "இப்போதைய பிரச்னை நாம் போட்டிருக்கும் பிளாஸ்டிக் தடைச் சட்டம்தான். இதை முழுமையா நடைமுறைப்படுத்தினா மத்திய அரசாங்கம், நம் மாநிலத்துக்கு சுதந்திர தினத்தன்னைக்கு விருது தர்றதுக்கான வாய்ப்பு இருக்கு… அதனால அதைப்பத்தி பேசுவோம்"என்றார். அதை முதல்வர் ஆமோதித்ததும் மந்திரி தொடர்ந்தார்.."எங்கள் அலுவலகத்தில் எந்த அதிகாரியும் தங்களோட சீட்ல உட்காரதில்லை…"என்றார்."அதான் தெரிஞ்ச விஷயமாச்சே…"."அது வழக்கமானதுதாங்க… இப்போ அப்படியில்ல… எல்லா அதிகாரிங்களும் கையில பிளேடோட தெருவுல சுத்திகிட்டே இருக்காங்க? எப்படி பிக்பாக்கெட்காரங்க மாதிரியா என்று கிண்டல் அடித்தார் துணைமுதல்வர். கிண்டலைப் பொருட்படுத்தாத சுற்றுசூழல் மந்திரி கடையில் பிளாஸ்டிக்கை வித்தா "கப்புன்னு புடிக்கணும். ஜனங்க பிளாஸ்டிக் கவரோட சுத்தினா புடிச்சு பைஃன் போடணும்ன்னு சொல்லிட்டேன்"என்றார்.."என்ன கெடச்சது"."பிளாஸ்டிக் குடைங்க 161, பழங்களை எடுத்துட்டுப் போன பிளாஸ்டிக் பைகள் 68, மாவு பாக்கெட் எடுத்துட்டு போன பிளாஸ்டிக் பை 260"."மாவு பாக்கெட்ட புடிச்சு என்ன பண்ணீங்க"."மாவு பாக்கெட்டை பிளேடால கிழிச்சு, மாவு உன் சொத்து இந்தா நீ வச்சுக்க கையில பிடி, மாவை நீ சட்டை பாக்கெட்டுல கூட போட்டு எடுத்து போய்க்கோன்னு சொல்லிட்டு அந்த பிளாஸ்டிக் கவருங்கள பத்திரமா ஆஃபீஸ்க்கு எடுத்து வந்துட்டேன்…."."எண்ணெய் கவரைப் பிடிச்சிருந்தா என்ன செஞ்சிருப்ப" அதை ஏன் கேட்கிறீங்க.. ஒருத்தர்கிட்ட எண்ணெய் பாக்கெட் புடிச்சேன் அது பெரிய விவகாரம் ஆயிடுச்சுங்க.."என்னய்யா பெரிய விவகாரம்."."எண்ணெய் பாக்கெட்ட நான் இழுக்க, வாங்கினவரு ஒருபக்கம் இழுக்க ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட் நடுரோட்டுல விழுந்துடுச்சு. வேகமாக வந்த ஸ்கூட்டர் அதை நசுக்கிடுச்சு. அதுக்கப்புறம் சிந்தியிருந்த எண்ணெய்ல வந்த இரண்டு, மூணு ஸ்கூட்டர்காரங்க வழுக்கி விழுந்துட்டாங்க. அதுல ஒருத்தன் யாருய்யா எண்ணெய் பாக்கெட்ட நடுரோட்டுல கொட்டுனவன் என்று குரல் கொடுக்க. வாங்கினவன் ஒருபக்கம் ஓட, நான் ஒரு பக்கம் ஓடி வந்துட்டேன்."."உன் தலையிலதான்யா எண்ணெய்ய கொட்டனும். நாமதான் பால் பாக்கெட்டுக்கும், எண்ணெய் பாக்கெட்டுக்கும் தடை உத்தரவு இன்னும் போடலைன்னு உனக்குத் தெரியாதா?".அதைக்கேட்டு தனியார் பால் நிறுவனங்களிலும், எண்ணெய் ஆலைகளிலும் கருப்புப் பணம் முதலீடு போட்டிருந்த மந்திரிங்க நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்..இப்படி விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே ஒரு மூத்த அதிகாரி அறைக்குள் ஓடி வந்தார். அவர் கையில் தகரத்தினாலும், பிளாஸ்டிக்கினாலும் ஆன சில பெயர்ப்பலகைகள் இருந்தன. அதில் ஒன்றில் 'டாக்டர் பிச்சமூர்த்தி, பிளாஸ்டிக் சர்ஜன்' என்று இருந்தது. மற்றொன்றில் இங்கே 'பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படும்' என்று இருந்தது. அவரைப் பாராட்டிய முதல்வர், "நாட்டுல யாரும் இனிமே பிளாஸ்டிக் சர்ஜரியே செய்யக்கூடாதுன்னு உத்தரவு போட்டுடலாம்" என்றார்..இதுபற்றி மேலும் விவாதம் தொடர்ந்தபோது கல்வித்துறை துணைச்செயலாளர் ஒருவர் துள்ளி குதித்து ஓடிவந்து "மாதிரிக்காக சில புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். மிச்ச மீதியெல்லாம் வராண்டாவுல அடுக்கி வச்சிருக்கேன்" என்றார். என்னவென்று எல்லோரும் பார்த்தபோது, அவை எல்லாம், ஆங்கிலத்திலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து & தமிழ் என்றபடியான அகராதிகள். துணைமுதல்வர் சொன்னார் இதையெல்லாம் ஏனைய்யா கொண்டுவந்த?."ஏங்க நேத்துதானே முதல்வர் சொன்னாரு பிளாஸ்டிக் என்பது நம் அகராதியிலேயே இருக்கக்கூடாது என்று அதனால எல்லா அகராதியையும் கொண்டு வந்துட்டேன். ஏன்னா எல்லா அகராதியிலும் பிளாஸ்டிக் என்ற வார்த்தை இருக்கு. தலைநகர்ல இருக்குற எல்லா இடத்துலயும் இருந்து அகராதி மொத்தத்தையும் அள்ளிட்டு வந்துட்டேன்…" என்றார்..அதிகாரிக்கு சபாஷ் சொன்ன முதல்வர், "மாநிலம் முழுசும் இதே மாதிரி எல்லோரும் வேலை பார்த்தா போதும்… பிளாஸ்டிக் ஒழிஞ்சிடும். இந்த வருஷம் மத்திய அரசோட அவார்டு நமக்குத்தான்" என மகிழ்ச்சியுடன் சொன்னார்..கூட்டம் முடிந்ததும் எல்லோரும் தங்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை நகர்த்திவிட்டு எழுந்தார்கள். அப்போது அங்கே வந்த பியூன் மேஜையின் மீது பிளாஸ்டிக் தட்டுகளில் இருந்த முந்திரி பருப்பு தட்டுகளை எடுத்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டுக்கொண்டு வெளியே சென்றார். அப்போது முதல்வரின் உதவியாளர் உள்ளே வந்து ஒரு பிளாஸ்டிக் பைலில் இருந்து சில கோப்புகளை எடுத்து முதல்வரிடம் கொடுக்க, முதல்வர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு தன் சட்டைப் பையில் இருந்த பிளாஸ்டிக் பேனாவை எடுத்து கோப்பில் இப்படி எழுதினார்:."எல்லாப் பிளாஸ்டிக் பொருள்களும் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்."
அன்று காலை தலைமைச் செயலகத்தில் ஒரு பெரிய அறையில் முதல் மந்திரி தலைமையில் சில முக்கிய மந்திரிகளும், அதிகாரிகளும் கூடினார்கள். சற்றே தாமதமாக வந்த துணை முதல்வர் தனக்கென்று இடம் தேடினார். முதல்வருக்கு இருபுறமும் இருந்த எந்த மந்திரியும் எழவில்லை. அவரை ஏற இறங்க பார்த்த முதல்வர்,."இங்க உட்காரணும்னா என் மடியிலதான் உட்காரணும், வேற எங்கயாவது உட்காரய்யா…"என்றார்..வேகமாக நடைபோட்ட துணைமுதல்வர் வாசல்பக்கம் போகாமல் ஓவல் வடிவில் போடப்பட்டிருந்த மேஜை, நாற்காலியின் வரிசையில் சென்று முதல்வருக்கு நேர் எதிரான வளைவில் அமர்ந்தார். அன்றைய கூட்டத்தின் முக்கியமான விவாதம் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதல்வர் பேசத் தொடங்கினார்.."நமக்கெல்லாம் வெளியுலக அறிவு இருக்கணும், அதனால சீனா & ஹாங்காங்க் விவகாரம் பத்தி சில வார்த்தைகள் சொல்லப் போறேன். அதுக்கப்புறம் உள்நாட்டு பிரச்னைக்கு வர்றேன். இரட்டைத்தலைமை என்னைக்கும், எங்கயும் ஒத்து வராது அப்படிங்றதை சீனா & ஹாங்காங்க் பிரச்னையும், டெல்லியில் முதல்வர் & கவர்னர் பிரச்னையும் சொல்ல வருது…" என்றார்..முதல்வர் பேச்சில் குறுக்கிட்ட துணைமுதல்வர், "இங்க இப்போ தண்ணி பிரச்னை பத்திக்கிட்டு எரியுது… அதப்பத்தி பேசுவோமா?"என்றார் முதல்வர்.."தண்ணி எங்கயாவது எரியுமாய்யா…உனக்கு அவ்வளவுதான் அறிவு… சும்மா இருய்யா" என்று துணைமுதல்வரை அடக்கினார்..சுற்றுச்சூழல் மந்திரி எழுந்து, "இப்போதைய பிரச்னை நாம் போட்டிருக்கும் பிளாஸ்டிக் தடைச் சட்டம்தான். இதை முழுமையா நடைமுறைப்படுத்தினா மத்திய அரசாங்கம், நம் மாநிலத்துக்கு சுதந்திர தினத்தன்னைக்கு விருது தர்றதுக்கான வாய்ப்பு இருக்கு… அதனால அதைப்பத்தி பேசுவோம்"என்றார். அதை முதல்வர் ஆமோதித்ததும் மந்திரி தொடர்ந்தார்.."எங்கள் அலுவலகத்தில் எந்த அதிகாரியும் தங்களோட சீட்ல உட்காரதில்லை…"என்றார்."அதான் தெரிஞ்ச விஷயமாச்சே…"."அது வழக்கமானதுதாங்க… இப்போ அப்படியில்ல… எல்லா அதிகாரிங்களும் கையில பிளேடோட தெருவுல சுத்திகிட்டே இருக்காங்க? எப்படி பிக்பாக்கெட்காரங்க மாதிரியா என்று கிண்டல் அடித்தார் துணைமுதல்வர். கிண்டலைப் பொருட்படுத்தாத சுற்றுசூழல் மந்திரி கடையில் பிளாஸ்டிக்கை வித்தா "கப்புன்னு புடிக்கணும். ஜனங்க பிளாஸ்டிக் கவரோட சுத்தினா புடிச்சு பைஃன் போடணும்ன்னு சொல்லிட்டேன்"என்றார்.."என்ன கெடச்சது"."பிளாஸ்டிக் குடைங்க 161, பழங்களை எடுத்துட்டுப் போன பிளாஸ்டிக் பைகள் 68, மாவு பாக்கெட் எடுத்துட்டு போன பிளாஸ்டிக் பை 260"."மாவு பாக்கெட்ட புடிச்சு என்ன பண்ணீங்க"."மாவு பாக்கெட்டை பிளேடால கிழிச்சு, மாவு உன் சொத்து இந்தா நீ வச்சுக்க கையில பிடி, மாவை நீ சட்டை பாக்கெட்டுல கூட போட்டு எடுத்து போய்க்கோன்னு சொல்லிட்டு அந்த பிளாஸ்டிக் கவருங்கள பத்திரமா ஆஃபீஸ்க்கு எடுத்து வந்துட்டேன்…."."எண்ணெய் கவரைப் பிடிச்சிருந்தா என்ன செஞ்சிருப்ப" அதை ஏன் கேட்கிறீங்க.. ஒருத்தர்கிட்ட எண்ணெய் பாக்கெட் புடிச்சேன் அது பெரிய விவகாரம் ஆயிடுச்சுங்க.."என்னய்யா பெரிய விவகாரம்."."எண்ணெய் பாக்கெட்ட நான் இழுக்க, வாங்கினவரு ஒருபக்கம் இழுக்க ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட் நடுரோட்டுல விழுந்துடுச்சு. வேகமாக வந்த ஸ்கூட்டர் அதை நசுக்கிடுச்சு. அதுக்கப்புறம் சிந்தியிருந்த எண்ணெய்ல வந்த இரண்டு, மூணு ஸ்கூட்டர்காரங்க வழுக்கி விழுந்துட்டாங்க. அதுல ஒருத்தன் யாருய்யா எண்ணெய் பாக்கெட்ட நடுரோட்டுல கொட்டுனவன் என்று குரல் கொடுக்க. வாங்கினவன் ஒருபக்கம் ஓட, நான் ஒரு பக்கம் ஓடி வந்துட்டேன்."."உன் தலையிலதான்யா எண்ணெய்ய கொட்டனும். நாமதான் பால் பாக்கெட்டுக்கும், எண்ணெய் பாக்கெட்டுக்கும் தடை உத்தரவு இன்னும் போடலைன்னு உனக்குத் தெரியாதா?".அதைக்கேட்டு தனியார் பால் நிறுவனங்களிலும், எண்ணெய் ஆலைகளிலும் கருப்புப் பணம் முதலீடு போட்டிருந்த மந்திரிங்க நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்..இப்படி விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே ஒரு மூத்த அதிகாரி அறைக்குள் ஓடி வந்தார். அவர் கையில் தகரத்தினாலும், பிளாஸ்டிக்கினாலும் ஆன சில பெயர்ப்பலகைகள் இருந்தன. அதில் ஒன்றில் 'டாக்டர் பிச்சமூர்த்தி, பிளாஸ்டிக் சர்ஜன்' என்று இருந்தது. மற்றொன்றில் இங்கே 'பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படும்' என்று இருந்தது. அவரைப் பாராட்டிய முதல்வர், "நாட்டுல யாரும் இனிமே பிளாஸ்டிக் சர்ஜரியே செய்யக்கூடாதுன்னு உத்தரவு போட்டுடலாம்" என்றார்..இதுபற்றி மேலும் விவாதம் தொடர்ந்தபோது கல்வித்துறை துணைச்செயலாளர் ஒருவர் துள்ளி குதித்து ஓடிவந்து "மாதிரிக்காக சில புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். மிச்ச மீதியெல்லாம் வராண்டாவுல அடுக்கி வச்சிருக்கேன்" என்றார். என்னவென்று எல்லோரும் பார்த்தபோது, அவை எல்லாம், ஆங்கிலத்திலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து & தமிழ் என்றபடியான அகராதிகள். துணைமுதல்வர் சொன்னார் இதையெல்லாம் ஏனைய்யா கொண்டுவந்த?."ஏங்க நேத்துதானே முதல்வர் சொன்னாரு பிளாஸ்டிக் என்பது நம் அகராதியிலேயே இருக்கக்கூடாது என்று அதனால எல்லா அகராதியையும் கொண்டு வந்துட்டேன். ஏன்னா எல்லா அகராதியிலும் பிளாஸ்டிக் என்ற வார்த்தை இருக்கு. தலைநகர்ல இருக்குற எல்லா இடத்துலயும் இருந்து அகராதி மொத்தத்தையும் அள்ளிட்டு வந்துட்டேன்…" என்றார்..அதிகாரிக்கு சபாஷ் சொன்ன முதல்வர், "மாநிலம் முழுசும் இதே மாதிரி எல்லோரும் வேலை பார்த்தா போதும்… பிளாஸ்டிக் ஒழிஞ்சிடும். இந்த வருஷம் மத்திய அரசோட அவார்டு நமக்குத்தான்" என மகிழ்ச்சியுடன் சொன்னார்..கூட்டம் முடிந்ததும் எல்லோரும் தங்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை நகர்த்திவிட்டு எழுந்தார்கள். அப்போது அங்கே வந்த பியூன் மேஜையின் மீது பிளாஸ்டிக் தட்டுகளில் இருந்த முந்திரி பருப்பு தட்டுகளை எடுத்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டுக்கொண்டு வெளியே சென்றார். அப்போது முதல்வரின் உதவியாளர் உள்ளே வந்து ஒரு பிளாஸ்டிக் பைலில் இருந்து சில கோப்புகளை எடுத்து முதல்வரிடம் கொடுக்க, முதல்வர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு தன் சட்டைப் பையில் இருந்த பிளாஸ்டிக் பேனாவை எடுத்து கோப்பில் இப்படி எழுதினார்:."எல்லாப் பிளாஸ்டிக் பொருள்களும் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்."