பார்வை.– ரமணன்.இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. மக்களின் பிரதிநிதிகளாகவிருக்கும் மாநில, மக்களவை உறுப்பினர்கள் மக்களின் சார்பாக வாக்களிக்கிறார்கள்..இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் மட்டும் இருக்கும் மேலவைகளின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்குக் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது. 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்தத் தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது..இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்.எல்.ஏ., எம்.பி.யின் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை எம்.பி., மக்களவை எம்.பி.க்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்..இந்த எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு எப்படிக் கணக்கிடப்படுகிறது?.நான்காம் வகுப்பு வகுத்தல் பெருக்கல் கணக்குகளை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.மாநில மக்கள்தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும்..சுருக்கமாக சொல்லுவதானால் எம்பி க்களின் வாக்குகள் போல ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எம் எல் ஏக்களின் வாக்குகளுக்குக் கிடையாது. மாநிலத்து மாநிலம் இது வேறுபடும்..உதாரணமாக, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஓர் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு, குறைந்த மக்கள்தொகை கொண்ட மணிப்பூர், கோவா, திரிபுரா ஆகியவற்றைவிட அதிக மதிப்பைக் கொண்டதாக இருக்கும்..இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பைக் கொண்டது உத்தரப் பிரதேச மாநிலத்தின் எம்.எல்.ஏ. பதவி. அங்கு ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகும். அந்த வகையில் மாநிலத்தின் மொத்த வாக்கு மதிப்பு 234 x 176 = 41,184.இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடியரசுத்தலைவர் மக்களின் ஓட்டுக்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த பிறநிதிகளின் ஓட்டுக்கள் மூலம் (SINGLE TRANSFER) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறது..ஆனால், மக்கள் பிரிதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்புகளைக் கவனியுங்கள். உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஓட்டு மதிப்பு 208. சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஓட்டு மதிப்பு 7..உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 403. சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 32. அதாவது ஒட்டுமொத்த சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு இரண்டு உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களைவிட குறைவானது..இதுதான் நாம் நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிகள் மூலமாக ஜனநாயக முறைப்படி குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை..எனது பார்வையில் இது மிகவும் பாரபட்சமான முறை. 'வல்லான் வகுத்ததே வழி' என்ற நிலையில் இருக்கும் முறை. இதில் அதிக எண்ணிக்கையிலிருக்கும் சட்டமன்றங்களின் உறுப்பினர்களின் தேர்வே நாட்டு மக்களின் முடிவாயிருக்கும். இது எவ்வளவு பெரிய பாரபட்சம்?.குடியரசு தலைவர் தேர்தல் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் பிரதிநிதித்துவ வெளிப்பாடு என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுகளுக்கு எப்படி சமமான மதிப்பு வழங்கப்பட்டிருக்கிறதோ அப்படி சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டுகளுக்கும் சமமான ஓட்டு மதிப்பு வழங்கப்படுவதுதானே முறையாக இருக்க முடியும்?.அப்போதும்கூட மக்கள்தொகை மிகுந்த பெரிய சட்டமன்றங்களை கொண்ட பெரிய மாநிலங்களின் கைதானே மேலோங்கியிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், பெரும் எண்ணிக்கையிலிருக்கும் அந்த மாநிலங்களின் மேலாதிக்கம் ஓரளவாவது குறையும். மக்கள் பிரதிநிதிகளுக்கு சம அளவிலான வாக்கு என்ற எண்ணம் வளரும்..மற்றொரு முக்கியமான உண்மை நிலை, மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநிலங்கள், எந்தக் காலத்திலும் ஒரு குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட முடியாது..டிஜிட்டல் இந்தியா என நாம் முழங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. என்பது ஒரு நகை முரண். உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் ரகசியமாக தங்களுடைய வாக்குரிமையைச் செலுத்த வேண்டும். இந்த வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்யத் தேர்தல் ஆணையம் வழங்கும் பிரத்தியேகப் பேனாவை மட்டுமே வாக்காளர் பயன்படுத்த வேண்டும்..குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சம்பந்தப்பட்ட வாக்காளர் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சி மட்டத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட வேட்பாளருக்குச் சாதகமாக வாக்களிக்க பணம் கொடுப்பதும், செல்வாக்கை செலுத்தி வாக்குரிமை செலுத்த நிர்ப்பந்திப்பதும் சட்டவிரோதச் செயலாக கருதப்படும்..ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன என்பது ஊரறிந்த ரகசியம்..வரும் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வின் கூட்டணி உறுப்பினர்கள் மூலம் கிடைக்கும் குடியரசு தலைவரின் வெற்றிக்குப் பெறவேண்டிய ஓட்டுக்களைவிட சில ஓட்டுகள் குறைவாயிருக்கிறது. அதனால் தங்கள் கூட்டணியையும் தாண்டி ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவை அது பெற வேண்டிய நிலையில் இருக்கிறது..குடியரசு தலைவர் தேர்தலில் கட்சி சார்பின்றி தகுதியானவர்கள் நேரடியாகப் போட்டியிடலாம் என்கிறது சட்டம். ஆனால் இங்கே கட்சி அரசியல் எப்படிப் புகுத்தப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்..குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடச் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வேட்பு மனுவுடன் அவரை முன்மொழிந்து 50 வாக்காளர்களும், வழிமொழிந்து 50 வாக்காளர்களும் மனுவில் ஆதரவைத் தெரிவித்துக் கையொப்பமிட்டிருக்க வேண்டும். இந்த விதியின் மூலம் வேட்பாளர் எந்தக் கட்சியை அல்லது அணியைச் சேர்ந்தவர் என்பது பொதுவெளியில் தெரிந்துவிடும். அதுமட்டுமில்லை, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே மேலே சொன்ன கணக்கீடுகளைப் பயன்படுத்தி யார் எவ்வளவு ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுவார் என்பதை எளிதாகச் சொல்லிவிட முடியும்..ஜனநாயகம் என்பது அடிப்படையில் தேர்தல்களில் பெரும்பான்மையின் வெற்றிதான். ஆனால் பாரபட்சம் இருக்கும் தேர்வு முறையில் ஜனநாயகம் என்பது திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.
பார்வை.– ரமணன்.இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. மக்களின் பிரதிநிதிகளாகவிருக்கும் மாநில, மக்களவை உறுப்பினர்கள் மக்களின் சார்பாக வாக்களிக்கிறார்கள்..இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் மட்டும் இருக்கும் மேலவைகளின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்குக் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது. 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்தத் தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது..இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்.எல்.ஏ., எம்.பி.யின் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை எம்.பி., மக்களவை எம்.பி.க்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்..இந்த எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு எப்படிக் கணக்கிடப்படுகிறது?.நான்காம் வகுப்பு வகுத்தல் பெருக்கல் கணக்குகளை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.மாநில மக்கள்தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும்..சுருக்கமாக சொல்லுவதானால் எம்பி க்களின் வாக்குகள் போல ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எம் எல் ஏக்களின் வாக்குகளுக்குக் கிடையாது. மாநிலத்து மாநிலம் இது வேறுபடும்..உதாரணமாக, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஓர் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு, குறைந்த மக்கள்தொகை கொண்ட மணிப்பூர், கோவா, திரிபுரா ஆகியவற்றைவிட அதிக மதிப்பைக் கொண்டதாக இருக்கும்..இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பைக் கொண்டது உத்தரப் பிரதேச மாநிலத்தின் எம்.எல்.ஏ. பதவி. அங்கு ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகும். அந்த வகையில் மாநிலத்தின் மொத்த வாக்கு மதிப்பு 234 x 176 = 41,184.இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடியரசுத்தலைவர் மக்களின் ஓட்டுக்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த பிறநிதிகளின் ஓட்டுக்கள் மூலம் (SINGLE TRANSFER) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறது..ஆனால், மக்கள் பிரிதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்புகளைக் கவனியுங்கள். உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஓட்டு மதிப்பு 208. சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஓட்டு மதிப்பு 7..உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 403. சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 32. அதாவது ஒட்டுமொத்த சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு இரண்டு உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களைவிட குறைவானது..இதுதான் நாம் நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிகள் மூலமாக ஜனநாயக முறைப்படி குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை..எனது பார்வையில் இது மிகவும் பாரபட்சமான முறை. 'வல்லான் வகுத்ததே வழி' என்ற நிலையில் இருக்கும் முறை. இதில் அதிக எண்ணிக்கையிலிருக்கும் சட்டமன்றங்களின் உறுப்பினர்களின் தேர்வே நாட்டு மக்களின் முடிவாயிருக்கும். இது எவ்வளவு பெரிய பாரபட்சம்?.குடியரசு தலைவர் தேர்தல் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் பிரதிநிதித்துவ வெளிப்பாடு என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுகளுக்கு எப்படி சமமான மதிப்பு வழங்கப்பட்டிருக்கிறதோ அப்படி சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டுகளுக்கும் சமமான ஓட்டு மதிப்பு வழங்கப்படுவதுதானே முறையாக இருக்க முடியும்?.அப்போதும்கூட மக்கள்தொகை மிகுந்த பெரிய சட்டமன்றங்களை கொண்ட பெரிய மாநிலங்களின் கைதானே மேலோங்கியிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், பெரும் எண்ணிக்கையிலிருக்கும் அந்த மாநிலங்களின் மேலாதிக்கம் ஓரளவாவது குறையும். மக்கள் பிரதிநிதிகளுக்கு சம அளவிலான வாக்கு என்ற எண்ணம் வளரும்..மற்றொரு முக்கியமான உண்மை நிலை, மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநிலங்கள், எந்தக் காலத்திலும் ஒரு குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட முடியாது..டிஜிட்டல் இந்தியா என நாம் முழங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. என்பது ஒரு நகை முரண். உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் ரகசியமாக தங்களுடைய வாக்குரிமையைச் செலுத்த வேண்டும். இந்த வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்யத் தேர்தல் ஆணையம் வழங்கும் பிரத்தியேகப் பேனாவை மட்டுமே வாக்காளர் பயன்படுத்த வேண்டும்..குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சம்பந்தப்பட்ட வாக்காளர் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சி மட்டத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட வேட்பாளருக்குச் சாதகமாக வாக்களிக்க பணம் கொடுப்பதும், செல்வாக்கை செலுத்தி வாக்குரிமை செலுத்த நிர்ப்பந்திப்பதும் சட்டவிரோதச் செயலாக கருதப்படும்..ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன என்பது ஊரறிந்த ரகசியம்..வரும் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வின் கூட்டணி உறுப்பினர்கள் மூலம் கிடைக்கும் குடியரசு தலைவரின் வெற்றிக்குப் பெறவேண்டிய ஓட்டுக்களைவிட சில ஓட்டுகள் குறைவாயிருக்கிறது. அதனால் தங்கள் கூட்டணியையும் தாண்டி ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவை அது பெற வேண்டிய நிலையில் இருக்கிறது..குடியரசு தலைவர் தேர்தலில் கட்சி சார்பின்றி தகுதியானவர்கள் நேரடியாகப் போட்டியிடலாம் என்கிறது சட்டம். ஆனால் இங்கே கட்சி அரசியல் எப்படிப் புகுத்தப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்..குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடச் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வேட்பு மனுவுடன் அவரை முன்மொழிந்து 50 வாக்காளர்களும், வழிமொழிந்து 50 வாக்காளர்களும் மனுவில் ஆதரவைத் தெரிவித்துக் கையொப்பமிட்டிருக்க வேண்டும். இந்த விதியின் மூலம் வேட்பாளர் எந்தக் கட்சியை அல்லது அணியைச் சேர்ந்தவர் என்பது பொதுவெளியில் தெரிந்துவிடும். அதுமட்டுமில்லை, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே மேலே சொன்ன கணக்கீடுகளைப் பயன்படுத்தி யார் எவ்வளவு ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுவார் என்பதை எளிதாகச் சொல்லிவிட முடியும்..ஜனநாயகம் என்பது அடிப்படையில் தேர்தல்களில் பெரும்பான்மையின் வெற்றிதான். ஆனால் பாரபட்சம் இருக்கும் தேர்வு முறையில் ஜனநாயகம் என்பது திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.