சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு வங்கியில் பணிபுரிந்து வரும் மகேஷ் குமார் "தி சிராங்கூன் டைம்ஸ்" என்ற இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியரும் கூட. .ஓவியம், கர்நாடக இசை, பயணம், புகைப்படம் எடுத்தல், மராத்தான் ஓட்டம், தன்னார்வத் தொண்டூழியம் என்று பல திசைகளில் ஆர்வமுள்ள இவர் தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் எழுதும் எழுத்தாளர்.." நாம் அனைவருமே சிறுவயது முதல் இன்றுவரை பலவிதமான மனிதர்களை சந்தித்துக்கொண்டேயிருக்கிறோம். பள்ளித் தோழர்கள், அண்டைவீட்டார், தொழில்முறை சந்திப்பு, ரயில் பயணம் என்று பலவிதமான சந்தர்ப்பங்களில் பலரை சந்தித்து, அவர்களில் சிலர் நம் வாழ்வு முழுதும் பயணிக்கிறார்கள். சிலரை ஒரே ஒரு முறையே சந்தித்திருந்தாலும் நம் மனத்தில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்திருப்பார்கள். அவர்களின் பேச்சாலும், செயலாலும்… ஏன் வெறும் மௌனத்தாலும் கூட நம்மை வென்றிருப்பார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றவையும் பெற்றவையும் ஏராளமாக இருக்கும்"என்று சொல்லும் இவர், அந்த மனிதர்களை இந்தத் தொடரில் அடுத்த வாரம் முதல் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.. இவர் எழுத்தோவியங்களாக காட்டும் மனிதர்களுக்கு தன் கோட்டோவியங்களால் உயிருட்டுகிறார் ஒவியர் ராஜன்.
சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு வங்கியில் பணிபுரிந்து வரும் மகேஷ் குமார் "தி சிராங்கூன் டைம்ஸ்" என்ற இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியரும் கூட. .ஓவியம், கர்நாடக இசை, பயணம், புகைப்படம் எடுத்தல், மராத்தான் ஓட்டம், தன்னார்வத் தொண்டூழியம் என்று பல திசைகளில் ஆர்வமுள்ள இவர் தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் எழுதும் எழுத்தாளர்.." நாம் அனைவருமே சிறுவயது முதல் இன்றுவரை பலவிதமான மனிதர்களை சந்தித்துக்கொண்டேயிருக்கிறோம். பள்ளித் தோழர்கள், அண்டைவீட்டார், தொழில்முறை சந்திப்பு, ரயில் பயணம் என்று பலவிதமான சந்தர்ப்பங்களில் பலரை சந்தித்து, அவர்களில் சிலர் நம் வாழ்வு முழுதும் பயணிக்கிறார்கள். சிலரை ஒரே ஒரு முறையே சந்தித்திருந்தாலும் நம் மனத்தில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்திருப்பார்கள். அவர்களின் பேச்சாலும், செயலாலும்… ஏன் வெறும் மௌனத்தாலும் கூட நம்மை வென்றிருப்பார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றவையும் பெற்றவையும் ஏராளமாக இருக்கும்"என்று சொல்லும் இவர், அந்த மனிதர்களை இந்தத் தொடரில் அடுத்த வாரம் முதல் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.. இவர் எழுத்தோவியங்களாக காட்டும் மனிதர்களுக்கு தன் கோட்டோவியங்களால் உயிருட்டுகிறார் ஒவியர் ராஜன்.