"இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம்" என்கிறாரே கமல்?– மாடக்கண்ணு, நெல்லை.! அவர் ஏற்றுகொள்ள மாட்டார். இந்திய ஜனாதிபதி பணம் ஈட்டும் எந்தப் பணியையும் செய்ய முடியாது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் செய்யலாம். அவர் இசைஞானிதானே தவிர "முற்றும் துறந்த ஞானி" இல்லை..'பொன்னியின் செல்வன்' டீசர் பார்த்தீர்களா?– விஜயலட்சுமி ஶ்ரீநிவாசன், ஶ்ரீரங்கம்.! ஒன்றரை நிமிஷ டீஸரிலிருந்து ஒரேயடியாய் எதுவும் சொல்லிவிட முடியாது. காட்சிகளில் பிரம்மாண்டம் தெரிகிறது. ஆனால், காட்சி பிரம்மாண்டமாய் இருக்கும்போது இசை அடங்கி இருந்தால் அந்த பிரம்மாண்டம் மனதில் அழுத்தமாய் பதியும். இசையும் பிரம்மாண்டமாய் இருந்தால் காட்சியின் கவர்ச்சி அடிபட்டு போய்விடும். ராஜமௌலி – மரகதமணி காம்போ இதை உணர்ந்திருந்தார்கள். இந்த டீஸரில் இசை படு இரைச்சலாக இருக்கிறது. இளையராஜாவோ, மரகதமணியோ இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்ற எண்ணம் எழுந்தது உண்மை. காத்திருப்போம். 'படம் நன்றாக இருக்கும்' என்கிற நம்பிக்கை டீஸரில் கிடைக்கிறது.."பா.ஜ.க. நினைத்தால் மகாராஷ்டிரா போல தி.மு.க.விலும் ஷிண்டேக்களை உருவாக்க முடியும்" என்கிறாரே அண்ணாமலை?– சி.கார்த்திகேயன், சாத்தூர்.! பல மாநிலங்களில் ஆளும் கட்சியில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த கட்சி பா.ஜ.க. அந்த அனுபவங்கள் தந்த தைரியத்தில் சொல்லியிருக்கலாம். ஆனால், தி.மு.க.வில் அப்படி ஷிண்டேக்களை உருவாக்க முடியாது, ஏனென்றால் அதன் தலைவர் உத்தவ் தாக்கரே இல்லை..அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாரே…?– ம. நிர்மலா மகாதேவன், வாணரப்பேட்டை, புதுச்சேரி .! அரசின் செலவினங்களைக் குறைக்க, மக்களுக்குத் திறமையான சேவைகளை வழங்கிடப் பொதுத்துறையைத் தனியார் மயமாக்குவது என்பது பா.ஜ.க.வின் கொள்கை. வங்கிகள், ரயில் போக்குவரத்தின் ஒரு பகுதிகளைத் தனியார் மயமாக்கிக்கொண்டு வருகிறார்கள். பொதுத்துறை பங்குகளை மக்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை அவசரத்தில் அவர் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளையே மறந்து பேசியிருக்கிறார்..இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் மாளிகையைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றிவிட்டனரே… அடுத்து என்ன நடக்கப்போகிறது?– ஜெ. கிருஷ்ணதேவு, புதுச்சேரி – 605107.! காட்சிகளைப் பார்த்தால் கைப்பற்றியது போல் இல்லை. பாதுகாப்பு என்பது பேருக்கு கூட இல்லாத ஒரு மாளிகையின் உள் மக்கள் எளிதாக புகுந்ததைப் போலத்தான் தெரிகிறது. அமைதியான மக்கள் போராட்டம் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் போகும் போது வன்முறை வெடிக்கும். அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விபரீதங்கள் நிகழும்..? "பொன்னியின் செல்வன் படத்தை எங்களுக்காக எம்.ஜி.ஆர். விட்டுச் சென்றிருக்கிறார்" என்கிறாரே மணிரத்னம்?– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.! விட்டுச்செல்ல அது எம்.ஜி.ஆரின் சொத்து அல்ல. அவர் படமெடுக்க இரண்டுமுறை முயன்று முடியாமல் கைவிட்டதுதான் உண்மை.. "ஊழல் எப்போது ஒழியும்?"-கரிசல்புலி கே.பாலமுருகன், பெருநாழி .! அரசு, தனியார் என்று அனைத்துப் பணிகளிலும் வெளிப்படையான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறும் வரையிலும், அனைத்து அரசுப் பணிகளும் உடனுக்குடன் (Real time basis) இணையத்தில் பதிவாகும் வரை ஊழலை ஒழிக்க முடியாது.."தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்" என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளாரே…?-இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை.! "ஒரே நாடு – ஒரே மொழி என்று சொல்லிக்கொண்டிருந்த கட்சியின் நிர்வாகி இப்படிப் பேசுவதில் ஏதோ இடிக்கிறதே?" என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, நல்ல வேளையாக "தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை" என்று தமிழகத்தின் அந்தக் கட்சியின் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் வி.கே.சிங்.சொல்லிவிட்டார். எங்கே பிரித்து "இரண்டு கவர்னர்கள் மூலம் ஆட்சி செய்வார்களோ" என்ற பயம் விலகிவிட்டது.."அடுத்த 30-40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.க.வின் சகாப்தமாக இருக்கும்" என்ற அமித்ஷாவின் கருத்து பற்றி…?– எம். நிர்மலா இராமதாஸ், வானூர்.! 30-40 ஆண்டுகள் மட்டும் தானா? "இனி நிரந்தரமாக பா.ஜ.க. ஆட்சிதான்" என்று தைரியமாக சொல்லியிருக்கலாமே?."தென்னிந்திய மாநிலங்களே பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு" என்று அமித்ஷா கூறியுள்ளாரே…?– சண்முகசுந்தரம், பாளையங்கோட்டை.! தவறில்லை. ஓர் அரசியல் கட்சி தமது இலக்கை தம் தொண்டர்களுக்குத் தெளிவாகச் சொல்லுவதில் தவறில்லை. அதோடு அதை "ஜனநாயக முறையில் மட்டுமே அடைய வேண்டும்" என்று சொல்லியிருக்க வேண்டும்.. "விரைவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும்" என்று அமித்ஷா கூறியிருப்பது பற்றி…?– ச. இராமதாசு சடையாண்டி, விழுப்புரம்.! மூன்று மாநிலங்களிலும் வாய்ப்பில்லை..திரௌபதி முர்மு ஜனாதிபதி ஆகிவிட்டால் நீட் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்குமா?– ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.! ஒரு மசோதாவிற்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் தருவது அவரது சொந்த விருப்பம் இல்லை. நமது அரசியல் அமைப்பில் ஜனாதிபதி என்பவர் ஆளும் கட்சியால் முடிவு செய்யப்படுபவர். தேர்தல் என்பதெல்லாம் ஒரு சடங்கு. அவ்வளவுதான்..? கல்கி மின்னிதழ் பயணம் தராசாருக்கு அனுபவமா ? சுகானுபவமா?– நெல்லை குரலோன், பொட்டல் புதூர்.! சவாலான சுகானுபவம்..மு.க. ஸ்டாலினின் மாநில கல்விக் கொள்கை குழு?– சி. கார்த்திகேயன், சாத்தூர்.! இன்னும் முழித்துக்கொள்ளவில்லை…."திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோதுதான் பழங்குடி மக்கள் அதிகம் வஞ்சிக்கப்பட்டனர்" என்று சீமான் கூறியுள்ளாரே…?– டாக்டர். இரா. அருண்குமார், வாணரப்பேட்டை.! மாநில ஆளுநர்கள் "மேலே இருப்பவர்களின் விருப்படித்தான் நடக்க முடியும்" என்பது சீமானுக்குத் தெரியாதா?.? இலங்கையில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலவரங்களால் தமிழகத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா?– டாக்டர். இரா. அருண்குமார், புதுச்சேரி – 605001.! அதிகமிருக்கிறது. இலங்கையில் மக்கள் விரும்பாத ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அகதிகளின் வருகை அதிகமாகும். இலங்கையுடன் நடைபெற்று கொண்டிருக்கும் நமது வணிகம் தடைப்படும். இது அந்த ஏற்றுமதிகளை சார்ந்திருக்கும் மாவட்டங்களைப் பாதிக்கும். இந்தியா முதலீடு செய்திருக்கும் வளர்ச்சி திட்டங்கள் பின்னடைவைச் சந்திக்கும்..ஜப்பானிய முன்னாள் பிரதமரின் படுகொலை அவர்களின் தேர்தலில் எதிரொலிக்குமா?– நந்தினி சந்தோஷ் குமார், நாகர்கோவில்.! நிச்சயமாக. எந்த நாட்டிலும் எழும் அனுதாப அலைகள் அரசியலில் ஓட்டுகளாக மாறும். ஆனால், அந்த அனுதாபம் ஒரு படுகொலையினால் எழுந்திருப்பது வருந்தத்தக்கது..வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் தனித்தனியாக சோதனைகளை நடத்துகிறார்கள்?– வண்ணை கணேசன், சென்னை.! வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு செய்த வருமானத்தைக் கண்டுப்பிடித்து அபராதம் விதிப்பார்கள். இந்தத் துறை மத்திய அரசினுடையது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை அந்த வருமானம் எப்படி வந்தது என்று ஆராய்வார்கள். இது மாநில அரசினுடையது. அதாவது, தவறான வழியில் வருமானத்தைப் பெற்றால் வரி, அபராதம் செலுத்தினால் மட்டும் போதாது. அந்த வருமான வந்த வழிகளையும் சொல்ல வேண்டும்..இந்து கடவுள் படங்கள் உள்ள செய்தித்தாளில் அசைவ உணவு பார்சல் செய்து கொடுத்த உணவக உரிமையாளரை உ.பி.யில் கைது செய்திருக்கிறார்களாமே?– ஜோஷ், அயன்புரம்.! அப்படித்தான் ஊடகங்கள் சொல்லுகின்றன. நம்ம சிவகாசி, விருதுநகர் காரங்கக்கிட்ட "இந்த தீபாவளிக்கு லஷ்மி வெடி, சரஸ்வதி வெடியெல்லாம் தயாரிக்காமல் இருங்க" என்று சொல்லிவைக்கணும்.
"இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம்" என்கிறாரே கமல்?– மாடக்கண்ணு, நெல்லை.! அவர் ஏற்றுகொள்ள மாட்டார். இந்திய ஜனாதிபதி பணம் ஈட்டும் எந்தப் பணியையும் செய்ய முடியாது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் செய்யலாம். அவர் இசைஞானிதானே தவிர "முற்றும் துறந்த ஞானி" இல்லை..'பொன்னியின் செல்வன்' டீசர் பார்த்தீர்களா?– விஜயலட்சுமி ஶ்ரீநிவாசன், ஶ்ரீரங்கம்.! ஒன்றரை நிமிஷ டீஸரிலிருந்து ஒரேயடியாய் எதுவும் சொல்லிவிட முடியாது. காட்சிகளில் பிரம்மாண்டம் தெரிகிறது. ஆனால், காட்சி பிரம்மாண்டமாய் இருக்கும்போது இசை அடங்கி இருந்தால் அந்த பிரம்மாண்டம் மனதில் அழுத்தமாய் பதியும். இசையும் பிரம்மாண்டமாய் இருந்தால் காட்சியின் கவர்ச்சி அடிபட்டு போய்விடும். ராஜமௌலி – மரகதமணி காம்போ இதை உணர்ந்திருந்தார்கள். இந்த டீஸரில் இசை படு இரைச்சலாக இருக்கிறது. இளையராஜாவோ, மரகதமணியோ இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்ற எண்ணம் எழுந்தது உண்மை. காத்திருப்போம். 'படம் நன்றாக இருக்கும்' என்கிற நம்பிக்கை டீஸரில் கிடைக்கிறது.."பா.ஜ.க. நினைத்தால் மகாராஷ்டிரா போல தி.மு.க.விலும் ஷிண்டேக்களை உருவாக்க முடியும்" என்கிறாரே அண்ணாமலை?– சி.கார்த்திகேயன், சாத்தூர்.! பல மாநிலங்களில் ஆளும் கட்சியில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த கட்சி பா.ஜ.க. அந்த அனுபவங்கள் தந்த தைரியத்தில் சொல்லியிருக்கலாம். ஆனால், தி.மு.க.வில் அப்படி ஷிண்டேக்களை உருவாக்க முடியாது, ஏனென்றால் அதன் தலைவர் உத்தவ் தாக்கரே இல்லை..அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாரே…?– ம. நிர்மலா மகாதேவன், வாணரப்பேட்டை, புதுச்சேரி .! அரசின் செலவினங்களைக் குறைக்க, மக்களுக்குத் திறமையான சேவைகளை வழங்கிடப் பொதுத்துறையைத் தனியார் மயமாக்குவது என்பது பா.ஜ.க.வின் கொள்கை. வங்கிகள், ரயில் போக்குவரத்தின் ஒரு பகுதிகளைத் தனியார் மயமாக்கிக்கொண்டு வருகிறார்கள். பொதுத்துறை பங்குகளை மக்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை அவசரத்தில் அவர் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளையே மறந்து பேசியிருக்கிறார்..இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் மாளிகையைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றிவிட்டனரே… அடுத்து என்ன நடக்கப்போகிறது?– ஜெ. கிருஷ்ணதேவு, புதுச்சேரி – 605107.! காட்சிகளைப் பார்த்தால் கைப்பற்றியது போல் இல்லை. பாதுகாப்பு என்பது பேருக்கு கூட இல்லாத ஒரு மாளிகையின் உள் மக்கள் எளிதாக புகுந்ததைப் போலத்தான் தெரிகிறது. அமைதியான மக்கள் போராட்டம் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் போகும் போது வன்முறை வெடிக்கும். அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விபரீதங்கள் நிகழும்..? "பொன்னியின் செல்வன் படத்தை எங்களுக்காக எம்.ஜி.ஆர். விட்டுச் சென்றிருக்கிறார்" என்கிறாரே மணிரத்னம்?– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.! விட்டுச்செல்ல அது எம்.ஜி.ஆரின் சொத்து அல்ல. அவர் படமெடுக்க இரண்டுமுறை முயன்று முடியாமல் கைவிட்டதுதான் உண்மை.. "ஊழல் எப்போது ஒழியும்?"-கரிசல்புலி கே.பாலமுருகன், பெருநாழி .! அரசு, தனியார் என்று அனைத்துப் பணிகளிலும் வெளிப்படையான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறும் வரையிலும், அனைத்து அரசுப் பணிகளும் உடனுக்குடன் (Real time basis) இணையத்தில் பதிவாகும் வரை ஊழலை ஒழிக்க முடியாது.."தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்" என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளாரே…?-இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை.! "ஒரே நாடு – ஒரே மொழி என்று சொல்லிக்கொண்டிருந்த கட்சியின் நிர்வாகி இப்படிப் பேசுவதில் ஏதோ இடிக்கிறதே?" என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, நல்ல வேளையாக "தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை" என்று தமிழகத்தின் அந்தக் கட்சியின் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் வி.கே.சிங்.சொல்லிவிட்டார். எங்கே பிரித்து "இரண்டு கவர்னர்கள் மூலம் ஆட்சி செய்வார்களோ" என்ற பயம் விலகிவிட்டது.."அடுத்த 30-40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.க.வின் சகாப்தமாக இருக்கும்" என்ற அமித்ஷாவின் கருத்து பற்றி…?– எம். நிர்மலா இராமதாஸ், வானூர்.! 30-40 ஆண்டுகள் மட்டும் தானா? "இனி நிரந்தரமாக பா.ஜ.க. ஆட்சிதான்" என்று தைரியமாக சொல்லியிருக்கலாமே?."தென்னிந்திய மாநிலங்களே பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு" என்று அமித்ஷா கூறியுள்ளாரே…?– சண்முகசுந்தரம், பாளையங்கோட்டை.! தவறில்லை. ஓர் அரசியல் கட்சி தமது இலக்கை தம் தொண்டர்களுக்குத் தெளிவாகச் சொல்லுவதில் தவறில்லை. அதோடு அதை "ஜனநாயக முறையில் மட்டுமே அடைய வேண்டும்" என்று சொல்லியிருக்க வேண்டும்.. "விரைவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும்" என்று அமித்ஷா கூறியிருப்பது பற்றி…?– ச. இராமதாசு சடையாண்டி, விழுப்புரம்.! மூன்று மாநிலங்களிலும் வாய்ப்பில்லை..திரௌபதி முர்மு ஜனாதிபதி ஆகிவிட்டால் நீட் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்குமா?– ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.! ஒரு மசோதாவிற்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் தருவது அவரது சொந்த விருப்பம் இல்லை. நமது அரசியல் அமைப்பில் ஜனாதிபதி என்பவர் ஆளும் கட்சியால் முடிவு செய்யப்படுபவர். தேர்தல் என்பதெல்லாம் ஒரு சடங்கு. அவ்வளவுதான்..? கல்கி மின்னிதழ் பயணம் தராசாருக்கு அனுபவமா ? சுகானுபவமா?– நெல்லை குரலோன், பொட்டல் புதூர்.! சவாலான சுகானுபவம்..மு.க. ஸ்டாலினின் மாநில கல்விக் கொள்கை குழு?– சி. கார்த்திகேயன், சாத்தூர்.! இன்னும் முழித்துக்கொள்ளவில்லை…."திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோதுதான் பழங்குடி மக்கள் அதிகம் வஞ்சிக்கப்பட்டனர்" என்று சீமான் கூறியுள்ளாரே…?– டாக்டர். இரா. அருண்குமார், வாணரப்பேட்டை.! மாநில ஆளுநர்கள் "மேலே இருப்பவர்களின் விருப்படித்தான் நடக்க முடியும்" என்பது சீமானுக்குத் தெரியாதா?.? இலங்கையில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலவரங்களால் தமிழகத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா?– டாக்டர். இரா. அருண்குமார், புதுச்சேரி – 605001.! அதிகமிருக்கிறது. இலங்கையில் மக்கள் விரும்பாத ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அகதிகளின் வருகை அதிகமாகும். இலங்கையுடன் நடைபெற்று கொண்டிருக்கும் நமது வணிகம் தடைப்படும். இது அந்த ஏற்றுமதிகளை சார்ந்திருக்கும் மாவட்டங்களைப் பாதிக்கும். இந்தியா முதலீடு செய்திருக்கும் வளர்ச்சி திட்டங்கள் பின்னடைவைச் சந்திக்கும்..ஜப்பானிய முன்னாள் பிரதமரின் படுகொலை அவர்களின் தேர்தலில் எதிரொலிக்குமா?– நந்தினி சந்தோஷ் குமார், நாகர்கோவில்.! நிச்சயமாக. எந்த நாட்டிலும் எழும் அனுதாப அலைகள் அரசியலில் ஓட்டுகளாக மாறும். ஆனால், அந்த அனுதாபம் ஒரு படுகொலையினால் எழுந்திருப்பது வருந்தத்தக்கது..வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் தனித்தனியாக சோதனைகளை நடத்துகிறார்கள்?– வண்ணை கணேசன், சென்னை.! வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு செய்த வருமானத்தைக் கண்டுப்பிடித்து அபராதம் விதிப்பார்கள். இந்தத் துறை மத்திய அரசினுடையது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை அந்த வருமானம் எப்படி வந்தது என்று ஆராய்வார்கள். இது மாநில அரசினுடையது. அதாவது, தவறான வழியில் வருமானத்தைப் பெற்றால் வரி, அபராதம் செலுத்தினால் மட்டும் போதாது. அந்த வருமான வந்த வழிகளையும் சொல்ல வேண்டும்..இந்து கடவுள் படங்கள் உள்ள செய்தித்தாளில் அசைவ உணவு பார்சல் செய்து கொடுத்த உணவக உரிமையாளரை உ.பி.யில் கைது செய்திருக்கிறார்களாமே?– ஜோஷ், அயன்புரம்.! அப்படித்தான் ஊடகங்கள் சொல்லுகின்றன. நம்ம சிவகாசி, விருதுநகர் காரங்கக்கிட்ட "இந்த தீபாவளிக்கு லஷ்மி வெடி, சரஸ்வதி வெடியெல்லாம் தயாரிக்காமல் இருங்க" என்று சொல்லிவைக்கணும்.