எஸ். சந்திரமௌலி.பிரிட்டனில் ஆட்சி செய்யும் விண்டர் அரச வம்சத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 96) பதவி ஏற்று எழுபது ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. அதனை பிரிட்டன் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இதன் மூலமாக "பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை மிகவும் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி" என்ற பெருமையைப் பெறுகிறார் ராணி இரண்டாம் எலிசபெத்..பிரான்ஸ் தேசத்து மன்னர் பதினான்காம் லுாயிஸ், 72 ஆண்டுகள், 110 நாட்கள் அரசராக இருந்து, உலகில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த மன்னர்களின் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்..தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் 70 ஆண்டுகள் 126 நாட்கள் ஆட்சி செய்து இரண்டாம் இடத்தில் இருந்தார்..தாய்லாந்து மன்னரது சாதனையை அண்மையில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் முறியடித்திருக்கிறார். பிரிட்டிஷ் வரலாற்றில் இவருக்கு முன்பு விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசியின் முடிசூட்டு பவள விழாவினைக் கொண்டாடும் வகையில் அண்மையில் லண்டனில் அவர் பெயரில் துவக்கப்பட்ட புதிய ரயில் தடத்தின் துவக்க விழாவினை ராணி நேரில் வந்து துவக்கி வைத்தார். பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் குறித்த சுவையான தகவல்களைப் பார்க்கலாம்:.பிறந்தபோது 'எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி' என்றே பெயரிடப்பட்டவர், 1953 ஜூன் 2ஆம் தேதி நடந்த முடிசூட்டு விழாவின்போது 'இரண்டாம் எலிசபெத்' என்று பெயர் சூட்டப்பெற்றார். இவர் 'பிரிட்டனின் ராணி' என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார். மேலும் 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும், பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். இவரது ஆட்சிக் காலத்தில் பதினான்கு பேர்கள் பிரிட்டிஷ் பிரதம மந்திரிகளாக பதவி வகித்துள்ளனர்..மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் மகன் இளவரசர் ஆல்பர்ட் – எலிசபெத் பௌவ்ஸ் நியோன் தம்பதிக்கு, 1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி அதிகாலை 2.40 மணிக்குப் பிறந்தார் எலிசபெத். குழந்தைப் பருவத்தில் இவரின் செல்லப் பெயர் `லில்லிபெட்'. இவரும் இவரது தங்கை மார்க்கரெட்டும் அரண்மனையிலேயே கல்வி கற்றனர். அக்காவும், தங்கையும் நெருங்கிய தோழிகளாகவே வளர்ந்தனர்..வளர்ப்புப் பிராணிகள் மீதும் அதிக பிரியம் கொண்ட எலிசபெத்தின் 12 வயதில் தந்தை ஆறாம் ஜார்ஜ், செல்ல நாய் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அதை `டூக்கி' எனப் பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வந்தார். சிறுவயதில் தன் செல்ல நாய்களுடன் லண்டன் வீதிகளில் நடப்பது, எலிசபெத்தின் வழக்கம். இதுவரை ராணி முப்பதுக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்திருக்கிறார். இவர் தன் பத்தாவது வயதிலேயே குதிரையேற்றம் கற்றுக்கொண்டவர். குதிரை சவாரி, புறா பந்தயம், கால்பந்து விளையாட்டு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்..எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மகுடம் சூட்டிக்கொண்டதே ஒரு விபத்து போன்றதுதான். 1936-ம் ஆண்டு எலிசபெத்தின் தாத்தா மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மரணம் அடைந்தார். அவரது வாரிசுகளில் எட்டாம் எட்வர்டுக்குத்தான் பிரிட்டனை ஆளும் உரிமை இருந்தது. ஆனால், அவர் அமெரிக்காவைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற வால்லிஸ் சிம்ப்சன் என்ற பெண்ணைக் காதலித்தார். பிரிட்டிஷ் மரபுப்படி, `காதலா… பதவியா?' என்ற கேள்விக்கு ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் எட்டாம் எட்வர்டுக்கு ஏற்பட்டது. அவர் காதலுக்காக அரச வாழ்வைத் துறந்தார். இதையடுத்து ஆல்பர்ட், பிரிட்டன் அரசர் ஆனார். அந்த வழியில் எலிசபெத்துக்கு ராணி ஆகும் வாய்ப்பு கிட்டியது..தனது தந்தை மன்னராக முடிசூட்டிக் கொண்டதை அடுத்து, எலிசபெத் பிரிட்டனின் அரசியல்சாசன வரலாற்றினைப் படித்தார். பிரத்யேக ஆசிரியர்கள் மூலமாக பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளையும் கற்றுக் கொண்டார். இசையும் பயின்றார். (பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்குப் பயணிக்கும்போது அந்நாட்டுத் தலைவர்களுடன் அவர்கள் மொழியிலேயே ராணி உரையாடுவார்.).தன் முடிசூட்டு விழாவுக்கு முன்பாக இவர் இளவரசியாக இருந்த சமயத்தில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது. அப்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் ராணுவ டிரக் டிரைவராக இவர் பணியாற்றி இருக்கிறார்..இளவரசர் பிலிப் மவுன்ட்பேட்டனை, 1947-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி ராணி திருமணம் செய்து கொண்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் முடிசூட்டு விழா ராணி எலிசபெத்துடையதுதான். சுமார் இரண்டு கோடி பேர் அதைப் பார்த்து மகிழ்ந்தனர். ராணிக்கு, இளவரசர் பிலிப்பை சிறு வயதிலிருந்தே தெரியும். இருவருக்குமிடையேயான இனம்புரியாத நட்பு, திருமணத்தில் முடிந்தது. எனினும் கணவரின் பெயரை, தன் பெயருடன் ராணி எலிசபெத் இணைத்துக்கொள்ளவில்லை. அறுபதாவது திருமண நாளை ஜோடியாகக் கொண்டாடிய ஒரே பிரிட்டன் ராணி இவர்தான். ராணிக்கு ஒரு மகன்: இளவரசர் சார்லஸ். ஒரு மகள் : இளவரசி ஆனி..பிரிட்டன் கடற்படைக் கப்பல்கள் ராணியைக் கௌரவப்படுத்தும் வகையில் `ஹெச்.எம்.எஸ்' (ஹர் மெஜஸ்டீஸ் ஷிப் ) என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றன. பிரிட்டனில் நம்பர் பிளேட் இல்லாமலும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாலும் கார் ஓட்ட அதிகாரம் படைத்த ஒரே ஒருவர் ராணிதான். இவர், உலகில் 600-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வழங்கிவருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அரண்மனையில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்குது ராணியின் மரபு. ராணி எலிசபெத்துக்கு, உலகம் முழுக்க உள்ள பல்வேறு மெழுகுச்சிலை மியூசியங்களிலும் மெழுகுச்சிலைகள் உள்ளன. இவருக்கென தனி ஃபேஸ்புக் பக்கம் உள்ளது. ஆனால், உள்ளே எவரும் நுழைந்துவிட முடியாது. ராணியை எவரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு..இவர் எந்த நாட்டுக்குச் செல்லவும் பாஸ்போர்ட் தேவையில்லை. உலகிலேயே அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த உலகத் தலைவர் இவர்தான். இவர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட உலக நாடுகளின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். ராணி எலிசபெத்தும் அவரது குடும்பமும்தான் தொலைக்காட்சி டாகுமென்ட்ரியில் நடித்த முதல் பிரிட்டன் அரசக் குடும்பம் ஆகும்..ஹங்கேரி நாட்டு ஓவியர் பிலிப்ஸ் அலெக்சியஸ் எலிசபெத்தின் ஏழாவது வயதில் அவரை ஒரு ஓவியம் தீட்டினார். அதன் 200க்கும் அதிகமான தடவைகள் பல்வேறு ஓவியர்களும் அவரை ஓவியமாகத் தீட்டியுள்ளனர். தனது 14வது வயதில் பிபிசியின் குழந்தைகள் நிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்று பேசினார். ராணியாக முடிசூட்டப்பட்ட ஆண்டில் கிருஸ்துமஸ் சமயத்தில் ரேடியோ மூலம் மக்களுக்கு வாழ்த்துரையாற்றினார்..1976ல் ராணி தன்னென்று ஒரு மின்னஞ்சல் கணக்கினை உருவாக்கிக் கொண்டார். 2019ல் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கியது. அண்மைக் காலங்களில் ஆண்டுதோறும் 50000 கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் அனுப்புகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட பரிசுகளில் ஒரு யானை, இரண்டு ராட்சச ஆமைகள், ஒரு சிறுத்தை, ஒரு ஜோடி தேவாங்குகளும் அடங்கும். அவை அனைத்தும் தற்போது லண்டன் மிருகக் காட்சி சாலையில் உள்ளன..ஒரு முறை ஸ்காட்லாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது, ஒரு மாறுதலுக்காக, அரண்மனைக்கு வெளியில் வந்து, 'ராணி' என்ற பந்தா ஏதுமின்றி, சாதாரண பெண்மணியைப் போல உடையணிந்து, சாலையில் நடந்து சென்றார். அப்போது, தெருவில் சென்றுகொண்டிருந்த டூரிஸ்ட்களுடன் பேச்சுக் கொடுத்தார். அவர்களில் ஒருவர், "நீங்கள் உள்ளூரா?" என்று கேட்டபோது, "ஆம்!" என்று பதிலளித்தார். "அப்படியெனில் மகாராணி அரண்மனையில் இருந்து வெளியில் வரும்போது பார்த்திருக்கிறீர்களா? என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு எலிசபெத் மகாராணி சொன்ன பதில் என்ன தெரியுமா? சற்று இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்த பாதுகாவலர்களைக் காட்டி, "அவர்கள் பார்த்திருக்கிறார்கள்!"என்று புன்னகைத்தபடியே பதில் சொன்னார்.
எஸ். சந்திரமௌலி.பிரிட்டனில் ஆட்சி செய்யும் விண்டர் அரச வம்சத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 96) பதவி ஏற்று எழுபது ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. அதனை பிரிட்டன் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இதன் மூலமாக "பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை மிகவும் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி" என்ற பெருமையைப் பெறுகிறார் ராணி இரண்டாம் எலிசபெத்..பிரான்ஸ் தேசத்து மன்னர் பதினான்காம் லுாயிஸ், 72 ஆண்டுகள், 110 நாட்கள் அரசராக இருந்து, உலகில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த மன்னர்களின் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்..தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் 70 ஆண்டுகள் 126 நாட்கள் ஆட்சி செய்து இரண்டாம் இடத்தில் இருந்தார்..தாய்லாந்து மன்னரது சாதனையை அண்மையில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் முறியடித்திருக்கிறார். பிரிட்டிஷ் வரலாற்றில் இவருக்கு முன்பு விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசியின் முடிசூட்டு பவள விழாவினைக் கொண்டாடும் வகையில் அண்மையில் லண்டனில் அவர் பெயரில் துவக்கப்பட்ட புதிய ரயில் தடத்தின் துவக்க விழாவினை ராணி நேரில் வந்து துவக்கி வைத்தார். பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் குறித்த சுவையான தகவல்களைப் பார்க்கலாம்:.பிறந்தபோது 'எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி' என்றே பெயரிடப்பட்டவர், 1953 ஜூன் 2ஆம் தேதி நடந்த முடிசூட்டு விழாவின்போது 'இரண்டாம் எலிசபெத்' என்று பெயர் சூட்டப்பெற்றார். இவர் 'பிரிட்டனின் ராணி' என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார். மேலும் 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும், பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். இவரது ஆட்சிக் காலத்தில் பதினான்கு பேர்கள் பிரிட்டிஷ் பிரதம மந்திரிகளாக பதவி வகித்துள்ளனர்..மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் மகன் இளவரசர் ஆல்பர்ட் – எலிசபெத் பௌவ்ஸ் நியோன் தம்பதிக்கு, 1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி அதிகாலை 2.40 மணிக்குப் பிறந்தார் எலிசபெத். குழந்தைப் பருவத்தில் இவரின் செல்லப் பெயர் `லில்லிபெட்'. இவரும் இவரது தங்கை மார்க்கரெட்டும் அரண்மனையிலேயே கல்வி கற்றனர். அக்காவும், தங்கையும் நெருங்கிய தோழிகளாகவே வளர்ந்தனர்..வளர்ப்புப் பிராணிகள் மீதும் அதிக பிரியம் கொண்ட எலிசபெத்தின் 12 வயதில் தந்தை ஆறாம் ஜார்ஜ், செல்ல நாய் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அதை `டூக்கி' எனப் பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வந்தார். சிறுவயதில் தன் செல்ல நாய்களுடன் லண்டன் வீதிகளில் நடப்பது, எலிசபெத்தின் வழக்கம். இதுவரை ராணி முப்பதுக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்திருக்கிறார். இவர் தன் பத்தாவது வயதிலேயே குதிரையேற்றம் கற்றுக்கொண்டவர். குதிரை சவாரி, புறா பந்தயம், கால்பந்து விளையாட்டு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்..எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மகுடம் சூட்டிக்கொண்டதே ஒரு விபத்து போன்றதுதான். 1936-ம் ஆண்டு எலிசபெத்தின் தாத்தா மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மரணம் அடைந்தார். அவரது வாரிசுகளில் எட்டாம் எட்வர்டுக்குத்தான் பிரிட்டனை ஆளும் உரிமை இருந்தது. ஆனால், அவர் அமெரிக்காவைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற வால்லிஸ் சிம்ப்சன் என்ற பெண்ணைக் காதலித்தார். பிரிட்டிஷ் மரபுப்படி, `காதலா… பதவியா?' என்ற கேள்விக்கு ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் எட்டாம் எட்வர்டுக்கு ஏற்பட்டது. அவர் காதலுக்காக அரச வாழ்வைத் துறந்தார். இதையடுத்து ஆல்பர்ட், பிரிட்டன் அரசர் ஆனார். அந்த வழியில் எலிசபெத்துக்கு ராணி ஆகும் வாய்ப்பு கிட்டியது..தனது தந்தை மன்னராக முடிசூட்டிக் கொண்டதை அடுத்து, எலிசபெத் பிரிட்டனின் அரசியல்சாசன வரலாற்றினைப் படித்தார். பிரத்யேக ஆசிரியர்கள் மூலமாக பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளையும் கற்றுக் கொண்டார். இசையும் பயின்றார். (பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்குப் பயணிக்கும்போது அந்நாட்டுத் தலைவர்களுடன் அவர்கள் மொழியிலேயே ராணி உரையாடுவார்.).தன் முடிசூட்டு விழாவுக்கு முன்பாக இவர் இளவரசியாக இருந்த சமயத்தில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது. அப்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் ராணுவ டிரக் டிரைவராக இவர் பணியாற்றி இருக்கிறார்..இளவரசர் பிலிப் மவுன்ட்பேட்டனை, 1947-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி ராணி திருமணம் செய்து கொண்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் முடிசூட்டு விழா ராணி எலிசபெத்துடையதுதான். சுமார் இரண்டு கோடி பேர் அதைப் பார்த்து மகிழ்ந்தனர். ராணிக்கு, இளவரசர் பிலிப்பை சிறு வயதிலிருந்தே தெரியும். இருவருக்குமிடையேயான இனம்புரியாத நட்பு, திருமணத்தில் முடிந்தது. எனினும் கணவரின் பெயரை, தன் பெயருடன் ராணி எலிசபெத் இணைத்துக்கொள்ளவில்லை. அறுபதாவது திருமண நாளை ஜோடியாகக் கொண்டாடிய ஒரே பிரிட்டன் ராணி இவர்தான். ராணிக்கு ஒரு மகன்: இளவரசர் சார்லஸ். ஒரு மகள் : இளவரசி ஆனி..பிரிட்டன் கடற்படைக் கப்பல்கள் ராணியைக் கௌரவப்படுத்தும் வகையில் `ஹெச்.எம்.எஸ்' (ஹர் மெஜஸ்டீஸ் ஷிப் ) என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றன. பிரிட்டனில் நம்பர் பிளேட் இல்லாமலும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாலும் கார் ஓட்ட அதிகாரம் படைத்த ஒரே ஒருவர் ராணிதான். இவர், உலகில் 600-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வழங்கிவருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அரண்மனையில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்குது ராணியின் மரபு. ராணி எலிசபெத்துக்கு, உலகம் முழுக்க உள்ள பல்வேறு மெழுகுச்சிலை மியூசியங்களிலும் மெழுகுச்சிலைகள் உள்ளன. இவருக்கென தனி ஃபேஸ்புக் பக்கம் உள்ளது. ஆனால், உள்ளே எவரும் நுழைந்துவிட முடியாது. ராணியை எவரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு..இவர் எந்த நாட்டுக்குச் செல்லவும் பாஸ்போர்ட் தேவையில்லை. உலகிலேயே அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த உலகத் தலைவர் இவர்தான். இவர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட உலக நாடுகளின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். ராணி எலிசபெத்தும் அவரது குடும்பமும்தான் தொலைக்காட்சி டாகுமென்ட்ரியில் நடித்த முதல் பிரிட்டன் அரசக் குடும்பம் ஆகும்..ஹங்கேரி நாட்டு ஓவியர் பிலிப்ஸ் அலெக்சியஸ் எலிசபெத்தின் ஏழாவது வயதில் அவரை ஒரு ஓவியம் தீட்டினார். அதன் 200க்கும் அதிகமான தடவைகள் பல்வேறு ஓவியர்களும் அவரை ஓவியமாகத் தீட்டியுள்ளனர். தனது 14வது வயதில் பிபிசியின் குழந்தைகள் நிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்று பேசினார். ராணியாக முடிசூட்டப்பட்ட ஆண்டில் கிருஸ்துமஸ் சமயத்தில் ரேடியோ மூலம் மக்களுக்கு வாழ்த்துரையாற்றினார்..1976ல் ராணி தன்னென்று ஒரு மின்னஞ்சல் கணக்கினை உருவாக்கிக் கொண்டார். 2019ல் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கியது. அண்மைக் காலங்களில் ஆண்டுதோறும் 50000 கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் அனுப்புகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட பரிசுகளில் ஒரு யானை, இரண்டு ராட்சச ஆமைகள், ஒரு சிறுத்தை, ஒரு ஜோடி தேவாங்குகளும் அடங்கும். அவை அனைத்தும் தற்போது லண்டன் மிருகக் காட்சி சாலையில் உள்ளன..ஒரு முறை ஸ்காட்லாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது, ஒரு மாறுதலுக்காக, அரண்மனைக்கு வெளியில் வந்து, 'ராணி' என்ற பந்தா ஏதுமின்றி, சாதாரண பெண்மணியைப் போல உடையணிந்து, சாலையில் நடந்து சென்றார். அப்போது, தெருவில் சென்றுகொண்டிருந்த டூரிஸ்ட்களுடன் பேச்சுக் கொடுத்தார். அவர்களில் ஒருவர், "நீங்கள் உள்ளூரா?" என்று கேட்டபோது, "ஆம்!" என்று பதிலளித்தார். "அப்படியெனில் மகாராணி அரண்மனையில் இருந்து வெளியில் வரும்போது பார்த்திருக்கிறீர்களா? என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு எலிசபெத் மகாராணி சொன்ன பதில் என்ன தெரியுமா? சற்று இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்த பாதுகாவலர்களைக் காட்டி, "அவர்கள் பார்த்திருக்கிறார்கள்!"என்று புன்னகைத்தபடியே பதில் சொன்னார்.