– ஸ்ருதி."ஆழி சூழ் உலகு" என்று இந்த உலகை வர்ணித்த கம்பன் இன்று இருந்திருந்தால் "நெகிழி சூழ்" உலகு என அழைத்திருப்பான். பிளாஸ்டிக்களின் பயன்பாட்டால் சுற்றுபுற சுழல் மாசுபடுவதையும், புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருவதும் குறித்து உலகெங்கும் பேசப்படுகிறது..அண்மையில் ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டிருக்கும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை அண்டார்டிகாவின் பனியிலும்கூட பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது என்பதுதான். இது பனி உருகுவதை விரைவுபடுத்தி பருவநிலை மாற்றத்தை மேலும் மோசமாக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்..அழிக்க முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் மனித குலத்திற்கும், சுற்றுச்சூழலுக்குள் பல்வேறு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எல்லா இடத்திலும் நுழைந்துவிட்ட இந்த பிளாஸ்டிக், மனிதர்களே வசிக்காத அண்டார்டிக் பனிப் பிரதேசத்திலும் பரவியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நியூசிலாந்தின் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிக்கும் மாணவி அலெக்ஸ் ஏவ்ஸ் கடந்த 2019ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ராஸ் பனிப் படுகைகளில் புதிதாக உருவான பனிக்கட்டிகளை சேகரித்து, பிளாஸ்டிக் நுண்துகள்கள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளார். இந்த ஆய்வில், அரிசியைவிட மிக நுண்ணிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் அண்டார்டிகா பனியிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. 19 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், 13 வகையான பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அதிகமாக குடிநீர் பாட்டில்கள் செய்ய பயன்படுத்தும் பெட் என சுருக்கமாக அழைக்கப்படும் பிளாஸ்டிக் நுண்துகள் இருந்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் உருக்கிய பனிக்கட்டியின் தண்ணீரில் சராசரியாக 29 பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்துள்ளன..இந்தப் புவியில் மிகவும் சுத்தமான மாசு இல்லாத இடமாக அறியப்படிருக்கும் அண்டார்டிகாவின் பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது முதல் முரையாக கண்டறியப்பட்டுள்ளது.எப்படி இந்த பிளாஸ்டிக் அண்டார்டிகா விற்கு போயிருக்கும்?."இந்த பிளாஸ்டிக் துகள்கள் பல ஆயிரம் கி.மீ., காற்றில் பயணித்து அண்டார்டிகாவுக்குள் நுழைந்திருக்கலாம் அல்லது அங்கு ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மையத்தின் மூலமாக பரவியிருக்கலாம்" என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே பல்வேறு பருவநிலை மாற்றத்தால், அண்டார்டிகா பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. இந்த நிலையில் பனிக்கட்டியில் பிளாஸ்டிக் துகள் இருப்பது பனிக்கட்டிகள் உருகுவதை மேலும் வேகமாக்கும். பொதுவாக பனிக்கட்டிகள் சூரிய ஒளியை வெளித்தள்ளும் தன்மையை கொண்டவை. ஆனால், அவைகளுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் சூரிய ஒளியை உள் இழுத்து, பனிக்கட்டிகள் வேகமாக கரைய வழி வகுக்கும். இது பூமிக் கோளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.அண்டார்டிகா பகுதியில் பல நாடுகள் வெப்பமயமாவதைத் தவிர்க்க ஆய்வுகளைச் செய்கின்றன. இந்தியா உட்பட சில நாடுகள் அங்கு நிரந்தர ஆய்வு அமைப்புகளை நிறுவி தொடர்ந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இயற்கையின் கொடையான வெண்பனி கண்டதில் தூய்மையைப் பேணுவதின் பொறுப்பு உலகின் எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது.
– ஸ்ருதி."ஆழி சூழ் உலகு" என்று இந்த உலகை வர்ணித்த கம்பன் இன்று இருந்திருந்தால் "நெகிழி சூழ்" உலகு என அழைத்திருப்பான். பிளாஸ்டிக்களின் பயன்பாட்டால் சுற்றுபுற சுழல் மாசுபடுவதையும், புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருவதும் குறித்து உலகெங்கும் பேசப்படுகிறது..அண்மையில் ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டிருக்கும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை அண்டார்டிகாவின் பனியிலும்கூட பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது என்பதுதான். இது பனி உருகுவதை விரைவுபடுத்தி பருவநிலை மாற்றத்தை மேலும் மோசமாக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்..அழிக்க முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் மனித குலத்திற்கும், சுற்றுச்சூழலுக்குள் பல்வேறு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எல்லா இடத்திலும் நுழைந்துவிட்ட இந்த பிளாஸ்டிக், மனிதர்களே வசிக்காத அண்டார்டிக் பனிப் பிரதேசத்திலும் பரவியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நியூசிலாந்தின் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிக்கும் மாணவி அலெக்ஸ் ஏவ்ஸ் கடந்த 2019ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ராஸ் பனிப் படுகைகளில் புதிதாக உருவான பனிக்கட்டிகளை சேகரித்து, பிளாஸ்டிக் நுண்துகள்கள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளார். இந்த ஆய்வில், அரிசியைவிட மிக நுண்ணிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் அண்டார்டிகா பனியிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. 19 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், 13 வகையான பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அதிகமாக குடிநீர் பாட்டில்கள் செய்ய பயன்படுத்தும் பெட் என சுருக்கமாக அழைக்கப்படும் பிளாஸ்டிக் நுண்துகள் இருந்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் உருக்கிய பனிக்கட்டியின் தண்ணீரில் சராசரியாக 29 பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்துள்ளன..இந்தப் புவியில் மிகவும் சுத்தமான மாசு இல்லாத இடமாக அறியப்படிருக்கும் அண்டார்டிகாவின் பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது முதல் முரையாக கண்டறியப்பட்டுள்ளது.எப்படி இந்த பிளாஸ்டிக் அண்டார்டிகா விற்கு போயிருக்கும்?."இந்த பிளாஸ்டிக் துகள்கள் பல ஆயிரம் கி.மீ., காற்றில் பயணித்து அண்டார்டிகாவுக்குள் நுழைந்திருக்கலாம் அல்லது அங்கு ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மையத்தின் மூலமாக பரவியிருக்கலாம்" என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே பல்வேறு பருவநிலை மாற்றத்தால், அண்டார்டிகா பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. இந்த நிலையில் பனிக்கட்டியில் பிளாஸ்டிக் துகள் இருப்பது பனிக்கட்டிகள் உருகுவதை மேலும் வேகமாக்கும். பொதுவாக பனிக்கட்டிகள் சூரிய ஒளியை வெளித்தள்ளும் தன்மையை கொண்டவை. ஆனால், அவைகளுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் சூரிய ஒளியை உள் இழுத்து, பனிக்கட்டிகள் வேகமாக கரைய வழி வகுக்கும். இது பூமிக் கோளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.அண்டார்டிகா பகுதியில் பல நாடுகள் வெப்பமயமாவதைத் தவிர்க்க ஆய்வுகளைச் செய்கின்றன. இந்தியா உட்பட சில நாடுகள் அங்கு நிரந்தர ஆய்வு அமைப்புகளை நிறுவி தொடர்ந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இயற்கையின் கொடையான வெண்பனி கண்டதில் தூய்மையைப் பேணுவதின் பொறுப்பு உலகின் எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது.